தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10296 topics in this forum
-
ஜெயலலிதா | கோப்புப் படம். ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ.6 கோடியை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிமுக வழங்கியது. முதல்வராக இருந்த ஜெய லலிதா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே 5 முறை யும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் 3 முறையும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித் தனர். அவர்கள் கொடுத்த ஆலோ சனைகளின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த 2 பெண் பிசியோ தெரபி நிபுணர்கள், ஜெயலலிதா வுக்கு பி…
-
- 0 replies
- 402 views
-
-
கூவத்தூர் குதிரை பேரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்...விடாப்பிடி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்,ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - காங்., உள்ளிட்ட, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து, கூவத்துாரில் நடந்த குதிரை பேரம் தொடர்பாக, 'சிடி' ஆதாரத்துடன் முறையிட்டனர். 'லஞ்சம் கொடுத்தே நம்பிக்கை ஓட்டெடுப்பில், பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது; எனவே, அ.தி.மு.க., ஆட்சியை உடனே கலைக்க வேண்டும்' என்றும், வலியுறுத்தினர். தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு, பிப்., 18ல், நம்பிக்கை ஓட்டு கோரியது. அதில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க் களை, கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் த…
-
- 0 replies
- 413 views
-
-
வாய்ப்பில்லை? ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு... அ.தி.மு.க.,வின் 3 அணிகள் மோதலால் குளறுபடி அ.தி.மு.க., அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் ஆர்வமாக இல்லை. எனவே, ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்தல், 2016 அக்டோபரில்,…
-
- 0 replies
- 270 views
-
-
தீபா - தீபக் மோதல் பின்னணியில் தினகரன்: கார்டனில் நடந்த கலாட்டா சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கும், அவரது சகோதர ருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு, தினகரன் தரப்பினரே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது. ஜெ.,மறைவுக்கு பின், அவரது சொத்துக்களுக்கு, அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், உரிமை கொண்டாடி வருகின்றனர். சொத்துக்கள் தொடர்பாக, ஜெ., உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்த தகவல் எதுவும், இதுவரை வெளியாகவில்லை. தனிக்கட்சி தற்போதைய நிலையில், ஜெ., சொத்துக்கள் அனைத்தும், சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. தீபக்கும், அவர்களின்…
-
- 0 replies
- 279 views
-
-
கட்சி எங்களுக்கு... ஆட்சி பன்னீருக்கு...: சசி குடும்பம் யோசனை; பழனிசாமி கொந்தளிப்பு 'முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்' என, முதல்வர் பழனிசாமி கூறியது, சசிகலா குடும்பத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்தினர் கோலோச்சுவதை, பா.ஜ., தலைவர்கள் விரும்ப வில்லை. எனவே, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு, பன்னீர் அணியுடன் இணையும் படி, முதல்வர் பழனிசாமி தரப்பினருக்கு, அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தடைபட்டது ஆனால், முதல்வர் பதவியில் திடமாக அமர்ந்த பழனிசாமி, அதை துறக்க தயாராக இல்லை. இதன் காரணமாகவே, பன்னீர் அணியுடனான…
-
- 0 replies
- 385 views
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் - திவாகரன்... திடீர் சந்திப்பு பின்னணி! ‘‘வெளியில் சண்டையிடுகிறார்கள், உள்ளே கூடிக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டு முழிப்பது என்னவோ ஆதரவாளர்கள்தான்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘யாரைச் சொல்கிறீர்கள்?” என்றோம். ‘‘சசிகலா குடும்பத்தைத்தான் சொல்கிறேன். மன்னார்குடியில் தினகரனுக்கு ஆதரவாக கடந்த 11-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் திடீரென ரத்தானதும், பேச்சாளர்கள் அவமானத்தோடு திரும்பியதும் தெரிந்த கதைதான். அதன் பின்னணியில் திவாகரன் இருந்தார். திரும்பிப் போகும்போது, கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘மன்னார்குடிக்கு இவர் ராஜான்னா, கர்நாடகாவுக்கு நான் ராஜா. என்னோட பவரை நான் அங்கே காட்டறேன்’ எனத் திவாகரன் பெ…
