Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எதிர்ப்புக்களைத் தாண்டி முதலமைச்சராவாரா சசிகலா? சசி­கலா அ.தி.மு.க. வில் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கி­யுள்ள நிலையில் அடுத்த கட்­ட­மாக தமி­ழக முத­ல­மைச்­ச­ராக வேண்­டு­மென்று கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள், அமைச்­சர்கள் மற்றும் மாவட்ட நிர்­வா­கிகள் போன்றோர் குரல் கொடுத்து வரு­கின்­றனர். இதன் உச்ச கட்­ட­மாக அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற மக்­க­ளவை துணை சபா­நா­ய­க­ரு­மான தம்­பி­துரை 'கட்சி தலை­மையும் ஆட்­சி­ய­தி­கா­ரமும் ஒரு­வ­ரி­டமே இருக்க வேண்டும். இரண்டும் தனித்­த­னி­யாக இரு­வ­ரி­டமும் இருப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. அந்த வகையில் சசி­கலா முதல்­வ­ரா­வது கட்­சிக்கும், தமி­ழ­கத்­துக்கும் இன்­றி­ய­மை­யா­தது' என்று அறிக்கை விடுத்­தி­ர…

  2. மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா பேச்சு தீபா | படங்கள்: எல்.சீனிவாசன் மக்கள் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள செய்தியாளர்களை சந்தித்து தீபா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்களுக்காக விரைவில் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும். நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யக் காத்திருக்கிறேன். அதற்கான விளக்கங்களை, தீர்க்கமான முடிவை விரைவில் அறிவிப்பேன். …

  3. நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்! டோனி பற்றிய பெட்டிச் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘உம்மிடமிருந்து இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை’’ என்றோம். ‘‘அதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஜூ.வி வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்று சொல்லி அமைதியானவரிடம் முதல் கேள்வியைப் போட்டோம். ‘‘செயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்?” ‘‘அது என்ன செயல் தலைவர்? தலைவர் ஆகிவிட்டார் என்றே சொல்லும். ‘தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குக் கழகப் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ கழகப் பொதுக்குழு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம். சட்ட திட்டங்களில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள், பணிகளையும் செயல…

  4. அண்ணா... எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்தது என்ன? நாற்காலியில் வெற்றிடம் விழுந்ததும், அதை வசப்படுத்த அசுர வேகத்தில் அரண்மனை சதி நிகழ்வதே வரலாறு நெடுக பாடங்களாக இருக்கின்றன. ஜனநாயக வெளிச்சத்திலும் இந்த வரலாறு மாறவில்லை. பதவி வெறி என்றால் என்ன? அதிகார போதை எப்படி இருக்கும்? அதை அடைய என்னவெல்லாம் செய்வார்கள்? அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் மரணத்துக்குப் பிறகு அதற்கான அர்த்தங்களை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இவர்களின் மரணத்துக்குப் பிறகு நடந்தவை என்ன? அவை சொல்லும் உண்மைகள் என்ன? இதோ ஓர் ஒப்பீடு: உடல்நலக் குறைவு! அண்ணா: 1968 செப்டம்பர் முதல் வாரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த அண்ணாவுக்குத் திடீரென தொண்டையில் வலி. மருத்…

  5. நெவர்! 'ஜெ., இடத்தில் சசிகலாவா... நெவர்!:' கொந்தளிக்கும் ஸ்ரீரங்கம் மக்கள் திருச்சி: 'ஜெயலலிதா இருந்த இடத்தில், சசிகலாவை நினைத்து கூட பார்க்க முடியாது; அவரை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வோம்?' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த, 2011ல், ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெ., போட்டியிட்ட போது, 'ஸ்ரீரங்கம் என் பூர்வீகம்; என் முன்னோர் இங்கு வாழ்ந்துள்ளனர்' என, உருக்கமாக பிரசாரம் செய்தார். இதையடுத்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, 'நம்ம ஊர் பெண்' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள், அவரை வெற்றி பெற வைத்தனர். முதல்வரானதும், நன்ற…

  6. சசிகலா படம் மீது சாணம் வீச்சு சுத்தம் செய்த போலீசார் மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், அ.தி.மு.க.,வினர் வைத்த டிஜிட்டல் பேனரில், பொதுச் செயலர் சசிகலா உருவப்படம் மீது பூசப்பட்ட சாணத்தை, போலீசார் சுத்தப்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறையில் பல இடங்களில், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், சசிகலா படத்தின் மீது சாணம் வீசப்பட்டது. அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளே கண்டுகொள்ளாத நிலையில், போலீசார் உடனடியாக ஆட்களை அழைத்து வந்து, பேனரிலிருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். போலீசாரின் இச்செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ச…

