தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் எனக்குத் தெரியாது – நளினி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் தமக்குத் தெரியாது என கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தெரிவித்துள்ளார். நளினி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நளினி முருகன் எழுதிய சுயசரிதையொன்று எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்பட உள்ளது. 500 பக்கங்களைக் கொண்ட இந்த சுயசரிதையில் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் புதல்வி பிரியன்கா காந்தி எதற்காக தம்மை சந்தித்தார் என்பது தமக்க…
-
- 12 replies
- 5.2k views
-
-
‘எந்த சூழ்நிலையிலும் நீங்கள்தான் முதல்வர்!’ - ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் சொன்னாரா ஆளுநர்? பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று மாலை ஆளுநரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். 'மக்களால் தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு, எந்த நேரத்திலும் துணையாக இருப்பேன்' என ஆறுதல் கூறியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரம், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர் கட்சியின் சீனியர்கள். ' சின்னமாவை பொதுச் செயலாளர் பதவிக்குக் கொண்டு வருவதற்காக, விதிகளைத் தளர்த்தவும் …
-
- 0 replies
- 358 views
-
-
'பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டும்' என, சசிகலாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலி யுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட, மந்திரி உதயகுமார் மூலம், சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, ஜெ., பேரவை மூலம், முதல் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு உள்ளது. இதன் மூலம், சசிகலா துதி பாடிகளின் கச்சேரி துவங்கி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, ஏற்கனவே இரு முறை அந்த பதவியை வகித்த, பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, 'ஜெ., வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும்' என, கட்சியின் முக்கிய நி…
-
- 0 replies
- 262 views
-
-
அரசியல் நாகரிகம் முளைக்கிறதா, மீண்டும் தழைக்கிறதா? திமுக, அதிமுக தலைவர்களிடம் தென்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுகவின் முன்னணித் தலைவர்களான தம்பிதுரையும் ஜெயக்குமாரும் நேரில் சென்று நலன் விசாரித்த செய்தி இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் அரும்பத் தொடங்கியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று. அடிப்படையில் ராஜாஜியும் பெரியாரும் இருவேறு துருவங்கள். ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். ஆனால், சித்தாந்தப் பின்புலங்களை…
-
- 0 replies
- 397 views
-
-
சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் ஆக்குவதற்காக கட்சி விதிகள் திருத்தப்படும் என்று அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், தகுதி படைத்த ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கு, கட்சி விதிகளில் திருத்தம் செய்வதில் தவறேதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கிளைக்கழக நிர்வாகிகள் முதல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், சசிகலா அவர்கள் இதுவரை சம்மதம் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதாகவும் பொன்னையன் தெரிவித்தார். …
-
- 5 replies
- 845 views
-
-
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார். தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் இடம்பெற்ற தாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரிடம் ஆசி பெறுவதற்…
-
- 4 replies
- 568 views
-
-
ஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறார் Details Category: விஜயகுமாரன் 11 Dec 2016 Hits: 1396 அரசியல் தரகன், பார்ப்பனப் பயங்கரவாதி சோ. ராமசாமி மண்டையைப் போட்டு விட்டார் . ஒரு எண்பது வயது மனிதரை, "துக்ளக்" என்னும் தமிழ் இதழின் ஆசிரியரை, நாடக ஆசிரியரை, திரைப்பட நடிகரை மரியாதையில்லாமல் அவன், இவன் என்று எழுதலாமா என்று சில மரியாதை ராமன்கள் கவலைப்படலாம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும், ஏழை மக்களிற்கு எதிராக பார்ப்பனிய வெறியைக் கக்கி வந்த இவரிற்கு செருப்பால் அடித்து பாடையிலே ஏற்றுவது தான் சரியான மரியாதை. இவரை நேர்மையானவன் என்றும், நடுநிலையாளன் என்றும், தன் மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்பவன் என்றும் அர…
