தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
‘ஐ விட்னஸ்’ சண்முகநாதன்! - சசிகலாவுக்கு ‘355’ செக் வைக்கும் ஆளுநர் #OPSVsSasikala 'தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்' என அறிவித்துவிட்டார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 'அரசியல் சூழல்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினாலும், நேற்றைய சந்திப்பில் ஹைலைட்டே சண்முகநாதனின் ஸ்டேட்மெண்ட்தான்' என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் நிலை பற்றி, தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் ஆலோசித்து வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று மாலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், மிகுந்த உற்சாகத்தோடு வெளியில் வந்தார். 'தர்மம் வெல்லும்' என மீடியாக்களிடம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். அ…
-
- 1 reply
- 653 views
-
-
ஆளுநரிடம் என்ன பேசினார் சசிகலா...? கோட்டை வாசலில் அவிழ்த்து விடப்போகும் 'அரசு' என்னும் காளையை யார் பிடிப்பது என்கிற 'மல்லுக்கட்டு' போட்டியால் ஒட்டுமொத்த தமிழகமும் தறிகெட்டுக் கிடக்கிறது. ஓர் இரவில் இதுவரை இல்லாத புது மனிதராக மாறி நிற்கிறார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். 128 சட்டமன்ற உறுப்பினர்களும் என் பக்கம்தான்' என்கிறார் சசிகலா. இருவரையும் அழைத்துப் பேசி ஒரு முடிவுக்கு வர முடியாமல் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ். இனி தமிழகத்தில் என்ன நடக்கும்? மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? இதுவே தமிழகம் முழுவதும உள்ள மக்கள் அனைவரிடமும் உள்ள கேள்வி. சசிகலா - ஆளுநர் சந்திப்பு! மும்பை…
-
- 0 replies
- 223 views
-
-
சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு தூது அனுப்பிய எம்.எல்.ஏ-க்கள்! #VikatanExclusive #OPSVsSasikala சசிகலா முகாமிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் 13 ஆக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொட்டும் உறைப்பனியிலும் தமிழக அரசியலின் பரபரப்பு கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்துக்கு நேற்று வருகைத் தந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் சந்தித்தார். அடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சந்தித்தார். இதன்பிறகு குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகம…
-
- 0 replies
- 266 views
-
-
ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அப்போலோ சொன்னது உண்மையா? வெடிக்கும் சர்ச்சை! #Jayalalithaa #Apollo தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளைப் போன்று இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடந்தேயில்லை. இந்தியாவே மிரண்டு போகும் அளவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சிகளும், மர்மங்களும், அரசியல் சண்டைகளும் நடந்தேறி வருகின்றன. இவற்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை என்பதுதான் மிகப்பெரிய மர்மமாக இன்றுவரை தொடர்கிறது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டு இருக்கலாமே" என்ற மக்களின் கேள்விக்கு, "அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஐ.சி.யு பிரிவில் சி.சி.டி.வி. கேமாரா இல்லை" என அப்போலோ ந…
-
- 0 replies
- 287 views
-
-
சசிகலாவை பொ.செ.,வாக நியமிக்க வழியில்லை: தேர்தல் ஆணையம் புதுடில்லி: அதிமுக பொது செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.இந்நிலையில், இடைக்கால பொது செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை. சட்ட விதிகளை மாற்றினால், மட்டுமே பொது செயலாளராக நியமிக்க முடியும் என தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் கூறியுள்ளது. இது குறித்து அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என தெரிகிறது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1706953
-
- 8 replies
- 879 views
-
-
'ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் #VikatanExclusive தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க, அரசியல் ஜல்லிக்கட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. 'பீச் ரிசாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. பல எம்.எல்.ஏக்கள் கதறியடியே கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிய கணத்தில் இருந்து, அவருக்கான…
