Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சசி குடும்பம் மிரட்டல்: அமைச்சர்கள் கலக்கம் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தினர் விடுத்த மிரட்டல், முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, சசிகலா குடும்பத்தினர், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டனர். அவர்களின் ஆதரவாளர் களுக்கே, தேர்தலில், 'சீட்' வழங்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் என, அனைவரை யும் மிரட்டி, காரியம் சாதித்து வந்தனர். அமைச்சர்களும், அவ்வப்போது கப்பம் கட்டி வந்தனர். இவை அனைத்தும், ஜெ.,க்கு தெரிந்தே நடந்தது. ஆட்சி அதிகாரத்தில், நேரடியாக பங்கு வகிக்காத நிலையில், அமைச்சர்கள் வழியே வந்த பணத்தில், சசிகலா குடும்பத…

  2. மிஸ்டர் கழுகு: புறப்பட்டார் புரோஹித்... டிசம்பரில் கவர்னர் ஆட்சி! ‘‘தமிழகத்தில் மறைமுகமாக பி.ஜே.பி ஆட்சி நடக்கிறது என இனி யாரும் சொல்ல முடியாது” என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘ஏன், தமிழகத்தைக் கைகழுவ பி.ஜே.பி முடிவு செய்துவிட்டதா?’’ என்றோம். சிரித்தபடி ‘‘இல்லை’’ எனத் தலையாட்டிய கழுகார், ‘‘நேரடியாகவே பி.ஜே.பி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது என்பதற்கான தொடக்கம்தான் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் கோவை விசிட்’’ என்றபடி தொடங்கினார். ‘‘புதுச்சேரியில் ஏற்கெனவே துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது பி.ஜே.பி; அல்லது அங்கு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமிக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இ…

  3. சசிகலா கும்பலில் இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்கள் 1 - 2 - 3 - 4 - 5 - 6... Colors: சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் உள்ள நிலையில், லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்கும…

  4. சென்னை சுங்கத்துறையின் இணையதளம் தீவிரவாதிகளால் முடக்கம் சென்னை மண்டல சுங்கத்துறைக்கு சொந்தமான ‘இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் முடக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை மண்டல சுங்கத்துறையினரால் செயற்படுத்தப்ட்டு வரும் ‘www.chennaicustoms.gov.in’ என்னும் இணையதளமே இன்றைய தினம் இணையத்திருடர்களினால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டீன் பாக் சைபர் ஸ்கல்ஸ்’ என்னும் பாகிஸ்தானை சேர்ந்த இணையத்திருடர்கள் இணையத்தினை முடக்கி அதில் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவான வாக்கியங்களை பதிவு செய்ததுடன் இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிது நேர…

  5. சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது! Chennai: சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராஜன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது. இதன்மூலம், ரூ.1.06 கோடி வரி ஏய…

  6. ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் துரை தயாநிதிக்கு எதிராக 5,191 பக்க குற்றப்பத்திரிகை: மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக 5,191 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை எடுத்து வந்த போலீஸார். முன்னாள் மத்திய அமைச்சர்மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் செயல்பட்டுவந்த கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2012-ல் அப்போதைய மாவட…

  7. நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். …

  8. சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி, சசிகலா அக்கா மகளுக்கு, மூன்று ஆண்டுகள்; 1.68 கோடி ரூபாய் சேர்த்த, மருமகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா குடும்பத்துக்கு, அடி மேல் அடி விழுவதால், கோடிகளை குவித்த அவர்களின் சொந்தங்களுக்கு, கிலி ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில், அதிகாரியாக பணியாற்றியவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவரது மனைவி, சீதளாதேவி. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகள்; தினகரனின் சகோதரி. 1998ல், பாஸ்கரனின் வங்கி ல…

  9. 'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைG VENKET RAM எந்தக் கட்டுரையும் விளக்க முடியாத அளவிற்கு வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையிலான கலாசார வேறுபாட்டை சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு திறம்பட வரையறுத்துக் காட்டியுள்ளன. விளம்பரம் 'பத்மாவதி' என்ற இந்தி படத்தை…

  10. காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு - கர்நாடகா சண்டை சென்னை: ரசகுல்லா மேற்கு வங்கத்திற்கு சொந்தமா அல்லது ஒடிசாவுக்கா என்ற சர்ச்சை வெடித்துள்ள சூழலில், இப்போது, தமிழகமும், கர்நாடகாவும், மைசூர் பாக் யாருக்கு சொந்தமானது என்ற கோதாவில் களமிறங்கியுள்ளன. புவிசார் குறியீடுக்கு இந்த கேள்வி அவசியம் என்பதால், சோஷியல் மீடியாவில் தமிழ் மற்றும் கன்னட நெட்டிசன்கள் இதற்காக மோதிக்கொண்டுள்ளனர். 1835ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியின்போது, மெக்காலே பிரபு மைசூர் பாக் குறித்து பேசியுள்ளதாக ஆதாரத்தை எடுத்து வைக்கிறார்கள் தமிழ் நெட்டிசன்கள். மெக்காலே சொல்லிட்டாருங்கோ இந்திய நாடாளுமன்றத்தில் மெக்காலே மைசூர் பாக் குறித்து பேசியுள்ளாராம். மெட்ராஸ்…