-
- 1 reply
- 702 views
-
-
'இது நடக்கும்'- அ.தி.மு.க.வினரை அலர்ட் செய்யும் விஜயசாந்தி "கட்சியைப் பிரிக்க சில சதிகள் நடக்கும், அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்" என ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகை விஜயசாந்தி இவ்வாறு கூறினார். கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியும், மொட்டை அடித்தும் வருகின்றனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் மெரினாவில் உள்ள அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி…
-
- 1 reply
- 620 views
-
-
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பா எம்.பி. மனு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். புதுடெல்லி: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சசிகலா புஷ்பா எம்.பி கூறியிருப்பதாவது: ‘ஜெயலலிதா மருத…
-
- 0 replies
- 393 views
-
-
சசிகலா நடராஜனுக்கு எதிராக பி.எச்.பாண்டியன் தலைமையில் நாளை அதிருப்தி குழு உதயம்? சசிகலா நடராஜனுக்கு எதிராக அதிமுகவில் அதிருப்தி குழு உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படும் சசிகலா நடராஜனுக்கு எதிராக மூத்த நிர்வாகி பி.எச்.பாண்டியன் தலைமையில் அதிருப்தி குழு உதயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது உயிர் தோழியாக கருதப்படும் சசிகலா நடராஜன் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த சசிகலா நடராஜன் இதன்மூலம் …
-
- 0 replies
- 386 views
-
-
சின்னம்மா ச(தி)சிகலா அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஆவாரா? தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் "வர்தா" புயல் சென்னை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இரண்டு தாக்கங்களிலிருந்தும் இதுவரை மக்கள் மீளவில்லை. ஜெயலலிதாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான்! அந்த இழப்பு தற்போது அ.தி.மு.க. வுக்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கட்சியின் பிரதான பதவியான பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பது தான் அந்தப்பிரளயமாகும். அடுத்த பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோ…
-
- 0 replies
- 1k views
-
-
'ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை!' -அப்போலோ தலைவர் வேதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் ஆங்கில ஏடு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அவரே கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே.... ''மறைந்த மரியாதைக்குரிய முதல்வரின் பல நற்குணங்களை கண்டு நான் வியந்துள்ளேன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக…
-
- 0 replies
- 380 views
-
-
'எனக்கு இந்த சம்பவத்தால் எவர் மீதும் ஆத்திரமோ வெறுப்போ இல்லை' - வைகோ உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை காவேரி மருத்துவமனைக் சென்றிருந்தார். அப்போது, அங்கு அவருக்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கருணாநிதியை சந்திக்காமலே வைகோ திரும்பினார். இந்நிலையில் இதுகுறித்து, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, "நவம்பர் திங்களில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என அறிந்த மாத்திரத்தில், சகோதரி கனிமொழியிடம் தலைவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சியாகவும்…
-
- 1 reply
- 454 views
-
-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து 11 நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "முதல்வரின் மரணம் குறித்த அறிவிப்பு முதல் அடக்கம் செய்யப்பட்டது வரையில் அனைத்தும் துல்லியமான திட்டப்படியே நடந்தன. ஒரு சாதாரண மனிதனாக இவற்றைக் கடந்து போக முடியவில்லை" என குமுறுகிறார் சீமான். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆளும்கட்சியின் ஏழு நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வுகள் முடிந்து போய்விட்டன. புதிய முதல்வராக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என அ.தி.மு.கவின் சீனியர்கள் பேசி வருகின்றனர். " 2020-ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால், இப்படி வேறு ஒருவரை…
