தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
மிஸ்டர் கழுகு: உளவுத்துறைக்கு வரத் தயங்கும் உயர் அதிகாரிகள்! கழுகார் காட்சியளித்ததும், ‘‘உள்ளாட்சித் தேர்தல் வருமா?’’ என்று கேள்வியை வீசினோம். ‘‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அனல் பறக்கப் போகிறது. உள்ளாட்சித் தேர்தலா இப்போது முக்கியம்?’’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டவர், ‘‘நீர் நல்லாத்தான் தலைப்பு போட்டீர். ‘121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ’ என்று! அதுதான் இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது’’ என்ற பீடிகையுடன் தொடங்கினார் கழுகார். ‘‘அப்படியா?’’ ‘‘ஆட்சிக் கவிழ்ப்பு பூச்சாண்டியை சில அமைச்சர்களே இப்போது காட்டிவருகிறார்கள். இதனால், எடப்பாடி பழனிசாமி தன் முதல்வர் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என நினைக்க ஆரம்பித்துவிட்டார். வரிசையாக சில விஷயங்களைச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெ.,வுக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பை விலக்கியது யார்? கேள்விகளால் நிலை குலையும் மத்திய உள்துறை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எண்ணற்ற மர்மங்கள் புதைந்து கிடப்பதாக, அக்கட்சியின் முன்ணணி பிரமுகர்கள் நாள்தோறும், ஊடகங்கள் வாயிலாக, தங்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்தான், முதன் முதலில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பூதம் கிளப்பினார். லேட்டஸ்ட்டாக அவர் எழுப்பி இருக்கும் சந்தேகம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பூனைப் படை பாதுகாப்பு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 75 நாட்களும் அந்த பக்கம் எட்டியே பார்க்காதது ஏன் என்பது குறித்துத்தான். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி…
-
- 0 replies
- 410 views
-
-
"நெடுவாசல்" போர்க்குரல், ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டட்டும்.. ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறார்கள் தமிழர்கள். ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால்... "நெடுவாசல்" நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது. தமிழகமே அதிமுக கோஷ்டிகளின் அடிதடி மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் சத்தம் போடாமல் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. தமிழர்களால் அதை முதலில் புரிந்து கொள்ளக் கூட முடியாத அவல நிலை. நெடுவாசல் மக்கள்தான் முதலில் தனித்துக் குரல் எழுப்பினர். அவர்களின் அவலக் குரல் மிகவும் தாமதமாகத்தான் தமிழகத்தின் பல பகுதிகளைத் தொட்டது. ஏ…
-
- 25 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 53 பேர் விடுதலை! தமிழக மீனவர்கள் 53 பேர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுவித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட 53 மீனவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கைச் சிறைகளில் மொத்தம் 85 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர், மீனவர் நலன் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வைக்கப்பட்டது. சமீபத்தில் இதுகுறித்து நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா - இலங்கை இரு நாடுகளும் த…
-
- 0 replies
- 347 views
-
-
தேர்தல் ஆணையத்துக்கு, சசிகலா அளித்த 70 பக்க அடடே விளக்கம் சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி பன்னீர்செல்வம் அணியினர் கொடுத்த புகார் மனுவுக்கு, சசிகலா இன்று தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். 70 பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பின்னர், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மவுன தியானம் செய்தார். சுமார் 40 நிமிட தியானத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம…
-
- 2 replies
- 565 views
-
-
ஜெ. மரணம்! மாநிலங்களவையில் கொந்தளித்த மைத்ரேயன்! குறுக்கிட்ட அதிமுக பெண் எம்.பி-க்குக் குட்டு ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி மைத்ரேயன் ஆவேசத்துடன் பேசினார். அப்போது, அ.தி.மு.க பெண் எம்பி விஜிலா தொடர்ந்து குறுக்கிட்டதால் கோபம் அடைந்த துணைத் தலைவர் குரியன், அவரைக் கண்டித்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் மைத்ரேயன், லெட்சுமணன், சசிகலா புஷ்பா ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் அருகே சென்று பதாகைகளை ஏந்தி, கூச்சல் போட்டனர். துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் அவர்களை இருக்கையில் சென்று அமரச் சொன்னார். அதன்பின்ன…
-
- 0 replies
- 342 views
-
-