  7. பன்னீருக்கு எதிராக தம்பிதுரை பனிப்போர்: சசிகலா குடும்பம் 'ஷாக்' அ.தி.மு.க.,வில், முதல்வர் பன்னீர்செல்வத்திற் கும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக் கும் இடையே பனிப்போர் நிகழ்வது, சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா இருந்தவரை, அவரை எதிர்க்கும் துணிவு இல்லாததால், அனைவரும் அடக்கி வாசித்தனர். அனைத்து நிர்வாகிகளும், உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டனர். நிர்வாகிகளில் யார் தவறு செய்தாலும், தயவு தாட்சண்யம் பார்க்காமல், ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வந்தார். இதன் காரணமாக, நிர்வாகிகள் பயத்துடன், ஜெ., கூறும் பணிகளை மட்டும் செய்து வந்த…

  8. ஸ்டாலின் பதிலளிக்க மறுப்பு சசிகலா தரப்பு செம கடுப்பு சென்னை:'வளைந்து, குனிந்து, தவழ்ந்து, தரையில் உருண்டு, கால் நோக்கி கும்பிடு போடுபவர்களால், தமிழகம் பாழ்பட்டு கிடக்கி து. எனவே, காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள என்னை சந்திக்க வரும் கட்சியினர் சிலர், ஆர்வம் மிகுதியால் சற்றும் எதிர்பாராத நிலையில், காலில் விழுந்து வணங்க முயற்சிக்கின்றனர். இதை, நான் சிறிதும் விரும்புவதில்லை. யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை, எந்த மனிதருக்கும் எப்போதும் ஏற்படக் கூ…

  9. Started by நவீனன்,

    அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, 'திக் திக்' மனநிலையில், சசிகலா தரப்பினர் காத்திருக்கின்றனர். அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அவரது மருமகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், 'கிளியர்' ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. க…

  10. சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! 'அதிமுகவில் தொடர்வேன்' என பேட்டி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை இன்று நாஞ்சில் சம்பத் திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து விலகுவதாக வந்த தகவலையடுத்து, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக செய்தித் தொடர்பாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அமைச்சர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை வாழ்த்து தெரிவித்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பரிசாக கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில்…

  11. சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்? “நான் உங்களுக்கு இணக்கமானவராகத் தான் நடந்துகொள்வேன்” என்பதைத் தனது கட்சியினருக்கு உணர்த்த சசிகலா திறமையாகக் காய் நகர்த்துகிறார் என வியந்துபோகிறார்கள் அ.தி.மு.க-வின் நிர்வாகிகள். சென்னையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அவரின் அணுகுமுறையும் அதைத்தான் காட்டியது. ‘ஜெயலலிதாவின் இடத்தைத் தன்னால் நிரப்ப முடியாது. ஆனால், தனக்கென ஒரு தனித்துவம் இருப்பதை அ.தி.மு.க-வினருக்கு உணர்த்திவிட வேண்டும்’ என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது முதல், அதற்கான திட்டங்களை சசிகலா கச்சிதமாகச் செய்து வருகிறார். அதன் முதல்படியாக ‘மாவட்ட நிர்வாகிகளோடு சந்திப்பு’ என அறிவித்து, கட்சியினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி…

  12. பிறப்பில் இருந்து விடுதலை பெறுவதே, சந்தோஷம்! - இதுவரை வெளிவராத ஜெயலலிதா பேட்டி சிமி கேர்வல், 'ரான்டவுஸ் (Rendevous)' என்ற தன் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 1999-ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த நேர்காணலின் எடிட் செய்யப்படாத தொகுதியை நேற்று இரவு வெளியிட்டுள்ளார். ''ஜெயா ஜி உடனான எனது நேர்காணல், ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்றது. ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேரச் சுருக்கம் காரணமாக, அதை 46 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய வேண்டியதாயிற்று. மிக அழகான அவரின் பல வார்த்தைகளை, நிகழ்சியில் இருந்து வெளியே எடுத்ததில் எனக்கு மிகவும் வருத்தம். ஆனால், மக்கள் அதை முழுமையாகக் காண விரும்புகிறேன். ஜெயா ஜி அவர் எண்ணங்களையும் வாழ்க்கையையும் பகிர்ந்துகொள…

