தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை ஜூன் 23-ம் தேதி - தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மட்டுமல்ல; தமிழக அரசியல் வரலாற்றிலும் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க முக்கியமான நாள். அரசியல் ஜனநாயக மாண்பை ஆளும் அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் ஒருசேரக் காப்பாற்றி, தமது உன்னதக் கடமையை ஒருசேர ஆற்றியிருந்தன. செய்த தவறுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதும், பரந்த மனதோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதை ஏற்றுக்கொண்டதும் அரசியல் ஆச்சர்யங்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் பேரவைக்குள் இருந்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்குமா என்பது ஐயமே. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இன்று முதலமைச்சர் நாற்கால…
-
- 0 replies
- 598 views
-
-
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive சென்னையில் நடந்த தளவாய்சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் வருவதையறிந்த டி.டி.வி.தினகரன், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இது, கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தள…
-
- 0 replies
- 291 views
-
-
தினகரன் அணியுடன் மோதல் முற்றுகிறது: வாரிசு அரசியலை சசிகலா உருவாக்கியதை ஏற்க மாட்டோம் - முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் திட்டவட்டம் நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் வெற்றிவேல் எம்எல்ஏ ஆகியோரின் செயல்பாடுகளைக் கண்டித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் | படம்: ம.பிரபு வாரிசு அரசியலை சசிகலா உருவாக் கியதை நாங்கள் ஏற்கவில்லை. எனவேதான் நாங்கள் புறக்கணிக் கிறோம் என்று அதிமுகவில் முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி - தினகரன் இடையில் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. முன்னாள்…
-
- 0 replies
- 257 views
-
-
‘பொதுச் செயலாளர் நானா? தினகரனா?’ - சிறையில் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘கட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறது?’ என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் வலம் வருகிறது. ‘தினகரனின் செயல்பாடுகளால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் சசிகலா. ‘இனியும் தினகரனுக்காக அணி திரட்டும் வேலைகளைத் தொடங்கினால், விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்' என நிர்வாகிகளிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். ‘பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை, கட்சிப் பதவியில் இருந்து யாராலும் நீக்க முடியாது. கட்சியின் தலைமைப் பத…
-
- 0 replies
- 390 views
-
-
மிஸ்டர் கழுகு: சசிகலா ரெவியூ! ரிலீஸ்? ‘‘தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சியே இல்லை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரக் கையேடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘ஆமாம்! ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் என்று பலரும் சூடாக அறிக்கை விட்டிருக்கிறார்களே!’’ ‘‘தொழில் வளர்ச்சி மட்டுமில்லை... எதுவுமே தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஆதங்கம். மத்திய அரசோடு போராட வேண்டியிருக்கும் நீட் தேர்வு போன்ற விவகாரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். சாதாரணமாக நடக்க வேண்டிய விஷயங்கள்கூட நடப்பதில்லை. எய்ம்ஸ் இடத் தேர்வு, ஸ்மார்ட் சிட்டிக்கான நடைமுறைகள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் எனப் பல விஷயங்களை அவர்கள் சுட்டிக் க…
-
- 0 replies
- 1.4k views
-
-
சசிகலாவின் பலவீனம் & சரிவுக்கான உண்மை பின்னணி! | Socio Talk
-
- 0 replies
- 511 views
-
-
