வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து 36,071 ஆக வர்த்தகம் தொடங்கியுள்ளது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 மாதத்தில் இல்லாத அளவு பெரும் சரிவை கொண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 425 புள்ளிகள் சரிந்து 10,564 ஆக வர்த்தகம் ஆகிவருகிறது. டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன. அதே போல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்தது. …
-
- 0 replies
- 235 views
-
-
பெய்ஜிங்: அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனிடையில் சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் போரினை சமாளிக்க நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ளது. இந்த வர்த்தகப் போரினை எங்களால் திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்றும் அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது. வருவாய் அலிபாபா நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிடும் முன்பு தங்களது ஆண்டு மற்றும் தின வருவாய் குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டு இருந்தது. அமெரிக்கப் பொருட்கள் வரி உயர்வு போன்ற காரணங்களால் அமெரிக்கப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. எனவே சீன வாடிக்கையாளர்கள் உள்நாட்டுப் பொருட்கள் அல்லது பிற நாடுகளில் இருந்து இறக்குமத…
-
- 0 replies
- 464 views
-
-
இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினருக்கு இந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று சொல்லலாம். விற்பனை குறைவினால் அவதிப்பட்ட பெரிய நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைக்கு சில நாள்கள் விடுமுறை விட, பல சிறிய நிறுவனங்கள் சத்தமில்லாமல் நஷ்டத்தால் பூட்டப்பட்டன. ஆட்டோமொபைல் துறையின் இந்த டெக்டானிக் அதிர்வில் அதிகம் பாதிக்கப்பட்டது ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள். இப்போது, புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் பல தொழிலாளர்கள் வேலையை இழந்துவருகிறார்கள். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட டேட்டாவின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெய்ம்லர் மற்றும் ஆடி நிறுவனங்கள் 20,000 ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தியுள்ளன. பல ஆட…
-
- 0 replies
- 357 views
-
-
நஷ்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை வங்கிகளை, லாபத்தில் இயங்கும் மற்ற வங்கிகளுடன் இணைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, வரி குறைப்பு மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு பல்வேறு சலுகைக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அப்போது, பேட்டி அளித்த அவர், ‘தொழில்துறையை ஊக்குவிக்க மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடரும்’ எனதெரிவித்தார். அ…
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் கடந்த ஜுலை மாதம் 2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜுன் மாதம் 2.1 சதவீதமாக நிலவி இருந்தது. எனினும் கடந்த மே மாதம், நுகர்வோர் விலைச் சுட்டெண் 3.5 சதவீதமாக நிலவி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/business/224914/இலங்கையின்-பணவீக்கம்-அதிகரிப்பு Core consumer prices in Sri Lanka increased 5.10 percent in November of 2019 over the same month in the previous year. Core Inflation Rate in Sri Lanka averaged 6.60 percent from 2004 until 2019, reaching an all time high of 12.76 percent in September of 2008 and a record low of 2.13 percent in De…
-
- 0 replies
- 343 views
-
-
வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் சிறு வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 2 இலட்சம் ரூபாவுக்கு 4 வீத சலுகை வட்டியின் கீழ் வர்த்தகர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது.சனச, கிராமிய வங்கி, கூட்டுறவு வங்கி ஊடாக கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் வீழ்ச்சியடைந்துள்ள சிறு வர்த்தகங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக …
-
- 0 replies
- 326 views
-
-
