Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காற்று வாங்கும் சைனா பஜார்.. தடுமாறும் சீனா.! உலகமே இன்று கொரோனாவால் அரண்டுபோய் கிடக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு சரியான ஆதாரம் இல்லாவிட்டாலும், சீனா நினைத்திருந்தால், இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனை சீனாவோடு அழித்திருக்கலாம் என்பது உண்மையே. கொரோனா சீனாவில் பரவிய ஆரம்ப காலத்தில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டது.தொழில் சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி கண்டன. உலகம் முழுக்க விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி உலகமே திரும்பி பார்க்கும் ஒரு நாடாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா இருந்தது குறிப்பிடத்…

  2. கொவிட்-19 எதிரொலி: ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிந்தது! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மூடியதன் பின்விளைவு இதுவென கூறப்படுகின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 8.9 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. தொழில்துறை உற்பத்தி தரவு முதன்முதலில் 1991ஆம் ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து அதன் மிகப்பெரிய வீழ்ச்சி இதுவென விபரிக்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, தொழில்துறை உற்பத்தி 25.3 சதவீதம் குறைந்துள்ளது. வகைப்படி…

  3. அமேசான் மீது வழக்கு தொடுத்த ஊழியர்கள்.! கொரோனா காலத்திலும், தங்கள் வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள வியாபாரிகளும், பெரும் பணக்காரர்களும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதே போலத் தான் அமேசான் நிறுவனமும் தன் வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள எல்லா வேலைகளையும் செய்தது. செய்து கொண்டு இருக்கிறது. அப்படி அமேசான் தன் வியாபாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு, ஊழியர்களை வேலை வாங்கியதற்காக, இப்போது 3 ஊழியர்கள், அமேசான் மீதே வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். எந்த நீதிமன்றம் அமெரிக்காவில், ஸ்டேட்டன் ஐலாந்து (Staten Island) என்கிற பகுதியில், அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும் JFK8 fulfillment center என்கிற இடத்தில் சுமாராக 5,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார…

  4. சுயசார்பு பொருளாதாரம் சாத்தியமா? முகம்மது ரியாஸ் riyas.ma@hindutamil.co.in அன்றாடப் பொது நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளிகள் செயல்படும் முறை மாற்றப்படுகிறது; வீட்டிலிருந்து பணி புரிதல் புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது. அலுவலகங்களில் ஷிப்ட் முறைகளில் ஊழியர்கள் பணிக்கு வரச் செய்யப்படுகின்றனர்; பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்நாடுகளுக்குள்ளான சமூகப்பழக்கவழக்கம் தொடர்பான மாற்றங்கள். இது ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் தங்களின் பொருளாதார கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத…

  5. பலருக்கு சோறு தண்ணி இல்ல.! ஆனா இவங்க சொத்து மட்டும் பில்லியன் கணக்குல எகிறுதே.! எப்படி.? கொரோனா பற்றி அதிகம் விளக்கத் தேவை இல்லை. பல குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இருப்பினும், உலகில் சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு, இந்த கொரோனா காலத்தில் கூட சில பல பில்லியன் டாலருக்கு மேல் எகிறி இருக்கிறதாம். எப்படி இவர்களின் சொத்து மட்டும் எகிறி இருக்கிறது? என்ன ஆச்சு என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். அறிக்கை Institute for Policy Studies என்கிற அமைப்பு பில்லியனர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் அமெரிக்காவின் ஜெஃப் பிசாஸ் மற்றும் எலான் மஸ்கின் சொத்த…

  6. டாலருக்கு வந்த வாழ்வு புதிய ஏற்பாடு: அமெரிக்க டாலர் பணமல்ல, செத்த பிணம். பிணத்திற்கு எப்படி எடை அதிகமோ, அப்படித்தான் டாலரின் மதிப்பும் ஊதிப் பெருகியுள்ளது. ஏனென்றால் அது இறந்து போய் 49 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் டாலருக்கு சவுதி அரேபியாதான் மறுவாழ்வு கொடுத்துள்ளது என்று சொல்லியிருந்தோமே, அது உண்மைதான். ஆனால் மறுவாழ்வு பெற்றும் அது பிணமாகத்தானே உள்ளது? அப்படியிருந்தும் எது அமெரிக்காவிற்கு உலகத்தையே அச்சுறுத்தும் அதிகாரத்தைத் தந்தது? அமெரிக்க டாலர் உலகப் பணம் என்ற தகுநிலைதான் அது உலகின் மிகப்பெரிய வல்லரசாக நீடிப்பதற்கு முதன்மைக் காரணம் இன்று வரை உலகளாவிய வர்த்தகம் பெருமளவில் அமெரிக்க டாலரில் நடப்பதுதான். இதனால் உலகப் பொருளாதாரம் தன்னை நம்பியே உள்ளது என்று…