சிறுதாவூர் பங்களாவில் கொல்லப்பட்டது யார்?! - சொத்து வில்லங்கத்தின் அடுத்தகட்டம் #VikatanExclusive ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நேற்று கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஜெயலலிதா பங்களாவின் உள்புறத்தில் காவல் காக்கும் செக்யூரிட்டி போலத்தான் தெரிகிறது. சொத்து விவகாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம்' என்கின்றனர் அப்பகுதி மக்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களாக்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுதாவூருக்கு முக்கிய இடம் உண்டு. அவர் இருந்தவரையில், பங்களாவைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் காவல் காத்து வந்தனர். அவர் இறந்த பிறகு, போயஸ் கார்டன், சிறுதாவூர், கொடநா…
-
- 0 replies
- 499 views
-
-
ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சனம்: அதிமுகவில் வலுக்கும் மோதலால் குழப்பம் கோப்புப் படம் அதிமுகவின் 3 அணிகளை சார்ந் தவர்களும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி விமர்சித்து வருவதால் கட்சிக்குள் மோதல் முற்றி யுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனி சாமி ஆகியோரின் தலைமையில் எம்எல்ஏக்களும், கட்சி நிர்வாகி களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், டெல்லி திஹார் சிறையில் இருந்து வந்தபிறகு தனியாக செயல்படத் தொடங்கியுள்ளார். அவருக்கும் சில எம்.பி., எம…
-
- 0 replies
- 447 views
-
-
‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்!’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிறுத்தி அ.தி.மு.கவுக்குள் நடந்து வந்த மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. 'பா.ஜ.கவுக்கு விசுவாசம் காட்டுவதில், கட்சியின் மூன்று அணிகளுக்குள்ளும் போட்டி நிலவியது. 'இப்போது கட்சிக்குள் யாருக்கு செல்வாக்கு'? என்ற மோதல் வலுப்பெற்று வருகிறது. 'கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்' எனத் தொண்டர்கள் மத்தியில் வெளிக்காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் அ.தி.மு.கவினர். பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலாவை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அங்கு, 'குடியரசுத் தலைவர்…
-
- 0 replies
- 446 views
-
-
'கோடிக்கணக்கில் பேரம் பேசியது உண்மைதான்' அ.தி.மு.க எம்எல்ஏ ஒப்புதல்! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்று மூன்று அணிகளாகத் தற்போது அ.தி.மு.க இயங்கி வருகிறது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, கூவத்தூரிலிருந்த அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் கோடிகளில் பேரம் பேசிய வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், ஆளுநரிடமும் புகார் அள…
-
- 0 replies
- 420 views
-
-
“இதுதான் கரெக்ட் டைம்!” - ரஜினிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் பிரமுகர்கள் “நான் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்” என்று டயலாக் பேசிய ரஜினியிடம், ‘அரசியலில் கால் பதிக்க இதுதான் கரெக்ட் டைம்’ என வரிசையாகச் சென்று ‘நேரம்’ குறித்துவிட்டு வருகிறார்கள் சில பிரபலங்கள். ரசிகர்கள் சந்திப்பு, சஸ்பென்ஸ் பேச்சு என ரஜினி மீண்டும் ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியது முதலே, அரசியல் பிரமுகர்களும் திரையுலக நண்பர்களும் ரஜினியுடன் தனிப்பட்ட முறையில் சந்திப்பை நடத்தி வருகின்றனர். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்தான் இந்தச் சந்திப்புகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர். “50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் பிடியிலிருக்கும் தமிழகத்தை மீட்க, ரஜினி அரசியலுக்கு வரவேண…
-
- 0 replies
- 612 views
-
-
“நான் என்ன தப்பு செய்தேன்னு சின்னம்மா கேட்டாங்க!” பூரிப்பில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-வில் எடப்பாடி கோஷ்டியில் எத்தனை பேர் தினகரன் பக்கம் இருக்கிறார்கள், எத்தனை பேர் எடப்பாடிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், எத்தனை பேர் நடுநிலை வகிக்கிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை தினகரனுடன் திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள் ஐந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அரூர் எம்.எல்.ஏ முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி, ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்ரமணி ஆகியோரே அவர்கள். இந்த ஐந்து…