-
- 11 replies
- 1.6k views
-
-
சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது! 2011 டிசம்பர் மாதம் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. சசிகலாவோடு அவரது உறவுகளையும் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். எல்லாம் மூன்று மாதங்கள்தான். 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி சசிகலாவிடம் இருந்து அதிரடியாக வந்தது ஓர் அறிக்கை. ‘‘என் உறவினர்கள் அக்காவுக்கு துரோகம் செய்தது எனக்குத் தெரியாது. அக்காவுக்கு எதிரான சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன. துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’’ என்றெல்லாம் சசிகலா வெளியிட்ட அந்த அறிக்கையை அரசியல் மேகங்கள் மாறியிருக்கிற சூழலில், 5 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தால் சிரிப்புதான் வருகிறது…
-
- 5 replies
- 1.5k views
-
-
சென்னை: எம்.எல்.ஏக்களை பிரித்து அதிமுகவை உடைக்கும் திறமை தன்னிடம் இருப்பதாகவும், அது தமிழக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் இல்லை என்றும் கூறியுள்ள பாஜக ராஜ்யசபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 'தி இந்து' நாளிதழுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்பு பேட்டியில் இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதால்தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும் என்று தெரிவித்துள்ள சுவாமி, "சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, நர்சுகளுடன் அவர் பேசியதாக சொல்லப்பட்டது, உண…
-
- 1 reply
- 522 views
-
-
சசிகலாவுக்கு 'செக்' வைத்தாரா ஜெயலலிதா? -அ.தி.மு.க உறுப்பினர் அட்டை மர்மம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'ஜெயலலிதா தலைமையில் நடந்த கடைசி செயற்குழு கூட்டத்திலும் சசிகலா பெயர் இல்லை. அவருக்கு உறுப்பினர் அட்டையையே முதல்வர் வழங்கவில்லை' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பு அணியினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக, போயஸ் கார்டனில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் சசிகலா. பொதுக்குழுவை எங்கே நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் …
-
- 0 replies
- 441 views
-
-
'வார்தா' விளைவு: கும்மிடிப்பூண்டி முகாமில் அடிப்படை உதவிகளுக்கு ஏங்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் முகாமில் சேதமடைந்துள்ள வீடு | படம்: இரா.நாகராஜன். "எங்களுக்கு பாய், போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டிகள் கிடைத்தால் உதவியாக இருக்கும். வீடுகளை சீரமைக்க வழியின்றி தவிக்கிறோம்." 200 மரங்கள் விழுந்தன | 7 பேர் படுகாயம் | 200 வீடுகள் சேதம் வார்தா புயலினால், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 200 மரங்கள் விழுந்தன. இதனால், 7 பேர் படுகாயமடைந்தது மட்டுமல்லாமல், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அடிப்படை உதவிகளுக்காக முகாமில் வாழும் மக்கள் க…
-
- 1 reply
- 336 views
-
-
பேசும் படம்: ரஜினியை 'தலைமை'க்கு அழைக்கும் ரசிகர்கள்! பல ஆண்டுகளாகவே ரஜினியை அரசியலுக்கு அழைப்பதை அவரது ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களின் பல்வேறு சூழல்களில் அந்த அழைப்பு அழுத்தமாகத் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், சென்னை - மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி நோக்கி அமைதி ஊர்வலம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதையொட்டியும், ரஜினியை அரசியலுக்கு வறுமாறும் சென்னையில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர் மன்றத்தினரால் போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. "1996-க்கு பிறகு 2016 …
-
- 1 reply
- 565 views
-
-