  13. "தீபா ஆதரவு அணி" : சென்னைக்கு முதல் இடம் ! தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவர் வகித்து வந்த முதல்வர் பதவி ஓ.பி.எஸ் கைக்குப் போனது நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி, பொதுச் செயலாளர் பதவியாகச் சுருங்கி சசிகலா கைக்குப் போனது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, அவரைப் பார்க்க பலமுறை முயன்று வாசலிலேயே தடுக்கப்பட்டவர் தீபா. உள்ளே போனவர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப் படவில்லை என்பது வேறு. ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயராமனின் மகளான தீபாவுக்கு அப்போலோவில் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலிலும் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. டிசம்பர் 29-ந்தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா அ.தி.…

  14. ஜெயலலிதாவாக மாறும் ஸ்டாலின்... கருணாநிதியாக மாறும் சசிகலா! அரை நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் இரு பெரிய கட்சிகளின் தலைமை தற்போது மாறியுள்ளது. இது தொண்டர்களுக்கு புதிய அனுபவம்தான். முந்தைய தலைமையின் குணங்களுக்கு அனுசரித்துப் பழக்கப்பட்ட அவர்களுக்கு... புதிய தலைமையின் குணங்களால், இதுவரை பார்க்காத காட்சிகளைநோக்கி, அவர்களைக் கடத்த இருக்கிறது. ஓர் ஆளுமையின் கீழ் இருந்து, எதிர்த்து கருத்துகள் கூறாமல்... விசுவாசத்தை மட்டுமே மூலதனமாய்க் கொண்டு, பதவி வாங்கிப் பழக்கப்பட்ட அ.தி.மு.க-வில், இனி அதற்கு வாய்ப்பு இல்லை. பொதுக்குழுவில் கருணாநிதியையே எதிர்த்துப் பேசிப் பழக்கப்பட்ட தி.மு.க-வில், அதுபோன்ற நிகழ்வுகளை இனி பழைய வரலாற்றில் மட்டும்தான் பார்க்க முடியு…

  15. ஸ்டாலினை எதிர்க்கப் போவது சசிகலாவா? தீபாவா? - கதிகலங்கும் கார்டன் பாலிடிக்ஸ் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் சசிகலாவுக்கும் இடையில் உண்மையிலேயே பிரச்னையா எனத் தொண்டர்கள் கேட்கும் அளவுக்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. 'மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினால், அதை வலியுறுத்தி சசிகலாவும் கடிதம் எழுகிறார். ஓ.பி.எஸ்ஸின் மௌனமும் தீபாவின் அரசியல் பிரவேசமும் கார்டனை கலங்க வைத்துள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் வி.கே.சசிகலா. முதல் அறிக்கையாக, 'ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக ஸ்டாலின் பேசுவதாக' சுட்டிக் காட்டியிருந்தார். அதேப…

  16. ராமமோகன ராவிடம் மீண்டும் விசாரணை முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக்கிடம், வரு மான வரித் துறையினர், மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறிய தாவது: டிச., 30ல் ஆஜரான விவேக், நாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, பதில் அளித்தார். முழுமையான விளக்கம் அளிக்க, கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளார். அதுபோல், ராவின் அலுவலகத்தில் சிக்கிய, இரண்டு மொபைல் போன்களில் உள்ள பதிவுகளை, ஆய்வு செய்ய உள்ளோம். சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என்ப தால், சேகர் ரெட்டி,ராமமோகன ராவ் வீடுகளில், முதலில் சோதனை செய்தோம். அந்த சோதனைகள் முடிந்ததும், புஹா…

  17. ஜெ., - சசி வாங்கி குவித்த நிலங்கள் : திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம் திருநெல்வேலி: ஏக்கருக்கு, 2,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள், ஜெ., இறந்ததை அடுத்து, தங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கடந்த 1991 - 96 அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா பெயர்களில், தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டன. அவர்கள் வாங்கி குவித்த சொத்து பட்டியலில், துாத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே சேரகுளம், வல்லகுளம், மீரான்குளம், அரசர்குளம் உள்ளிட்ட இடங்களில், 969 ஏக்கர் நிலங்களும் அடக்கம். வானம் பார்த்த பூ…