-
- 0 replies
- 960 views
-
-
இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம்.. பதறிய தி.நகர் மக்கள்! தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு எற்பட்டது. ஆனால், கட்டடத்தின் அந்தப்பகுதியைத் தாங்கள்தான் இடித்தோம் எனக் கட்டட இடிப்பு ஒப்பந்தக்காரர் பீர் முகமது பேட்டியளித்துள்ளார். சென்னை, தி.நகரில் மே 31 ஆம் தேதி, ஏற்பட்ட பெரும் தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாகச் சேதமடைந்தது. இதனால் வலுவிழந்த அக்கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இடிபாடு விழுந்து ஊழியர் ஒருவர் பலியானதால், கட்டட இடிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கட்டடம் இடிக்கும் பணி மீண்டும் துவங்கியது. கட்டட இடிப்புப் பண…
-
- 2 replies
- 522 views
-
-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்வுகள் 14.06.2017
-
- 1 reply
- 542 views
-
-
'நாங்கள் பார்க்கத்தான் செய்கிறோம்; எதற்கும் ஒரு எல்லை உண்டு'- தமிழக அரசை எச்சரித்த நீதிபதி கிருபாகரன் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்கள் விஷமிகளா என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் பெண்களே போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் கொ…
-
- 0 replies
- 504 views
-
-
‘எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம்!’ - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் தினகரனுக்கும் திவாகரனுக்கும் நீடித்து வந்த மோதல், தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. 'சசிகலாவை சந்திக்க தினகரன் முயற்சி செய்தபோதும், திவாகரன் அதற்கு இடையூறாக இருந்தார். 'குடும்பம் மற்றும் கட்சியைக் காப்பாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என சசிகலா வைத்த உருக்கமான வேண்டுகோளை இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள். இந்த சந்திப்பில், 'கட்சிப் பொறுப்பில் தினகரன் தொடர்வா…
-
- 1 reply
- 993 views
-
-
போயஸ்: ஒரு அதிகாரத் தோட்டத்தின் கதை! வேதா நிலையம், எண்: 81, போயஸ் தோட்டம், சென்னை, 600086. இதுதான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரபூர்வ முகவரி. கடந்த 30 ஆண்டு கால அதிமுகவின் அரசியல் முகவரியும் அதுதான். கடந்த 30 ஆண்டுகாலத் தமிழக அரசியல் சக்கரத்தின் மையப்புள்ளி. சில தருணங்களில் இந்திய அரசியலைத் தீர்மானித்த புள்ளி என்றும் சொல்லலாம். 1967-ல் சென்னையில் மனை வாங்கினார் ஜெயலலிதாவின் தாயும் பிரபல நடிகையுமான சந்தியா. அதனை அவரும் ஜெயலலிதாவும் தங்கள் ரசனைக்கு ஏற்பச் செதுக்கி, பிரம்மாண்ட இல்லமாக்கினர். புதுமனை புகுவிழா நெருங்கும் சமயத்தில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் சந்திய…
-
- 1 reply
- 607 views
-
-
ஆபத்தானவர்களின் பட்டியலில் பெயர்.. மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்குத் தடை!! மலேசியாவுக்குள் நுழைய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார் அவர். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ம.தி.மு.க தலைமைக் கழகம், 'மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு ஜூன் 10 சனிக்கிழமை மாலை பினாங்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
"நாம் தமிழர்" செல்வாக்கு அதிகரிப்பு.. சம பலத்தில் காங்., பாஜக + பாமக, தேமுதிக.. நக்கீரன் சர்வே By: Sutha Updated: Thursday, June 15, 2017, 12:02 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது. நக்கீரன் எடுத்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் யாருக்குப் பாதிப்பு என்றும், தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வேயில் கட்சிகளின் ஆதரவு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதுகுறித்த பார்…
-
- 2 replies
- 967 views
-
-
அ.தி.மு.கவுக்கு ஏன் உரிமை கொண்டாடுகிறார் தீபா?! - தேர்தல் ஆணையமும் தினகரனின் அச்சமும் #VikatanExclusive மீண்டும் தினகரனைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், தினகரனின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி. 'சசிகலா எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியிலேயே அ.தி.மு.கவின் மற்ற அணிகள் இணைய இருக்கின்றன. சசிகலா எதிர்ப்பு மட்டும்தான் வலுப்பெறும்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். அண்ணா தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் ஒதுங்கி இருந்தேன். அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாததால், மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன்…