  11. பேரறிவாளன் வழக்கில் திடீர் திருப்பம்: 2 வாரங்களில் முடிவை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 1991-ல் நடந்த ராஜீவ் படுகொலை சம்பவம். ‘‘எதற்காக 2 பேட்டரிகளை வாங்கி கொடுத்தேன் என்பது எனக்கு தெரியாது’’ - இந்த ஒற்றை வரிகளை திட்டமிட்டே மறைத்த சிபிஐ அதிகாரியின் தவறால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு அநியாயமாக இளமையை பறிகொடுத்துள்ளார் பேரறிவாளன். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த சிபிஐ அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவ…

  12. சசிகலா சிறை முறைகேடு – லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரிக்காதது ஏன்? ரூபா கேள்வி:- பெங்களூர் சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்ற விவகாரத்தில், லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரணைக் குழு ஏன் விசாரிக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கேள்வி எழுப்பியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜி ரூபா, “சசிகலா, அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட கைதிகள் சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்காக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள…

  13. பரப்பர அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் ரத்து - வேறு அறைக்கு மாற்றம் பரப்பர அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார். பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 மாதங்களாக அவர்கள் சிறையில் உள்ளனர். ஆரம்பத்தில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு சொகுசு அறைகள் ஒதுக…

  14. எதற்காக தமிழகத்தில் ஐ.டி ரெய்டு நடத்தப்படுகிறது ? | Socio Talk கடந்த சில நாட்களாக ஜெயா டி.வி, சசிகலா மற்றும் குடும்பத்தரின் வீடு, மற்ற இடத்தில் இந்தியா முழுவதும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டு பல ஆதாரங்களை கைப்பற்றினர். முடிவில் விவேக் ஜெயராமன், சிவகுமார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இத்தனை கோடிக்கணக்கில் சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாதா ? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடத்தப்பட்ட அணைத்து ரெய்டுகளுக்கு பா.ஜ.க ஒரு காரணமா ? தமிழ்நாட்டில் தங்கள் கால்களை பதிப்பதற்காக அவர்கள் பலரை தங்கள் வசம் இழுத்துக்கொள்கின்றனர். மேலும் பல கேள்விகளும், விடைகளும் இந்த வீடியோவில்.

  15. மிஸ்டர் கழுகு: பினாமி சட்டம்... சஃபேமா... ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி! ரெயின்கோட்டை உதறியபடியே நுழைந்த கழுகாரின் முகத்தை உற்றுப்பார்த்தோம். ‘‘சசிகலா குடும்பம்மீதான இந்த மெகா ரெய்டின் நோக்கம் என்ன? தமிழக மக்கள் மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்’’ என்றோம். ‘‘அவர்களை ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து அகற்றுவதுதான் டெல்லியின் நோக்கம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் சசிகலா குடும்பத்துடன் நடத்தப்பட்டன. ஆனால், அவர்கள் மசியவில்லை. கட்சியை உடைத்து, அதிகாரத்தைப் பறித்து, சிறைக்கு அனுப்பியபிறகும் அவர்கள் ஒதுங்குவதாகத் தெரியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும…

  16. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல்... சேது கால்வாய் திட்டம் - 6 வாரத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உத்தரவு. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுவது தொடர்பாக 6 வார காலத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.இவ்வழக்கில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது என குற்றம்சாட்டினார். ஆனா…

  17. விரைவில் வழக்கு...! கோடநாடு எஸ்டேட்டை மீட்க முன்னாள் உரிமையாளர் அதிரடி ''கோடநாடு எஸ்டேட்டை மீட்டெடுப்பது குறித்து, இன்னும் ஒரு வாரத்தில், இறுதி முடிவு எடுப்பேன்,'' என, அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். ஜெ., சசிகலா ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், பட்டியலில் முக்கிய இடம் பிடித்தது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட். இதன் முன்னாள் உரிமையாளர் கிரேக் ஜோன்ஸ், தற்போது உயிருடன் இல்லை; இவரது மகன், பீட்டர் கிரேக் ஜோன்ஸ், கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரூ. 33 லட்சத்திற்கு வாங…

  18. சசிகலா குடும்பம் கொள்ளையடித்தது எப்படி? ஜெயலலிதா விதைத்த வினை - நக்கீரன் கோபால்

  19. மிஸ்டர் கழுகு: மோடியைச் சீண்டிய நமது எம்ஜிஆர் கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘லேட்டஸ்ட்டாக வந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ்களைக் கொண்டுவந்து போடும்’’ எனக் கட்டளையிட்டார். பரபரவென பக்கங்களைப் புரட்டினார். சிலவற்றை மட்டும் குறித்துக் கொண்டு நம்மைப் பார்த்தார். ‘‘எனக்குக் கிடைத்த சில தகவல்கள் இத்துடன் பொருந்திப் போகின்றனவா எனப் பார்த்தேன்’’ என்றார். ‘‘என்ன தகவல்கள்?’’ ‘‘தினகரன் தரப்பு சம்பந்தமாக மத்திய உளவுத்துறை அனுப்பிய இரண்டு தகவல்கள், மத்திய பி.ஜே.பி அரசைக் கொந்தளிக்க வைத்துள்ளன. தினகரன் செல்லும் இடங்களிலெல்லாம் அ.தி.மு.க தொண்டர்களும், பொதுவானவர்களும் பெருமளவில் திரளுகிறார்கள் என்பது முதல் தகவல். நெல்லை, பசும்பொன், விருதுநகர், த…

