தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
திமுக கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனுடன் வி.பி. துரைசாமி (இடது) தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். வி.பி. துரைசாமி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நேற்று, வியாழக்கிழமை, நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி இன்று, வெள்ளிக்கிழமை, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்துவந்த வி.பி. துரைசாமி, 1989லிருந்து 1991வரையிலும் 2006லிருந்து 2011வரையிலும் தி.ம…
-
- 0 replies
- 660 views
-
-
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்க ஒப்புதல்! தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட இல்லத்தில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின் அதனை நினைவு இல்லமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com…
-
- 1 reply
- 664 views
-
-
விற்பனை நேரத்தை அதிகரித்தும் நோ யூஸ்.. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை சரசரவென சரிவு. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கிடுகிடுவென குறைந்து விட்டது. நேற்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.98.5 கோடிக்கு கீழ் மதுவிற்பனை நடந்துள்ளது. 41 நாட்களுக்கு மே 7ம் தேதி மதுக்கடைகள் தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அதிக அளவில் குடிமகன்கள் கூடினர். மே 7 மற்றும் மே 8 ஆகிய இரு நாட்களில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கியது. இரு நாளில் மட்டும் 290 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடைய உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவால் மே 16 தேதி திறக்கப்பட்டது. முதல் நாள் ரூ.163.5 கோடிக்கு மதுவிற்பனையாகியது. அடு…
-
- 0 replies
- 481 views
-
-
அனுமதியின்றி தொழுகை: 500 இற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு மதுரை மகபூப்பாளையத்தில் அனுமதியின்றி தொழுகை நடத்திய 550 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் பொது ஊரடங்கு அமுலில் உள்ளது. இதன் காரணமாக பொது இடங்களில் கூடும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினியை பயன்படுத்துதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியின் அன்சாரி தெருவில் அமைந்துள்ள பொதுப்பாதையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கிட்டத்தட்ட 500 இற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இரவு 9 மணிக்கு முதல் 10.25 வரை தொழுகை நடத்தியுள்ளனர். இதனையடுத்து தகவ…
-
- 0 replies
- 564 views
-
-
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! தமிழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) புதிதாக 536 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்வடைந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், “தமிழகத்தில் 536 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4406 ஆக அதிகரித்து…
-
- 2 replies
- 718 views
-
-
2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு... ஜூன் 1ம் தேதி முதல் பக்தர்கள் வழிபட அனுமதி.? தமிழகத்தில் உள்ள பெரிய கோவில் முதல் சிறிய கோவில்கள் வரை ஜூன் 1ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் மார்ச் 25ம் முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த இரு மாதங்களாகவே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மதுரை சித்திரை திருவிழா, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட திருவிழாவுக்கும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டு…
-
- 0 replies
- 592 views
-
-
மணலி பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு: அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்க; ராமதாஸ் வாயுக்கசிவு ஆபத்து உள்ளதால், தமிழகத்தில் அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை: சென்னையின் புறநகர்ப் பகுதியான மணலியில் உள்ள பொதுத்துறை யூரியா நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கேடுகளையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பிற வேதிப்பொருள் ஆலைகளிலும் நிகழ்ந்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாட…
-
- 0 replies
- 523 views
-
-
சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறப்பு! தமிழகத்தில், சென்னை மற்றும் குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து ஏனைய இடங்களில், இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் 24ஆம் திகதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளதாகக் கூறி டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கையாக கட்டுப்படுத…
-
- 24 replies
- 2k views
- 1 follower
-
-
எல்லாமுண்டு நம்மிடத்தில்! - கொரோனாவும் பழந்தமிழர்கள் விட்டுச் சென்ற பாடமும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்ற பெருமை நம் தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு. இவ்வார்த்தைகளைச் சற்று ஆழமாகச் சிந்தித்தால்தான், நம் மூப்பின் தன்மையை முழுதாக உணர இயலும். இயற்கையின் சீற்றத்தால் மலைகள் உடைந்து, பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கற்களாகி விட்டன. அந்தக் கற்கள், காற்று, மழை காரணமாக ஒன்றோடு ஒன்று உராய்ந்து மண் ஆக உருவெடுக்க வேண்டும். அப்படிக் கற்கள் மண்ணாக உருவெடுக்கும் முன்னரே தோன்றிவிட்டதாம் தமிழர்களின் வாழ்க்கை என்று சொல்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகுக்கு வழி காட்டியாகத் தமிழ்ச் சமுதாயம் இயங்கி வருவதை உலகே அறியும். கீழடி ஆய்வுகளும்…
-
- 0 replies
- 665 views
-
-
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை! by : Krushnamoorthy Dushanthini ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செயற்திட்டம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுக்கும், மருந்துக்கும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், திரும்பிச் சென்றவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் திட்டம் ஏதும் இல்லை. 6 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குற…
-
- 0 replies
- 800 views
-
-
சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பதிவு: மே 12, 2020 04:30 AM சென்னை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களைக்…
-
- 7 replies
- 940 views
-
-
தமிழகத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718ஆக அதிகரிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகள் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் ஊரடங்கும் அமுலில் உள்ளது. இருந்தபோதிலும் ஊரடங்கில் பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரசிஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைய…
-
- 0 replies
- 437 views
-
-