உலகின் 132 நாடுகளில் வாழ்க்கைச் செலவை ஒப்பிட்டு வாழ்கைச்செலவு அதிகமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ;CEOWORLD' எனப்படும் உலகின் முன்னணி வணிக இதழ் ஒன்று இதனை தரப்படுத்தியுள்ளது. உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, இணையச்செலவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ் வாழ்க்கைச்செலவு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவ் பட்டியலின்படி உலகின் வாழ்க்கைச்செலவு அதிகமான நாடாக சுவிற்சர்லாந்து தெரிவாகியுள்ளது. நோர்வே இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றின் வாழ்க்கைச் செலவு சுட்டெண் முறையே 122.04, 101.04, 100.48 ஆக கணிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஏழு இடங்களை ஜப்பான், டென்மார்க், பஹாமாஸ், லக்சம்பேர்க், இஸ்ரேல், சிங்…
-
- 0 replies
- 286 views
-
-
"பிளாக்ஸ்டோன்" சீன சொத்து உரிமையாளருக்கான, 3 பில்லியன் ஏலத்தைக் குறைக்கிறது! தனியார் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமம் நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவரான சோஹோ, சீனாவில் கட்டுப்படுத்தும் பங்குகளுக்கான தனது 3 பில்லியன் ரூபாய் ஏலத்தை கைவிடுகிறது. அண்மையில் பிளாக்ஸ்டோன் வாங்குவதற்கு உரிய ஒப்புதலை வழங்க வேண்டிய அரசாங்க கட்டுப்பாட்டாளர்களிடையே போதிய முன்னேற்றம் இல்லாததால் ஒப்பந்தத்தை கைவிட முடிவு செய்ததாகக் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், பிளாக்ஸ்டோன் (பிஜிபி) ஜூன் மாதத்தில் பரிவர்த்தனையை அறிவித்தது, அந்த நேரத்தில் சோஹோ சீனாவின் பங்கு விலையை விட ஏறத்தாழ 30% ஏலம் எடுத்தது. எனினும், கைவிடப்பட்ட ஒப்பந்தம் பற்றிய கூடுதல் விபரங்களை …
-
- 0 replies
- 235 views
-
-
மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை மாற்றப்போவதாக எலோன் மஸ்க் அறிவிப்பு அமெரிக்காவைச் சேர்ந்த மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். சிலிக்கான் பள்ளத்தாக்கு உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் அதிக வரி விதிக்கப்படுவதாலும், வாழ்க்கைச் செலவு அதிகமுள்ளதாலும் ஆரக்கிள், எச்பி, டொயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் தலைமையகத்தை டெக்சாஸ் மாநிலத்துக்கு மாற்றிவிட்டன. அந்த வரிசையில் இப்போது டெஸ்லாவின் தலைமையகத்தை டெக்ஸாஸின் ஆஸ்டின் நகருக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் ஆண்டுக் கூட்டத்தில் அறி…
-
- 0 replies
- 283 views
-
-
ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தாக்குதல்களினால், இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சுமார் 250க்கு மேலானோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்கள், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனால், இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்படைந்துள்ளது பற்றிய காணொளி. https://www.bbc.com/tamil/sri-lanka-48183213 கிட்டத்தட்டநாலு இலட்ச்சம் தொழில் வாய்ப்புக்கள் இழந்தநிலையில் மேலும் இந்த துறை வீழ்ச்சி அடையும் நிலையில் இருந்தால் சிறிலங்கா அரசின் வருவாய் குறையும். இந்த முக்கிய அந்நிய செலாவணி மற்றும் வேலைவாய்ப்பு நாட்டில் பொருளாதார ==> அரசியல் மற்றும் ==> இராணுவ சிக்கல்களை உருவாக்கும். உல்லாசத்…
-
- 0 replies
- 431 views
-
-
உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 16 மில்லியன் பேர் தங்கள் கணக்கை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இருப்பினும் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 7.5 மில்லியன் கணக்குகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் வெளியிடவிருந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் சில நிகழ்ச்சிகள் தாமதமாவதால் வருங்காலத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அது …
-
- 0 replies
- 326 views
-
-
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு! உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய கார்களுக்கான குறைந்த தேவையால், ஆட்டம் கண்டுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்குறைப்பு செய்யப்படுமென கூறியுள்ளது. பணிநீக்கம், முன்கூட்டியே ஓய்வு பெறுதல், தற்காலிக ஒப்பந்தங்களை புதுப்பிக்காதது மற்றும் காலியிடங்களை நிரப்பாதது ஆகியவற்றின் மூலம் ஆட்குறைப்பு அடையப்படும் என பி.எம்.டபிள்யூ நிர்வாகமும் அதன் பணிக்குழுவும் உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து பி.எம்.டபி…
-
- 0 replies
- 366 views
-
-
சிங்கிள்ஸ்-டேவிற்கான சிறப்பு விற்பனையில், 9 மணி நேரத்தில் 22 பில்லியன்களுக்கு வர்த்தகம் செய்து, சீனாவின் அலிபாபா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-11-ம் தேதியை, சீனாவின் பிரபல ஆன்லைன் - வணிக நிறுவனமான அலிபாபா சிங்கிள்ஸ்-டேவாக பின்பற்றி வருகிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து 10-வது ஆண்டாக, அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதையடுத்து 68 விநாடிகளில் 1 பில்லியனை தொட்ட அலிபாபாவின் வர்த்தகம், 9 மணி நேர முடிவில் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும் 20 முதல் 25 சதவிகிதம் அலிபாபாவின் வர்த்தகம் சிங்கிள்ஸ் டேவில் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://ww…
