தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
'புதிய முதலமைச்சர் தேர்வாகிறாரா?' -எம்.எல்.ஏக்கள் அழைப்பின் பின்னணி அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வருமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'நாளை பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் சசிகலா. தொகுதிகளில் எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகள் என்ன என்பது குறித்து, ஓ.பி.எஸ் தலைமையில் இன்று விவாதிக்க உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். நேற்று இரவு மீண்டும் தலைமைக் கழகத்தில் இருந்து அவசர அழைப்பு. ' நாளை காலை சென்னை வாருங்கள்' என்று. இதனால், எம்.எல்.ஏக்கள் மத்தியில் திட…
-
- 0 replies
- 378 views
-
-
அனைத்துக்கும் பின்னால் நடராஜன் : பொதுக்குழுவுக்கு முன்பும்... பின்பும்...! ‘முடியாது... நடக்காது’ என்று யூகிக்கப்பட்ட அனைத்தையும் யூகங்கள் ஆக்கி... பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார், சசிகலா. அச்சு பிசகாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார்கள் கழகக் கண்மணிகள். கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால், ஆதரவாக இருக்கலாம்; ஆனால், தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிவந்த நிலையில்... வீட்டில் இருந்த சசிகலாவைத் தேடி பொதுச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்பட... அவருக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்கிற கேள்விதான் டெல்லி முதல் தி.மு.க வரை தொங்கித்தொங்கி நிற்கிறது. டெல்லியின் அச்சுறுத்தல்கள்! …
-
- 0 replies
- 569 views
-
-
ஜெயலலிதா மரணத்திற்கு 'இந்த' மருந்துகள்தான் காரணமா?! -அப்போலோ மெயிலும் 5 சந்தேகங்களும் "ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களுக்குள் போக நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்காக அடிப்படை உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற விவரம் பொதுமக்களுக்குத் தெரியவேண்டும். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என யார் வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். ஜெயலலிதா சாவில் மர்மங்கள் உள்ளன என்று பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வந்தன. ஜெயலலிதா நடந்தார் என்று சிலர் பேட்டி கொடுத்தனர். ஜெயலலிதா டி.வி. பார்க்கிறார் என்று மற்றொரு நாள் மற்றொருவர் பேட்டி கொடுக்கிறார். அட…
-
- 0 replies
- 580 views
-
-
சசிகலா குடும்பத்தினரில் பெரும்பாலானோர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயேபல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளனர். ஜெயலலிதாவின் உயிர் தோழி, வாரிசு என வர்ணிக்கப்படும் சசிகலா, அ.தி.மு.க., பொது செயலர் மற்றும் தமிழக முதல்வராக, பல்வேறு வகையில் காய் நகர்த்துகிறார். சசிகலாவால், ஜெயலலிதா முதல்வரானதாகவும், சசிகலா குடும்பத்தா ரால், அ.தி.மு.க., வளர்ந்ததாகவும் பலரும் தம்பட்டம் அடிக்கின்றனர். அதே நேரம், சசிகலா குடும்பத்தாரில் பெரும்பாலானோர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே வழக்குகளில் சிக்கியதை, சசிகலா எதிர்ப்பாளர் கள் பட்டியலிட்டு அவர் முதல்வராக பொது செயலராக வருவதை எதிர்க்கின்றனர். அவரது குடும்பத்தார் சிக்கிய வழக்குகளில் சில: …
-
- 0 replies
- 488 views
-
-
ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசாம் தொண்டர்களை ஏமாற்றுகிறதா தலைமை? 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நோபல் பரிசு வழங்க வேண்டும் என, எங்கள் கட்சிப், பொதுக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றியது, எங்களைப் போன்று, கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை ஏமாற்றுவ தாக உள்ளது' என, அ.தி.மு.க., தொண்டர்கள் குமுறுகின்றனர். ஜெயலலிதா மறைந்ததும், டில்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், அவருக்கு, 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஜெ., மீது குற்ற வழக்குகள் இருந்ததால், 'பாரத ரத்னா' கிடைக்குமா என்று அப்போதே விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று நடந்த பொதுக்குழுவில், 'அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்…
-
- 0 replies
- 261 views
-
-
ஜெ., மரணத்தில் நீதிபதிக்கு சந்தேகம் சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார். சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிச., 5ம் தேதி இரவு,11:30 மணிக்கு மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வ…
-
- 2 replies
- 622 views
-
-