பகைமையை மறக்கடித்த கரோனா: திரும்பிப் பார்க்க வைக்கும் ஊட்டி காந்தல் பகுதி கரோனா காலத்தில் நீலகிரி மாவட்டத்திலேயே மிகுந்த பரபரப்புக்கு உள்ளான பகுதி காந்தல். நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தின் முதல் கரோனா தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது. அதில் மூவர் கோவையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். அதனால் இப்பகுதி மார்ச் 29 அன்று மூடப்பட்டது. இந்நிலையில், இங்கு பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, உதவிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளைத் தன்னார்வலர்கள் சிறப்பாக மேற்கொண்டுவருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை மொத்தம் 9 பேர் கரோனா தொற்று இருப்பதாகக் கண்டறிய…
-
- 1 reply
- 721 views
-
-
குற்றச்சாட்டு கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள்,மீனவர்கள் என வாழ்வாதாரமின்றி தவித்து வரும் சுமார் 1000 பேருக்கு பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து கொரோனா நிவாரண பொருட்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்தி பேசும் மாநிலங்களின் நலனில் மட்டும் கவனம் செலுத்துகிறது. அதன் அடிப்படையில்தான் தமிழகத்துக்கு மிக குறைந்த கொரோனா நிவாரண நி…
-
- 0 replies
- 494 views
-
-
மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு – 2000 கோடி ரூபாய் வழங்குமாறு பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய சிறப்பு நிதியாக உடனடியாக 2000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3ஆம் கட்டமாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார். இதன்போது மத்திய அரசிடம் ஏற்கனவே கோரியிருந்த ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள…
-
- 1 reply
- 427 views
-
-
வாணியம்பாடியில் பழங்களைத் தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்து கடுமையாக நடந்துகொண்ட நகராட்சி ஆணையர்; வியாபாரிகளிடம் நேரில் மன்னிப்பு கோரினார் வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் நடந்து கொண்ட செயல் வருத்தமளிப்பதாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் விளக்கம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வாணியம்பாடியில் நேரக் கட்டுப்பாட்டுடன் சில தொழில்கள் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள…
-
- 1 reply
- 598 views
-
-
கொரோனா வைரஸினால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு – ஒரே நாளில் 798 பேருக்கு தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8,002 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்களில், சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் 4,273 பேர் அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 11 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 798 பேருக்கு…
-
- 1 reply
- 416 views
-
-
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருக்கவில்லை!- கரோனா நிவாரணப் பணியில் இருக்கும் எழுத்தாளர் வேதனை எங்கள் வேலை எழுதுவதோடு முடிவதல்ல, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்று எண்ணும் எழுத்தாளர்களில் ஒருவர் அ.முத்துகிருஷ்ணன். மதுரை யானைமலையை உடைப்பதற்கென்றே அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக 'பசுமை நடை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பணியைத் தடுத்து நிறுத்தியவர். வாரந்தோறும் 'பசுமை நடை' எனும் பெயரில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கு மக்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர், தொல்லியல் குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியையும் செவ்வனே செய்து வருபவர். இந்த பொதுமுடக்கக் காலத்தில் அடித்தட்டு மக்கள் படும் …
-
- 0 replies
- 749 views
-
-
வெளிமாநில தொழிலாளர்களை முகாம்களில் தங்கியிருக்குமாறு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் by : Dhackshala வெளிமாநில தொழிலாளர்களை ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அதுவரையில் அவர்களை முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், பட…
-
- 0 replies
- 424 views
-
-
சென்னையில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில், பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட, 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆண் குழந்தைகள் 10 பேர் மற்றும், பெண் குழந்தைகள் 5 பேர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 529 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த 279 நபர்கள் அடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6535 ஆக உயர்ந்தது. http://athavannews.com/சென்னையில்-இன்று-ஒரேநாளி/
-
- 0 replies
- 568 views
-
-
மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் – ரஜினிகாந்த் மதுபான கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், மேலும் கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் மே 7 ஆம் திகதி திறக்கப்பட்டது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் மதுபான கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு நாட்கள் மதுபானக் திறக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான விற்பனையின்போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என அவசர வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சம…
-
- 1 reply
- 729 views
-
-
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரிப்பு.. யார் யாருக்கு பொருந்தும்! தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது வரை 58 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 வயதாக அதிகரித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று …
-
- 1 reply
- 737 views
-
-
ஊழல் வழக்கில் இருந்து காத்துக்கொள்ள மிரண்டு ஓடிய எம்.ஜி.ஆர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் பொற்காலம், ஏழைகளுக்காக ஆட்சி நடத்தியவர் என புலங்காகிதம் அடைபவர்கள் பலர். ஆனால், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர்க்கு தெரிந்தும், அவரே முன்னின்று நடத்திய ஊழல்கள் பல. அவைகளை திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள். ஆதாரபூர்வமாக பல ஊழல்கள் வெளிவந்தாலும் அவை அப்படிறே மறக்கடிக்கப்பட்டன. புத்த பிரானின் வாரிசாக அவரை கட்டமைக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஒரு ஊழல் வழக்கின் தீர்ப்பு எம்.ஜி.ஆர் முகமுடியை கிழிக்கிறது. இன்றைய இளைய சமூகம் அறிந்துக்கொள்ள...... 1982 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆ…
-
- 1 reply
- 1.8k views
- 1 follower
-
-
மாநில அரசுக்கு மனசாட்சி இருக்கா? கமல் கோபம்! மின்னம்பலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் பசியையும், பட்டினியையும் பொறுத்துக்கொண்டு பல லட்சம் மக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தங்கள் வீடுகளிலேயே இருந்து வந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவித்து வருகின்றனர். எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு மக்கள் பொறுமை காத்து வந்தனர். இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தில் நேற்று (மே 7) மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு அதிருப்தியும், கோபமும் வரவழைத்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவத…
-
- 0 replies
- 911 views
-