  18. சசிகலாவுக்கு எதிராக தீபா வீட்டில் குவியுது கூட்டம்: அரசு இடையூறு செய்வதாக கட்சியினர் மறியல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டின் முன், நாளுக்கு நாள் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தன் பேச்சு அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதால், 'மைக்' பிடித்து பேச ஆரம்பித்துள்ளார் தீபா. கூட்டம் குவிவதால், இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாக, தொண்டர்கள் நேற்று, மறியல் செய்தனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அர…

  19. * அ.தி.மு.க., ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர...ரூ.200!:* எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க 'படியளப்பு' தீவிரம் அ.தி.மு.க.,வில், ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர, தலைக்கு, 200 ரூபாய் பட்டுவாடா செய்யப்படும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா தலைமைக்கு, தொண்டர்களிடமும், மக்களிடமும் எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்க, 'படியளப்பு' ஏற்பாடுகளில், நிர்வாகிகள் தீவிரம் காட்ட துவங்கி உள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை, அவர் சந்தித்தா…

  20. சென்னை பழைய மஹாபலிபுரம் ரோட்டில் பயனூர் இன்னும் ஒரு இடத்தில் சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு பெரிய சொகுசு பங்களா. மன்னார்குடி மக்களுக்கு சொந்தமான பெரிய வீடு

  21. உடை, கம்மல் முதல் நாற்காலி வரை கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவாக மாறிவரும் சசிகலா! அரசியல் தலைவர்கள் தங்களுக்கென தனிஅடையாளம் இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள். அரசியல் தலைவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் மாறுபட்டு இருப்பார்கள். அதிலும் பெண் அரசியல் தலைவர்கள் என்றால், கண்டிப்பாக குறிப்பிடும்படியான தனித்துவம் இருந்தே தீரும். அதுபோல அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால், அந்த மாற்றங்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பின்பற்றுவதுபோலத் தோன்றுகிறது. அப்படி அவரைப்போலவே சசிகலா பின்பற்றும் மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம். உடை: …

  22. அப்போலோ, போயஸ் கார்டன், அ.தி.மு.க. அலுவலகம்... இப்போது எப்படி இருக்கின்றன?! #3MinuteRead முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்து 30 நாட்களைக் கடந்துவிட்டபோதிலும்... அ.தி.மு.க வட்டாரத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், அடிமட்டத் தொண்டர்களின் மனங்களில்... ஜெயலலிதா மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம். சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா இறந்த பிறகு... அவர் உடலைக் கொண்டுசென்ற இடங்கள், அன்றும்... இன்றும் எப்படியிருக்கின்றன என்பதே இந்தத் தொகுப்பு... அப்போலோ அன்று: கடந்த டிசம்பர் 5-ம் தேதி மதியம் 2.30 மணிக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘அபாயக்கட்டத்தில் இருக்கிறார்’ என அப்போலோவி…

  23. 'இனி சசிகலா முதல்வர் என்று சொல்ல வேண்டாம்!' -கார்டன் உத்தரவும் ஸ்டாலின் அறிக்கையும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது கார்டன். 'தீபாவின் அரசியல் பிரவேசமும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நீடிப்பதையும் மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அன்றாட அரசுப் பணிகளைக் கவனிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். புத்தாண்டுக்கு பிரதமருக்கு வாழ்த்துச் சொல்வதில் ஆரம்பித்து, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை சந்திப்பது, பா.ஜ.க தலைவர் தமிழிசைக்கு நேரம் ஒதுக்கியது என உற்சாகத்தோடு வலம் வருகிறார். நேற…

  24. அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலா, கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால், எழுதி வைத்ததை படிக்கவே திணறி வருகிறார். மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின் போது, சரியாக பேச முடியாமல் தவித்தது, கட்சி நிர்வாகி களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவுடன், 33 ஆண்டு களாக வசித்து வந்தவர், அவரது தோழி சசிகலா. அவருக்கு உதவியாளராக மட்டுமே செயல்பட்டு வந்தார். ஜெ., பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, அவருடன் சென்றாலும், எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை. ஜெ., செல்லும் வாகனத்தில், பின் சீட்டில் அமர்ந்து, அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, அவர் பேச வேண்டிய உரையை, ஒவ்வொரு பக்கமாக எடுத்துக் கொடுப்பது போன்ற வேலைகளை மட்டும் செய்து வந்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.