  7. அமெரிக்காவின் அடுத்த குறி சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ.? வாஷிங்டன்: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் சீன மாணவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இதுவரை வர்த்தகத்தினை கையில் எடுத்து வந்த அமெரிக்கா, அடுத்து சீன மாணவர்களை ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் விசாக்களை நீட்டிப்பதில் சிக்கலை கொண்டு வரலாம் என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன.இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா சீனா இடையிலான பிரச்சனையினால், அமெரிக்கா பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களை வெளியேற்றலாம் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், சீனா மாணவர்களின் வ…

  8. கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் by : Jeyachandran Vithushan கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பு…

    • 0 replies
    • 445 views
  9. பொருளாதாரத்தை மீளக்கட்டியெழும்ப எத்தனை ஆண்டுகள் தேவை? ‘பாத்பைன்டர்’ ஆய்வு Bharati May 22, 2020 பொருளாதாரத்தை மீளக்கட்டியெழும்ப எத்தனை ஆண்டுகள் தேவை? ‘பாத்பைன்டர்’ ஆய்வு2020-05-22T10:39:41+00:00Breaking news, கட்டுரை உலகப் பொருளாதாரத்தின் மீள் எழுச்சி குறித்து சர்வதேச சமூகம் மிகுந்த அக்கறையுடன் செயற்படத் தொடங்கியுள்ளது. அத்தோடு, கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றை மையமாகக் கொண்டு எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை உலக சமூகம் ஆராயத் தொடங்கியுள்ளது. தொழிற்சாலை மற்றும் வியாபார சரிவு காரணமாகப் பல்லாயிரக்கணக்கான வேலைகள் இழப்பு, பணிபுரியும் ஊழியர்களின் வருமானம் குறைவு ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, வறுமை நிலை மீண்டும் உயரும். மக்கள் பசியுடன்…

  10. ’’வாகன இறக்குமதித் தடை ஏற்றுக் கொள்ள முடியாது’’ -இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் வாகன இறக்குமதி தொடர்பில், விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, ஏனையஇறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில், அரசாங்கம் கவனம்செலுத்த வேண்டுமென, இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. ''பற்றுச்சான்றுகள் மீது, உயர் எல்லைப் பெறுமதிகளை நிர்ணயித்தல் போன்ற,சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட மாற்றுவழிமுறைகளை, அரசாங்கம் பின்பற்றலாம். மாறாக, வாகன இறக்குமதியை முற்றாகத்தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை, எம்…

    • 0 replies
    • 821 views
  11. கோவிட்-19 தாக்கம்: உலக பொருளாதாரம் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்திக்கும், சீனாவுக்கும் பேரிழப்பு இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி கூறியிருப்பதாவது: உலகப்பொருளாதாரம் 5.8 முதல் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் வரை பாதிக்கப்படும். அதாவது உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 6.4% முதல் 9.7% வரையில் இழக்கப்படும். தெற்காசியாவில் ஒட்டுமொத்த உற்பத்தி 3.9% முதல் 6% வரை குறையும். பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் இறுக்கமான கட்டுப்பாடுகளினால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிய அளவில் அடிவாங்கும். ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் குறைந்த அளவு நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 3 மாதங்கள் என்று இருந்தால் 1.7 ட்ரில்லியன் டாலர்கள்…

  12. சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு துளியும் ஆர்வம் இல்லை: ட்ரம்ப் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு துளியும் ஆர்வம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரவித்துள்ளார். இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ‘சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறீர்களா? என ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இல்லை. எனக்கு அந்த எண்ணமே இல்லை. அதில் எனக்கு துளியும் ஆர்வம் இல்லை. கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஏற்ப அவர…

  13. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தன்னிறைவு இந்தியா டில்லியில் அவர் கூறியதாவது: விரிவான தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம்(தன்னிறைவு இந்தியா) என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு உதவி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள…

