தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட புயல், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மையம் கொண்டுள்ளது. 'அ.தி.மு.கவில் பிளவு நீடிப்பதையே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விரும்புகிறது. வி.என்.ஜானகியோடு ஜெயலலிதா முரண்பட்டபோது, இரட்டை இலை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. தற்போது அப்படியான எந்த அவசியமும் பிரதமர் மோடிக்கு இல்லை' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார் சசிகலா. ஆட்சி அதிகாரத்தை நோக்கியும் அவர் வேகம் காட்டியபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.…
-
- 0 replies
- 403 views
-
-
‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது!’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களும் சசிகலா குடும்பத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. ‘ஜெயா டிவியைக் கைப்பற்றும் முயற்சி ஒருக்காலும் நடக்காது. என்னை மிரட்டிப் பணிய வைக்க ரெய்டு பயத்தைக் காட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் குடும்ப உறவுகளிடம் கொதித்திருக்கிறார் ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமன். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம…
-
- 0 replies
- 326 views
-
-
‘இப்படி இருந்தால் என்னதான் செய்வது?!’ - சிறையில் நொந்து புலம்பிய சசிகலா #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், இணைப்பு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. 'ஜெயலலிதா இருந்த நேரத்தில் அமைச்சரவை எப்படி இருந்ததோ, அதைப்போல நிதியமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் விருப்பம். இப்படியொரு இணைப்பு நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் உள்ளடி வேலைகளும் தொடங்கிவிட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனையை முன்வைத்து, பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது குழுவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சி.பெ…
-
- 0 replies
- 470 views
-
-
‘இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்’ - ஓ.பி.எஸ். அணியினர் உறுதி! தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை மாதத்திற்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு நாட்களாக அ.தி.மு.க. அணியில் இருந்தவர்கள் 'கருத்து' சொல்வதாக சண்டையை உருவாக்கிக் கொண்டிருந்தனர். தற்போது வரை அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இப்போதோ, இரு அணிகளின் தலைவர்களே 'இனி நாங்கள் சேரமாட்டோம்' என்பதை தங்களின் பேச்சால் உறுதிப்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 30-ம்தேதி சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, 'எங்களிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், கட்சியும்- ஆட்சியும் எங்களிடமே இருக்கிறது. யார் வந்தாலும், போனாலும் கவ…
-
- 0 replies
- 386 views
-
-
‘இரட்டை இலைக்கு உரிமை கோரினாரா பன்னீர்செல்வம்?!’ - ஆணைய விவாதத்தில் என்ன நடந்தது? ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட 127 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 'தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்ட கவலையில் இருந்து நிர்வாகிகள் முழுமையாக மீளவில்லை. தொப்பி சின்னத்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா?' என்ற கவலையும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தையும் தாண்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன், இரட்டை மின் கம்பம் சின்னத்தை தேர்வு செய்திருக்கிறார். எ…
-
- 0 replies
- 261 views
-
-
‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’ இன்னும் இரண்டே வாரங்களில், நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய அரசியல் கட்சி, கொடி, கொள்கைகளை அறிவிப்பார் என்று, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில செய்திச் அலைவரிசையில், “ரஜினிநேதா (தலைவர் ரஜினி) அரசியல் வருகை” என்ற தலைப்பில், ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள், தமிழருவி மணியன் போன்ற தலைவர்களிடம் பேசி, ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்தது. இவர்களில், இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் கட்சி அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் ரஜினி கட்சியின் கொள்கைகள் என்னவென்பது குறித்தும் விரிவாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். “இன்னும் 2 வாரங்களில், ரஜினி தனத…
-
- 7 replies
- 919 views
-
-
‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். "இன்று காலை வரையில் 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களுக்கும் இருந்த மோதல்தான் வேறு வழிகளில் வெளிப்படுகிறது. இதைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை' என்கின்றனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள். 'அ.தி.மு.கவில் எத்தனை அணிகள் உள்ளன?' என்ற கேள்விக்கு விடை தெரியாத அளவுக்கு பல துண்டுகளாக சிதறியுள்ளனர் நிர்வாகிகளும் …
-
- 1 reply
- 438 views
-
-
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலைத் தோட்டயில் பணியாற்றும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் | உள்படம்: எம்.எஸ்.செல்வராஜ் இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல, நீலகிரி மலையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் பரிவுகாட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். தமிழக கிராமங்களில் வறட்சி, வறுமை, பஞ்சத்தால் பாதிக்கப…
-
- 0 replies
- 333 views
-
-
‘உங்களைக் காலி செய்துவிடுவார் மோடி’ என்றார் குருமூர்த்தி! - வெளிச்சத்துக்கு வருகிறதா வில்லங்க வீடியோ? ‘திறனற்றவர்கள்' என ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய வார்த்தைகளை வைத்துக் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். 'அவர் படித்த முட்டாள்' என அமைச்சர் ஜெயக்குமார் கூற, 'திறனற்றவர்கள் என நான் கூறிய வார்த்தை வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிட்டது' என விளக்கம் கொடுத்திருக்கிறார் குருமூர்த்தி. 'ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு வலுவாகக் கால் ஊன்ற நினைத்த பா.ஜ.கவுக்கு தினகரனின் வெற்றி கூடுதல் கோபத்தை வரவழைத்திருக்கிறது. அதைத்தான் வேறு வடிவில் வெளிப்படுத்துகிறார் குருமூர்த்தி' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை…
-
- 0 replies
- 336 views
-
-
‘உங்களைச் சுற்றி என்ன நடந்தது தெரியுமா?’ - முதல்வருக்கு கடிதம் எழுதிய சசிகலா புஷ்பா 'அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி வார்டுக்கு முதல்வர் மாற்றப்பட்டார்' என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. 'நீங்கள் சிகிச்சையில் இருந்தபோது உங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பதைப் பற்றி உங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்' என விரிவாகவே கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 59 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். "நோய்த் தொற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதால், கடந்த சில வாரங்களாக பிஸியோதெரபி சிகிச்சைகள் வேகமெடுத்து வருகின்றன. தற்போது எழுத்துப் பயிற்சி, கை விரல்கள் இயக்கத்திற்கான பயிற்சி…
-
- 0 replies
- 515 views
-
-
‘உடம்பை பார்த்துக்குங்க..!’ ஸ்டாலினிடம் உருகிய ஜெயலலிதா! #VikatanExclusive அந்தக்காலம் முதலே திரைக்கலைஞர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி... பொது வாழ்க்கையானாலும் சரி எப்போது அப்படியே முடிவுகளை எடுப்பர். திராவிட பாரம்பர்யத்தில் ஊறி வளர்ந்த ராதாரவி இப்போது அப்படி ஒரு உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார். நடிகவேள் எம் ஆர். ராதாவின் புதல்வரான அவர், தந்தையைப் போலவே தடாலடி மனிதர்தான். பழனியில் நடந்த நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழகத்தை வழிநடத்த தகுதியான ஒரே தலைவர் அவர்தான்” என்றும் பேசி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். சர்ச்சைக்கு காரணம் அவர் அ.தி.மு.க வின் முன்னாள் எம…
-
- 0 replies
- 424 views
-
-
‘உனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது யார்?’ - தினகரனைத் திட்டித் தீர்த்த சசிகலா #VikatanExclusive ‘அ.தி.மு.கவில் இருந்து தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததை அதிர்ச்சியோடு கவனிக்கிறது சசிகலா அணி. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவின் கோபத்தை தினகரனால் எதிர்கொள்ள முடியவில்லை. ‘இரண்டு மாதம் அமைதியாக இரு' என்று அவர் கூறியதை, அணிகள் இணைவதற்கான அவகாசமாக மாற்றிக் கூறிவிட்டார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்ஜாமீன் பெற்ற கையோடு, ‘கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டப் போகிறேன்' என அறிவித்தார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். இதற்கு ஆதரவு…
-
- 0 replies
- 395 views
-
-
‘உள்ளே வச்சுப் பாருங்க’ சீமான் சவாலும் நாம் தமிழர் - திமுக மோதலும் பட மூலாதாரம்,NAAM TAMILZHAR 4 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் மேனகா நவநீதன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கட்சிகளிடையே மோதல் போக்கு உருவாகியது. கட…
