Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% தமிழகத்தில், ஆளும் கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருவதால், விரைவில், சட்டசபை தேர்தல் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அதே கருத்தை தெரிவித்திருப்பதால், முதல்வர்…

  2. '50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்' சா. பீட்டர் அல்போன்ஸ்மூத்த காங்கிரஸ் தலைவர் திராவிட இயக்கம் புறம் தந்த, சமகால அரசியல் கட்சிகளின் அசலான வடிவங்களையும் கடந்த காலத்தின் வரலாற்றில் புதைந்துபோன அதன் உருவகங்களையும் உள்வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இது. இன்றைய இந்தியாவின் பொருளாதார அரசியல் சமூக பரிணாமங்களைச் செதுக்கிய பெருமை நான்கு இயக்கங்களுக்கு உண்டு. தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், சோஷலிஸ்ட் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் என்ற இந்த நான்கு இயக்கங்கள்தான் சமகால இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தந்தையும் தாயுமாக இருந்தவை. பொதுவுடமைவாதிகள், சோஷலிஸ்டுகள்…

  3. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்... தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க எடப்பாடி அரசு அதிரடி முடிவு? தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன. இந்த கடைகளை குடியிருப்புகளில் திறக்க அரசு முடிவு செய்தது.ஆனால் தமிழகம் முழுவதும் குடியிருப்புகளில் மதுபான கடைகளைத் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் கடைகள் தீ வைத்தும் எரிக்கப்பட்டுள்ளன.கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்…

  4. சசிகலா தரப்பு அனுமதி பெற்று கோடநாடு பங்களாவில் அதிகாரிகள் சோதனை: அதிநவீன சென்ஸார் கதவுகள் அகற்றம்? கோப்புப் படம்: ரோஹன் பிரேம்குமார் கோடநாடு பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த அதிநவீன சென்ஸார் கதவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொள்ளை குறித்து 4 மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்த பங்களாவில் கோவை சரக டிஐஜி தீபக் எம் தமோர் மற்றும் நீலகிரி எஸ்பி முரளிரம்பா தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா தரப்பினரிடம் அனுமதி பெற்ற பின் இந்த சோதனை நடைபெற்றத…

  5. மிஸ்டர் கழுகு: ஒடிஷா டு சேலம்... எடப்பாடிக்கு பிடி இறுகுகிறது! ‘‘கொடைக்கானல் வரை பயணம் போயிருந்தேன்’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘ஓ.பன்னீர்செல்வம் பயணம் தொடங்கிவிட்டாரே?” என்றோம். ‘‘ஆம்! பன்னீர் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிவிட்டார். இனி இரண்டு அணிகளின் இணைப்பும் இருக்காது என்பதுதான் இன்றைய நிலவரம்!” என்றபடி கழுகார் செய்திகளைக் கொட்டத் தொடங்கினார். ‘‘இனிமேல் தனி ஆவர்த்தனம்தான் என்ற முடிவுக்கு பன்னீர் வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். அ.தி.மு.க இரு அணிகளையும் இணைக்கும் பேச்சு வார்த்தைக்கு இரு அணிகள் சார்பிலும் 7 பேர் கொண்ட குழுக்களை அமைத்தனர். அந்தக் குழுக்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்னரே, ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விச…

  6. பெங்களூருவில் நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கணவனை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹம்சா என்ற பெண் தனது கணவர் சாய்ராமுடன் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று ஹம்சா தனது கணவர் சாய்ராமை காரின் உள்ளே இருந்த போது, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். உயிர் தப்பி, காரின் கதவைத் திறந்து வெளியே குதித்த சாய்ராம், அவ்வழியே சென்ற பேருந்தில் தாவிக்குதித்து ஏறினார். இருப்பினும் காரை எடுத்துக் கொண்டு விடாமல் கணவரை துரத்தி, துரத்தி துப்பாக்கியால் சுட முயற்சித்தார். இதையடுத்து, பேருந்தை நிறுத்திய பயணிகள், அப்பெண்ணிடம் இருந்து கணவரைக் காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனு…

  7. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் தயக்கம் ஏன்? இம்மாதம் இரண்டு மாநிலங்களில், இடைத் தேர்தலை அறிவித்த, தலைமை தேர்தல் கமிஷன், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியை கண்டுகொள்ளவில்லை. ஜெ., மறைவு காரணமாக, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. ஆறு மாதங்களுக்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், மார்ச்சில் தேர்தலை அறிவித்தது. தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில் போட்டி யிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்தார். ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. அதன்…