-
- 0 replies
- 384 views
-
-
மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..! கழுகார் வந்ததும் டி.வி ரிமோட்டை கையில் எடுத்து ‘டைம்ஸ் நவ்’ சேனலைத் தட்டிவிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஸ்டிங் ஆபரேஷன் உச்சபட்ச டெசிபலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நம் பக்கம் திரும்பிய கழுகார், ‘‘நேற்றுகூட ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காட்டில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து பணமும் தங்கமும் கொடுக்கப்பட்டது’ எனக் குற்றம் சாட்டினாரே... கவனித்தீரா?” என்றார். ‘‘முதல்நாள் அவர் அங்கே பேசுகிறார். மறுநாள், அவரது கோஷ்டியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகு…
-
- 0 replies
- 623 views
-
-
மக்களின் நம்பிக்கையை இழப்பதுதான் பேரிழப்பு! அதிமுக தன்னுடைய ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள சட்ட மன்ற உறுப்பினர்களோடு பண பேரம் நடத்தியதாகச் சொல்லப்படும் விவகாரம் தமிழகச் சட்ட மன்றத்தை ஸ்தம்பிக்க வைத்திருப்பது தமிழக அரசியலின் இழிந்த வரலாற்றின் ஒரு அத்தியாயமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தனித்துப் பார்க்க முடியவில்லை; ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் இரு பிரிவுகளும் அடுத்தடுத்து சிக்கும் முறைகேடு குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாகவே இதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மாநிலங்களின் உரிமை சார்ந்து பேச வேண்டிய ஒரு வரலாற்றுத் தருணத்தில் ஆட்சியைத் தன் கையில் வைத்திருக்கும் அதிமுகவினர் இப்படியான இழிவான குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கிவருவது அதிம…
-
- 0 replies
- 246 views
-
-
சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்: ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள திமுகவினர் | படம்: ம.பிரபு பண பேர விவகாரம் வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராஜாஜி சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, பண பேர விவகாரம் குறித்து வெளியான வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்ற திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால், திமுக கோரிக்கையை ஏற்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
சவுதி பாலைவனத்தில் 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக வாழ்ந்த ரியல் ’மரியான்’..! கடுமையான சட்டதிட்டங்களை கொண்ட நாடான சவுதி அரேபியாவில், 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக வாழ்ந்துள்ளார் தமிழர் ஒருவர். இதுதொடர்பாக சவுதி ஊடகங்களில் வெளியான தகவல் பின்வருமாறு... ’தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஞான பிரகாசம் ராஜமரியான். இவர் 1994 ஆம் ஆண்டு சவுதியின் ஹெயில் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு அந்த பண்ணையில் சரியான ஊதியம் வழங்கப்படாததால் அவர் அங்கிருந்து தப்பித்து சவுதியில் உள்ள பாலைவன பகுதியில் சட்டவிரோதமாக வசிக்க தொடங்கியுள்ளார். 1994 ஆம் ஆண்டு தமிழகத்தை விட்டுவந்த ஞான பிரகாசம், அதன் பிறகு தன் சொந்த மண்ண…
-
- 0 replies
- 439 views
-
-
'கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்'... ஆதாரத்தை வெளியிட்டது டைம்ஸ் நவ்! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் செல்வம் போர் கொடி எழுப்பியப் பிறகு நடந்த அரசியல் திருப்பங்கள் அனைவரும் பார்த்ததுதான். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது, கூவத்தூர் ரிசார்ட், நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி ஆட்சி என்று கடந்த சில மாதங்களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தபோது, அவர்களுக்கு பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இர…
-
- 7 replies
- 1.5k views
-
-