-
- 0 replies
- 353 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,அலெக்ஸ் கிறிஸ்டியன், மேகன் டாடூம் பதவி,பிபிசி வொர்க்லைஃப் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்ததின் படி தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 48 மணி நேர வேலையை தினமும் 12 மணி நேரம் என்ற அடிப்படையில் 4 நாட்கள் செய்ய வேண்டும். மீதமுள்ள 3 நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறுகிறது. வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற நடைமுறை அறி…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் மன்ஹட்டானில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் வரையான வாடகை ஹெலிகாப்டர் சேவையை பிரபல வாடகை கார் நிறுவனமான Uber நிறுவனம் தொடங்கியுள்ளது. மன்ஹட்டான் நகரில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்துக்கு இயக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் 8 நிமிடங்களில் சென்றடையும். ஒரு முறை பயணத்துக்கு 200 முதல் 250 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஸ்டாப்பிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஸ்டாப்பிற்கு செல்ல இந்திய மதிப்பில் 14 ஆயிரம் ரூபாய் ஆகும். தற்போது காரில் அந்தத் தொலைவைக் கடக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிறது. சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் 2 மணி நேரம் கூட ஆகிறது. ஆனால் ஹெலிகாப்டரில் சில நிமிடங்களில் பறந்துவிடலாம். நியூயார்க்கில் வாட…
-
- 0 replies
- 342 views
-
-
கொரோனாவால் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரடி வாங்கப்போகும் உலக பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார். 2021ஆம் ஆண்டில் கூட, இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார். பல உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளதால், நிறுவனங்கள் மூடப்பட்டு, ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்ட…
-
- 0 replies
- 266 views
-
-
இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இலங்கையின் ஐடியல் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை இலங்கையில் முதல் முறையாக ஆரம்பிக்கவுள்ளது. மத்துகம வெலிப்பென்ன என்ற இடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையின் அதிகாரபூர்வ செயற்பாடுகள் நாளை 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஐடியல் நிறுவன ஸ்தாபகரும் தலைவருமான நளின்வெல்கம தெரிவித்தார். ஐடியல் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் …
-
- 0 replies
- 586 views
-
-
அமெரிக்காவின் முன்னனி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சீனாவில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட ஆலையின் முதல் பிரிவில் சோதனை முறையிலான உற்பத்தியை தொடங்கியுள்ளது. ஷாங்காய் நகரில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் டெஸ்லா வாகன உற்பத்தி ஆலை 3 பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது. மிக பிரமாண்டமாக கட்டப்படும் ஆலையின் முழு பணிகளும் 2021ம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதில் முதல் பிரிவில் திட்டமிட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக சோதனை முறையில் வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள், பெயிண்ட உள்ளிட்ட அனைத்தும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள 3 பிரிவுகளிலும் பணிகள் முடிந்து, வாகன தயாரிப்பு முழுவீச்சில் தொடங்கும்பட்சத்த…
-
- 0 replies
- 266 views
-
-
தொழிற் சட்டங்களும் தொழிலாளர்கள் நிலையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 24 இறுதியாக உள்ள தரவுகளின் பிரகாரம், 2013ஆம் ஆண்டில் மொத்த ஊழியப்படையின் வேதனத்தில், 56 சதவீதமான 2.6 மில்லியன் வேதனமானது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராதத் தொழிலாளிகள் மூலமே பெறப்பட்டுள்ளது. இது, இலங்கையில் எத்தகையச் சட்டத் திட்டங்கள் உள்ளபோதிலும் தொழில்தருனரும் தொழிலாளியும், குறுகிய வருமானப் பெறுகைக்கானச் சட்டங்களுக்குப் புறம்பான தொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை எடுத்து காட்டுகிறது. இதன்காரணமாக, இறுதியில் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களாக தொழிலாளிகள் உள்ளபோதிலும் அவர்களது அறியாமையும் வறுமையும், இைதயே தொடரச் செய்வதுதான், இன்றைய சாபக்கேடாக உள்ளது. அதுமட்டுமல்லாது, நிர…
