செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பிரித்தானியாவில் கடந்த மே மற்றும் யூன் மாதங்களில் நடந்த பொதுத்தராதர ( A/L and GCSE (similar one for GCE O/L in Sri Lanka) பரீட்சைக்கான முடிவுகள் இந்த வாரமும் கடந்த வாரமும் வெளியாகின. இரண்டு பரீட்சையிலும் பெண்களே முன்னணி வகிக்கிற அதேவேளை இரண்டு பரீட்சைகளிலும் சித்தி பெற்றோரின் மொத்த சதவீதம் ஏ ல் :- 96.6% தோற்றியோர் தொகை (805657 ), ஜி சி எஸ் சி :- 98% தோற்றியோர் தொகை (5827319) ஆகவும் உள்ளது. பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டது பிபிசி. பெரும்பாலானோர் தற்போதைய பரீட்சைகள் இலகுவாக அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். ஜி சி எஸ் சி..பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவன் இப்படிச் சொல்கிறான்.. …
-
- 4 replies
- 1.5k views
-
-
தண்ணீர் கேட்கும் 'பாட்டியும், பேத்தியும்': கொடுக்க மறுத்தால் ரத்தவாந்தி!!! திருநெல்வேலி: ஒரு பாட்டி தனது பேத்தியுடன் தண்ணீர் கேட்டு வருவார். அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தால் அந்த வீடு தீப்பிடித்து எறியும், வீட்டில் இருப்பவர்கள் ரத்த வாந்தி எடுத்துப் பலியாவார்கள் என்று கிளம்பியுள்ள பீதியால் நெல்லை மாவட்டம் கழுகுமலைப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. பீதியில் ஆழ்ந்துள்ள அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலைகளை கட்டி வைத்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு: அனைத்து வீடுகளுக்கும் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்து வந்து தண்ணீர் கேட்பார். கொடுக்க மறுப்பவர்கள் வீடு தீப்பற்றி எரியும். கொடுப்பவர்களுக்கு ரத்தவாந்தி ஏற்படும் என்றும் புரளி கிளம்…
-
- 14 replies
- 2k views
-
-
வெள்ளி 24-08-2007 01:13 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாத தடைசட்டத்தின்கீழ் கைதுசெய்தவர்களை நீதிமன்றம் விடுதலை ஊர்காவற்துறை முத்துமாரியம்மன் கோவில் பூசகர்கள் பிரம்மசிறி சிவராமலிங்க குருக்கள், மனோகரகுருக்கள் மற்றும் தர்மகர்த்தா திரு.நடராஜா சிவராஜா ஆகியோரை பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என நீதிமன்றால் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த மே மாமாதம் 3 ம் திகதி முத்துமாரியம்மன் கோவிலில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இவர்களை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்திருந்தமை தெரிந்ததே. நன்றி பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும் குழந்தை - மதுரையில் புது பீதி! மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர். மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது. 'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர். இந்தப் புதிய வதந்தியால…
-
- 10 replies
- 2k views
-
-
வடக்கு ஈராக்கில் அமெரிக்க Black Hawk வகை உலங்கு வானூர்தி வீழ்ந்ததில் 10 அமெரிக்கப்படையினரும் 4 அமெரிக்க விமானப்படை வீரர்களும் உயிரிழந்தனர். அமெரிக்கப்படைகள் ஈராக்கிய ஆக்கிரமிப்பின் பின் சந்திக்கமும் மோசமான இழப்புக்களில் இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது. இந்த விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறும் அமெரிக்கப்படையினர்.. சரியான காரணம் தெரியவில்லை என்றும் விசாரணைகள் தொடர்கின்றது என்றும் கூறியுள்ளனர். Iraq crash kills 14 US soldiers Fourteen US soldiers were killed in a helicopter crash overnight in northern Iraq, the US military has said. http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6958116.stm
-
- 1 reply
- 792 views
-
-
சனி 18-08-2007 00:31 மணி தமிழீழம் [தாயகன்] தமிழக தடுப்பு முகாமில் இரண்டு இலங்கையர் உண்ணா நிலைப் போராட்டம் தமிழ்நாடு செங்கல்பட்டு சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த இருவர் கடந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டதால், சுய நினைவிழந்த இருவரும் நேற்று செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 அகவையுடைய அமுதசாகர், 35 அகவையுடைய முஹமட் இஸ்மயில் ஆகியோரே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருடன் இணைந்து மேலும் 17 தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தடுப்பு முகாம் வட்டாரங்கள் தெரிவித்த போதிலு…
