Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. தம்பரும், சுப்பரும்! **************** தம்பர்.. மக்கள் விரும்பியே மன்னனைத் தெரிந்தும்-பின் மாபெரும் போருக்கேன் வந்தனர். சுப்பர்.. மக்களை மறந்துமே மந்திரி சபைக்குத்தான் மாபெரும் சலுகைகள் செய்ததால். தம்பர்.. சிங்கள மக்களே சீறும் சிங்கமாய் சினம் கொண்டு வீதிக்கேன் வந்தனர். சுப்பர்.. பங்களா கட்டியே வாழும் தலைவர்கள் வறுமைக்குள் மக்களை விட்டதால். தம்பர்.. போரை வெண்றவர் புதுமைகள் செய்தவர் போற்றிய மக்களேன் வெறுத்தனர். சுப்பர்.. போரை சொல்லியே இனத்தை பிரிக்கின்ற பொய்கள் அவர்கட்கு தெரிந்ததால். தம்பர்.. விமானத்தளம், வீதிகள்,விளக்குகள்…

  2. "அடக்கம் தடுக்க ஆசை நடக்க" "அடக்கம் தடுக்க - ஆசை நடக்க அச்சம் எச்சரிக்க - அழகு இழுக்க அடங்கா நெஞ்சம் - பொங்கி வழிய அணங்கே உன்னுடன் - நான் வரவா?" "ஆடை கொஞ்சம் - காற்றில் ஆட ஆபரணம் உடலில் - மின்னி ஒளிர ஆழம் தெரியா - சுந்தரி கவர்ச்சி ஆட்டிப் படைக்குது - என் உள்ளத்தை?" "இமைகளில் சிக்கி - என்னையே இழந்து இளையாள் இடையின் - வனப்பில் மயங்கி இருண்ட மேகஞ்ச்சுற்றிய - சுருண்டு கூந்தலிற்குள் இமைப் பொழுதில் - ஏன் வஞ்சித்தாய்?" "ஈரமான பூவே - இளமை பூவையே ஈகை ஒன்று - எனக்குத் தருவாயா ஈவு இரக்கம் - கொண்ட விறலியே ஈடிகை எடுத்து - உன்னை வரையவா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  3. நான் பேசத்தெரிந்த மனிதன் நான் பேசுவேன் என் கனவு பற்றி பேசுவேன் என் காதல் பற்றி பேசுவேன் நான் எழுதத்தெரிந்த மனிதன் என் வாழ்வு பற்றி எழுதுவேன் என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன் எங்கு நான் வாழ்ந்தாலும் என் வேர் பற்றி எழுதுவேன் என் இனம் என் மண் எம் விடுதலை என் அடையாளம் எல்லாம் பற்றியும் எழுதுவேன் பேசுவேன் வஞ்சனை செய்வோர் பற்றியும் வாய்ச்சொல்லில் வீரர்கள் பற்றியும் எஞ்சி இருக்கும் காலம் வரை என் தமிழ் தந்த திமிரோடு எழுதுவேன் பேசுவேன் நான் எழுதப் பேசத் தெரிந்த மனிதன் என் மூச்சும் என் பேச்சும் நிற்கும் வரைக்கும் நான் எழுதுவேன் நான் பேசுவேன்.

  4. "ஒருபால் இருபால் அவரவர் முடிவு" "பண்டைய நாட்களில் இயற்கையின் அழைப்பில் பலரும் பாராட்டிட திருமணம் அரங்கேறி பருவமடைத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பக்குவமான பிணைப்பு பின்னிப் பிணைந்தது!" "சுமேரிய நாகரிகம் வழியில் சங்கத்தமிழனும் சுத்தமான இயற்கையான அணைப்பில் மூழ்கி சுதந்திர பிணைப்பில் வாழ்வை அமைத்து சுவர் அமைத்தான் குடும்பம் காக்க! " "இன்றைய நவீனம் புதியகுரல்களை உள்வாங்கி இணக்கம் கொண்ட ஒருபாலாரையும் இணைத்து இதயங்கள் ஒன்றுசேர சமஉரிமை தந்து நவீனஃபிளாஷ் [modern flash] பழைய மதிப்புகளை சந்தித்தன!" "கடந்தகால மரபும் தொடர்ந்து வாழ கள்ளமில்லா ஒருபால் அன்பும் இணைந்துவாழ களங்கமில்லா மரபுகளின் உட்கருத்தை விளக்க இரு…

