Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாகை மாவட்டம், கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள் மீட்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோயிலிலிருந்த முருகன், வள்ளி , தெய்வானை, மாரியம்மன் ஆகிய நான்கு சிலைகள் கடந்த 16 - ம் தேதி இரவு மர்ம நபர்களால் களவாடப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே உள்ளூர் பெண் சாமியாடி ஒருவர், ``களவுபோன சிலைகள் இந்த எல்லைக்குள் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன" என்று அருள்வாக்கு கூறியதை நம்பி நான்கு நாள்களாக கிராமத்தினர் வேலைக்கும் போகாமல் பல்வேறு கு…

    • 0 replies
    • 481 views
  2. நளினியின் பிணைக்காலம் நீடிப்பு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் பிணைக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணைக்காலத்தை நீடிக்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் 25ஆம் திகதி பிணையில் விடுதலையானார். இந்நிலையில், நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பிணைக்காலத்தை காலத்தை …

  3. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைவருக்கும் வீடு: முதல்வர் பழனிசாமி மத்திய அரசுடன் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வீடில்லாத மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், தலைவாசலில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்வர் தொடக்கி வைத்தார். இதன்பின்னர் அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும். பெரும்பாலான மனுக்கள் முதியோர் ஓய்வூதிய கோரிக்கை மனுக்களாக உள்ளன. வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோரு…

  4. நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைகின்றார், தீபா எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணைவதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த கோரிக்கை மனுவை, தீபாவின் கணவரும், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான மாதவன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வழங்கியுள்ளார். குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் இரண்டரை ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை செயற்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஜனவரியில் நடந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் அமைப்பை இணைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மறைந்த ஜெயலலிதாவைப் பின்பற்றி செயற்ப…

  5. ரஜினியின் குரல்: மௌனம் காக்கும் தி.மு.க, அ.தி.மு.க எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 12:56 “பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூணன் போன்றவர்கள்” என்று, ரஜினிகாந்த் பேசியது, தமிழக அரசியலில் பரபரப்பாகி இருக்கிறது. துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ‘கேட்டல், கற்றல், வழி நடத்துதல்’ (Listening, Learning, Leading) என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னையில் நடத்தப்பட்டதே பலரது புருவங்களை உயர்த்தியது. துணைக் குடியரசுத் தலைவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இளம் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும். அப்படிப்பட்ட நூலை எழுதியுள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள…

  6. ஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன் கோரிக்கை.! சென்னை: கொங்கு நாடு என்ற பெயரில் 12 மாவட்டங்களை உள்ளடக்கி ஈரோட்டை தலைநகராகக் கொண்டு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பொங்கலூர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: நீ லகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்,, கரூர், திருச்சி,சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணும் கொங்கு நாடே. கொங்கு நாட்டின் ஒரு பகுதியான மலபார் ஜில்லா, பாலக்காடு கேரளாவுடன் மொழிவாரியாக மாநிலப் பிரிவி…

  7. அமெரிக்கால போயி வெற்றிக் கொடி நாட்டப் போறாரு நம்ம ஆளு !! எடப்பாடியைக் கொண்டாடிய ராஜேந்தி பாலாஜி !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே உலக மூதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதே. அதில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லையா என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனிடையே வெளிநாடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் கொடுக்காமல் அமைச்சர் தங்கமணியிடம் கொடுத்துச் செல்லப் போவதாக தகவ்லகள் வெளியாகி…

    • 1 reply
    • 680 views
  8. பாலியல் வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம்- முதல்வர் தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்கு தனியான நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு செய்யவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “நீதியரசர்களும், ஆசிரியர்களும் இறைவனுக்கு சமமானவர்கள். சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் அதிக வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டு வருகிறன. தற்போது எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டதன் மூலம் விரைவில் நீதி கிடைக்க வழிவகை ஏற்படும். …

    • 2 replies
    • 515 views
  9. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்கள் பழுது.. பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி! சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ளதால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல தடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.இதேபோல் வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்…

  10. தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி... தலைவர் ரேஸில் முந்தும் ஹெச். ராஜா..? தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஹெச். ராஜாக்கு அந்த வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா செயல்பட்டுவருகிறார். செயல் தலைவராக ஜே.பி.நட்டாவும் இருந்துவருகிறார். இந்நிலையில் அகில இந்திய பாஜக உட்கட்சித் தேர்தல் செப்டம்பர் 11 முதல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக மாவட்ட, மாநில வாரியாகத் தலைவர்கள் தேர்வு முடிந்த பிறகு தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டு, பிறகு பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் தேர்தல் அதிகாரி ராதாமோகன் சிங் அறிவித்துள்ளார். மேல…

