Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வருமான வரி விவகாரம்: எங்க சசிகலாவுக்கு ஒரு நீதி? உங்க ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?- சீமான் வருமான வரித்துறை விவகாரத்தில் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதி ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நேற்று ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: குடியுரிமை சான்றிதழ்களை நாம் தமிழர் கட்சியினர் எவரும் தர மாட்டோம். எங்களை முகாம்களில் அடைத்தாலும் அதை ஏற்போம். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடுகின்றனர். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல; நாளை நம…

  2. பூணூல் போட்டால் மட்டுமே குடியுரிமை கிடைக்கும் | விளாசிய திருமுருகன் காந்தி

  3. யாரும் அறியாத விஜய்யின் அரசியல் நகர்வுகள் - ரவீந்திரன் துரைசாமி பேட்டி

  4. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஆரம்பித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார். திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 52 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்ட…

  5. பாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்! பாத்ரூம் பைப் ஓட்டை வழியாக மாணவிகளை படம் பிடித்துள்ளர் உதவி பேராசிரியர்.. இந்தியாவிலேயே சிறந்த பல்கலை. என பெயர் வாங்கும் சென்னை ஐஐடியில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது! கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி அவர்.. பிஎச்டி படித்து வருகிறார்... விண்வெளி பொறியியல் துறை தொடர்பான பயிற்சிக்காக சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ளார். இதே துறையில் சுபம் பேனர்ஜீ என்பவர் திட்ட அலுவலராக வேலை பார்க்கிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் தனது டிபார்ட்மென்ட் அருகே உள்ள பாத்ரூமுக்கு சென்றார் மாணவி.பிறகு யதேச்சையாக அங்கிருந்த சுவற்றை பார்த்தார்.. அப்போதுதான் அதில் சின்ன ஓட்டை இருப்ப…

  6. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்ததையடுத்து, தலைமை ஆசிரியை குமரேஸ்வரி செவ்வாய்கிழமை முதல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தும் சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கிறார் சிறுமியின் தாய் மகேஸ்வரி. நாங்கள் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் ஓர் மாற்றுத்திறனாளி. நான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது மூத்த மகள் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நா…

  7. படத்தின் காப்புரிமை A Pavendhan காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது. யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழக…

    • 0 replies
    • 500 views
  8. ஒருசில குறிப்பிட்ட கடைகளில் தயாராகும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலப்படம் செய்வதாகவும் இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி செய்திருப்பதாகவும் வாட்ஸ்அப்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்பதை கூட அறியாமல் பலர் இதனை ஃபார்வேர்டு செய்வதால் சில சமயம் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது சமீபத்தில் கூட சிஏஏ போராட்டத்தின்போது இயற்கையாக மரணம் அடைந்த ஒருவரை போராட்டத்தின் காரணமாக மரணமடைந்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. அதேபோல் திமுக எம்பி செந்தில்கு…

  9. சென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண…

  10. ஜெயலலிதாவின் பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு February 19, 2020 தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24-ம் திகதிமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் சிறப்பிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்கான கீழ்வரும் ஐந்து புதிய திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்த உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். * அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள்…

  11. திருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து,…

  12. ராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் வரவு செலவு திட்டத்தின் மீது நேற்று (புதன்கிழமை) விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற விவாதம் வருமாறு… துரைமுருகன் – ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயற்படுகிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. கட்சிக்காரர் மாட்டிக்கொண்ட வ…

  13. ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க முடியும்- விஜயதாரணி ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்துவரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாமென, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான விஜயதாரணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் நேற்றைய (திங்கட்கிழமை) அமர்வில் உரையாற்றிய போதே, அவர் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பான வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் உயிரிழந்த ரா…

  14. செம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப்படுத்துகின்றன, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் மாநில முதல்வர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளைத் தேடித்தேடி மேற்கோள் காட்டுகிறார். இதைச் சொல்…

  15. 1996ல் ரஜினியின் வாய்ஸ் தேர்தலில் எதிரொலித்தது போன்று 2021 தேர்தலில் விஜய் வாய்ஸ் எதிரொலிக்குமா?