    • 2 replies
    • 463 views
  14. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை: சீனா புதிய அறிவிப்பு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை, சீனா வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில் அமெரிக்காவினால் தயார் செய்யப்படும் 70 உற்பத்தி பொருட்கள் பெயரிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சீன நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறித்த வரிச் சலுகையானது இம்மாதம் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதுடன், 2021ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்’ என தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் ஏனைய அரிதான உலோக கலவைக…

  15. Covid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 மே 05 கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக, உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு கிடக்கிறது. ஒவ்வொரு நாடுமே, இந்த நோய்த் தாக்கத்தின் விளைவான, உயிரிழப்புகளுடன் தங்களது பொருளாதார இழப்புகளையும் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும் வரையில், நாம் நமது பொருளாதார இழப்புகள் தொடர்பிலோ, அடுத்தடுத்த மாதங்களில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள் தொடர்பிலோ சிந்தித்திருக்கிறோமா? அல்லது, அதற்கான ஆயத்தங்களை செய்திருக்கிறோமா? கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிப்பிழைப்பதே இப்போது பெரும்பாடாக உள்ளநிலையில், நாளாந்த அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பெரும்பாட…

  16. கொவிட்-19 எதிரொலி: கார் விற்பனை 97 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது! கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, பிரித்தானியாவில் மிகப்பெரிய கார் விற்பனை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாத புதிய கார் விற்பனை 97 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (எஸ்.எம்.எம்.டி) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 161,000 உடன் ஒப்பிடும் போது மிகப் பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் இது 1946ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக் குறைந்த மாத நிலையை குறிக்கின்றது. 4,321 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள்…

  17. பங்குகளை விற்ற பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான பெர்சைர் ஹாத்வே நிறுவனம், அமெரிக்காவின் நான்காவது பெரிய விமான நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டது. கொரோனாவின் காரணமாக அமெரிக்க விமான போக்குவரத்து தள்ளாட்டத்தில் இருக்கும் போது இந்த முடிவினை வாரன் பஃபெட் எடுத்துள்ளார். விமான துறையில் முதலீடு செய்ததன் மூலம் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக பஃபெட் முன்பு தெரிவித்து இருந்தார். காணொளி மூலம் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு பெரிய நஷ்டம்தான். இருந்தபோதிலும் விமான துறையில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டேன். எதிர்காலத்தில்…

    • 1 reply
    • 973 views
  18. ஊழியர்களின் கொடுப்பனவுகளை செலுத்தாமல் உரிமையாளர் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.! வணிகமொன்றின் ஊழியராக இருக்கிறீர்களா? அல்லது வணிகமொன்றைக் கொண்டு நடத்துகின்றீர்களா? ஊழியராக இருப்பின், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, எத்தகையை அடிப்படை உரிமைகளைப் பெற்றிருக்கிறீர்கள் என்பைத அறிவீர்களா? அல்லது வணிக உரிமையாளராக, உங்களுடைய ஊழியர்களுக்கு எத்தகைய உரிமைகளை வழங்கவேண்டும் என்பது தொடர்பிலான அறிவைக் கொண்டுள்ளீர்களா? இலங்கையில் இயற்றப்பட்டுள்ள எண்ணிலடங்காத சட்டங்களில் பல சட்டங்கள், ஊழியர்களின் நலன் பாதுகாப்புச் சட்டங்களாகவும் சில தொழில்தருநரின் சார்பாக, ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திடாத சட்டதிட்டங்களாகவும் அமைந்துள்ளன என்பதனை அறிவீர்களா? அதற…

  19. Virgin Galactic விண்கலம் பூமிக்குத் திரும்பியது...விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாள் நெருங்குகிறது வணிக விண்வெளிப் பயணங்கள் கூடிய விரைவில் சாத்தியமாகலாம். VSS Unity எனப்படும் Virgin Galactic விண்கலம் அதன் பயணத்தை நிறைவுசெய்துள்ள வேளையில் அந்த நம்பிக்கை தோன்றியுள்ளது. அது நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அந்த முன்னோடிப் பயணத்தில், Unity விண்கலம், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விமானத்தின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டது. விண்கலத்தைப் பாய்ச்சுவதற்கு முன், அவ்விமானம் அதை அதிக உயரத்திற்குக் கொண்டு சென்றது. வெற்றிகரமான பயணம் பற்றி சமூக ஊடகங்களில் அறிவித்த Virgin Galactic நிறுவனம், விண்கலத்தின் படங்களையும் பகிர்ந்தது. …