-
- 0 replies
- 961 views
-
-
வேகம் எடுக்கும் ‘ஃபெரா’... அச்சத்தில் சசிகலா! வழக்குகள்... வாய்தாக்கள்... தண்டனைகள்... சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் புதிதல்ல. அப்படித் தொடங்கி, 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்புதான், சசிகலாவைச் சிறைக்கு அனுப்பியது. அதைப் போல 22 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சிக்கலான அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள், வெட்டுக்கிளிகளைப் போல் மொத்தமாகக் கிளம்பி சசிகலா குடும்பத்தை அலைகழிக்கத் தொடங்கி உள்ளன. இதனால் அச்சத்தில் இருக்கிறார் சசிகலா. ஜெ.ஜெ டி.வி, சசிகலா, தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் மீது 1995-96 காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ‘ஃபெரா’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 …
-
- 0 replies
- 910 views
-
-
ரஜினிகாந்த் மீது சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கடும் விமர்சனம் படத்தின் காப்புரிமைMONEY SHARMA நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டுவரும் நிலையில், அவரைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான கருத்துகளை பா.ஜ.க. தலைர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, "காமராஜரின் படிப்பறிவின்மையை ஆர்கே 420 (ரஜினிகாந்த்)யோடு ஒப்பிட முடியாது. காமராஜர் அரசியல் தொண்டராக இருந்து முதலமைச்சராக உயர்ந்தவர். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர்" என்று கூறியிருக்கிறார். படத்தின் காப்புரிமைTW…
-
- 0 replies
- 307 views
-
-
வீடுவரை இருந்த ஜெயாவின் உறவுகள் எல்லாம் வீதி வரை வந்து சந்தி சிரிக்க வைத்த காட்சிகள் ஜூன் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறும் ஆட்டத்தை காண தமிழ்நாடே ஆவலாகக் காத்திருந்தது. ஆனால் அதைவிட விறுவிறுப்பான ஆட்டத்தைத் தமிழகம் கண்டு பரவசமடைந்தது. அதுதான் தீபா – தீபக்– ராஜா – மாதவன் ஆகியோர் இணைந்து போயஸ் தோட்டத்தில் நடத்திய கரகாட்டம். என்ன நடந்தது? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயதீபா முற்றுகை என்று வந்த செய்தியைப் பல பத்திரிகையாளர்கள் கூட நம்பவில்லை. பேபியம்மாவாவது காலையில் எந்திருச்சு வர்றதாவது என்று…
-
- 0 replies
- 862 views
-
-
மிஸ்டர் கழுகு: “ஆளுங்கட்சியும் நானே... எதிர்க்கட்சியும் நானே!” - தினகரன் டபுள் ரோல் ‘‘இப்போது அ.தி.மு.க ஆட்சிக்குத் தினகரன்தான் ஹீரோ... வில்லனும் அவரே...” என்றபடியே நம்முன் வந்து குதித்தார் கழுகார். ‘‘இரண்டு வேஷங்களையும் ஒரே நேரத்தில் கட்ட முடியுமா?” என்ற கேள்வியைப் போட்டோம். ‘‘பொருத்தமாக அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்து விட்டார் தினகரன் என்றே சொல்கிறார்கள். இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதும் தினகரன்தான், கவிழ்க்கப் போவதும் தினகரன்தான் என்பதே ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேச்சு. ‘ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை, பொதுச்செயலாளர் முடிவு செய்து அறிவிப்பார்’ என்றார் தினகரன். அதற்குள் முந்திக்கொண்டு, ‘பி.ஜே.பி-க்கு ஆதரவு’ என்று எடப்பா…
-
- 0 replies
- 1.1k views
-
-
டெல்லியில் ஒரே நேரத்தில் அதிமுக அணிகள் முகாம் - கட்சி எங்களிடம்தான் இருக்கிறது: ஓபிஎஸ் கோப்புப் படம் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மனுத்தாக்கலில், அதிமுக இரு அணிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதே நேரம், ‘‘அதிமுகவில் பிளவு இல்லை. ஒன்றாக அதுவும் எங்களிடம்தான் இருக்கிறது’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டுக் கொண்டார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, …
-
- 0 replies
- 230 views
-
-
லைகா நிறுவனம் குறித்து பொது இடங்களில் பேச வேல்முருகனுக்குத் தடை! இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார். அப்போது, 'இலங்கை அதிபர் மைத்திரி பாலா சிறிசேனாவைச் சந்தித்து, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன்' என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதனிடையே, 'ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது' என்று சீமான், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்…