சிறையில் மயங்கி விழுந்த இளவரசி! -உச்சகட்ட மோதலில் சசிகலா குடும்பம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, தினகரன் மட்டுமே சந்தித்துப் பேசிவருகிறார். ' ஆட்சி அதிகாரத்திற்குள் தினகரன் கோலோச்சுவதை சசிகலா உறவுகள் ரசிக்கவில்லை. அதன் விளைவாகவே சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை உறவுகள் புறக்கணிக்கின்றனர் ' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை சசிகலாவுக்கு விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களும் சிறைப்பட்டனர். அவர் சிறை சென்ற மறுநாளே முதலமைச்சகராக பதவியேற்றார் எடப்பாடி …
-
- 0 replies
- 463 views
-
-
கூடமாட்டார்கள் என்பதால் ரத்தானது முதல்வர் கூட்டம்! சேலம்:முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கு, எதிர்பார்த்த அளவு கூட்டம் வராது என,உளவுத் துறை எச்சரித்ததால், சேலத்தில் நாளை நடை பெறுவதாக இருந்த, ஜெ., பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் அணி சார்பில், மார்ச், 8ல் உண்ணாவிரதம், மார்ச், 12ல் பொதுக்கூட்டம் நடத்த, போலீசில் அனுமதி கோரி கடிதம் வழங்கினர். பழனிசாமி அணி சார்பில், மார்ச், 11ல் ஜெ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி போலீசில் கடிதம் கொடுக்கப்பட்டது. பன…
-
- 0 replies
- 427 views
-
-
தினகரனுக்கு எதிராக பழனிசாமி சதி? தி.மு.க., பரபரப்பு புகார் சென்னை:'முதல்வர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் போன்றோர், தினகரனிடம் தற்காலிகமாக அடகு வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., தலைமையை நிரந்தரமாக மீட்பது என்ற ரகசிய உடன்பாட்டுக்கு, ஏற்கனவே வந்து விட்டனர்' என, தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக, ஸ்டாலின் சார்பில், மன்னார்குடி எம்.எல்.ஏ., - டி.ஆர்.பி.ராஜா ராஜா வெளியிட்ட அறிக்கை: 28 கோடி ரூபாய்: குடியுரிமையில் பொய் சொல்லி, 'பெரா' என்ற, அன்னிய செலாவணி மோசட…
-
- 0 replies
- 451 views
-
-
‘தேர்தலில் வெற்றி கிடைக்குமா?’ - ஆர்.கே.நகரில் ஆராய்ந்த தீபா #VikatanExclusive 'சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்' என அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். 'இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால், பேரவைக்கு எப்படிப்பட்ட வரவேற்பை மக்கள் கொடுப்பார்கள் என வார்டு வாரியாக அலசி வருகிறார் தீபா. அவருடைய முயற்சிக்கு பன்னீர்செல்வம் அணியினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்' என்கின்றனர் தீபா பேரவை அமைப்பினர். அ.தி.மு.க அரசுக்கு மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இதனை மனதில் வைத்தே இத்தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்றார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'அம்மாவுக்குக் கிடைத்த வரவேற்ப…
-
- 1 reply
- 560 views
-
-
எங்கள் தலைவர் இவர்களில் எவருமே இல்லை! - இளைஞர்கள் ஆதரவு யாருக்கு? அதிரடி சர்வே முடிவுகள்விகடன் டீம்படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.ரமேஷ் கந்தசாமி, தே.சிலம்பரசன், அ.குரூஸ்தனம் `யாரோ... ஏதோ ஆட்சி செய்கிறார்கள், என்னமோ பண்ணட்டும்!' என விலகி நின்று அரசியலை வேடிக்கை பார்த்த காலம் இல்லை இது. `எங்களுக்கும் அரசியல் தெரியும். நாங்கள் போராடத் தயார். எதிர்த்து நிற்போம்' என நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார்கள் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுப் புரட்சி முதல் இப்போதைய நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் வரை அனைத்தையும் முன்னெடுத்து, அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுசெல்பவர்களும் இளைஞர்களே! அதேசமயம், `எல்லாவற்றுக்கும் நாங்களேதான் போராட வேண்டும் எனில், எங்களால் தே…
-
- 0 replies
- 1.6k views
-
-
திராவிட ஆட்சி 50 ஆண்டுகள் - காங்கிரஸ் தலையில் தேய்க்கப்பட்ட எலுமிச்சைப்பழம்! ப.திருமாவேலன் * தமிழகம் பெற்றதும் மற்றவர்கள் கற்றதும்! * தேசியக் கட்சிகள் இங்கு செல்வாக்கு இழந்தது ஏன்? * தமிழ் மண் அடைந்த மாற்றங்களும் ஏற்றங்களும் எவை? * தமிழக அரசியல் களத்தின் எதிர்காலம் எப்படி? சிறப்புக் கட்டுரைகள் உள்ளே சும்மா இருந்த சி.என்.அண்ணாதுரையை சி.சுப்பிரமணியம் தூண்டியதன் விளைவுதான், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டது. ‘‘முச்சந்தியில் நின்று முழங்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தவர்க்கு சட்டசபைக்குள் வருவதற்கு தைரியம் உண்டா?” என்று கேட்டார் சி.சுப்பிரமணியம். அதற்காகவே காத்திருந்த அண்ணா, அடுத்து நடந்த திருச்சி தி.மு.க ம…
-
- 0 replies
- 1.8k views
-
-
