தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10297 topics in this forum
-
'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை... அதன் விதை பயமிலாக் கேள்வி' - கமல் ட்வீட் பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, “இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்ற…
-
- 0 replies
- 465 views
-
-
அ.தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி ? உண்மை உணர்த்தும் 18 'பரபர' சம்பவங்கள்! #Vikatan Exclusive ‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல் தற்போது பி.ஜே.பி-யிடம் இருக்கிறது.’’ ‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க அரசு இயங்குகிறது.’’ "தனக்கு சலாம் போடும், தலையாட்டும் பொம்மைகளுக்காக அ.தி.மு.க-வை மறைமுகமாக ஆட்டிவைக்கிறது பி.ஜே.பி.’’ - தமிழக அரசியலில் இப்போது நடக்கும் அத்தனை அக்கப்போர்களுக்கும் பின்னால் வைக்கப்படும் விமர்சனங்கள்தான் இவை! ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி அணிகள் இணைந்தபோது, ‘‘டெல்லியிலிருந்து கதை, வசனம், இயக்கம் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.…
-
- 1 reply
- 1.1k views
-
-
தினகரனுக்கு ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்..! #VikatanExclusive இன்று அணி அணியாகப் பிரிந்துள்ள அ.தி.மு.க-வுக்குள், பிரதான அணியாக இருக்கும் டி.டி.வி. தினகரன், சமீபத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேகமானதாகவும், தீர்க்கமானதாகவும் உள்ளது. தனக்குள்ள செல்வாக்கை உணர்த்துவதற்காக, மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திய அவர், தற்போது பொதுப்பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். நீட் தேர்வால் மருத்துவ இடம்கிடைக்காமல் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, "மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்ற போதிலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததல், தற்கொலை செய்…
-
- 0 replies
- 585 views
-
-
மிஸ்டர் கழுகு: உட்கட்சி விவகாரம் என்று நான் சொல்லவே இல்லை! தினகரனிடம் பல்டி அடித்த கவர்னர் இரண்டு நாள்கள் இரவு பகலாக தினகரனின் பெசன்ட் நகர் வீட்டை வட்டமடித்த கழுகார், தூக்கமில்லாமல் சிவந்த கண்களுடன் அலுவலகம் வந்தார். திடீரென போனில் அழைப்பு வர, ‘‘ஒரு மணி நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கழுகார், சொன்னதுபோலவே வந்தார். ‘‘ஒன்றுமில்லை... கவர்னரை தினகரன் சந்தித்த நேரத்தில் கிண்டி கவர்னர் மாளிகையை வட்டமடித்துவிட்டு வந்தேன்’’ என்றார். ‘‘தினகரனின் ஆட்டம் வேகம் பிடித்துள்ளதே?” ‘‘கடந்த வாரம் முழுவதும் தினகரன் தீவிர ஆலோசனையில் இருந்தார். தனக்கு நெருக்கமானவர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்து பல விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.…
-
- 0 replies
- 2.2k views
-
-
சிறிய நாடான இலங்கை முன்னோடியாகத் திகழ்கிறது: ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது - மத்திய ஆராய்ச்சித் துறை செயலாளர் கவலை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்குகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன் மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர் சவுமியா சுவாமிநாதன், துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன். (அடுத்த படம்) பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர். - படங்கள்: க.ஸ்ரீபரத் …
-
- 1 reply
- 545 views
-
-
தமிழன் ஆள்வான், ரஜினி அரசியல், அமெரிக்காவில் அவமரியாதையா..? பதிலளிக்கிறார் A.R. Rahman
-
- 0 replies
- 502 views
-
-
ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை இன்று சந்திக்கிறார் தினகரன்: தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு டிடிவி தினகரன். - படம்: பி.ஜோதிராமலிங்கம் அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று பகல் 12.30 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார். சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் தினகரன் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. 21 எம்எல்ஏக்கள் ஆதரவு அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர், டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 19 எம்எல்ஏக்களும் ஆளுநர் …
-
- 0 replies
- 377 views
-
-