-
- 0 replies
- 489 views
-
-
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு டிடிவி.தினகரன் ஆதரவு ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. அறிவித்துள்ள வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஒருமனதாக ஆதரவு அளிக்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி நேற்று முன் தினம் அறிவித்தார். இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட…
-
- 0 replies
- 306 views
-
-
'நண்பர்களுடன் அரசியல் குறித்து பேசினேன்'... ரஜினி பரபர பேட்டி! அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்துவருவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகின்றன. மேலும், தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் என்று அரசியல் கட்சித் தலைவர்களை அவர் தொடர்ந்து சந்தித்து வருகிறார். இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினியிடம், அரசியல் பிரவேசம் மற்றும்…
-
- 0 replies
- 486 views
-
-
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் நரேந்திர மோடியுடன் வென்று நாடாளுமன்றத்துக்குள் சென்ற 543 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 39 பேர். மோடி ஆட்சியின் மூன்றாண்டு கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நம் எம்.பி-க்களும் நாடாளுமன்றத்துக்குள் சென்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அங்கே, அவர்களின் பெர்ஃபாமென்ஸ் எப்படி, அரையாண்டுப் பரீட்சையில் அவர்கள் வாங்கிய மார்க் என்ன? 2014 ஜூன் 4-ம் தேதிதான் 16-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஆரம்பமானது. அன்றுமுதல் இன்றுவரையில் 11 கூட்டத் தொடர்கள் நடைபெற்றிருக்கின்…
-
- 0 replies
- 880 views
-
-
`என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்': ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயஸ் கோரிக்கை சிறையில் இருந்து விடுதலை கிடைக்காது என்ற நிலையில், தன்னைக் கருணைக் கொலை செய்து, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுமாறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைAFP Image captionராஜீ்வ் காந்தி இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், 2014-ஆம் ஆண்டில் தங்களது விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் எடுத்த முடிவை எல்லா அரசியல் தலைவர்களும் ஆதரித்ததாகவும் நீதிமன்றங்களும் அதனைப் பரிந்துரைத்ததாக…
-
- 2 replies
- 630 views
-
-
தினகரனைக் கட்டம் கட்டும் சசிகலா குடும்பம்! - கொதிப்பைக் கூட்டிய சிறை சந்திப்புகள் ' அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் துணைப் பொதுச் செயலாளரான எனக்கு உண்டு' என தினகரன் அறிவித்திருப்பதன் மூலம், கட்சிக்குள்ளும் சசிகலா குடும்பத்துக்குள்ளும் ஒரே நேரத்தில் புகைச்சல் கிளம்பியுள்ளது. ' எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் வேலைகளில் திவாகரன் ஈடுபட்டு வருகிறார். தினகரனை ஓரம்கட்டும் வேலைகள் தீவிரமடைந்ததால், தனக்கான கட்சி அதிகாரத்தை முன்னிலைப்படுத்துகிறார் தினகரன்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று சசிகலாவை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அவருக்கு அடுத்து, தினகரனும்…
-
- 0 replies
- 459 views
-
-
-
மிஸ்டர் கழுகு: எடப்பாடிக்கு தினகரன் கெடு... ரஜினிக்கு அமித் ஷா கெடு! ‘‘தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் போயஸ் கார்டன் மாறப் போகிறது” என்றபடியே கழுகார் வந்தார். ‘‘வேதா நிலையத்தில் புதிதாக யாராவது வரப் போகிறார்களா?” என்றோம். “போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ மட்டும் இல்லை. ரஜினிகாந்தின் ‘பிருந்தாவனம்’ இல்லமும் இருக்கிறது” என்று சிரித்தபடியே கழுகார் பேச ஆரம்பித்தார். ‘‘ரஜினியின் பிருந்தாவனத்தின் ஆதரவைப் பெற பல கட்சிகள், பல சக்திகள், பல ஆண்டுகளாக, பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன அல்லவா? அைத வைத்துச் சொல்கிறேன். தினமும் ஏதாவது ஒரு பிரமுகரை ரஜினி சந்தித்து வருகிறார். இவை அனைத்தும் அவரது அரசியல் ஆர்வத்த…
-
- 0 replies
- 740 views
-