75 நாள்கள் எப்படி இருந்தார் ஜெயலலிதா? - மூன்று ரிப்போர்ட் முழு விவரம் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகச் சொல்லப்படும் விளக்கம், இன்னும் பல புதிய சந்தேகங்களை உருவாக்குமா? ஜெயலலிதா மரண விஷயத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கங்கள் அப்படியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘நர்ஸ்களோடு விளையாடினார்’, ‘காவிரிப் பிரச்னை குறித்து விவாதித்தார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘ஜெயலலிதா எப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’ என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி சொன்னார். ஆனால், ‘இவற்றில் எதுவுமே உண்மையில்லை’ என்பதை இப்போது அவர்கள் தந்திருக்கும் அறிக்கைகளே அம்பலப்படுத்தி இருக்கின்றன. ஜெயலலிதாவுக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
'ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இவ்வளவு ஆதரவா!?' - அதிர்ச்சியில் சசிகலா, திவாகரன் #VikatanExclusive ஓ.பி.எஸ். அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறையிலிருந்த சசிகலா, கட்சியினரை கண்டித்ததோடு சில கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார். சசிகலா Vs ஓபிஎஸ் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்விளைவு அ.தி.மு.க.வில் இரு அணிகள் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டதால் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி விட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்த எம்எல்…
-
- 0 replies
- 452 views
-
-
நடராஜன் குறித்து சேதுராமன் பகீர் தகவல்! உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் அதிர்ச்சி இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள்தான் சிஎம்; எங்களுக்கு ஒரு தலையணை போதும் என்று நடராஜன் தனது நெருக்கமானவர்களிடம் பேசியதாக அகில இந்திய முவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். உண்ணாவிரத மேடையில் இவ்வாறு அவர் பேசியது பன்னீர்செல்வத்தை அதிர்ச்சியடைய வைத்தது. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரத மேடையில்…
-
- 0 replies
- 325 views
-
-
சங்கர மடத்துக்கு ரகசியமாக வந்த டி.டி.வி.தினகரன் டி.டி.வி.தினகரன் அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தார். கட்சியினர் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக திடீரென வந்த அவர் 5 நிமிடம் மட்டுமே அங்கிருந்துவிட்டு திரும்பிச் சென்றார். சங்கரமடம் வந்த டி.டி.வி.தின கரனின் பயணம் மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டிருந்தது. கட்சியினருக்கோ, செய்தியாளர் களுக்கோ தகவல் தெரிவிக்கப் படவில்லை. இதுகுறித்து அறிந்த செய்தி யாளர்கள், போலீஸார் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: தினகரன் சங்கர மடம் வருவது எங்களுக்கே கடைசி நேரத்தில்தான் தெரிந்தது. அவர் மடத்துக்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தார். …
-
- 1 reply
- 869 views
-
-
'ஜூன் மாதம் முதல் ஆபரேஷன் தமிழ்நாடு!’ - அ.தி.மு.க-வை அலறவிடும் மோடி வியூகம்! உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில், இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டை நோக்கி பா.ஜ.க-வின் கவனம் திரும்பும். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலைச் சற்று தள்ளி வைத்திருந்தார் பிரதமர். இனி, வரப்போகும் நாட்கள் அ.தி.மு.க-வுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதான கட்சியின் எம்பி அவர். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவரை நேற்று சந்தித்தார். 'தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க அணியில் சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏத…
-
- 0 replies
- 766 views
-
-
திரிசங்கு நிலையில் அ.தி.மு.க... திணறும் தினகரன்! “இருபத்தி ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமலேயே அதிகாரம் செலுத்த முடிந்த நம்மால், அதிகாரம் நேரடியாக கைக்கு வந்தபின் அதை முழுமையாக செயல்படுத்த முடியாத துரதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளதே” என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறது ஒட்டுமொத்த சசிகலா உறவினர்கள். இதனால் திக்..திக்..என்ற நிலையில் தினகரன் இருந்து வருகிறார். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட அ.தி.மு.க என்ற இயக்கத்தையும், நான்கரை ஆண்டுகால தமிழகத்தின் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தையும் சசிகலா குடும்பம் இனி முழுமையாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துமா, செலுத்தாதா? என்ற குழப்பத்துக்கு இன்னும் சில தினங்களில் விடை கிடைத்துவிடப் போகிறது. ஆம்! ஐந்து மாநில சட்டமன்றத் த…
-
- 0 replies
- 783 views
-
-
எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?' - ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சீறிய முதல்வர் பழனிசாமி! கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த சசிகலா அணி எம்எல்ஏ-க்களிடம் வாக்குமூலம் பெற்றதற்குப் பரிசாக, வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பதவிகள் வழங்கப்படாமல், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உள்கட்சிp பூசல் காரணமாக பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. சசிகலா அணியில் இருந்த எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட் டிருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த எம்எல்ஏ-க்களும், எம்பி-க்…