  5. "எந்தன் உயிரே" "அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து ஆரத் தழுவி ஆசை தூண்டி இதயம் மகிழ்ந்து இதழைப் பதித்து ஈரமான நெஞ்சம் ஈர்த்துப் பிணைத்து எழுச்சி கொள்ளும் எந்தன் உயிரே!" "அக்கறையாய் பேசி அன்பு ஊட்டி ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி இடுப்பு வளைவு இன்பம் சொரிய ஈவு இரக்கத்துடன் ஈருடல் ஓருயிராக உரிமை நாட்டும் உத்தம உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  6. "வாராயோ வான்மதியே" "வாராயோ வான்மதியே கண்டாயோ என்னவளை தீராத காதலில் வருந்துவது தெரியாதோ? தாராயோ நிம்மதி உன்னிடம் கேட்கிறேனே மாறாத அன்பில் இன்னும் அலைகிறேனே ஆறாத காயங்களின் வலியில் தவிக்கிறேனே பாராயோ என்னைக் கருணை காட்டாயோ?" "வெண்ணிலாவின் ஒளியிலே அவளைத் தேடுகிறேனே கண்கள் இரண்டும் சோர்வு அடைகிறதே மண்ணின் வாழ்வை முடிக்கும் முன்பே பெண்ணே மன்னித்து என்னை அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. "நிழலாடும் நினைவுகள்" "நிழலாடும் நினைவுகள் கதை சொல்லும் நித்திரை செய்கையில் கனவாய் வரும்! மகரிகை தொங்க வலதுகால் வைத்து மணமகளாய் வந்தது படமாய் போச்சு! ஆறடி சேலையில் தொட்டில் கட்டி, காலடியில் வளர்த்தது செய்தியாய் போச்சு! வாழையடி மரபை பெருமையாக பேணி வந்தாரை மகிழ்வித்தது மனதில் ஆடுது! இறக்கும் தருவாயிலும் புன்னகை பூத்தது இறவாமல் 'நிழலாடும் நினைவுகள்' ஆயிற்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்! நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து! அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்! இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது! அந்த நொடியில் நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின! சாம்பலின் நடுவே விதை முளைத்தது தமிழர்களின் உள்ளத்தில் மீண்டும் மலர்ந்தாள்! மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின! நூலகத்தின் அமைதி தெய்வீகத் தாலாட்டானது “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! [கந்தையா தில்லைவிநாய…

  9. "மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரை தாழ்த்தாமல் வாழ முடியாது!" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும்மழை பொழிந்தால் திட்டித் தீர்க்கிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்!" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்!" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் …

  10. "மூன்று கவிதைகள் / 10" பண்பாடு வரலாறு காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர்! மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! ........................................... நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் மங்கை பாட சலங்கை ஒலிக்க பெதும்பை ஆட சங்கு பொருக்கி பேதை மகிழ்ந்தாள்! ......................................................... யாழ் நூலகத்தின் படிகளின் …