-
- 2 replies
- 459 views
-
-
எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். ஆனால், சசிகலாவை ஆதரித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிகளில் தங்க…
-
- 1 reply
- 259 views
-
-
காளையுடன் செல்ஃபி, காஃபி-டீ, சாப்பாடு... எப்படி இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் வீடு? #SpotReport #VikatanExclusive சென்ற மாதம் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று சிக்ஸர் நாயகனாக மாறி இருக்கிறார். ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் ஸ்டைலில் திரும்பிப் பார்க்க வைத்து, சசிகலா தரப்பை இரவு ஒரு மணிக்கு வெளியில் வரவைத்து விட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு. கடந்த இரண்டு நாட்களாக மக்கள் வெள்ளத்தில் திளைத்து வரும் அந்த வீடு எப்படி இருக்கிறது? 1. முதல்வரின் வீட்டைப் பார்க்க பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.அவரது வீட்டின் கேட்டில் உள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம் என்கிற போர்டுக்கு பக்கத்தில் ந…
-
- 0 replies
- 484 views
-
-
சொகுசு விடுதியில் இருந்து வெளியேற முடியாததால் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தவிப்பு? கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் | படங்கள்: கோ.கார்த்திக் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற முடியாமல் தவிப்பதாக கூறப்படுகி றது. அப்பகுதியில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டதால் செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் மீது புகார் தெரிவித்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதையடுத்து அதிமுகவில் பல்வேறு திருப்பங் க…
-
- 0 replies
- 254 views
-
-
பலப்பரீட்சையில் சசி தோற்றால் அடுத்தது என்ன? சட்டசபையை முடக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு தமிழகத்தில், 1988க்குப் பின், தற்போது, ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, சசி தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ தவறினால், கவர்னர் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. சட்டசபையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 234. ஒருவர் நியமன உறுப்பினர்; அவருக்கு ஓட்டுரிமை இல்லை. ஆட்சி அமைக்க, மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில், பாதிக்கும் மேல் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. அதாவது, 118 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு வேண்டும். சசிகலா, தனக்கு, 120க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொருவராக அங்கிருந்து சென்று கொண…
-
- 0 replies
- 388 views
-
-
அ.தி.மு.க., கட்சியை முதல்வர் பன்னீர்செல்வம்... கைப்பற்றுகிறார்!: நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பதால் உற்சாகம்: அணி தாவினார் அவைத்தலைவர் மதுசூதனன்: சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவு காரணமாக, உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் அ.தி.மு.க.,வை கைப்பற்றுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று உடனடியாக அணி மாறியதால், சசிகலா தரப்புக்கு, அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு நிர்வாகிகள், சசிகலாவின் …
-
- 0 replies
- 315 views
-
-
அதிகார போட்டியில் வெல்லப் போவது யார் ஒட்டு மொத்த தமிழக மக்களும் காத்திருப்பு சென்னை:''அ.தி.மு.க.,வில் நடக்கும் அனைத்து விபரங்களையும், கவர்னரிடம் தெரிவித்தோம்; அவர் நல்ல முடிவை அறிவிப்பார். நமக்கு நல்லதே நடக்கும்,'' என, கவர்னரை சந்தித்த பின், முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவும், கவர்னரை சந்தித்து பேசியுள்ளார். எனவே, இரு தரப்புக்கும் இடை யிலான இந்த அதிகாரப் போட்டியில், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளும், அ.தி.மு.க.,வில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில், சசிகலா தரப்பு…
-
- 0 replies
- 401 views
-
-
ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க மறுப்பு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என, முதல்வர் பன்னீர்செல்வமும்; ஆட்சி அமைக்க, அழைப்பு விடும்படி சசிகலாவும், தமிழக கவர்னரை சந்தித்து, மனு கொடுத்தனர். இரு தரப்பு கோரிக்கையையும் கேட்ட கவர்னர், மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இம்மாதம், 5ம் தேதி நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மறுநாள், கவர்னர், தமிழகம் வருவார்; அவரை சந்தித்து, கடிதத்தை கொடுத்து, முதல்வராக பொறுப்பேற்கலா…
-
- 0 replies
- 475 views
-
-
சசிகலாவுக்கு நடராசனின் காதல் பரிசு! ப.திருமாவேலன் `ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’’ என்றார் ஜெயலலிதா. ``இருக்க முடியும்’’ என்றார் ம.நடராசன். ``ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்கவே முடியாது’’ என்று மீண்டும் சொன்னார் ஜெயலலிதா. `இருக்க முடியும்... என்பதற்கு உதாரணம் உங்களிடமே இருக்கிறதே’ என்று போயஸ் கார்டனுக்கு உள்ளேயே கலைப்பொருள்கள் வரிசையில் இருந்த ஒன்றை எடுத்துவந்தார் நடராசன். ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் தரப்பட்ட பொருள்களில் அதுவும் ஒன்று. அந்த உறையின் பக்கவாட்டில் இருக்கும் க்ளிப்பை லாகவமாக நகர்த்தினால், இரண்டு பக்கங்களில் இருந்தும் கத்தி வரும். எடுத்துக்காட்டினார் நடராசன். இதோ போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கே தெரியா…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோட்டைக்கு ‘செக்’ வைக்கும் கோர்ட்! - சுப்ரீம் ஷாக் அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்வான மறுநாளே, ‘சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகச் சொல்லியிருப்பது அ.தி.மு.க தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 2014 செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதையடுத்து, முதல்வர் பதவியை ராஜின…
-
- 0 replies
- 583 views
-
-
முதல்வருக்கு ஆதரவாக இளைஞர்கள் திரள வாய்ப்பு: மெரினா கடற்கரையில் போலீஸார் குவிப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினாவில் திரளப்போவதாக தகவல் கிடைத்ததையொட்டி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர் | படம்: ம.பிரபு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி கடந்த மாதம் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடந்து…
-
- 0 replies
- 271 views
-
-
ஜெயா ஆட்சியின் குற்றப் பட்டியல் – ஒரு தொகுப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த குற்றவாளி நாட்டை ஆளலாம் என்ற புரட்ச்சியை நிகழ்த்திக் காட்டி, மரபு, சட்டம், அரசியல் சாசனம் என்ற புனிதங்களின் மீது சாணியைக் கரைத்து ஊற்றினார் ஜெயா. வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக… ஸ்பிக் நிறுவனப் பங்குகள் விற்பனை ஊழல் வழக்கில் ஜெயாவிற்கு எதிராகக் கோப்பில் குறிப்புகள் எழுதியதற்காக ஆசிட் வீசித் தாக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா. 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவுடனேயே, ‘‘தமிழகத்தில் இருந்த தாலி பறிக்கும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக’’த் தடாலடியாக அறிவித்…
-
- 1 reply
- 351 views
-
-
பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) ; வி.கே.சசிகலா (வலது) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க) 11.15 am: 'ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை மறைத்தது ஏன்?' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'சசிகலா குழுவி…
-
- 13 replies
- 1.2k views
-
-
சசிகலாவிடம் 10 கேள்விகள் – ஊடகவியலாளர் என். ஜீவேந்திரன் கட்டுரைகள் Feb 9, 2017 47 தமிழக அரசியல் பெரும் பரபரப்பாக உள்ளது. சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க போவதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம். மறுபுறத்தே ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை மீளப் பெறப்போவதாக ஒரு பரபரப்பு. இவற்றுக்கு நடுவே சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 1 வாரத்துக்குள் இறுதி தீர்ப்பு வந்து விடும் என நீதிபதிகள். இவ் இடியப்பச் சிக்கலான நேரத்தில் சசிகலாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை அதாவது நேர்காணலில் எவ்வாறான கேள்விகள் கேட்கப்பட வேண்டியவை என ஊடகவியலாளர் என். ஜீவேந்திரன் தனது முகநூலில் சசிகலாவிடம் 10 கேள்விகள் என பதிவிட்…