  8. காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? ஓர் அதிர்ச்சிப் பயணம் (வீடியோ தொடர்) #Cauvery #Hogenakkal காவிரிதான் நம் வாழ்வாதாரம்... காவிரிதான் நம் வாழ்வு... இந்தக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள். இதில், காவிரி வறட்சிப்பற்றிப் பேசி இருப்போம். இதில், கடைசிக் காட்சியில், '‘காவிரி வறண்டுருச்சு.. இப்ப என்ன செய்யப்போறோம்னு..’' கேள்வி எழுப்பி முடிக்கிறபோது, கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வதுபோலக் காட்சிவரும். அது, திட்டமிட்டுப் படம்பிடித்தது இல்லை. ஆனால், அந்தக் காட்சி ஒரு குறியீடாக... மாபெரும் இடம்பெயர்வைக் குறிப்பிடுவது மாதிரி அமைந்தது. பறவைகள் சுலபமாக இடம்பெயரலாம்... ஏனெனில், அவைகள் விதைப்பதும் இல்லை... அறுப்பதும் இல்லை…

  9. போயஸ்கார்டனின் நிலை... காஸ்மோ பாய்ஸ்... எங்கே செல்கிறார் கரன் சின்ஹா..? #NewsChat போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்க ஆளில்லை... போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்கக்கூட யாருமில்லையாம்! இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? ஜெயலலிதாவின் உதவியாளர்கள் விழிபிதுங்கி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புவரை, போயஸ்கார்டன் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அங்கு கட்சியின் வி.ஐ.பி-க்கள் வரவே பயப்படுகிறார்கள். குறிப்பாக, சசிகலா குடும்பத்தினர் வரத் தயங்குகிறார்கள். காரணம்..ஜெயலலிதாவின் ஆவி இங்கே நடமாடுகிறது என்ற வதந்தி பரவியது தான். மாடியில் உள்ள ஜெயலலிதா, அறை பூட்டப்பட்டு கிடக்கிறது. ஜெயலலிதா ஆசையாக …

  10. தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம் இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் இன்று காலை விரட்டியடிக்கப்பட்டது. தற்போது இதற்கான காரணத்தை இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத சீனக்கப்பல் ஒன்று மர்மமான முறையில் இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்றது. தமிழகம் வழியாக நுழைய முயன்ற இக்கப்பலை இந்தியக் கடலோரக் காவல்படையினர் விரட்டியடித்துள்ளனர். அடையாளம் தெரியாத சீனக் கப்பல் மீது இந்தியப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்து சீனக்கப்பல் விரட்டப்பட்டுள்ளது. இது குறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் இ…

  11. சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள் கொடநாடு எஸ்டேட்டைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நடக்கும் மர்மக் காட்சிகளால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் அ.தி.மு.கவினர். ‘பங்களாவுக்கு ஆடி காரில் பலர் வந்து செல்கிறார்கள். சசிகலா, இளவரசி பெயரில் இருந்த நிலங்களை ரகசியமாக வேறு பெயர்களுக்கு மாற்றி வருகின்றனர். ‘எங்களுக்கு எதாவது நடந்துவிடுமோ?’ என தினம் தினம் அச்சத்தில் வேலை பார்த்து வருகிறோம்’ என்கின்றனர் ஆயுதப்படைக் காவலர்கள். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா சர்ச்சையில் அடிபட்டது. ‘வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான பணத்தைக் கண்டெய்னரில் எடுத்துச் செ…

  12. ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்... மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்... ரொம்ப பிஸி வைகோ! தலைவர்களின் கேம் பிளான்எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் மேய்ப்பர் இல்லாத மந்தைபோல பிரிவதா சேர்வதா... எனத் திக்குத்திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க. தி.மு.க முழுக்கவும் கிட்டத்தட்ட ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், அவருடைய ஜென்டில்மேன் அப்ரோச் தி.மு.க.வினருக்கே பிடிப்பதில்லை. உடல்நலமில்லாத விஜயகாந்தைப்போலவே தே.மு.தி.க-வும் பலவீனமாகிவிட்டது. வைகோ சிறையில் இருக்கிறார். மக்கள் நலக் கூட்டணிக் கனவுகளை எல்லாம் அழித்துவிட்டு, மீண்டும் அறிவாலயத்துக்கே திரும்பிவிடும் மனநிலையில் கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலை சிறுத்தைகளும்! இந்தக் குழப்பங்களுக்குள் முத்…