-
- 1 reply
- 763 views
- 1 follower
-
-
‘எங்கே சென்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - அமைச்சர்களை குறிவைக்கும் ரெய்டுகள் நுங்கம்பாக்கம், வருமான வரித்துறை அலுவலகம் அதிகாரிகள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. 'ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் இருந்தாலும், ஆளுநர் உத்தரவின்பேரிலேயே அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன" என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். அவருடன் நட்பில் இருந்து பல ஆயிரம் கோடிகளை ஈட்டிய சேகர் ரெட்டி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். ராமமோகன ராவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வர்த்தக தொடர்புகளும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. அதிலும், புதிய இரண்டாயிரம…
-
- 0 replies
- 404 views
-
-
‘எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம்!’ - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் தினகரனுக்கும் திவாகரனுக்கும் நீடித்து வந்த மோதல், தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. 'சசிகலாவை சந்திக்க தினகரன் முயற்சி செய்தபோதும், திவாகரன் அதற்கு இடையூறாக இருந்தார். 'குடும்பம் மற்றும் கட்சியைக் காப்பாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என சசிகலா வைத்த உருக்கமான வேண்டுகோளை இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள். இந்த சந்திப்பில், 'கட்சிப் பொறுப்பில் தினகரன் தொடர்வா…
-
- 1 reply
- 991 views
-
-
‘எடப்பாடி பழனிசாமியை ஏன் பிடிக்கவில்லை?!’ - ஆட்சியைக் கவிழ்ப்பார்களா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்? #VikatanExclusive தமிழக அரசை அச்சத்துடன் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த நல்ல தலைமை இல்லாததால், அமைச்சர் பொறுப்பைக் கேட்டு எம்.எல்.ஏக்கள் பலரும் நெருக்கடி கொடுக்கின்றனர். 'குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் அமைச்சரவையில் மாற்றம் இல்லை' என்ற தகவலால், எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்கின்றனர் ஆளும்கட்சி வட்டாரத்தில். சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில், நேற்று மாலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தலைமையில் ரகசியக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்தக் கூட்டத்…
-
- 0 replies
- 513 views
-
-
‘எதிரிக்கு எதிரி; நமக்கு நண்பன்!’ - சசிகலாவின் கூட்டல் கழித்தல் கணக்கு #VikatanExclusive அ.தி.மு.க-வில், சசிகலாவின் குடும்பத்தினரை ஓரம்கட்ட முடிவுசெய்துள்ள நிலையில், 'எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்' என்ற ரீதியில் அவர்கள் குடும்பத்துக்குள் சில வாக்குறுதிகளுக்கு சசிகலா தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அணிகள் உருவாகிவருகின்றன. சசிகலா, டி.டி.வி.தினகரன் சிறைக்குச் சென்ற பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், சுமுகத் தீர்வு எட்டப்படவி…
-
- 0 replies
- 457 views
-
-
‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்!’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிறுத்தி அ.தி.மு.கவுக்குள் நடந்து வந்த மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. 'பா.ஜ.கவுக்கு விசுவாசம் காட்டுவதில், கட்சியின் மூன்று அணிகளுக்குள்ளும் போட்டி நிலவியது. 'இப்போது கட்சிக்குள் யாருக்கு செல்வாக்கு'? என்ற மோதல் வலுப்பெற்று வருகிறது. 'கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்' எனத் தொண்டர்கள் மத்தியில் வெளிக்காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் அ.தி.மு.கவினர். பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலாவை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அங்கு, 'குடியரசுத் தலைவர்…
-
- 0 replies
- 444 views
-
-
‘எந்த சூழ்நிலையிலும் நீங்கள்தான் முதல்வர்!’ - ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் சொன்னாரா ஆளுநர்? பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று மாலை ஆளுநரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். 'மக்களால் தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு, எந்த நேரத்திலும் துணையாக இருப்பேன்' என ஆறுதல் கூறியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரம், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர் கட்சியின் சீனியர்கள். ' சின்னமாவை பொதுச் செயலாளர் பதவிக்குக் கொண்டு வருவதற்காக, விதிகளைத் தளர்த்தவும் …
-
- 0 replies
- 367 views
-
-