-
- 0 replies
- 899 views
-
-
385 மில்லியன் செலவில் கொழும்பில் புதிய உதைபந்தாட்ட மைதானம் [12 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சுகததாச விளையாட்டு அரங்குக்கு அடுத்தபடியாக சர்வதேச தரத்திலான ஒரு உதைபந்தாட்ட அரங்கை கொழும்பில் அமைப்பதற்கான அடிக்கல்லை, விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே கடந்த வியாழக்கிழமை கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் நாட்டி வைத்தார். இவ்வைபவத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற விவகார அமைச்சர் எம்.எச். முகமட்டும் கொழும்பு சிற்றி லீக்கின் முன்னாள் தலைவர் எப்.ஏ. யூசீனும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவ்வைபவத்தில் மேற்படி லீக்கின் செயலாளர் எம். பிரேமதாச உரையாற்றுகையில் கூறியதாவது; "1902 ஆம் ஆண்டு எமது லீக் உருவானது.…
-
- 1 reply
- 1k views
-
-
நாடுகளைச் சுற்றி- கியூபா நில அமைப்பில் அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாகவும் கொள்கை கோட்பாடுகளில் மிகத் தொலைவிலும் உள்ள உலகின் 7வது பெரிய தீவு கியூபா. அமொக்காவின் மியாமி கடற்கரையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்த நாடு. 1898-ல் ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து கியூபா விடுபட்டது. 1920ஆம் ஆண்டில் சுதந்திரக் குடியரசு என்ற நிலையைப் பெற்றது. ஆனால் ஏனைய நாடுகளுடன் கியூபா எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. அமெரிக்காவின் ஆசி பெற்ற குடியரசாக கியூபா தொடர்ந்தது. 1952ல் பில் ஜன்ஸியோ பாட்டிஸ்டா (Bill Batisda) ஆட்சி அதிகாரத்தை இராணுவ புரட்சி மூலமா…
-
- 0 replies
- 839 views
-
-
மரண தண்டனை அர்த்தமுள்ளதா? மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளிகளுக்கு கருணையின் அடிப்படையில் மன்னிப்பு அளிப்பது குறித்து ஒரு பொதுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 20க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் அனுப்பியுள்ள கருணை மனுக்களை பெற்றுள்ள குடியரசுத் தலைவர் கலாம், அதன் மீது தனது முடிவை வெளியிடுவதற்கு முன்னர், கருணை மன்னிப்பு அளிப்பது பற்றி நாடாளுமன்றம் விவாதித்து ஒருமித்த கருத்தை காண வேண்டும் என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. நாகரீக சமூகத்தில் குற்றத்தி…
-
- 5 replies
- 1.6k views
-
-
பெண்களை சவுக்கால் அடித்து பூசாரிகள் பூஜை!: திருச்சி அருகே வினோதம்!! ஆகஸ்ட் 10, 2007 திருச்சி: திருச்சி அருகே ஒரு கோவிலில் பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களை சவுக்கால் அடி அடி என அடித்து பூஜை நடந்தது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தும்பலம் என்ற ஊரில் சோழராசா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெண்களுக்கு பேய் ஒட்டும் விழா பிரசித்தம். பேய் பிடித்தாக கூறப்படும் பெண் குடும்பத்தினர் பொங்கல் வைத்து பூஜை செய்வர். இந்தப் பூஜை இப்போது நடந்து வருகிறது. முதலில் கோவில் பூசாரிகள் 6 பேர் கிராமத்தை சுற்றி வந்தனர். இதையடுத்து பேய் பிடித்தாக கூறப்படும் பெண்களை கோவில் முன் அமர வைக்கப்பட்டனர். இதையடுத்து 6 பூசாரிகளுக்கும் அருள் வந்து ஆடினர். …
-
- 4 replies
- 1.6k views
-
-
வெல்லம்ப்பிட்டியவில் பொது உயர்தர பரீட்சை நிலையத்தில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியும் உதவி பொறுப்பதிகாரியும் பரீட்சை கடமைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.. இவர்கள் இருவரும் பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையில் மோசடியில் ஈடுப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதென இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.. பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் கண்காணிப்புக்குழுவொன்று குறித்த பரீட்சை நிலையத்திற்கு சென்ற போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.இதனையடுத்து இவ் இருவரும் வெல்லப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். -வீரகேசரி.