மக்கள் நலக்கூட்டணி உடைந்தது! வைகோ வெளியேறினார் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளது கூட்டணி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/76035-vaikos-mdmk--came-out-from-makkal-nala-kootani.art
-
- 6 replies
- 824 views
-
-
கோபத்தில் சசிகலா... கொந்தளித்த பன்னீர்! - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு?” கழுகாருக்கு வாட்ஸ் அப் அனுப்பிக் காத்திருந்தோம். ‘‘போயஸ் கார்டன் வட்டாரத்தில் இருக்கிறேன். வருகிறேன்!” என்று பதில் அனுப்பியவர் வந்து இறங்கினார். அவரது சிறகுகளுக்குள் மூன்று பக்க அறிக்கை இருந்தது. ‘‘இப்போதுதான் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் இன்னாள் ராஜ்யசபா அவை அ.தி.மு.க. எம்.பி-யுமான எஸ்.ஆர்.பி. விடுத்துள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பப் போகிறது. தமிழக அரசையும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் அ.தி.மு.க-வையும், பி.ஜே.பி-யும் மத்திய அரசும் மிரட்டிக்கொண்டு இருக்கின்றன என்று சொல்லப்ப…
-
- 0 replies
- 676 views
-
-
' சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்!' -உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்ட தி.மு.க. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துவிட்டது.' இணையத்தளங்களிலோ பொதுவெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்' என தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, வானகரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. 'என்ன நடக்கப் போகிறது' என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் போட்டியிட விண்ணப்பம் கேட்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடந்தது. இன்று காலை பொதுக்குழு நடக்கும் இடத்தில் தகராறு நடந்துவிடாத அளவுக்குக் கட்ச…
-
- 0 replies
- 498 views
-
-
உயர்வை நோக்கி... அதிமுக பொதுச் செயலராக, தாற்காலிக அல்லது இடைக்கால அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொதுச் செயலராக இன்று அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான பொதுச் செயலராளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சியின் வேறு ஒரு விதியில் குறிப்பிடப்படுவதால்தான் முழுமையான பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஜெயலலிதா இடத்தில் சசிகலா ( புகைப்படத் தொகுப்பு) அப்படியானால், இன்றைக்கே அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளராக சசிகலாவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட…
-
- 0 replies
- 524 views
-
-
ராம மோகன ராவின் ராஜ்யங்கள்! ஆளும்கட்சியின் பவர்ஃபுல்கள் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு புகுந்தபோது அது வழக்கமான ரெய்டு இல்லை என பலரும் வாய் பிளந்தார்கள். அந்த ரெய்டு அமைச்சர் எடப்பாடிக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர் ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வரையில் துரத்தியது. அதன் கிளைமாக்ஸ்தான் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனை. ‘தமிழ்நாட்டில் முதன்முறையாக தலைமைச் செயலாளர் வீட்டில் நடந்த சோதனை இது’ என்ற ரிக்கார்டை மட்டும் பதிக்கவில்லை. ஆளும் கட்சியின் காக்கிகளைக்கூட நம்பாமல் துணை ராணுவத்தைக் கொண்டு நடத்தப்பட்டது என்கிற சாதனையும் படைத்தது. அதுமட்டுமா? தலைமைச் செயலக…
-
- 2 replies
- 836 views
-
-
இது உள்கட்சி விவகாரம் அல்ல ஜெயலலிதா இல்லாமல் ஆகிவிட்ட சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய, முழுமையான உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் தமிழக முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்துவந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பற்றியும் ஆட்சி பற்றியும் ஒவ்வொரு நாளும் பல வதந்திகள் முளைத்துவருகின்றன. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை மையமாகக் கொண்டு எழும் வதந்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாகப் பல்வேறு காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் யூகம் கிட்டத்தட்ட உறுதியான சாத்தியமாகப் பரவலாக நம்பப்பட்டுவரும் நிலையில் …
-
- 0 replies
- 551 views
-
-
ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! என்.எஸ்.ஜி பாதுகாப்புப் படையினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, P.P. 27 (Protected Person) என்று அழைப்பார்கள். அதாவது, என்.எஸ்.ஜி.-யால் பாதுகாக்கப்படும் 27-வது வி.வி.ஐ.வி- என்பது அதன் பொருள். குறிப்பிடுவார்கள். N.S.G. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்தும், அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டும் இதுபோன்றதொரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இவர்களின் பணி, ரெகுலர் போலீசாரோ, துணை ராணுவப் படைய…