-
- 0 replies
- 360 views
-
-
அதிமுக- ஆட்சியும்.... ஆறு மாதங்களும்! இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது என்றால்... அது தமிழ்நாடாகத்தான் இருக்கும். அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் நடக்கும் குழப்பங்களும் அதிரடி மாற்றங்களுமே அதற்கு சாட்சி. கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பதவியேற்ற அதிமுக அரசின் தொடக்கத்தில் காவிரிப் பிரச்னை விஸ்வரூபமெடுத்தது... இதிலிருந்து விடுபட முயற்சி செய்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தல் கழகத் தொண்டர்கள், தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இந்த…
-
- 0 replies
- 565 views
-
-
ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்.. அதிமுக அரசு டிஸ்மிஸ் ஆகுமா? தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையில் தமிழக நிலவரம் குறித்து விரிவாக விளக்கியுள்ளாரம் ஆளுநர். இது தவிர மேலும் ஒரு விரிவான அறிக்கையையும் ராஜ்நாத் சிங்குக்கு விரைவில் ஆளுநர் அனுப்பவுள்ளாராம். சசிகலாவை அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் தங்களது சட்டசபை கட்சித் தலைவராக தே…
-
- 0 replies
- 321 views
-
-
கூவத்தூரில் கடும் மோதல்... எம்எல்ஏக்களை வெளியேற்ற கிராம மக்கள் கோரிக்கை அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் கிராம மக்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்றக்கோரி கூவத்தூர் பகுதி மக்கள் அதிமுகவினர் மற்றும் மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்ட அடியாட்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக ஓபிஎஸ் அணி விகேஎஸ் என பிரிவுகளாக உள்ளது. யார் முதல்வர் பதவியை ஏற்பது என்பதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் மன்னார்குடி கும்பல் அச்சமடைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள்…
-
- 0 replies
- 464 views
-
-
கவர்னரிடம் பன்னீர்செல்வம் வைத்த 5 கோரிக்கைகள்... 6 கோப்புகள்! #OPSVsSasikala தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் சசிகலாவும், பன்னீர் செல்வமும்... முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ், அதை வாபஸ் பெற்று, மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார். 128 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்திருக்கும் சசிகலா முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடப் போராடிக் கொண்டிருக்கிறார். யாருக்கு வெற்றி என்பது தற்காலிகமாக கவர்னரின் கையில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ‘இருதலைக்கொல்லி’ நிலையில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓ.பி.எஸ், வி.கே.எஸ் என இருவருக்கும் ஒரே நாளில் அப்பாயின்ட்மென்ட் கொடு…
-
- 0 replies
- 242 views
-
-
போயஸ் கார்டனை இளவரசிக்கு எழுதி வைத்து விட்டார் ஜெ... திடீர் தகவலால் பரபரப்பு! போயஸ் கார்டன் இல்லத்தை இளவரசிக்கு ஜெயலலிதா எழுதி வைத்து விட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீட்டை, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு உயில் எழுதி வைத்து விட்டதாக அவரது தரப்பு கூறுவதாக நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தி தெரிவிக்கிறது. கோடானு கோடி அதிமுக தொண்டர்களை அதிர வைப்பதாக உள்ளது இந்த செய்தி. தமிழக மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இந்த செய்தி வந்துள்ளது. VIDEO …
-
- 0 replies
- 435 views
-
-
'துணை சபாநாயகரா? சசிகலா பிரதிநிதியா?' -தம்பிதுரையை கலாய்த்த அருண் ஜெட்லி #VikatanExclusive #OPSvsSasikala தமிழக ஆளுநரை இன்று இரவு 7.30 மணியளவில் சந்திக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. ' சட்டசபையில் பலத்தை நிரூபிக்கும் கட்சிக்குத்தான் ஆளுநர் வாய்ப்பு கொடுப்பார். பன்னீர்செல்வத்தால் முடியவில்லை என்றால், ஆட்சிக் கலைப்பை நோக்கிச் செல்லும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் அணி திரண்டு வருகின்றனர். இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்தார் அவைத் தலைவர் மதுசூதனன். இப்படியொரு சந்திப்பை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்ல…
-
- 0 replies
- 380 views
-