-
- 0 replies
- 903 views
-
-
தகவல்களின் படி மன்னார் பள்ளி முனையில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் புலிகளின் செய்மதி தொலக்காட்ச்சிக்காக அன்ரனாக்கள் ஒன்பதையும்... டெக்கோடர்கள்ள் ஒன்பதையும் கைப்பற்றி விட்டனராம்.... அதோடு பத்து 12V பற்ரறிகளையும் கைப்பற்றி உள்ளனராம்... ஆதானாக பட்டது என்ன எண்றால் இலங்கையில் யாருமே பாவிக்காத சாமான் களை எல்லாம் புலிகள் கடத்தி வரும் போது... கைப்பற்ற பட்டு உள்ளன... இனிமேல் புலிகளால் செய்மதி தொலைபேசி உரையாடல் நடத்தும் திறன் இல்லை....! செய்தி defence.lk
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழில் கேட்டால் ஆங்கிலத்தில் பதிலளிக்கும் அன்புமணி - எம்.பி புகார் ஆகஸ்ட் 09, 2007 தென்காசி: நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்டால் அதற்குத் தமிழில் பதிலளிக்காமல் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி என்று தென்காசி தொகுதி எம்.பி. அப்பாத்துரை புகார் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் எம்.பி., தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்பாத்துரை எம்.பி செங்கோட்டை மேலூர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 5 லட்சமும், பூலாங்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளி கூடுதல் கட்டிட பணிகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்கினார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், அப்பாத்துரை எம்.பி பேசுகையில், நாடாளுமன்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மனைவி கொடுமை? மகளிர் ஆணையத்தில் இனி ஆண்களும் புகார் செய்யலாம் ஆகஸ்ட் 09, 2007 நாகர்கோவில்: மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்களும், மகளிர் ஆணையத்தில் இனி புகார் செய்யலாம் என மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தம்மாள் கூறியுள்ளார். நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, கடந்த 1993ம் ஆண்டு மகளிர் ஆணையம் துவங்கப்பட்டது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பல கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. முக்கியமாக குடும்ப பெண்கள் தான் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் கடும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். அதற்காக இச்சட்டம் ஆண்களுக்கு எதிரானது அல்ல. கணவன் தனது மனைவியை கடுமையான வார்த்தைகளால் பேசி புண்படு…
-
- 2 replies
- 2k views
-
-
ரோந்து சென்ற இராணுவத்தினரை இலக்கு வைத்து "குட்ஷெட்"(Goodshed Road) வீதி, தோனிக்கல் பகுதியில் இன்று(8/7/07) நன்பகல் 1.10மணியளவில் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்டதாகவும், குறிப்பிட்ட அப்பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 0 replies
- 987 views
-
-
ஈராக்கில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவுஅமெரிக்க படைவீரருக்கு 110 வருடசிறை [07 - August - 2007] ஈராக்கில் அல்-ஹைடாவுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு உள்ள அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 14 வயது ஈராக்கிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர் குடும்பத்தினரைக் கொன்ற வழக்கில் அந்த வீரருக்கு 110 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. ஈராக்கில் இராணுவப் பணிக்காக அனுப்பப்பட்டவர் ஜெஸ்சி ஸ்பீல்மன். 22 வயதான அவர் பாலியல் வல்லுறவு , கொலை வழக்குகளில் சிக்கிக் கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாக்தாத் நகரில் அபீர் குவாசிம் அல் ஜனாபியாட் என்ற 14 வயது ஈராக்கிய சிறுமியை அவர் 4 இராணுவ வீரர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படு…