ஜெயலலிதா உயில் சர்ச்சை இருக்கட்டும்... எம்.ஜி.ஆர். உயில் பற்றி தெரியுமா?! தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது அரசியல் வாரிசு யார் என்பதும், சொத்துகளுக்கு யார் வாரிசு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என சொல்லப்படும் சசிகலா தான் அரசியல் வாரிசு என சொல்லப்படும் நிலையில், அவரது சொத்துகளுக்கு யார் வாரிசு என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் துவங்கி அவரது சொத்துகள் யாருக்கு போகும் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஜெயலலிதா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா உயில் குறித்து தொடர்ச்சிய…
-
- 0 replies
- 811 views
-
-
பொதுச் செயலாளராக நியமிக்க தடை கோரி சசிகலா புஷ்பா எம்.பி. வழக்கு: சசிகலா, அதிமுக, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் சசிகலா | கோப்புப் படம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தோழியான சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க தடை விதிக்க வேண்டும். அவருக்கு சாதகமாக கட்சி விதி களில் திருத்தம் கொண்டுவர தடை விதிக்க வேண்டும்’’ என்று அதில் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக் காக எடுத்து விசாரிக்குமாறு நீதிபதி கே.கல்யாணசுந்தரத்திடம் சசிகலா புஷ்பா சார்பில் மூத்த வழக் கறிஞர் கே.எம்.விஜயன் நேற்று காலை முறையீடு செய்தார். இதை யட…
-
- 0 replies
- 332 views
-
-
வர்தா புயல் வீழ்த்திய பறவைகளின் எதிர்காலம் கடந்த வாரத்தில் சென்னையை 130கிமீ வேகத்தில் தாக்கிய வர்தா புயலால் பெருமளவு பாதிப்பை மனிதர்களை விட பறவைகள் சந்தித்துள்ளன என்ற கருத்து எழுந்துள்ளது. வர்தா புயலால் தமிழகத்தில் 16 பேர் உயிரிழந்தனர்; 15,000க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்வுக்கு ஆளாகினர்; ஆயிரக்கணக்கில் மரங்கள் சாய்ந்தன என்று கூறி தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.1,000 கோடி தேவை என கோரிக்கை வைத்துள்ளது. இந்த செய்திகளுக்கு பின் சென்னையில் பறவைகள் தங்களது உணவுக்காகவும், இருப்பிடத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை பற்றி விவாதிக்கப்படவில்லை என்கிறார்கள் சூழலியலாளர்கள். புயலில், பறவைகள் இளைப்பாறுவதற்கான மர…
-
- 0 replies
- 361 views
-
-
'சசிகலாவை முன்னிறுத்தினால், அ.தி.மு.கவுக்கு ஆபத்து!' - பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த திட்டம் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வரவிடாமல் தடுப்பதற்கான சட்டரீதியான வேலைகள் தொடங்கிவிட்டன. சசிகலா எதிர்ப்பாளர்களையும் சந்திக்க இருக்கிறார் அமித் ஷா" என்கின்றனர் பா.ஜ.க. நிர்வாகிகள். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்டத் தலைமை குறித்த விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. 'மத்திய அரசு உள்ளே நுழையப் பார்க்கிறது. அ.தி.மு.கவை வழிநடத்த சசிகலாவின் தலைமை அவசியம்' என சீனியர்கள் பேசி வருகின்றனர். அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி புதிய தலைமையை தேர்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில், …
-
- 9 replies
- 2.1k views
-
-
சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா? நேரலைச் செய்தியில் பார்த்தேன், 'ஜெயா பிளஸ்' தொலைக்காட்சியில், எவ்வளவு சுமுகமாகவும் இயல்பாகவும் அதிகார மாற்றம் நடக்கிறது அதிமுகவில்! காலைச் செய்தியில், 'வி.கே.சசிகலா' ஆக இருந்தவர், மாலைச் செய்திக்குள் 'சின்னம்மா' ஆகிவிட்டார்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுகவினரிடம் தொடரும் கச்சிதமான ரகசியத்தன்மை உள்ளபடியே வியக்க வைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும், அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றதாகட்டும், சசிகலாவிடம் தலைமைப் பதவியை ஏற்கச் சொல்லி அவர்கள் மன்றாடியத…
-
- 0 replies
- 423 views
-
-
ரிசர்வ் வங்கி டூ சேகர் ரெட்டி! - சி.பி.ஐ வலையில் தமிழக அமைச்சர்கள் அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டைத் தொடர்ந்து, அவருக்கு பணத்தை மாற்றிக் கொடுத்த வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர். 'வருமான வரித்துறையில் பிடிபட்ட சேகர் ரெட்டிக்குச் சொந்தமான பணம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை சி.பி.ஐயின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. எப்போது வேண்டுமானாலும் அதிரடி நடவடிக்கைகள் பாயலாம்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பிரேம் குமார் ஆகியோரது வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித…
-
- 0 replies
- 342 views
-