தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மக்களும் கஜா புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த முகாமில் சுமார் 450 குடும்பங்கள் வசிப்பதாகவும், இதுவரையில் தமக்கான எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் நிலையில், கஜாபுயலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குடிசை வீடுகளையும், ஓட்டு வீடுகளையும் குடியிருப்புகளாக கொண்ட இவர்கள் தற்போது அதனையும் இழந்து வீதிகளில் வசிக்கின்றனர். அந்தவகையில் புயல் தாக்கி, இன்றுடன் ஐந்தாவது நாளாகிய நிலையில் முற்றுமுழுதாக தமது இயல…
-
- 0 replies
- 580 views
-
-
இரட்டை இலை சின்னம் வழக்கு: விரைவில் கைதாகிறாரா டிடிவி?
-
- 0 replies
- 605 views
-
-
அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது? ஆர். மணி மூத்த பத்திரிகையாளர் Getty Images (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) தமிழக அரசியலில் இன்று கண்டிப்பாக ஒரு வெற்றிடம், ஏற்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகாலம் முதலமைச்சராகவும், திமுகவின் முடிசூடா மன்னராகவும் இருந்த மு.கருணாநிதியும், 15 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுகவின் ஜெ. ஜெயலலிதாவும் மாண்டு போய் விட்டார்கள். இன்று அஇஅதிமுக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக பிரதான எதிர்கட்சியாக 89 எம்எல்ஏ க்களுடன் சட்டசபையில் இருந்து கொண்டிருக்கிறது. திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்…
-
- 3 replies
- 993 views
-
-
48 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் எச்சரிக்கை! வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் கூறியபோது, “நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது தென் கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அந்த புயல் 14ஆம்; திகதி இரவு வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும். இதன் காரணமாக வட தமிழக கடலோரம், புதுச்சேரி, ஆந்திர கடலோர பகுதிகளின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்ப…
-
- 11 replies
- 2.4k views
-
-
கருணாநிதியின் உருவச் சிலை திறப்புத் திகதி அறிவிப்பு! மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை எரிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி திறக்கப்படுமென, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தி.மு.க தலைமைக்கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்கவிருக்கிறார்கள். ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழ…
-
- 1 reply
- 478 views
-
-
கருணாநிதியின் 100ஆவது நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் அஞ்சலி! முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 100ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய சமாதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கிவைத்தார். 100ஆவது நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் அவரது சமாதி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சமாதியின் மீது கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் அவர் இருப்பது போன்ற ஓவியமும் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தது. சமாதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படம் அலங்கார வளைவு போன்று வடிவம…
-
- 0 replies
- 397 views
-
-
பாரதிய ஜனதா மிகவும் ஆபத்தான கட்சி: திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சி விஷத்தன்மைக் கொண்ட பாம்பைப் போன்று ஆபத்தான கட்சி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு உலகிலேயே உயரமான சிலை இல்லை. பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்து சுற்றியுள்ள சாம்ராஜ்ஜியங்களை இணைத்து முழு இந்தியாவை உருவாக்கினார். அதனால் அவருக்கு சில…
-
- 0 replies
- 456 views
-
-
முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு, தமிழகத்திலிருந்து வாழைக் காய் ஏற்றுமதி! இந்தியாவில் வாழைக்காய் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முன்னிலை வகித்து வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக பழமையான முறையில் விவசாயம் மேற்கொண்டு ஏக்கருக்கு நிகர லாபமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே ஈட்டப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் முயற்சியினால் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தப்பட்டன. இதன்படி, திசு வளர்ப்பு கன்றுகள், சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் வாழை பழத்திற்கென பிரத்தியேக கவனம் செலுத்தி குளிரூட்டி பழுக்க வைக்கும் கூடம், சிப்பம் கட்டும் மையம் ஆகியவற்றை அமைத்து, தேனி மாவட்ட விவசாயிகள்…
-
- 50 replies
- 4.2k views
-
-
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு November 14, 2018 1 Min Read சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி மாதம் 24-ந் திகதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. அந்தச் சிலையில் ஜெயலலிதாவின் முகபாவனையில் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தநிலையில் ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை இன்று க…
-
- 0 replies
- 404 views
-
-
எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்! ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நன்றாகவே தெரியும். அட வரலாறு தெரியலன்னா கூட கடந்த 2 நாட்களாக தினசரி செய்தித்தாள் படிச்சிருந்தாலாவது யார் இந்த 7 பேர் என்ற விஷயம் தெரிந்திருக்கும். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளி…
-
- 11 replies
- 1.4k views
-
-
பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும்... கமல் கொந்தளிப்பு! பிச்சைகாரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மக்கள் மத்திய கேமல் பேசியதாவது : சினிமாத்துறையில் இருந்த நான் எதார்த்த வாழ்வியலை ந்மபி அரசியலுக்கு வந்திருக்கிறேன். மக்களை நம்பித் தான் நான் அரசியல் களத்திற்கு வந்திருக்கிறேன். மக்கள் நிச்சயம் என்னை கரை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.வணிகர்களை நம்பியே நாட்டின் பொருளாதாரம் இருக்கிறது, அவர்களே நாட்டின் முதுகெலும்பு. வாக…
-
- 0 replies
- 557 views
-
-
சர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால், போர்க் களமான தமிழகம். சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். மெர்சலை தொடர்ந்து தற்போது சர்கார் படமும் பிரச்சனையை சந்தித்து இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு அடுத்து விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது. இந்த படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக போர்க்கொடி தூக்கியுள்ளது. தமிழகம் முழுக்க படத்திற்கு எதிராக போராட தொடங்கி உள்ளது.சர்கார் படத்தால் அதிமுகவினர் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். பட…
-
- 13 replies
- 2k views
-
-