  11. திண்டிவனம் அருகே வீடுகளில் மீண்டும் ரகசிய குறியீடு வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து 3 வடமாநில வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் மானூர் அருகே கோபாலபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 12ம் தேதி காலை இங்கு வடமாநில இளைஞர்கள் சிலர் வீடு வீடாகச்சென்று பழைய துணிமணிகள் வாங்கி சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் வீடுகளின் மதில் சுவர்களில் கலர் பென்சிலால் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருந்ததைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பழைய துணி வாங்க வந்த வடமாநில இளைஞர்கள்தான் இந்த ரகசிய குறியீட்டை வரைந்திருப்பார்கள் என கிராம மக்கள் தெரிவித்தனர்.இதையடுத்து மிகப்பெரிய அள…

    • 0 replies
    • 668 views
  12. வேலூரை 3ஆக பிரித்து.... திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு. வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 73-ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.அவர் அப்போது சுதந்திர தின விழா உரையில், வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனிமாவட்ட…

  13. சீமானும் கிராமப்பொருளாதாரமும் ஜெயமோகன் அன்புள்ள ஜெ, சமீபமாக நான் மிகவும் கவனிப்பது சீமானின் பரப்புரைகளைத்தான்.தமிழ் அரசியல் மேடைகளில் முதன்முறையாக ஜெ.சி.குமரப்பாவின் கிராமப்புற காந்திய பொருளாதாரத்தை வலிய, உரக்க பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் தான். இது எனக்கு மிக வியப்பாக இருக்கிறது. காந்தியத்தை அதிகம் எழுதிய நீங்கள் இதைக்கவனித்திருக்கிறார்களா? அன்புடன், வா.ப.ஜெய்கணேஷ். அன்புள்ள ஜெய்கணேஷ் கிராமியப்பொருளியல், விவசாயத்தின் அழிவு ஆகியவற்றை பேசும் ஏராளமான தன்னார்வ அமைப்புக்கள் இங்கே உள்ளன. அவற்றிலிருந்து சில வரிகள் சீமான் போன்றவர்களின் நாவுகளில் சென்றமைகின்றன. அவற்றை ஸ்டாலின் பேசமுடியாது, ஏனென்றால் அவர் உடனடியாக அரசாட்சிக்கு வ…

  14. அமித் ஷாவும் நரேந்திர மோதியும், கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்று ரஜினி வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார். இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்ட 330 பொது நிகழ்ச்சிகளின் விவரங்களை 'லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்' எனும் அந்த நூல் விவரிக்கிறது. வெங்கையா நாயுடு 19 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட…

  15. சில்மிஷம், சீண்டல்.. ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. ஒட்ட நறுக்க வந்துவிட்டது "பிங்க் கலர்" வண்டி பெண்களிடம் ஆகட்டும், குழந்தைகளிடம் ஆகட்டும்.. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவே பிங்க் கலரில் ஒரு புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. நம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கம், பயத்தை சமீப காலமாக அதிகமாகவே தந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்த அரசு முயன்று வந்தது.அதன்படி, மாவட்டந்தோறும் இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கபட்டு மகளிர் ஸ்டேஷனுடன் இணைத்து செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கு தலைவராக ஏடிஜிபி ரவி இருக்கிறார். இந்த பிரிவுதான், பெண்கள் மற்றும் குழந்தைகள…

  16. "'உங்க உயிரு என் மடியிலதாம்மா போகும். கவலைப்படாதீங்க'ன்னு ஆறுதல் சொன்னா!'' ஒரு அம்மாவுக்கு, தான் பெற்றவர்களில் `ஓஹோவென்று வாழும் பிள்ளைகளை'விட, வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற பிள்ளைகள் மீதுதான் அக்கறை அதிகம் இருக்கும். பாசத்தைக்கூட, அந்தப் பிள்ளைகளின் மீது சற்று கூடுதலாகத்தான் காட்டுவார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதியாக இருக்கிற நளினியின் அம்மா பத்மாவின் நிலையும் இதுதானே... 28 வருடங்கள் அம்மாவையும் குடும்பத்தையும் பிரிந்து சிறையில் இருந்துவிட்டு, மகள் திருமணத்துக்காக தற்போது ஒரு மாத பரோலில் வந்திருக்கும் நளினி எப்படியிருக்கிறார்; அவருடைய இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள அவருடைய அம்மா பத்மாவிடம் பேசினோம். …

    • 2 replies
    • 1.4k views
  17. நாட்டிலேயே மோசமான மாசு ஏற்படுத்தும் ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று.. மத்திய அரசு நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் பேராசிரியர் பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார். வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளவர் அரசுத்தரப்புக்கு உதவியாக இருக்க வேண்டும் என ஆலைதரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததைச் சுட…