முதல்வரை தகுதியிழப்பு செய்யலாமா? : வழக்கில் செப்., 13 வரை அவகாசம் மதுரை: சிறையில் சசிகலாவை சந்தித்த விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி மற்றும் நான்கு அமைச்சர்களை தகுதியிழப்பு செய்ய கோரிய வழக்கில், 13ம் தேதி வரை அவகாசம் அளித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார்ஆணழகன் தாக்கல் செய்த பொதுநல மனு:அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, சீனிவாசன், காமராஜ், பிப்., 28ல், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர். அவர்கள், 'அரசின் செயல்பாடுகள் பற்றி சசிகலாவிடம் பேசினோம்' என்றனர். இதற்கு, முதல்வர் பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்களி…
-
- 0 replies
- 285 views
-
-
' நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோப்பா....!' - தினகரனிடம் உருகிய சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் இருந்தே உறைந்து போய் கிடக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ' கட்சி நிர்வாகம் தொடர்பாக தினகரன் எடுக்கும் முடிவுகளுக்கு அவர் முழுமையான ஒப்புதல் அளித்துவிட்டார். சிறைக் கட்டுப்பாடுகளால், மனதளவில் உடைந்து போய் இருக்கிறார்" என்கின்றனர் சிறைத்துறை வட்டாரத்தில். அண்ணா தி.மு.கவின் பொதுக்குழுவை வரும் செப்டம்பர் 12-ம் தேதி கூட்ட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்துக்கு நீதிமன்றம் வழியாக தடை பெறுவது குறித்து தினகரன் தரப்பில் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். 'பொதுக்கு…
-
- 0 replies
- 1.9k views
-
-
மெரினாவை அதிரவைத்த மாணவர்கள்..! ஜெ. நினைவிடத்திலும் போராட்டம் அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை நிரந்தரமாகத் தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருக்கும் இடத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தி…
-
- 0 replies
- 464 views
-
-
முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் வைகோ சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இந்த விழாவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர்(காங்.), ஜவாஹிருல்லா (ம.ம.க.), க.வீரமணி(தி.க), காதர் மொய்தீன் (இ.யூ.மு.லீ) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறுகிறார் வைகோ. முரசொலி பவள விழாவில் மாணவி அனிதா மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்த…
-
- 1 reply
- 588 views
-
-
பழனிசாமி அரசுக்கு தனியரசு ஆதரவு: தனித்து செயல்படுவதாக அன்சாரி அறிவிப்பு - எம்எல்ஏ கருணாஸ் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களில், முதல்வர் பழனிசாமி அரசுக்கு ஆதரவளிப்பதாக தனியரசு தெரிவித்துள்ள நிலையில், தமிமுன் அன்சாரி ‘இனி யாருக்கும் ஆதரவில்லை, தனித்து செயல்பட உள்ளேன்’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக ஆதரவு கட்சிகளின் எம்எல்ஏக்கள் 3 பேரும் பங்கேற்கவில்லை. இருப்பினும், அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, 3 பேரும் அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர் என்றார். ஆனால், தினகரனுக்…
-
- 0 replies
- 276 views
-
-
மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ்ஸை வேவு பார்க்கும் இ.பி.எஸ்! ‘‘அனிதா மரணம், நீட் தேர்வுக்கான எதிர்ப்பு எனத் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல கல்லூரிகளில் மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள். இந்த நேரத்திலும் உள்கட்சி மோதலை விடாமல் தொடர்கிறது அ.தி.மு.க” என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். உட்கார்ந்தபிறகு, அதையே பேசினார். ‘‘நாடு என்ன ஆனால் அவர்களுக்கு என்ன? ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவர்களின் பஞ்சாயத்துக் களைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் இருக்கிறது. ஒரு பக்கம் தினகரனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்; இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்ஸோடு உரசிக் கொண்டிருக்கிறார்.” ‘‘தினகரனோ…
-
- 0 replies
- 2.2k views
-
-
செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்க எடப்பாடிக்கு முழு அதிகாரம்: அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம். அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவே இறுதியானது என இன்று நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 337 views
-
-
பெரியார்: யாராலும் மறக்க முடியாத மனிதர் ! | Socio Talk | பெரியார், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை.