  16. இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை: சட்டசபையில் கருத்து முரண்பாடு – தி.மு.க. வெளிநடப்பு by : Dhackshala இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்தார். ‘தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும், அது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதன்மூலம், பேரவைய…

  17. தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை! ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்த கருத்துகள் தொடர்பாக 3 ஆவது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் 3 வழக்குகளிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆஜராக முதன்மை அமர்வு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த மூன்று அவதூறு வழக்குகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல் இரண்டு அவதூறு வழக்குகளில் மார்ச் 4 ஆம் திகதி அன்றும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி கருத்து தெரிவித்தது தொடர்பான 3 ஆவது அவதூறு வழக்கு பெப்ரவரி 24 ஆம் திகதிய…

  18. அ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா? எம். காசிநாதன் / 2020 பெப்ரவரி 17 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலம் அமைந்து விட்டது. முதலில் பதவியேற்ற ஜெயலலிதா, டிசெம்பர் 2016இல் மறைவு எய்தியதை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட மோதலில், எடப்பாடி பழனிசாமி 2017 பெப்ரவரி மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், சசிகலாவின் தயவில் முதலமைச்சர்களாக ஆக்கப்பட்ட ஓ. பன்னீர்செல…

  19. நிலைமை கைமீறிவிட்டது... எங்கள் கட்டுப்பாட்டில் யாரும் இல்லை... கைவிரித்த இஸ்லாமிய கூட்டமைப்பு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. இதனிடையே சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இது போன்று போராட்டம் நடப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அரசு மீது சட்டமன்றத்தில் வழக்கமாகவே திமுக எகிறும், இதில் தடியடி விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அரசை உலுப்பி எடுத்து விடும் என்பதால் போராட்டத்தை நேற்றிரவோடு முடிவுக்கு கொண்டு வர சென்னை மாநகர காவல்துறை தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரிலும், அலைபேசி மூலமும் …

  20. அடேங்கப்பா... 3 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ரூ643.84 கோடி ஒதுக்கீடு- தமிழுக்கு ரூ 22 கோடிதானாம்! மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு ரூ643.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது; ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ22 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. லோக்சபாவில் மொழிகளின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்திருக்கும் பதில்:சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்காக டெல்லியில் ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ643.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-18ல் ரூ198.31 கோடி; 2018-19-ல் ரூ 214. 38 கோடி; 2019-2020-ல் ரூ 231.15 கோடி ஒதுக்கப்பட்டு…

  21. அரசின் உத்தரவின்றி தமிழகத்திற்குள் வந்த சீனக் கப்பலால் சர்ச்சை சீனர்கள், 14 பேருடன், தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு, மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி, அதிகாரிகள் அனுமதியளித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘கோவிட் – 19’ பாதிப்பு காரணமாக, சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பல்வேறு நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த 11ஆம் திகதி, மத்திய கப்பல்துறை இயக்குநர் அரவிந்த் சவுத்ரி, இந்தியாவில் உள்ள, அனைத்து துறைமுகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘சீனாவிற்கு சென்று வரும் கப்பல் ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ, எந்த துறைமுகத்திலும் நிறுத்துவதற்கோ, கப்பலில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்ககூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.…

  22. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொடக்கப்பள்ளி ஒன்றின் மாணவர்கள் மனதில் திருக்குறளை பதியவைக்க, அப்பள்ளியின் ஆசிரியை எடுத்துள்ள வித்தியாசமான முயற்சி நல்ல பலனை அளித்துள்ளது. சாத்தூர் அடுத்துள்ள மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் ஜெயமேரி. உலகப் பொதுமறையாம் திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு செல்ல வித்தியாசமான முறையை கையிலெடுத்தார். தாம் பங்கேற்கும் இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட்டு அவர் சேமிக்கிறார். அங்கு பயிலும் 130 மாணவ மாணவிகளுக்கும் உண்டியல்களை வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் சொன்னால் தன் உண்டியலில் இருந்து ஒரு ரூபாய் வழங்குகிறார்.திருக்குறளோடு அதற்கான பொருளும…

    • 0 replies
    • 457 views
  23. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் கடந்த 4 ஆண்டுகளாக முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார். முறைகேடுகள் நடந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4, குரூப்2ஏ முறைகேடுகள் பூதாகரமாகி 45க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தை கத்தையாக பணத்தை அள்ளிக் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்த பலருக்கும், சேரத்துடித்த சிலருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார்தான் காட்ஃபாதர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சென்னை ஆவடியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார் ஜெயக்குமார். போதிய வருவாய் இன்றி தவித்தபோதுதான…

    • 0 replies
    • 1.1k views
  24. sasikanth senthil ias speech on modi and rss ideology and Fascism

  25. மாநிலத்தின் வருவாய் அதிகரிப்பதற்கேற்ப, வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கக்கூடிய கடன்களின் அளவு அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் மொத்த கடன் நான்கரை லட்சம் கோடி என்பது நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறது என்றும் அவர் கூறினார். டாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்தார். விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் மிகத் துல்லியமாக நன்றாக கணக்கிட்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் உட்பட அனைத்திற்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார். https://www.polimernews.com/dnews/100478/டாஸ்…

    • 0 replies
    • 472 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.