  11. "ஈர விழிகள் என்னை ஈர்க்கிறதே!" "ஈர விழிகள் என்னை ஈர்க்கிறதே பாரமாய் அன்பு இதயத்தை தாக்குதே வீர மொழிகள் இனி வேண்டாம் தூர விலகாதே என்னிடம் வருவாயா?" "ஆற அமர்ந்து முடிவு எடுக்காயா கூற நினைப்பதை நேராய் சொல்லாயா சிறந்த பெண்ணே சீற்றம் வேண்டாம் நிறம் மாறலாம் காதல் மாறலாமா?" "கோரமான எண்ணம் அழிந்து போகட்டும் அரசியல் ஒழிந்து ஒற்றுமை பெருகட்டும் அரங்கத்தில் பார்க்கும் நாடகம் இதுவல்ல தரமான செயல்கள் கூட்டாதோ நட்பை?" "அறம் தரும் இன்பம் மலரட்டும் புறம் பேசும் பழக்கம் அழியட்டும் உரம் சேர்க்கும் பாசம் துளிரட்டும் விறலியே விரைந்து என்னைத் தழுவாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  12. எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல் நான் கிறுக்கிய காதல் மொழிகள் ஒரு தொகுப்பாக... உன் விழிஓதும் வேதத்திற்கு இலக்கணம் ஏதுமில்லையோ!? - விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே **** உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது?? பார்வை பட்டாளே தாக்குதே!! **** என் நித்திரை நித்தமும் திருடப்படுகிறது கண்ணுறங்காமல் களவாடியவளைத் தேடுகிறேன் !! **** விழியழகோ !! உன் விழிபேசும் மொழியழகோ !! விழிஉமிழும் மொழியலையில் என் தேகமெங்கும் சாரல் மழை!! **** உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி ? **** என்னை விழுங்க காத்திருக்கும் விழியே !! பார்வைப் பொய்கையில் மூழ்கி…

  13. எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே. மொழியாகி எங்கள் உயிர்மூச்சான மாவீரர்களே! வழி ஏதும் தெரியாமல் இன்று தட்டுத்ததடுமாறுகிறோம் தளர்ந்து தள்ளாடுகின்றோம். தனித்து போய்விட்டோமென நாளும் நாளும் தவிக்கின்றோம். தன்முனைப்பு, போட்டி பொறாமை தன்னலம்,பொருளாசை என்று மக்களை மறந்து, தம்மினம் படும் துயரங்கள் புரியாமல் மனிதம் மறந்தவர்களாக தமக்குள் தாமே முட்டி மோதிக் கொண்டு எம்மவர்கள் மாறிப்போகும் இந்த கொடுமையான உலகில,; எமக்காக உள்ளவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள் நீங்கள் மட்டுமே. உங்களுக்காக நீங்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. பெற்றவரையும் உற்றவரையும் துறந்து, உங்கள் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, மக்கள் வாழ்வுக்காக மனஉ…

  14. "எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்] காலை: "கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான் செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் பந்தி பந்தியாய் பறவை பறக்குது மந்த வெயில் மெல்ல சுடுகுது எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!" நண்பகல் [மத்தியானம்]: "சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள் சந்தனப் பொட்டு பள பளக்குது சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான் செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள் வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது சிந்திய முத்துகள் …

  15. 'உன் நினைவுகளில் என்றும் நாம்' "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டற கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதை கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கரு…

  16. Started by kandiah Thillaivinayagalingam,

    "குறள் 1163" "இளமை பருவம் அழகு கூட்ட இச்சை கொண்டு மனது ஏங்க இளைஞன் ஒருவன் நட்பு வேண்ட இணக்கம் சொல்லி காதல் வளர்த்தேன்!" "இதலை அவன் கை வருட இயைந்து நானும் விட்டுக் கொடுக்க இன்பம் தூய்த்து இருவரும் மகிழ இதழ் கொஞ்சி மனையாள் என்றான்!" "இதயம் இரண்டும் ஒன்று சேர இமைகள் நான்கும் மூடாமல் இருக்க இரத்த உறவுகள் சம்மதம் தர இல்லத்து முன்றலில் தாலி கட்டினான்!" "இடம் தேடி பொருள் சேர்க்க இரவு பகலாய் தனிய விட்டு இரக்கம் அற்ற காமம் சூழ இரதம் ஏறி பிரிந்து விட்டான்!" "இமயவன் ஆலய காவடி போல இச்சை வெட்கம் இர…