-
- 0 replies
- 446 views
-
-
#BREAKING அ.தி.மு.க அலுவலகத்தில் கைகலப்பு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிமுக பொது செயலாளருக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்கள் அதிமுக அலுவலகம் வந்த போது கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/76156-quarrel-in-between-admk-head-office.art
-
- 3 replies
- 685 views
-
-
பா.ஜ.கவுக்கு எதிராக அணி திரட்டும் கார்டன்! டெல்லியை கலக்குமா ஜனவரி? மத்திய அரசுக்கு அ.தி.மு.க.வின் எதிர்ப்பை தெரிவிக்க பா.ஜ.க.வின் எதிரணியிலிருக்கும் அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர கார்டன் வட்டாரங்கள் முடிவு செய்திருப்பதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கார்டனில் சில நாட்களுக்கு முன்பு ரகசிய கூட்டமும் நடந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் கெடுபிடி தமிழகத்தில் அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. வருமான வரித்துறை சோதனையால் அ.தி.மு.க.வினர் கதிகலங்கி நிற்கின்றனர். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் தலையிலேயே வருமான வரித்துறை 'கை' வைத்து விட்டது. அடுத்து யார் என்ற பதற்றம், அ.தி.…
-
- 0 replies
- 424 views
-
-
மனம் மாறுகிறாரா சசிகலா?! - எதிர்ப்பை எதிர்கொள்ள புது வழி அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நாளை நடக்க இருக்கிறது. இன்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த தகராறை சசிகலா எதிர்பார்க்கவில்லை. 'பொதுக்குழுவில் சில மாறுதல்களைச் செய்யலாமா எனவும் ஆலோசித்து வருகிறார்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா முன்னிறுத்தப்படுகிறார். அவருக்கு எதிராக இருந்த சீனியர்கள் பலரும், சசிகலாவின் தலைமையை ஏற்றுச் செயல்பட உள்ளனர். ஆனால், ' 2011-ம் ஆண்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலாவுக்கு, உறுப்பினர் அட்டையையே ஜெயலலிதா கொடுக்கவில்லை. கட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக உறுப்பினர்களாக இல்ல…
-
- 0 replies
- 453 views
-
-
கார்டனை ஆட்டுவிக்கும் ஆடிட்டர்! - ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தும் மர்மம் பொதுக்குழுவை எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நடத்தி முடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள் அ.தி.மு.க சீனியர்கள். கடந்த மூன்று நாட்களாக எந்தவித ரெய்டும் இல்லாததால் கார்டன் வட்டாரத்தில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. ' சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் நீடிப்பதை பா.ஜ.க தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கே சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழக அரசின் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரரும் மணல் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வளைக்கப…
-
- 0 replies
- 427 views
-
-
அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் திடீர் விலகல்! கடந்த 12 ஆண்டுகளாக அ.தி.மு.க.விலிருந்த நடிகர் ஆனந்தராஜ் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாளை அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் கூட உள்ள நிலையில் இந்த அறிவிப்பை ஆனந்தராஜ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தான் அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், 'ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவருடன் யாரையும் ஒப்பிடக் கூடாது. செங்கோட்டையன் மற்றும் பொன்னையன் ஆகியோரின் பேச்சுக்கள் வருத்தம் அளிக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை' என்று கூறினார். http://www.vikatan…
-
- 0 replies
- 566 views
-
-
அதிமுக இனி: எம்ஜிஆர் வழியா, ஜெயலலிதா வழியா? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துவிட்டதால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வருவார் என்பதுதான் ஆரம்ப நாட்களில் நிலவிய சூழல். அதை உறுதிசெய்யும் வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று சசிகலாவுக்கு ஆதரவளித்தனர். ஆனால், கடந்த ஒருவார காலமாக அவர்களுடைய குரலில் ஒரு பெருமாற்றம் தெரிகிறது. பொதுச்செயலாளராக மட்டுமல்ல, நாட்டின் முதல்வராகவும் சசிகலா வர வேண்டும் என்ற குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது. சட்டபூர்வமாக ஒரு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலை…