-
- 0 replies
- 374 views
-
-
இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க போகும் இங்கிலாந்து நிபுணர்கள் கணிப்பு கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பதிவு: நவம்பர் 03, 2020 15:13 PM லண்டன் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு இங்கிலாந்தில் மேலும் 30 லட்சம் பேர் வேலையிழக்க இருப்பதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கப்போவதாக தொழில் செய்வோர் கணித்துள்ளதுடன், ஏற்கனவே அடிபட்டு மீண்டு எழ இருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இரு…
-
- 0 replies
- 524 views
-
-
சௌதி அரசின் அரம்கோ நிறுவனம், ரியாத் பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடப்போவதை உறுதி செய்துள்ளது. தனது நிறுவனத்தின் 1% அல்லது 2% பங்குகளை சௌதி வெளியில் விடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌதி அரம்கோவின் மதிப்பு 1.2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. `வரலாற்று சிறப்பு மிக்க நகர்வு` வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடுவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல காலங்களாக பங்குச்சந்தையில் நுழைவது குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளில், வெளிநாட்டு பங்குச்சந்தைகள் குறித்து பேசப்பட்டபோதிலும், தற்போது இந்த திட்டம் ஒதுக்கி வைக்கப…
-
- 0 replies
- 239 views
-
-
14 வருடங்களுக்குப் பின்னர்... சர்வதேச சந்தையில், உச்சத்தை தொட்ட... மசகு எண்ணெய் விலை ! 14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்ற நிலையில் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மேலும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு மசகு எண்ணெய் விலை உயர்வானது, பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. ரஷ்ய எண்ணெய் தடை குறித்து ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா விவாதித்து வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் நேற்று தெரிவித்திருந்தார். ரஷ்யா உலகின் மூன்ற…
-
- 0 replies
- 259 views
-
-
ஆசிய அபிவிருத்தி வழங்கி கடந்த ஆண்டு இலங்கைக்கு 540.91 மில்லியன் டொலர்களை பல்வேறு வழிகளில் நிதியாக வழங்கியுள்ளது. இது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 13.6 சதவீதம் அல்லது 86.33 மில்லியன் டொலர்கள் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 627.30 மில்லியன் டொலர்கள் நிதியாக வழங்கப்பட்டுள்ளன. அரசத்துறை மற்றும் அரச சார்பற்ற துறை ஆகிய இரண்டு வழிகளிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அரச துறைக்காக வழங்கப்பட்ட 505.97 மில்லியன் டொலர்கள் என்பதும், 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 121.33 மில்லியன் டொலர்கள் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/business/220005/இலங்கைக்கு-540-91-மில…
-
- 0 replies
- 369 views
-
-
வங்கி தேர்வு பயிற்சி மையம், நீட் தேர்வு பயிற்சி மையம் என அனைத்து படிப்புகளுக்கும், தொழில்களுக்கும் பயிற்சி மையங்கள் வந்து விட்டன. இந்த வரிசையில் மதுரையில் பரோட்டா போடுவதற்கு ஒரு பயிற்சி மையம் உள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையின் தெருவோர உணவுகள் தனி கவனம் பெற்றவை. அவற்றிலும் விதவிதமாக தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் பெயர் பெற்றவை. பரோட்டா உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது பரோட்டா. இதனால் கடைகளில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பரோட்டா மாஸ்டர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 800 முதல் 1200 வரை ஊதியம் பெறுகின்றனர். சிலர் பகலில் ஒரு கடையிலும் …
-
- 0 replies
- 455 views
-
-
ஜப்பானில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்து விட்டு லெபனானுக்கு தப்பிச் சென்ற நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷனை நாடு கடத்தும் முயற்சி துவங்கி உள்ளது. ஜாமினில் வீட்டுக் காவலில் இருந்த கார்லோஸ். ஜப்பானில் இருந்து சரக்கு விமானம் ஒன்றில் மறைந்து லெபனானுக்கு தப்பிச் சென்றார். அவரை மீண்டும் ஜப்பானுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக, அந்நாட்டு நீதித் துறை துணை அமைச்சர் ஹிரோயுகி யோஷி (Hiroyuki Yoshiie ) நாளை லெபனான் தலைநகரு பெய்ரூட் செல்கிறார். அங்கு லெபனான் நீதி அமைச்சர் ஆல்பர்ட் செர்கானை (Albert Serhan ) சந்தித்து கார்லோசை நாடு கடத்துமாறு வலியுறுத்த உள்ளார். லெபனான்- ஜப்பானுக்கு இடையே குற்றவாளிகளை கைமாறும் ஒப்பந்தம் இல்லை என்பதால், கார…
-
- 0 replies
- 164 views
-