-
- 0 replies
- 298 views
-
-
புதுடில்லி: 'பெரா' வழக்கில், 'டிமிக்கி' கொடுக்கும் தினகரனுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது;மூன்று மாதத்தில், வழக்கை முடிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். 'வழக்கை இழுத்தடிக்க, இது போன்ற மனுக்களை தாக்கல் செய்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர். சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 1996ல், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், சட்ட விரோதமாக, பல கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை, இரு வழக்குகளை பதிவு செய்தது. மனு தாக்கல் இவை, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 'இந்த வழக்குகளை விரை…
-
- 0 replies
- 308 views
-
-
அ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது? ப.திருமாவேலன் கவர்னர் வித்யாசாகர் ராவ்தான் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு வில்லன். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தினகரனும் பாவம்... தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். வித்யாசாகர் ராவ் தெரிந்தே செய்கிறார். தவறுக்கு மேல் தவறைத் திட்டமிட்டுச் செய்கிறார். ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கொடுக்கும் இரண்டு கால்கள் கவர்னருடையவை. ‘ஏன் இப்படி நடந்துகொள்கிறார்’ என்பதற்கான காரணங்கள் பச்சையாக வெளியே தெரிந்தபிறகும், தெருவில் நாறிய பிறகும் வித்யாசாகர் ராவ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்கான அசைன்மென்ட் ‘அவ்வளவு’ பெரியது போல! அ…
-
- 0 replies
- 564 views
-
-
“என் ஓவியங்களைப் பற்றி பிரபாகரன் அழைத்து பேசினார்!” - ஓவியர் புகழேந்தி உலகின் ஒரு முக்கியமான பிரச்னைக்காக தனிநபர் ஒருவர் பல ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்துவது என்பது மிகவும் அரிதான விஷயம். ஆனால், உலகில் பலரின் கவனத்தைத் திசைதிருப்பிய தமிழ் ஈழப் பிரச்னைக்காக, 100 ஓவியங்களை வரைந்து ஆவணப்படுத்தி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி. தஞ்சாவூர் மாவட்டம் தும்பதிக்கோட்டை கிராமத்தில் 1967-ம் ஆண்டு பிறந்த புகழேந்தி இளம் வயதிலேயே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஓவியக்கல்லூரியில் படித்து பட்டம்பெற்றார். தமிழ் ஈழத்திற்காக 100 ஓவியங்கள் மற்றும் சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகளான மதக் கலவரம், சாதி ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான தாக்குதல் என அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
டெல்லியிலிருந்து கிடைத்த சிக்னல்; திடீர் உற்சாகத்தில் தினகரன் #VikatanExclusive டெல்லியிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்னல் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் சசிகலா அணியினர் உள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றால் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுகின்றனர். சசிகலா அணியினருக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமரசமானதும், ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் தினகரன். …
-
- 0 replies
- 372 views
-
-
2050-ல் சென்னை நகரை விழுங்க போகும் கடல் உலக வெப்பமயமாதலால் 2050-ம் ஆண்டில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடற்பகுதிக்குள் சென்றுவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஒரு பிரிவாக உள்ள தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம் தமிழக இயற்கை சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது. பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் விளைவுகள் குறித்து நடத்திய ஆய்வில் உலக வெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம்: எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தங்க தமிழ்ச்செல்வன் | கோப்புப் படம்: எம்.சாம்ராஜ் முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ''தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள்…
-
- 0 replies
- 331 views
-
-
-
- 0 replies
- 749 views
-
-
திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; ஒரு குழந்தை உட்பட இருவர் உயிருடன் மீட்பு திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து | படம்: ஞானவேல்முருகன் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை 7 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது | படம்: ஞானவேல் முருகன் திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ளது தஞ்சாவூர் குளத்தெரு. இப்பகுதி…
-
- 0 replies
- 380 views
-
-
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பா?- ஆம் என்ற திவாகரன் திட்டவட்டமாக மறுத்த தினகரன் திவாகரன் (இடது), தினகரன் (வலது) திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்வார்கள் என திவாகரன் கூறிய நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே அதை டிடிவி தினகரன் மறுத்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நாளை (செப்.4) சென்னை அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் இக்கூட்டத்தில் தங்கள் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்வார்கள் என சசிகலாவின் சகோத…
-
- 0 replies
- 370 views
-
-
புதுச்சேரி சொகுசு விடுதியில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் சந்திப்பு: ஓரிரு நாட்கள் காத்திருப்போம் என தகவல் புதுச்சேரி ரிசார்ட்டில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் டிடிவி தினகரன். - படம்: எம்.சாம்ராஜ் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்எல்ஏக்களை யாரும் இங்கு அடைத்து வைக்கவில்லை என்று கூறிய தினகரன், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கப் போவதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் புதுச்சேரி அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கடந்த 12 நாட்களாக தங…
-
- 0 replies
- 321 views
-