  13. கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை? கோவை:கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, சிறையிலுள்ள சசிகலாவிடம், தமிழக போலீசாரால் விரைவில் விசாரணை நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவை சிறையில் தள்ளி, அவரை மரணம் வரை கொண்டு சேர்த்ததில், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு முக்கியப் பங்குண்டு. அந்த சொத்துக்களின் பட்டியலில், மிக முக்கிய இடம் பிடித்தது, கோடநாடு எஸ்டேட். சொத்து குவிப்புப் பட்டியலில், இந்த எஸ்டேட்டின் பரப்பு, 900 ஏக்கர் என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின், இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கீழ், பல நுாறு ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. …

  14. தச்சர் சஜீவனின் பேட்டியால் ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி கோவை:கோடநாடு பங்களாவில் தச்சு வேலை பார்த்த சஜீவன் அளித்த பேட்டி, ஆளுங்கட்சியி னர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொல்லப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்தது; இதில், மற்றொரு காவலாளியும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப் படும் குற்றவாளிகள் பலர், கேரளாவைச் சேர்ந் தவர்கள் என்பதால், கோடநாடு எஸ்டேட் பங்க ளாவிற்கு மர வேலைகள் செய்த, கேரளாவைச் சேர்ந்த சஜீவன், 40, மீதும் சந்தேகம் எழுந்தது. இதற்கேற்ப, இந்த சம்பவங்களின் போது, அவர் துபாய் சென்றிருந்தார். துபாயி…

  15. தமிழ்நாட்டின் `தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்` தி.மு.க. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்டு 1967. இப்போது - 2017 - அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலத்தையும் சேர்த்து, திராவிட இயக்கத்தின் ஐம்பதாண்டு கால ஆட்சி என குறிப்பிடப்படுகிறது. படத்தின் காப்புரிமைARUNSUBASUNDARAM Image captionஇந்தி எதிர்ப்புப் போராட்டம் உண்மையில் திராவிட இயக்கத்தின் சாதனைகளைச் சொல்ல வேண்டுமென்றால் நீதிக்கட்சிக் காலத்தில் இருந்துதானே சொல்ல வேண்டும். திராவிட இயக்க ஆட்சிகளின் சாதனையைச் சொல்லும்போது இரு பிரிவுகளாக பிரித்துக்கொள்ளலாம்: முதல் பகுப்பில் நீதிக்கட்சி 17 ஆண்டுகளும் தி.மு.க. 21 ஆண்டுகளும் ஆட்சி செய்திருக்கும். …

  16. கொடநாடு விவகாரத்தில் முன்னாள் மந்திரி,முக்கியப் பிரமுகர்களும் சிக்குகிறார்கள்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொலை, கொள்ளை நடந்தது. எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார், பங்களாவில் கொள்ளையும் போயிருந்தது. கொலை-கொள்ளையில் பலர் சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையர்கள் தாக்குதலில் காயங்களுடன் உயிர்தப்பிய காவலாளி கிருஷ்ண பகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் சிக்கினர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கனகராஜின் கூட்டாளி சயன், ஹவாலா மோசடி ஆசாமியும் சாமியாருமான மனோஜ் மற்றும் சந்தோஷ், தீபு, சதீ‌ஷன், உதயகுமார், ஜிபின் ஜோய், ஜம்சீர் அலி, குட்டி என்ற ஜிஜின், சாமி என்ற …

  17. கோடநாட்டில் பதற்றம் தணிக்க ஜெ.,க்கு 'ஆத்ம சாந்தி' பூஜை ஊட்டி:முன்னாள் முதல்வர் ஜெ., இறந்த பின், அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களை அடுத்து, கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 'ஆத்ம சாந்தி' பூஜை நடத்த, நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த, 1991 - 96ல் ஜெ., முதல்வராக இருந்த போது, கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டது. 2001ம் ஆண்டுக்கு பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், அரசியலில், 'பிசி'யான ஜெ., சில முறை மட்டுமே வந்து சென்றாலும், அங்கு தங்கியதில்லை. 2006ல், அங்கு நடந்த பிரம்மாண்ட பூஜைகளுக்கு பின், எஸ்டேட் பழைய பங்களாவில் அடிக்கடி தங்கி வந்தார். அங்குள்ள இயற்கை சூழல் அவரை கவர்ந்த …

