Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தி.மு.கவின் மூத்த தலைவரான துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார். முத்தலாக் சட்டத்தின் காரணமாக பா.ஜ.க. மீதும் அ.தி.மு.க. மீதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால் அவர்களது வாக்குகளும் தங்களுக்கே கிடைக்குமென தி.மு.க. நம்புகிறது. தற்போது மக்களவையில் அ.தி.மு.கவின் சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். ஏ.சி. சண்முகம் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த எண்ணி…

  2. திருட வந்த மளிகை கடையில் கொள்ளையன் செய்த வேலையால் கடலூரில் பரபரப்பு In இந்தியா August 3, 2019 8:26 am GMT 0 Comments 1655 by : Yuganthini ‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா?’ என்று மளிகை கடைக்காரருக்கு கொள்ளையன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கடலூர் பிரதான வீதியருகில் மளிகை கடையொன்றை நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் திகதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் வந்து வழக்கம்போல கடையை திறந்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி…

  3. கரூர் மாவட்டம் குளித்தலையில் குளம் ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்த சமூக ஆர்வலரும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டது பற்றி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்து, தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை முதலைப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமர் (எ) வீரமலை (70), இவரது மகன் நல்லதம்பி (எ) பாண்டு (35). அங்குள்ள குளத்தில் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தது தொடர்பாக இவர்கள் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரம…

    • 0 replies
    • 651 views
  4. முஸ்லிம் மக்களை அ.தி.மு.க அரசு ஏமாற்றுகிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு! In இந்தியா August 2, 2019 5:39 am GMT 0 Comments 1135 by : Krushnamoorthy Dushanthini முத்தலாக் சட்டமூல விவகாரத்தில் அ.தி.மு.க முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்புர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முத்தலாக் தடை சட்டமூலத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் எப்படி இரட்டை ஆட்சி நடைபெறுகிறதோ அதேபோல் இந்த…

  5. எங்க முதல்வருக்கு உடனே இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுங்க... மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஆர்.பி..! முதல்வர் எடப்பாடிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீடு விடுமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்திய அரசின் நல்ல திட்டங்களை எப்போதுமே வரவேற்கும் அதிமுக, தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து வருகிறது. நாட்டை ஆளும் மோடி மீது சில நாடுகள்…

  6. வேலூரே குலுங்குது.. படையெடுத்து வந்த ஐடி ஊழியர்கள்.. நாம் தமிழர் தீபலட்சுமிக்காக!யாருப்பா சொன்னது.. விவசாயி சின்னம் இருந்தால், விவசாயிகள் மட்டும்தான் ஓட்டு போடுவாங்கன்னு.. தீபலட்சுமிக்கு பாருங்க.. சென்னை, பெங்களூரில் இருந்து ஐடி ஊழியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வேலூருக்கு வந்துவிட்டார்கள்! அதிமுக, திமுக என்ற ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவில் நுழைந்து தில்லாக போட்டியில் குதித்துள்ளது நாம் தமிழர் கட்சி. இங்கு அக்கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார். நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கூட இப்படி இல்லை.. தேர்தல் முடிவின் தாக்கமோ அல்லது அரசியல் கட்சிகளில் 3-வது இடத்தை முன்னேற்றமோ தெரியவில்லை.. ஐடி ஊழியர்கள் எல்லாம் கிளம்பி வேலூருக்கு பிரச்சாரம் செய்ய வந்துவிட்…

  7. "பால் பாக்கெட்" கவரை.. திரும்ப கொடுத்தால் காசு.. ஆவின் அறிவிப்பு.. குப்பையில் வீசுவதை தடுக்க திட்டம். ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.இந்நிலையில் சுற்றுப்புற சூழலை பாதுக…

  8. நெய் திருடிய ரவுடி.. கடையை தாக்கி அட்டகாசம்.. கைது செய்த போலீஸ்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம். ஒரு ரவுடி.. போயும் போயும் ஒரு நெய் பாட்டிலை திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.. விஷயம் வெளியே தெரிந்ததும், அரிவாளை கொண்டு பொதுமக்களை வெட்ட முயன்றபோது, போலீசாரிடம் சிக்கி.. விசாரணையின்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார்! தமிழகத்தின் முக்கிய இடங்களில் சரவணா ஸ்டோர் கடைகள் உள்ளன. அதில் நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையும் ஒன்று. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கடை இது. அதனால் எப்பவுமே கூட்டநெரிசல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சில ரவுடிகள் இங்கு திடீரென அரிவாளுடன் புகுந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்துவிட்டனர்.…