-
- 0 replies
- 855 views
-
-
விடுதலைப்புலிகளின் மூத்த போராளி ஒருவர் நாகர்கோவில் முன்னரங்க பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரச ஆதரவு ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது. உண்மை தெரியவில்லை. Sri Lankan troops kill senior Tamil rebel leader in volatile north, says military Associated Press, Sat August 4, 2007 04:10 EDT . BHARATHA MALLAWARCHI - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Sri Lankan soldiers shot dead a senior Tamil Tiger leader when troops pre-empted a rebel attack on a northern defense line, the military said Saturday. Insurgents were preparing to attack the defense line at Nagarkovil in Jaffna peninsula on Friday but were confronted by troops, triggering a fi…
-
- 2 replies
- 1.5k views
-
-
கணவரைக் கொன்று துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த மனைவி கோலாலம்பூர்: கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார். அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார். இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்…
-
- 46 replies
- 5.7k views
-
-
ஈரத் துணியில் சுருட்டி...வேலூரில் மாவட்டத்தில் பெண் சிசு கொலை கொடூரம்!! ஆகஸ்ட் 04, 2007 வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக பிறந்த பெண் சிசுக்களை பெற்றோர்களே கொன்று புதைத்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாமல் இருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு உலகப் புகழ் பெற்ற கிராமமாக மாறியது. ஏதோ நல்லது செய்தோ அல்லது சாதனை செய்தோ அந்த ஊருக்கு பெருமை கிடைத்து விடவில்லை. பிறந்த சிசுக்களைக் கொன்று குவிக்கும் கொலைகார குக்கிராமமாக உசிலம்பட்டிக்குப் பெயர் கிடைத்தது. பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்தும், நெற்கதிர்களை தொண்டைக்குழியில் போட்டும் கொன்று புதைக்கும் கொடூரம், காலம் …
-
- 1 reply
- 1.1k views
-
-
Basil Rajapaksa insulted Thondaman - CWC MP [TamilNet, Friday, 03 August 2007, 14:39 GMT] A leading Ceylon Workers Congress (CWC) member and CWC parliamentarian Muttu Sivalingam Friday told media at Kotagala in the up-country that their party would sit as an independent group in the opposition seats of the Sri Lankan parliament following their resignation of ministerial portfolios Thursday. The CWC decision to withdraw its support was made following the disagreement on 'Mahinda Chintanaya'. Mr. Muttu Sivalingam accused Mr. Basil Rajapaksa, the brother and political advisor of SL President Mahinda Rajapaksa for verbally abusing the CWC leader Arumugam Thondaman for…
-
- 0 replies
- 942 views
-
-
தன்னைக் கொத்திய பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார் இளைஞர்! தன்னைக் கொத்திய நாகபாம்பை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, காயத்துக் குச் சிகிச்சை பெறுவதற்கு யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த இளைஞர் ஒரு வர் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். முற்பகல் சுமார் 9.30 மணியளவில் வைத்தியசாலையின் நோயா ளரை அனுமதிக்கும் பிரிவுக்கு அவர் வந்ததும், அங்கு கூடி நின்ற நோயாளர் களில் பலரும் திகிலுற்று அங்கும் இங்கும் கலைந்தனர். அராலி வீதி, பொம்மைவெளியைச் சேர்ந்தவர் 27 வயதான சின்னராசா சதீஸ் வரன். நேற்றுக் காலை அவர் தனது வீட்டுக் கோழிக் கூட்டுக்குள் முட்டை எடுப்ப தற்காக இடது கையைவிட்டார். அப்போது பாம்பு கடிப்பதாக உணர்ந்து அறிந்து அடுத்த கையால் பாம்பின் தலைப்பகுதியைக் கெட்டியாகப் பிடி…