  18. வி.கே.புரம்: பாபநாசம் அணை 100 அடியை எட்ட இன்னும் 3 அடிகளே தேவை. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை சற்று குறைந்த நிலையில் பாபநாசம் அணை நாளை 100 அடியை எட்டுமா? என்று விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஆக.5ம் தேதி முதல் மலைப்பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் தொடர்ந்து சாரல் பொழிந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் குண்டாறு அணையும், கொடுமுடியாறு அணையும் நிரம்பியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை நேற்று சற்று குறைந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 94.80 அடியாக இருந்தது இன்று காலை 97 அடியானது. அணைக்கு வினாடிக்கு 1521 கனஅடி நீர் வருகிறது. 154.75 …

    • 2 replies
    • 937 views
  19. திமுக கச்சத்தீவை தாரை வார்த்தது ஏன்? – விஜயகாந்த் மகன் கேள்வி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்க சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என தெரிவிக்கும் தி.மு.க, கட்ச தீவை மட்டும் தன்னிற்சையாக இலங்கைக்கு தாரை வார்த்தது ஏன் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கேள்வியெழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ தெரிவித்த கருத்தால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் கூட்டணி கட்சிக்குள் ஏற்பட்டிரு…

  20. வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவு இன்று! வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 அறைகளில் எண்ணப்‌படுகின்றன. இதற்காக ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேசைகள் போடப்பட்டுள்ளதுடன், வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. மழைவருவதற்கான வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் துணை…

  21. ஆகஸ்ட் 15 நடக்க உள்ள தேர்தல் எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் ஏன் நாங்கள் அமெரிக்கா போன்று வரமுடியாது ? 12000 கிராமங்களையும் எவ்வாறு மாற்ற வேண்டும் ? எவ்வாறு மக்கள் தங்கள் தேவைகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பேச்சு

    • 0 replies
    • 474 views
  22. தமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடு, முருகன் வழிபாடு. முருகனைப் பற்றி குறிப்பிடும்போதும் 'தமிழ்க் கடவுள்' என்றே சொல்கின்றனர். தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறியிருக்கும் இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பத்துமலைக் குகைக் கோயில் மிகவும் பிரபலமானது. இயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைதான், இதன் புகழுக்குக் காரணம். இந்த பிரமாண்ட முருகனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் மலேசியாவிற்குச் செல்கின்றனர். …

    • 0 replies
    • 1.4k views
  23. `மிசோரத்தில் உள்ளதை எடுங்கள். இந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்.'' ''நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் மக்களின் முடிவு. ஆனால், தொடர்ந்து களத்தில் நிற்பதுதான் எங்களது கொள்கை. அதனால்தான் அனைத்துத் தேர்தலிலும் போட்டியிடுகிறோம்'' என்று வேலூர் தேர்தல் முடிவு பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சீமான் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''தி.மு.க, அ.தி.மு.க தேர்தலை எந்த அளவுக்கு நேர்மையாகச் சந்திக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது பெரும்…

  24. பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்- தமிழிசை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இடையிலான வார்த்தை மோதல் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் தெரிவித்ததாவது, “தமிழகத்தைப் பொருத்தவரையில் வைகோவும், கே. எஸ். அழகிரி சண்டை போட ஆரம்பித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வரை எதையும் பேசாமல், தெரிவு செய்யப்பட்ட பிறகு காங்கிரசை குறை கூறுகிறார் வைகோ. அவர் கூறுவதிலும் சில கருத்துகள் இருக்கின்றன. அழகிரி சொல்வதிலும் சில கருத்துகள் உள்ளன. ஆக பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். இ…

  25. அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடங்கிப் போய் கிடக்கிறது. கடந்த வாரம் வரை, நீர்நிலைகள் மைதானமாக காட்சியளித்த நிலையில், தற்போது சாலைகளே நீர்நிலைகளாக மாறிவிட்டன. புதன்கிழமை மழை பெய்யத் தொடங்கியபோது, இதுவும் சாதாரண மழைதான் என்று கோவை மக்கள், தங்களது டே பிளானை (Day plan) அமைத்திருப்பார்கள். ஆனால், மழை வேறு பிளானை செயல்படுத்திவிட்டது. புதன்கிழமை தொடங்கிய மழை, வெள்ளிக் கிழமை வரை கொட்டிக்கொண்டிருக்கிறது. வால்பாறை முற்றிலுமே முடங்கிப் போய்விட்டது. பழங்குடி கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்மழை காரணமாக, கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.