  20. #DemonetizationAnthem எதிரொலி - சிம்பு வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள நடிகர் சிம்புவின் வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி #DemonetizationAnthem என்னும் பெயரில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து, பாடல் ஒன்று வெளியானது. பண மதிப்பிழப்பு மட்டுமன்றி ஜி.எஸ்.டி குறித்தும் விமர்சித்திருந்தனர். அந்தப் பாடலை எழுதியவர், கபிலன் வைரமுத்து. விரைவில் வெளியாக உள்ள ’தட்ரோம் தூக்குறோம்’ என்னும் படத்தின் இப்பாடலை, நடிகர் சிம்பு பாடியுள்ளார் என்பதுதான் ஹைலைட். கறுப்புப்பணம், விஜய் மல்லையா எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச்சென்றுள்ளது பாடல் வரிகள். …

  21. விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த 50 லட்சம் ரூபாய்யை அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டத்திற்கு கல்வி முன்னேற்றத்திற்காக வழங்கினார் மதிப்பிற்குரிய.அண்ணன்.திரு.#விஜய்_சேதுபதி அவர்கள்

  22. ஜெயலலிதாவின் உயில் எங்கே?- அப்பல்லோ சிகிச்சை சி.டி.யை சல்லடை போட்டு தேடிய அதிகாரிகள்: வருமான வரித்துறை சோதனையின் அதிர்ச்சி பின்னணி ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக (அம்மா) பொதுச்செயலாளருமான சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திவாகரன், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்ரியா, உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானோரின் வீடுகளிலும் கடந்த இரு தினங்களாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சசிகலா, நடராஜன், தினகரன், விவேக், திவாகரன் உள்ளிட்டோர் தொடர்பான ஏராளமான சொத்துகளின…

  23. கருணாநிதி-மோடி சந்திப்பு.. சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு.. என்னமோ இடிக்குதே?திமுக தலைவர் கருணாநிதியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து சென்ற ஒரு சில நாட்களில் சசிகலா குடும்பத்தாரை ஐடி ரெய்டுகள் சுற்றி வளைத்துள்ளதை திமுகவினர் சிலர் பெருமையாக பேசுவதை கேட்க முடிகிறது. தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பங்கேற்க, கடந்த திங்கள்கிழமை சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திடீரென கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு திமுகவினருக்கே ஆச்சரியம் ஏற்படுத்தியது.தொண்டர்கள் சந்தேகம்: இந்த நிலையில், இன்று சசிகலா குடும்பத்தாருக்கு தொடர்புள்ள மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என மொத்தம் 90 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றுக்கொண்டுள்ளது. இது திம…

  24. ஜெயா டிவி அலுவலகங்களில் வருமான வரி சோதனை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் | படம் கே பிச்சுமணி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது. இச்சோதனை இந்தியா முழுவதும் இன்று காலையிலிருந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் உள்ள ஜெயா டிவிக்கு சொந்தமான அலுவலகங்களையும் வருமான வரித்துறையினர் தேடி வருகிறார்கள். இதுகுறித்து ஒரு மூத்த வருவாய்த்துறை அதிகாரி தெரிவிக்கையில், ''ஆமாம், தேடும் பணிகள் நடைபெறுகின்றன- இதை கறுப்புப் பணத்திற்கு எதிரான ஆபரேஷன்களின் ஒரு பகுதி மட்டுமே இது. தமிழ்நாடு உள்ளிட்டு இந்தி…

  25. டிசம்பர் 12 தனிக்கட்சி? - வந்துட்டேன்னு சொல்லு! - ரஜினி ரகசியங்கள்! இயக்குநர் இமயம் பாலசந்தரின் இயக்கத்தில் முதல் பட வாய்ப்பு, ஒரு ஹோலிப் பண்டிகை அன்று ‘சிவாஜிராவ்’ ரஜினிகாந்த் ஆகிறார். பாலசந்தரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள். இப்படி 70-களில் தொடங்கிய பயணம் 80-களில் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், ஆர்.தியாகராஜன் என்று கடந்து, 90-களில் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோருடன் பயணித்து, இரண்டாயிரம்களில் ஷங்கர், பா.இரஞ்சித் என்று தொடர்கிறது. இந்தப் பயணமும் வாழ்வும் இன்னும் அவருக்கே ஆச்சர்யம்தான். இதை அவரின் பேச்சுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இவர் அறிமுகமான காலத்தில் இருந்த ஹீரோக்களுடன் போட்டிபோடுவதற்கான நிறமோ, முகவெட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.