  17. முள்ளி வாய்க்கால்..! ************* 2009.. மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழுக்கு கொள்ளி வைத்ததை-எம் மூச்சிருக்கும் வரையும் முடியுமா மறக்க.. அன்று.. கல்லும் கூட கரைந்தது கடலும் கூட அழுதது முள்ளிவாய்க் கால் எரிந்தது-உலகம் முதளைக் கண்ணீர் வடித்தது. முப்பது வருடமாய் நடந்தது முதலில் அகிம்சை தோற்றதால் இப்புவி தன்னில் தமிழுக்கு-ஒரு இருக்க இடம்தான் கேட்டது. அப்பாவித் தமிழரைக் குவித்து வைத்து அகிலத்தில் சிலநாட்டை சேர்த்து வைத்து ஆயுதகுண்டாலே கொட்டித்தீர்த்து அழித்தாயே வீரனா? நீயே சொல்லு. பச்சிளம் பாலக குஞ்சு…

  18. "இடிமுழக்கம்" [அந்தாதிக் கவிதை] "இடிமுழக்கம் வானில் பெரிதாய் கேட்கும் கேட்கும் சத்தமோ மின்னலின் எதிரொலி! எதிரொலியின் பின்னே எதோ இருக்கும் இருக்கும் அதுவோ நல்லதாய் அமையட்டும்! அமையும் எதுவும் குழப்பத்தில் முடிந்தால் முடியும் அதுவோ ஒரு இடிமுழக்கம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  19. "எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!" "கொடூரமாக இருக்காதே திமிர் பிடிக்காதே உரிமைகளை மதி குரல்களை மதி" "இங்கு வேலையாட்கள் இல்லை இங்கு முதலாளிகள் இல்லை இங்கு குடும்பமே உண்டு இனி நட்பாகக் கவனி" "கஷ்டங்களைக் கேளு துயரங்களைக் கேளு கடவுள் சிவாவாக இரு இயேசு கிறிஸ்துவாக இரு" "ஆதாயத்தைப் பகிரு லாபத்தைப் பகிரு ஒரு தந்தையைப் போல ஒரு தாயைப் போல" "அடிமை ஆக்காதே ஏழைகளை உருவாக்காதே ரோமாக இருக்காதே நீரோவாக இருக்காதே" "எல்லோரையும் இணை தொழிலாளர்கள் பங்கேற்கட்டும் அனைவரையும் உள்ளடக்கு முடிவெடுப்பதில் கலந்தாலோசி" "ஆர்வத்தைக் கொடு நம்பகத்தன்மை வளரட்டும் …

  20. 'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்' "ஒட்டாவா நகரில் காலை பொழுதில் கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டன் கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு துள்ளி குதித்து முட்டி மோதி இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க பாட்டு படித்து இனிமை காட்டும் குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து எட்டு திக்கும் துள்ளி குதித்தேன்" "சொட்டு சொட்டாய் விழும் மழையில் பட்டும் படாமலும் நனைந்து விளையாடி நீட்டி நிமிர்ந்து வாங்கில் படுத்து லூட்டி அடித்து சிரித்து மகிழ்ந்தோம்" "ஒட்டி உறவாடும் அன்பு மழலைக்கு வெட்டி பேச்சு பட்டாம் பூச்சிக்கு மொட்டாய், மலரா க…

  21. போதையை ஒழிக்க போர்க்கொடி தூக்குவோம்! ****************************************************************** எழுபது வருடமாய் ஆட்சியில் இருந்தவர் என்னத்தை எமக்கு கி̀̀̀̀ளித்தார்க̀̀̀̀̀̀̀̀̀ள். இலங்கையை விற்றுமே இனங்களை அழித்துமே இன்னல்கள் தந்துமே கெடுத்தார்கள். உலகத்தின் குழந்தையாய் உன்னத அழகியாய் இயற்கையே படைத்தாள் எம்நாட்டை ஊளலும்,இலஞ்சமும் போதையும்,சண்டையும் ஊரெல்லாம் அலைந்ததே எம் வாழ்க்கை. ஐவகை நிலமும் ஆறுகள் குளமும் அழகிய கடலும் அவள் தந்தாள். பொய்யையும் போரையும் உலகுக்கு காட்டி பொல்லாத செயல்செய்து அவன் உயர்ந்தான். அரசியல் வாதியோ நானில்லை - ஆனால் அனுர ஆட்சியை தினமறிவோம். இளையோரை கொல்லும் பாதாளப் போதையை எல்லோரும் சேர்ந்துமே ஒழித்திடுவோம். ஏற்றங்கள் தாழ்வுகள் கட்சிகள் பேதங்…