  9. *வேங்கை மகன் வேட்டையாட காடிருக்குமா..?* (உலகப் புலிகள் நாள் சிறப்புக் கட்டுரை) - கப்பிகுளம் ஜெ.பிரபாகர் *புலிகளைக் காக்க ஜூலை 29 'உலக புலிகள் நாள் ' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஏனெனில், உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் நாடு இந்தியா; இந்தியாவின் தேசிய விலங்கு புலி.* தமிழும் புலியும்! புலிகளுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் இலக்கியங்களிலும் புலிகள் இடம்பெற்றுள்ளன. புலியை முறத்தால் துரத்திய பெண் வீரத்தமிழச்சியாகப் பார்க்கப்பட்டாள். புராணக்கதைகளில் ஐயப்பன் புலிப்பால் குடித்து, புலி வாகனத்தில் செல்வார். புலியோடு சண்…

    • 0 replies
    • 1.5k views
  10. குளித்தலை அருகே பட்டப்பகலில் பயங்கரம் மகன், தந்தை சரமாரி வெட்டிக்கொலை: குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்ததால் கும்பல் வெறிச்செயல் குளித்தலை: குளித்தலை அருகே குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்த மகனையும், தந்தையையும் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை (70). சமூக ஆர்வலர். இவரது மனைவி தாமரை (65). இவர்களது மகன் நல்லதம்பி(எ) பாண்டு(35). இவருக்கு திருமணமாகி பொன்னர்(11) என்ற மகன் உள்ளார். ராமர் முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் பூசாரியாகவும், கோயில் காவல்காரராகவும் இருந்து வந்தார். மேலும் தனக்கு சொந்தமான நில…

    • 0 replies
    • 361 views
  11. இலங்கையின் தென்பகுதிவரை பாய்ந்த வைகை, தாமிரபரணி நதிகள் - ஆய்வு சொல்வது என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI Image captionகோப்புப்படம் தமிழகத்தில் ஓடும் வைகை, தாமிரபரணி நதிகள் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கையின் காலி நகரம் வரை பா…

  12. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்கவேண்டும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, இந்திய நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அகதி முகாம்களில் அவதியுறும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றில் கவனயீர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை ரவிக்குமார் மேற்கோள்காட்டியிருக்கிறார்…

    • 1 reply
    • 433 views
  13. ஜெயலலிதா மரணம்- அப்பலோ மருத்துவமனை எதனையோ மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் அப்பலோ மருத்துவமனை எதையோ மறைக்க முயல்கின்றது என ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஆறுமுகசாமி ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தடை செய்யவேண்டும் என அப்பலோ மருத்துவமனை கோருவதில் ஏதோ சந்தேகம் உள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்ட மனுவில் தெரிவித்துள்ளது. நாங்கள் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றோம் ஆனால் அப்பலோ மருத்துவமனை எதனையோ மறைக்க முயல்கின்றது என ஆணையம் தெரிவித்துள்ளத…

  14. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அற்புதம்மாள் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பை திருமாவளவன் எம்.பி.ஒழுங்கு செய்திருந்ததுடன்,அவரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். மேற்படி சந்திப்பு 7 பேர் விடுதலையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thinakkural.lk/article/32405

    • 0 replies
    • 975 views
  15. கிணற்றுக்குள் கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள் ; பரபரப்பில் ஊர் மக்கள் தமிழகத்தின் செங்கோட்டை அருகே, கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் இருளப்ப தேவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு சொந்தமான தோட்டம் பெரியபிள்ளைவலசை செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (27ம் திகதி) மாலை, இருளப்ப தேவர் மகன் அய்யப்பன் என்பவர் தோட்டத்தில் உள்ள தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மின்மோட்டாரை ‘ஒன்‘ செய்து தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்றில் இருந்த தண்ணீர் வற்றியது. அப்போது, கிணற்றுக்குள் சில மோட்டார் ச…

  16. திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி, உட்பட மூவர் வெட்டிப் படுகொலை... ஹால், பெட்ரூம், கிச்சன் என ஒவ்வொரு ரூமிலும் ஒவ்வொரு கொலை விழுந்து, திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணி காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக 4 ஆண்கள், 3 பெண்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையையும் நடத்தி வருகின்றனர். 1996-ம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று மேயரானார் உமா மகேஸ்வரி. மேயராக இருந்தபோது உமா மகேஸ்வரியின் செயல்பாடுகளை எத்தனையோ முறை மனதார பாராட்டியவர் மறைந்த கருணாநிதி. கட்சி இவரது செயல்பாடுகளுக்கு காத்து கிடந்தாலும் குடும்ப சூழல் காரணம…