  20. அயர்லாந்தில் கார் விற்பனை சரிவு: ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனை! அயர்லாந்தில் கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 96 சதவீதம் குறைந்துள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் குறித்த புள்ளிவிபரங்கள், ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்பதைக் காட்டுகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மார்ச் மாதத்தில் பெரும்பாலான மோட்டார் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக அயர்லாந்தில் கார் விற்பனை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த மார்ச் மாதம், கார் விற்பனை புள்ளிவிபரங்களும் கிட்டத்தட்ட 64 …

  21. Started by Kaalee,

    இந்த திரியில் நிதி மற்றும் முதலீடு சம்பந்தமான பதிவுகளை இணைக்கலாம் என்று எண்ணியுள்ளேன்

    • 0 replies
    • 1.7k views
  22. ஸ்டிச் & ஸ்டோரி (Stitch & Story) படத்தின் காப்புரிமைFELIPE GONCALVES ``சமையல் மேடை ஸ்டார்ட்-அப்'' என்ற அளவில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காலத்தில் செழிப்பாக வளரும் தொழிலாக மாறியுள்ளது. ஸ்டிச் & ஸ்டோரி என்ற இந்த ஆன்லைன் கைவினைக் கலை நிறுவனம் வெறும் 11 முழுநேர அலுவலர்களை மட்டும் கொண்டு இயங்குகிறது. துணி மற்றும் கம்பிகளைப் பயன்படுத்தும் பின்னல் வேலைகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை இந்த ஆன்லைன் நிறுவனம் விற்கிறது. விருப்பம் உள்ளவர்களுக்குப் பயிற்சியும் தருகிறது. கடந்த சில வாரங்களில் இந்த நிறுவனம் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்னலாடை தயாரிப்பு மற்றும் கம்பிகளையும் சேர்த்த பின்னல் பொருள் தயாரிப்புத் திறன்களை சொல்லித் தர…

    • 0 replies
    • 568 views
  23. வடக்கு கடற்றொழிலாளர்களின் எதிர்காலம் இலங்கையின் பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடிக்குள் மூள்கிக்கொண்டிருக்கும் போது இலங்கை முழுவதுமிருக்கும் கடற்றொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இங்கு வடக்கு கடற்றொழிற்றுறையில் வந்திருக்கும் நெருக்கடியென்பது ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் கட்டமைப்பில் இருக்கும் பலவீனங்களையும் கருத்தில் கொண்டுதான் பகுப்பாய்வு செய்யமுடியும். குறிப்பாக கடற்றொழில் சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி, அதாவது திறந்த பொருளாதாரத்தினுடைய தாக்கம், நீண்டகால யுத்தத்ததின் பாதிப்பு, அதன் பின் வந்த இந்திய இழுவைப் படகுகளின் சுரண்டலால் ஏற்பட்ட இழப்புக்கள் தென்னக இடப்பெயர் மீனவர்களின் முரண்பாடு, மற்றும் கடற்றொழில் கூட்டுறவுச்சங…

  24. கணக்கியல் மற்றும் சந்தையியல் மாணவர்களுக்கு, அமெரிக்க பேராசிரியர் பிலிப் கொட்லர் அவர்களது புத்தகங்கள் பரிச்சயமானது. இவர் இணையம் வருமுன்னர் மிக பிரபல்யமான சந்தையியல் பேராசிரியர். Four Ps என்பது இவரது மிக புகழ் மிக்க கோட்பாடு இவரது வாடிக்கையாளர்களும் மிக முக்கியமான இரு வாடிக்கையாளர்கள், சுவீடன் மட்டும் நியூசீலாண்ட் அரசுகள். (இவர் ஓய்வு பெற முன்னர்). அமெரிக்காவில் திவாலான என்ரான் என்கிற நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தார். $125m கட்டணம் வாங்கினார். நிறுவனம் திவாலாக 3 வருடத்துக்கு முன்னர். இப்போது 88 வயதான அவர், சீனாவில் வழங்கிய presentation. இன்றயை இணைய உலகில் இவர் சொல்வது முக்கியமானது என்பதால் அவரை பேச அழைக்கிறார்கள். இந்த சந்திப்பில் இருப்பவர்க…

    • 0 replies
    • 495 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.