-
- 0 replies
- 472 views
-
-
மிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ-க்கள் காட்டில் அடைமழை ஆரம்பம்! கழுகார் வரும்போதே ஜெயலலிதா பற்றிய மருத்துவ அறிக்கைகளையும் கொண்டுவந்திருந்தார். ‘‘மறுபடி மறுபடி அறிக்கைகள் வெளியிட்டு மாட்டிக் கொள்கிறார்கள். இந்தச் சுழலில் இருந்து இந்த ஆட்சியும் அ.தி.மு.க-வும் அப்போலோவும் விடுபடவே முடியாது” என்றபடியே செய்திகளைக் கொட்டினார். ‘‘தமிழக கவர்னர் நியமனத்தில் மத்திய அரசு இப்போதுதான் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதாம். கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு மூத்த பி.ஜே.பி நிர்வாகிகளின் பெயர் பட்டியல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டேபிளில் பல மாதங்களாகத் தூங்குகிறது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாகத்தான், அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்களாம். இடையில், உத்தரப்பிரதேச மாநில சட…
-
- 0 replies
- 2.1k views
-
-
சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் நில மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடி புகார்கள் உள்ளது. குறிப்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் 6க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில், டெல்லியில் கட்டுமான நிறுவன தொழிலதிபரான திலிப் என்பவரிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ரூ.10 கோடியை பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கி உள்ளார். ஆனால் சொன்னபடி தொழிலதிபருக்கு கடன் பெற்று தரவில்லை ஆனால் கடன் பெற்று தருவதற்கான கமிஷனை மட்டும் பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். இதுகுறித்து திலிப் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். …
-
- 1 reply
- 527 views
-
-
ஜெ., மரணம் : 14 கேள்விகளுக்கு பதில் இல்லை! : முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி ''அப்பல்லோ அளித்த முதல் தகவல் அறிக்கைக்கும், தற்போது வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு, 14 கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., நியமன பொதுச் செயலர் விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ஜெ.,வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகும் நிலையில், தினகரன் மன்னிப்பு கடிதத்தை யார் ஏற்றது? தேர்தல் நடத்தி, புதிய பொதுச் செயலர் நியமிக்கப்படும் வரை, கட்சியை வழிநடத்தும் பொறுப்பு, கட்ச…
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது! தமிழக மீனவரை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றதையடுத்து, இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையிலிருந்து 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 10 மீனவர்களை, இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் காரைக்கால் கொண்டு செல்லப்படுகின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/82991-ten-srilankan-fishermen-arrested.html
-
- 0 replies
- 305 views
-
-
இன்றைய உண்ணாவிரதத்தின் மூலமாக, அ.தி.மு.க.,விலும், பொதுமக்களிடத்திலும், தங்களுக்கு உள்ள பலத்தை காட்டும் முயற்சியில், பன்னீர் அணியினர் தீவிரமாக உள்ளனர். அதேநேரத்தில், கூட்டம் அதிகம் குவியாமல் தடுக்க, சசிகலா தரப்பினர், எல்லா வகையிலும் சதி வேலைகள் செய்துள்ளனர். உண்ணா விரதத்தை தொடர்ந்து, லோக்சபாவில், ஜெ., மரண சர்ச்சையை கிளப்ப, பன்னீர் ஆதரவு, எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கிஉள்ளார். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர் கள் மற்றும் பொதுமக்களிடம், ஆதரவு கிடைத் துள்ளது. சசிகலா குடும…
-
- 0 replies
- 143 views
-
-
இன்றைய தமிழ்நாடு போராட்ட நிலவரங்கள் - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - ஒகேனக்கல். விவசாயிகள் போராட்டம் - ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்கள் - தாமிரபரணியை காக்க வாருங்கள் இளைஞர்களே... அழைக்கிறார் நல்லக்கண்ணு - வாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள் அடுத்து வர இருப்பவை.. - நீட் தேர்வு பிரச்சனை. - ரேசன் பொருட்கள் வழங்கபடாமை .. - காவிரி நீர் சிக்கல் - விவசாயிகள் தற்கொலை சிக்கல் - பவானி அணை பிரச்சனை .. - நியூட்ரினோ சிக்கல் . - பாலாறு பிரச்சனை .. - மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கு மேல் ATM கார்டு பயன்படுத்தினால் - அபராத…
-
- 0 replies
- 753 views
-