-
- 0 replies
- 484 views
-
-
அதிகாரத்திற்குள் ரெட்டி-ராவ் கால்பதித்த நேரம்! - கார்டன் தைரியத்தின் பின்னணி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் பேட்டி. 'பொதுக்குழுவுக்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறார் சசிகலா. வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி எங்கே என்ற அச்சமும் அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ளது' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். சென்னை, அண்ணா நகரில் உள்ள ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று மீடியாக்கள் முன்னிலையில் கொந்தளிப்பைக் காட்டினார் ராமமோகன ராவ். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வருமா…
-
- 0 replies
- 341 views
-
-
'திராவிட இயக்கமே ஸ்டாலின்தான்!' - நாஞ்சில் சம்பத்தின் 'நள்ளிரவு தூது' அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான நாஞ்சில் சம்பத் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். 'தி.மு.கவில் இணைவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறார். நேற்று இரவு முழுக்க தீவிர ஆலோசனையில் இருந்தார். ஜனவரி முதல் வாரத்தில் இணைப்புப் பணி நடைபெறும்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'முதலமைச்சர் பதவியையும் அவர் ஏற்க வேண்டும்' என ஆளுங்கட்சி அமைச்சர்கள் பேசி வருகின்றனர். சசிகலா தலைமையை ஏற்காத சீனியர்கள்கூட, அன்றாடம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து வருகின்றனர். இந்தக…
-
- 2 replies
- 1.2k views
-
-
அ.தி.மு.க.,வில் எழுந்துள்ள எதிர்ப்புகளை சரிக்கட்டி, பொதுச்செயலர் பதவி விஷயத்தில் நினைத்ததை சாதிக்க, சசி தரப்பு மும்முரம் காட்டி வருகிறது. அத்துடன், பொதுக்குழு முடிந்த சூட்டோடு, 'சரிவராத' மந்திரிகள் சிலருக்கு, 'கல்தா' கொடுக் கவும், சொன்னதை கேட்கும் தலையாட்டி பொம்மைகளாக பார்த்து, அமைச்சரவை யில் நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்கான பட்டியல் தயாரிப்பு, தற்போது தீவிரமாக நடந்து வருவதாக, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, நிதி அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், முதல்வ ராக பொறுப்பேற்றார். ஏற்கனவே, ஜெயலலிதா இரண்டு முறை பதவி விலக நேர்ந்த போது, பன்னீர்செல்வம் தான், முதல்வர் ஆக்கப்பட் டார். இப்போது, ஜெயலலிதா இ…
-
- 0 replies
- 251 views
-
-
மாடுகளை அடித்துக் கொன்ற சிங்கம் கதை தெரியுமா? - சீனியர்களிடம் கொதித்த சசிகலா ஜெயலலிதாவைப் போல கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு சசிகலாவும் குட்டிக்கதை ஒன்றை சொல்லி உள்ளாராம். அதில் மாடுகளை அடித்துக் கொன்ற சிங்கம் கதையை குறிப்பிட்ட அவர், மத்திய அரசை வெளிப்படையாக அக்காவைப் போல எதிர்க்க நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்ததாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தொழிலதிபர் சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராம மோகன ராவ…
-
- 0 replies
- 636 views
-
-
“ஆம்... எங்கள் சொத்தை சசிகலாதான் அபகரித்தார்!” - கொந்தளிக்கும் கங்கை அமரன் "WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படத்தின் அடுத்த பகுதியை 'அறப்போர் இயக்கம்' வெளியிட்டுள்ளது. 43 நிறுவனங்களுக்கு சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் பினாமியாக இருப்பதாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட முதல் வீடியோவில் அமைப்பு சொல்லி இருந்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை சேர்த்து வீடியோவை வெளியிட்டனர். அறப்போர் இயக்கத்தின் இரண்டாவது பகுதி வீடியோ டிசம்பர் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. ச…
-
- 0 replies
- 611 views
-
-
சசிகலாவை ஏன் சந்தித்தார் ஓ.பி.எஸ்?! -7 நாள் மௌனத்தின் பின்னணி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு வந்த பிறகு, கார்டன் பக்கமே தலைகாட்டாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசினார். ' பொதுக்குழுவில் ஏதேனும் எதிர்ப்புகள் கிளம்புமா என்பது குறித்துத்தான் தீவிர ஆலோசனைகள் நடந்தன' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். டெல்லியில் கடந்த 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கச்சத்தீவு விவகாரம் உள்பட 29 முக்கியக் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் மனு அளித்தார். 'விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' ப…
-
- 0 replies
- 547 views
-