  17. தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்.! கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இதற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜெயமோகன். அதுமட்டுமின்றி நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 விஜயின் சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். புளித்துப்போயிருந்த தோசை மாவு இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வத…

  18. அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை. அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்க வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. ஆனால் அவர் மீது சக அதிகாரிகளே கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பணியின் போது பல்வேறு இடையூறுகளையும், நெருக்கடிகளையும் அளிப்பதாக புகார் தெரிவித்தனர்.இந் நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது…

  19. தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவருக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கருப்புசாமி என்ற மாணவர் தொடர்ந்த வழக்கில் மருத்துவக்கல்வி துறையின் முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ சீட் வழங்கவில்லை என்றும், தன் தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் தன்னை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் மாணவர் கருப்பசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது, மாணவரின் பள்ளி, இருப்பிட சான்றிதழ்…

    • 0 replies
    • 528 views
  20. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோவும் ஒருவர். சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு,நாடாளுமன்றத்துக்குச் சென்ற வைகோ, நேற்று தன் பேச்சில் அவையை அதிரவைத்துள்ளார். இரண்டாவது நாளான இன்று, தமிழகத்தில் நிலவும் ஹைட்ரோ கார்பன் பிரச்னை தொடர்பாகப் பேசியுள்ளார் வைகோ. `` தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவை தோண்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. …

    • 0 replies
    • 597 views
  21. ரூட் தல மாணவர்களுக்கு எச்சரிக்கை.. தண்டனை கடுமையாக இருக்கும்.. டி ஐ ஜி அருள் ஜோதி பேட்டிரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலையோ, ஆபத்தையோ ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால், ரயில்வே சட்டப்படி கைது நடவடிக்கை பாயும் என, ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி . அருள் ஜோதி எச்சரித்துள்ளார். சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பேருந்தில் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மற்றும் ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளிலும், சுமார் 90 "ரூட்டு தல" மாணவர்கள…

  22. பிணையில் வருகிறார் நளினி? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பிணையில் வெளியேவரும் நளினி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவுள்ளதாகவும், அவருக்கு தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் ,இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் பிணையில் வரும் நளினி ஊடங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும், கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என்றும் சிறைத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் நளினியின் பிணைகாலத்தை நீடிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். …

    • 3 replies
    • 1.5k views
  23. 1 இட்டலி 1 லட்சத்துக்கு விற்றுமா ரூ. 3000 கோடி கடன்..? ஊரை அடித்து உலையில் போட்ட அப்பல்லோவுக்கு வந்த நிலைமை பாருங்க..! அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சாப்பாட்டு செலவு மட்டும் 75 நாட்களில் 1 கோடியே 17 லட்சம் ரூபாய். அதாவது ஒரு நாளைக்கு ஜெயலலிதா சாப்பிட்டதாக 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என வசூலித்த அந்த மருத்துவமனைக்கு ரூ.3,000 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சொந்தமான சொத்துகளை விற்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனை அடைக்க 13 செவிலியர் கல்லூரிகள், 2 மருத்துவக் கல்லூரிகளை விற்க அப்போலோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. …

  24. இந்திய நாடாளுமன்றத்தில் மீண்டும் வைகோவின் குரல் எம். காசிநாதன் / 2019 ஜூலை 15 திங்கட்கிழமை, பி.ப. 04:21 Comments - 0 வைகோ இந்தியாவின் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். 15 வருடங்களாக இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தடைப்பட்டிருந்த அவரது குரல், இனிமேல் எதிரொலிக்கும் என்று, தமிழக மக்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. மக்களவையிலும், மாநிலங்களவையும் வைகோ எம்.பியாக இருந்திருக்கிறார். அதில் ஒரு முறை அ.தி.மு.க கூட்டணியிலும், இன்னொரு முறை தி.மு.க கூட்டணியிலும் நின்று தேர்தலைச் சந்தித்து நேரடியாக வெற்றி பெற்று, மக்களவைக்கு சென்றார். மாநிலங்களவையில் 18 ஆண்டுகள் தி.மு.கவில் இருந்த போது, அ…

  25. தஞ்சையில் மிக பெரிய ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பேரணி நடந்து கொண்டு இருக்கிறது...இது எந்த பத்திரிகையும் செய்தியாக வெளியிடாது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.