-
- 22 replies
- 3.9k views
-
-
மனைவியுடன் சிரித்து பேசிய சகலை கன்னத்தை கடித்துத் துப்பிய புது மாப்பிள்ளை! மதுரை: மதுரை அருகே, தனது மனைவியுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சகலை மீது ஆத்திரமடைந்து அவரது கன்னத்தைக் கடித்துத் துப்பினர் அந்தப் பெண்ணின் கணவர். மதுரை திருமங்கலம் அருகே உள்ளது சின்னசொர்ணகுளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி. சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆடி சீர் விருந்துக்காக மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்தார் முத்துப்பாண்டி. அங்கு அவரது சகலை (மனைவியின் சகோதரி கணவர்) விருமாண்டியும் குடும்பத்தோடு வந்திருந்தார். அப்போது விருமாண்டி, முத்துலட்சுமியிடம் சிரித்துச் சிரித்துப் பேசியுள்ளார். இதை…
-
- 2 replies
- 3.1k views
-
-
ராஜீவைத் தாக்கிய முன்னாள் கடற்படைவீரர் இந்திப் பாடல் ஒலிநாடா விற்பனையில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவென 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் துப்பாக்கியால் தாக்கிய கடற்படை வீரர் தற்போது இந்தி பாடல்கள் ஒலிநாடா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இலங்கை வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் தனக்கான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் போது அணிவகுத்து நின்ற இலங்கை கடற்படை வீரர்களில் ஒருவரான விஜேமுனி விஜித ரோஹன டி சில்வா என்பவரால் துப்பாக்கியால் (ரைபிள்) தாக்கப்பட்டார். இதனால் இந்தியப் பிரதமரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இச்ச…
-
- 0 replies
- 795 views
-
-
சனி 28-07-2007 04:31 மணி தமிழீழம் [சிறீதரன்] திலக் கருணாரட்ண ஐதேக பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார் சிறீலங்காவின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளர் திலக் கருணாரட்ண தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பல காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளதாக எதிர்கட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் ஜாதிககெல உறுமிய தொடர்பில் கூறிய கருத்துக்களும்இ சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றனவும் பதவிவிலகும் காரணங்களுள் அடங்குவதாக தெரியவருகிறது. அண்மையில் சிறீலங்கா இராணுவம் தொப்பிக்கலவில் பெற்ற வெற்…
-
- 1 reply
- 1k views
-
-
ஆசியாவின் முக்கிய நகரமாகும் தகுதி இருந்தும் சீரழிந்து இருண்டு போய்க் கிடக்கும் வுனியா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விசேட அறிவும் அனுபவமும் கொண்டுள்ள சுற்றுச்சூழல் விஞ்ஞானத்துறை நிபுணர் கலாநிதி திருமதி அஜந்தா பெரேரா, வவுனியா மாவட்டத்தில் தாம் ஒழுங்குசெய்து நடாத்திய "வேலைப்பட்டறைகள்' மற்றும் "சுற்றுச்சூழல் பேணும் நடவடிக்கை' தொடர்பாகத் தமக்கு நேர்ந்த அனுபவங்களை இப்பத்தியூடாக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். கடந்த முதலாம் திகதி "ராவய' பத்திரிகையில் வெளியான அப்பத்தியின் தமிழ்வடிவம் கீழே தரப்படுகிறது. ஒருநாள் எனக்கு அரிதான விதத்திலான தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. அது வவுனியாவுக்கு என்னை வருமாறு அழைப்பு விடுக்குமொரு தொலைபேசி அழைப்பாக அமைந்தது. வவுனியா நகரி…
-
- 0 replies
- 942 views
-