‘எனக்காக சிலுவையை சுமப்பவர் 'சசிகலா'...!' யாரைக் குறிப்பிடுகிறார் நாஞ்சில் சம்பத்? “என்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் சசிகலா எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ, அரசியலை விட்டு விலக சொல்லியோ ஒரு போதும் சொல்லவில்லை. கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல், நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில், தன்னுடைய நகைகளை அடகு வைத்து குடும்பத்தை காப்பாற்றியவர் சசிகலா. ஏசு சிலுவையை தூக்கி, தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல, என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கி சசிகலா.” என உருக்கமாக பேசுகிறார் நாஞ்சில் சம்பத். 'சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச…
-
- 1 reply
- 590 views
-
-
‘என்ன செய்யப் போகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - திகில் கிளப்பும் டெல்லி மூவ் சட்டசபைக் குழுத் தலைவராக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. 'எம்.எல்.ஏக்கள் தொகுதிக்குள் செல்லும் வரையில் ஆளுநர் எந்த உத்தரவும் பிறப்பிக்க வாய்ப்பில்லை. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து, பெங்களூருவுக்குப் பயணப்பட இருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. புதிய துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் டி.…
-
- 3 replies
- 520 views
-
-
மிஸ்டர் கழுகு: ‘என்னமோ திட்டம் இருக்கு...’ ‘‘வெயிலுக்கு இதமாக தொப்பிகூட போட முடியவில்லை. ஆர்.கே. நகர் பக்கம் போனால், ஒருவித ‘எதிர்பார்ப்போடு’ நம்மைப் பார்க்கிறார்கள்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘எல்லா கெடுபிடிகளையும் மீறி, ஆர்.கே. நகரில் பணம் பாய்கிறதாமே?” என்றோம். ‘‘ஆமாம்! இடைத்தேர்தல் சோதனைகளும் கெடுபிடிகளும் இந்த அளவுக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆளும்கட்சி மிரண்டு போய்தான் இருக்கிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று படை பட்டாளங்களைக் குவித்திருந்தாலும், அவர்கள் தயங்கித் தயங்கியே வேலை செய்கிறார்கள். அவர்களிடம் வழக்கமான இடைத்தேர்தல் உற்சாகம் இல்லை. சென்னை போலீஸ் ஆணையர் கரன் சின்ஹா, தொகுதிக்கே வந்து நேரடி ஆய்வுகள்…
-
- 0 replies
- 958 views
-
-
‘என்னை அழிக்க நீங்களே போதும்!’ - குடும்பத்தில் கொந்தளித்த தீபா தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு வரும் அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பேரவையின் நடவடிக்கைகளும் தீபா குடும்பத்தினரின் தலையீடுகளும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 'எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும், ஜெயலலிதாவைப் போல மீண்டு எழுவேன்' என வேதனை கலந்த முகத்துடன் பேசுகிறார் தீபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 'தலைமையேற்க வாருங்கள்' என தீபாவின் பின்னால் ஒரு கூட்டம் கூடியது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் பன்னீர்செல்வம் முரண்பட்ட பிறகு, அவர் பின்னால் அ.தி.மு.க நிர்வாகிகள் அணிவகுத்தனர். 'நானும் பன்னீர்செல்வமும் இரு கரங்களாக…
-
- 0 replies
- 337 views
-
-
‘ஐ விட்னஸ்’ சண்முகநாதன்! - சசிகலாவுக்கு ‘355’ செக் வைக்கும் ஆளுநர் #OPSVsSasikala 'தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்' என அறிவித்துவிட்டார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 'அரசியல் சூழல்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினாலும், நேற்றைய சந்திப்பில் ஹைலைட்டே சண்முகநாதனின் ஸ்டேட்மெண்ட்தான்' என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் நிலை பற்றி, தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் ஆலோசித்து வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று மாலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், மிகுந்த உற்சாகத்தோடு வெளியில் வந்தார். 'தர்மம் வெல்லும்' என மீடியாக்களிடம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். அ…
-
- 1 reply
- 657 views
-
-
ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஈரோடு மாவட்டம், அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், கலானி - விஜயகுமார் தம்பதியர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இந்த தம்பதி வருத்தத்தில் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ‘நீங்க கர்பமாக இருக்கீங்க’ என்ற இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்,‘ஸ்கேன் செஞ்சு பார்த்ததில்,'' உங்களுக்கு வயிற்றுல 3 குழந்தைகள் இருக்கு’ என மருத்துவர்கள் சொல்ல, தம்பதியர் துள்ளிக்குதித்து மகிழ்…
-
- 5 replies
- 1.5k views
-