  22. நான் மட்டும் தனித்திருக்கிறேன் கொடுமையான நீ தோற்றுவிட்டாய். உன்னாலும் முடியவில்லை. எவராலும் முடியாது என்பது தெளிவாகவே எனக்கு தெரிகிறது. உலகையே ஆட்டிப் படைக்கும் உன்னாலும் முடியாது. கொரோனாவே முடியாது. உன்னாலும் முடியாது. உனது பார்வையிலிருந்து தப்ப எல்லோரும் வீட்டில் இருந்தே ஆகவேண்டும் என்ற போது பயத்திலும் ஓர் மகிழ்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது. வீட்டில் எல்லோரும் ஒன்றாக, ஆனாலும் இடைவெளி விட்டிருந்து மனம்விட்டு பேசலாம் என மனதுக்குள் நினைப்பு எழுந்தது. ஆனால் எல்லாமே பொய்த்துப்போனது. தொடர்ந்தும் தனித் தீவுகளாகவே வாழ்க்கை நகருகின்றது. கணவன் தன் காதலியுடன் பொழுதைப் போக்க, மகன் தன் நண்பர்களுடன் அரட்டை அடித்து வ…

    • 0 replies
    • 885 views
  23. "விழிகள் மீனோ மொழிகள் தேனோ" "விழிகள் மீனோ மொழிகள் தேனோ பற்கள் முத்தோ இமைகள் சிப்பியோ கழுத்து சங்கோ மார்பு குடமோ முகம் நிலவோ நெற்றி பிறையோ யான் அறியேன் அழகு மங்கையே உன்னைக் காண இதயம் துடிக்குதே உலகம் கூட எனக்கு வெறுக்குதே கண்ணே கரும்பே அருகில் வருவாயோ?" "புருவம் வில்லோ நடை அன்னமோ கூந்தல் அறலோ இடை உடுக்கையோ சாயல் மயிலோ மூக்கு குமிழாம்பூவோ தோள் மூங்கிலோ விரல் காந்தள்மலரோ வாலிப்பதை தூண்டி வலையில் வீழ்த்திட்டாயே ஆழ்ந்த ஆசையில் விண்ணில் பறக்கிறேனே இனிய இசையும் இடியாய் கேட்குதே மானே மடமகளே நெருங்கி அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  24. "மூன்று கவிதைகள் / 05" 'அக்கினியானவளே' செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ செல்லம் கொட்டிய என் தங்கையே! செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ செங்கோல் மடிந்த நாள் இதுவோ? அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள் அண்ணன் அங்கே காத்துக் கிடக்கிறானே! அன்பு போதித்த புத்தரும் மௌனம் அறிவு தொலைத்த படையினர் பிடியில் அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ......................................................... 'சீவி முடித்து சிங்காரித்து' சீவி முடித்து சிங்காரித்து கண்ணே, சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு, சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ! சித்திரம் சொல்லாத வனிதை நீயே, சீதை காணாத காதல் தருவேன்! கூவி அழைக்குது சிட்…

  25. "உலகின் மிகப் பழைய சுமேரிய காதல் பாட்டின் தமிழ் ஆக்கம்" ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். பிலடெல்பியா (Philadelphia) பல்கலைக்கழக பேராசிரியரான Noah Kramer இதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார். இது காதல் கணவனுக்காக முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது. இது ஷு-சின் அரசனுக்கு உரைக்கப்பட்டது. இந்த காதல் கடித கவிதை "Bridegroom, dear to my heart, Goodly is your beauty, honeysweet ,........ " அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது. மேலும் இதுவே உலகின் மிகப் பழைய காதல் பாட்டும் ஆகும் . இது கி மு 2030 அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.