7 தமிழர்கள் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் இருந்தது ஆர் டி ஐ மூலம் பகீர் தகவல் கிடைத்துள்ளது. 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தனு, பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.தண்டனை காலம் முடிந்தும் இவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு ச…
-
- 0 replies
- 574 views
-
-
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: ஸ்டாலின் Editorial / 2018 நவம்பர் 10 சனிக்கிழமை, பி.ப. 12:37 Comments - 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை, இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகளுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று, இலங்கையின் அரசமைப்பில் உள்ள நிலையில், இந்த அரசமைப்பை போட்டு மிதித்து, …
-
- 1 reply
- 1.2k views
-
-
மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த 48 தமிழர்கள் மீட்பு November 9, 2018 1 Min Read மலேசியாவில் சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் 3 மாதங்களாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த 48 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மலைப் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக மலேசியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தினைச் சேர்ந்த 48 பேருக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு 3 மாதங்கள் சம்பளம வழங்கப்படவில்லை என்பதுடன் ஒருவேளை மட்டும் உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ள. அத்துடன் அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றi நிறுவனத்தின்வசமே காணப்பட்டது. இதனைத் தொடர்ந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது நிலை…
-
- 0 replies
- 547 views
-
-
சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு! சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரும், சிறையிலுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்கவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) அங்கு சென்று கலந்துரையாடவுள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் குறித்த 18 பேரும் செல்லவுள்ளனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியபோது, சசிகலாவை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படுமென குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 455 views
-
-
தமிழகத்தில் டெங்கு தொற்றினால் 34 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலினால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,600 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருக்கும் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது சட்ட நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலினை கட்டுப்படுவதற்கு வேண்டிய சகல வசதிகளும் வைத்தியசாலைகளில் தற்போது உள்ளமையால் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில…
-
- 0 replies
- 387 views
-
-
சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு! வெற்றிடமாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இன்று(புதன் கிழமை) தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியபோது, “20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்று நம்புகின்றேன். அப்படி நடந்தால் நாங்கள் போட்டியிடுவோம். அதற்காக அந்த 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். சுகாதாரமான அரசியலுக்காகதான் நாங்கள் வந்து இருக்கின்றோம். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் வந்தால் எல்லா துறைகளும் …
-
- 0 replies
- 403 views
-
-
வினாத்தாளை தமிழில் தயாரிக்க முடியாவிட்டால் டிஎன் பி எஸ் சியை மூடுங்கள்... ராமதாஸ் ஆவேசம் ! சென்னை : தமிழில் வினாத்தாள் தயாரிக்க தகுதியான பேராசிரியர்கள் இல்லாததால் இந்த ஆண்டு குரூப்.2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் முன்னணி இடம் வகிக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம். அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற கிராமமக்களின் கனவுகள் ஓரளவேனும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் எழுத முடியாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதற்க…
-
- 0 replies
- 548 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் …
-
- 0 replies
- 396 views
-
-
20 தொகுதி இடைத்தேர்தல் : அமமுகவைக் கண்டு பதட்டப்படுகிறதா அதிமுக?
-
- 0 replies
- 485 views
-
-
நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி கண்டுபிடிப்பு November 4, 2018 1 Min Read நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி ஒன்றை டெல்லியில் பிளஸ்-2 படிக்கும் தமிழக மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கணினி அறிவியல் படித்து வரும் விருதுநகரை சேர்ந்த இனியாள் என்னும் குறித்த மாணவிஈய இதனைக் கண்டுபிடித்துள்ளார். அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்தி நீட்’தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. அப்படிப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இந்த செயலி பேருதவியாக இருக்கும். இதை கூகுள் பிளே ஸ்டோரில் அனீற்றா …
-
- 0 replies
- 326 views
-
-
ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை வலியுறுத்தி அ.தி.மு.க மீண்டும் கடிதம் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு அ.தி.மு.க அரசு மீண்டும் கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளது. ஏற்கனவே, எழுவரையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் ஒன்றை வலியுறுத்தி தமிழக அரசு ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது. ஆனால், அதற்கு இன்னும் உரிய பதிலை ஆளுநர் வழங்காதமையால், தமிழக அரசு சாபில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்…
-
- 0 replies
- 318 views
-
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுவிவகாரம் – சி.பி.ஐ அதிகாரி மீது குற்றச்சாட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மீது வழக்கு பதிவு செய்யாததால், விசாரணை நடத்தும் சி.பி.ஐ. இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் உள்பட 7 பேர் உச்சநீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுக்கு பதில் வழங்குமாறு சி.பி.ஐ. இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு உச்சநீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மே 22-ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100 ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 371 views
-
-
தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவிப்பு! உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபாவளிப் பண்டிகைத் தினத்தன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் கோரி மனு தாக்கல் செய்தது. அதில், “பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்பாட்டால் பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். எனவே, தீபாவளியின்போது, அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும்…
-
- 1 reply
- 930 views
-