  18. வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராக சசிக்கு அனுமதி சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராகலாம் என, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. ஜெஜெ, 'டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதிகளை ஏற்படுத்தியதிலும், கருவிகளை வாடகைக்கு எடுத்தல் மற்றும் வெளிநாடுகளில், சட்ட விரோதமாக பணம் முதலீடு செய்ததிலும், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, சசிகலா, அவரது அக்கா மகன்கள் தினகரன் மற்றும் பாஸ்கரன் மீது1990 ல், அமலாக்கப்பிரிவு வழக்குகளை தொடர்ந்தது. இந்த வழக்குகள், சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1 மற்றும், 2ல் நடந்து வருகிறது. இரட…

  19. அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அமைச்சருக்கு சொந்தமான குவாரி, கல்வி நிறுவனங்களில் நடந்த வரி ஏய்ப்புகள் குறித்தும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த, 89 கோடி ரூபாய் வினியோகம் குறித்தும், அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, வருமான வரித்துறை ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்த, சுகாதாரத்துறை அமைச்சர், விஜய பாஸ்கரின் வீடுகளில்,ஏப்., 7ல், திடீர் சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது சொந்த வீடு, அவர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள், குவாரி என, 37 இடங்களில் சோதனை நடந்தது. த…

  20. கோடநாடு கொலையில் அறிவியல் ஆதாரம் சேகரிப்பு spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% கோவை:''கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணைக்கு தேவையான அறிவியல் பூர்வமான ஆதாரங்களைச் சேகரித்துள்…

    • 1 reply
    • 495 views
  21. கன்டெய்னர் லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடி ஜெ.,பங்களாவிலிருந்து கடத்தியதாக சந்தேகம்! மர்மங்கள் நிறைந்த கோடநாடு கொலையில், தோண்டத் தோண்ட புது, புது தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. கடந்தாண்டு, தமிழக சட்டசபை தேர்தலின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, திருப்பூரில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் குறித்த சந்தேகம், போலீஸ் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. அம்பலம் திருப்பூர் அருகே, 2016, மே 13ல், வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளில், 570 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். பணத்துக்கு பாதுகாப்பாக காரில் வந்த நபர்கள், 'இந்த பண…

  22. சொத்துகுவிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா உள்ளிட்டோர் மறுசீராய்வு மனு தாக்கல் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். புதுடெல்லி: அ.தி.மு.க (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்ற விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்…

  23. கொடநாடு... கொலை நாடு - முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்! ஜூ.வி லென்ஸ் ஜெயலலிதா மரணத்தின் மர்மமே விலகாத நிலையில், கொள்ளை, கொலை, விபத்துகள் என கொடநாடு பங்களா மர்மம் கூடிக்கொண்டே போகிறது. கொடநாடு எஸ்டேட் பங்களா, உச்சபட்சப் பாதுகாப்பு கொண்டது. எஸ்டேட் உரிமையாளர் ஜெயலலிதா இறந்துவிட்டார். அதற்கு உரிமை கொண்டாடிய இருவர் சிறைக்குப் போய்விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், கொடநாடு பங்களா காவலாளி கொல்லப்பட்டு கொள்ளையும் அரங்கேறியது. ஆனால், ‘கொள்ளை போனது என்ன?’ என்பது பற்றி விவரம் வெளியாகவில்லை. இதற்கிடையே கொலை, கொள்ளையில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இருவர் திடீரென அடுத்தடுத்து விபத்துகளில் சிக்குகிறார்கள். அதில் ஒருவர் ம…

  24. “ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்... கூவத்தூர் கதை... ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!” #NewsChat ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்! * ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் சென்னைப் போலீஸ் கமிஷனர் மற்றும் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த ஜார்ஜ், வட சென்னை கூடுதல் கமிஷனர் சாரங்கன், வட சென்னை இணை கமிஷனர் நிர்மல் குமார் ஜோஷி, புதுவண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் உள்ளிட்ட 22 அதிகாரிகள் மீது எதிர்க்கட்சியினர் புகார் கிளப்பினர். அதையடுத்து, அவர்களைக் கூண்டோடு மாற்றியது தேர்தல் கமிஷன். கடந்த இரண்டு வாரங்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் நின்றுபோன மறுநாளே இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கியிருக்கவேண்டும். ஆ…

  25. அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா? அமைச்சர் காமராஜுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் சாட்டையடி 'நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை' என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 'அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா' என்று கண்டனம் தெரிவித்தது. எஸ்.வி.எஸ்.குமார் என்ற ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடிசெய்ததாக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவுசெய்யுமாறு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது. அதன்படி, வழக்கு உச்சநீதிமன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.