'தினகரன் வீட்டுக்குத்தான் கெளம்புனேன்... ஆனா, பா.ஜ.க-ல சேர்ந்துட்டேன்'! - கலகல பொன்னம்பலம் அ.தி.மு.கவில் இருந்து விலகி, பா.ஜ.கவின் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் பொன்னம்பலம். ' இரண்டு அணிகளும் இணையும் என்று இவ்வளவு நாள் காத்திருந்தேன். அவர்கள் இணைந்திருந்தால், நான் ஏன் பா.ஜ.க பக்கம் போகப் போகிறேன்' என்கிறார் நடிகர் பொன்னம்பலம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் மதில்மேல் பூனையாக உள்ளனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி.தினகரன் அணி, தீபா அணி என பிரிந்துள்ளனர் அ.தி.மு.க.வினர். 'கட்சியில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை' எனத் தொண்டர்களே புலம்பி வருகின்றனர். இந்நிலையில், 2011 ஆம் ஆண…
-
- 0 replies
- 332 views
-
-
‘குடும்பச் சண்டையில் அவர்களே அழிவார்கள்!’ - எம்எல்ஏ-க்களிடம் சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள சண்டையை மௌனமாக கவனித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘தினகரன் தரப்பினர் அளிக்கும் பரிந்துரைகளை முதல்வர் அலுவலகம் ஏற்பதில்லை.' குடும்பச் சண்டையில் அவர்களே அழிந்து போவார்கள். நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை' என்பதுதான் முதல்வரின் மனநிலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். திகார் சிறையில் இருந்து வெளிவந்த அன்று, 'கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன்' என தினகரன் அறிவித்த தினத்தில் இருந்தே, மன்னார்குடி குடும்ப உறவுகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது. திவாகரனும் நடராசனு…
-
- 0 replies
- 377 views
-
-
பிணிகள் ஆன அணிகள்... அ.தி.மு.க. இணைப்பில் தொடர் சிக்கல்! விக்கிரமாதித்யனின் வேதாளக் கதையை விட சுவாரஸ்யமாய் நீள்கிறது அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்பு விவகாரம். இரு அணிகள் என்பதும்கூட கண்ணுக்குத் தெரிகிற பிளவு. இரு அணிகளுக்குள்ளும் தலா நான்கு பிளவுகள் உருவாகியிருப்பதுதான் உண்மை. இந்நாள் எம்.எல்.ஏ-க்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் அணி ஒன்று, 'கூவத்தூர் உறுதிமொழியைக் காப்பாற்ற வலியுறுத்தி கச்சை கட்டுகிறது'. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே அடிக்கடி அப்பாயின்ட்மென்ட் கேட்டு பல அதிர்ச்சிகளைத் தருகிறது இந்நாள் அமைச்சர்களில் ஓர் அணி. இந்த இரு அணியினரையும் தெற்றுப்பல் தெரியப் பேசி அனுப்பும் எடப்பாடி, இதில் எந்த அணியைச் சேர்ந்தவர் என்றே அடையாளம்…
-
- 0 replies
- 422 views
-
-
ஜெயலலிதாவுக்கு சோ எழுதிய கடிதம்! போயஸ் கார்டன் ஃபிளாஷ்பேக் மனிதர்கள் வாழ்வில் வீடு என்பது மனித உறவுகளுக்கு ஈடான ஓர் பந்தம். ரத்தமும் சதையுமாக மனிதர்கள் எப்படி உணர்வுபூர்வமானவர்களோ அப்படி செங்கற்களாலும் சிமென்டினால் கட்டப்பட்ட வீடுகளுக்கும் அந்த மனிதர்களோடு அவர்கள் வாழும் காலத்திலும் அதன்பின்னும் நெருக்கமான ஒரு பந்தம் இருப்பதுண்டு. போயஸ்கார்டனில் 81, இலக்கமிட்ட வேதா இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகளைப் பார்த்த இல்லம். இளமைக்காலம் துவங்கி அவரது இறப்பின் இறுதிநிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டதட்ட அரை நுாற்றாண்டு. 'அவரது அழுகையை ஆறுதல்படுத்தியிருக்கிறது.’ ‘தனிமையை தட்டிக்கொடுத்து மறக்கச்செய்திருக…
-
- 0 replies
- 840 views
-
-
கீழடியின் அகழாய்வு நடைபெறும் இடம் | கோப்புப் படம் சிவகங்கை கீழடியில் அகழாய்வு பணி மேற்கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டது, அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்பட்டது போன்றவை தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: "மதுரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழமையான 5300 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. அதே நேரத்தில் சுமார் ஒரு ஏக்கர் அளவிலேயே ஆய்வுகள் நடத்தப…
-
- 1 reply
- 468 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்பில் லஞ்ச பேரமா? வீடியோ குறித்து விசாரணை கோருகிறது திமுக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரிடம் லஞ்ச பேரம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை வேண்டும் என திமுக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. படத்தின் காப்புரிமைFACEBOOK: M.K.STALIN அத்தோடு ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த, பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கையும் முன்னதாகவே விசாரிக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளதாக அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில், பொறு…
-
- 0 replies
- 399 views
-