Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இரு அணிக்கும் இல்லை இரட்டை இலை! பிரமாண பத்திரங்களை படிக்க போவதில்லை தேர்தல் கமிஷனிடம், பலத்தை நிரூபிப்பதற் காக, கட்சி நிர்வாகிகளிடம் பிரமாண பத்திரங் களில் கையெழுத்து பெறுவதில், அ.தி.மு.க., அணிகளிடையே, கடும் போட்டி தொடர்கிறது. இதனால், இரு அணிகளுக்கும், இரட்டை இலை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் கமிஷனிடம், தங்களுடைய பலத்தை நிரூபிக்க, பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற னர். கட்சியில் இருப்பவர்களிடம், தங்களுக்கு சாதகமாக, பிரமாண பத்திரங்களை வாங்கி, ஒட்டுமொத்தமாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரை, பன்னீர் அணி தரப்பி…

  2. இலங்கையிலிருந்து கடத்திய தங்கத்துடன் இந்தியாவில் இருவர் கைது ; பிரதான நபரைத் தேடி வலைவீச்சு ராமேஸ்வரம் அருகே இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்கத்துடன் இருவரை கைதுசெய்துள்ள இந்திய மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் பிரதான சந்தேக நபரைத் தேடிவருகின்றனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி ஊடாக தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த இரண்டுநாட்களாக சுங்கத்துறை, மத்திய உளவுத்துறையினர் கியூ பிரிவு கடலோரக்காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர சோதணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று…

  3. ''சாட்டை சுழற்றும் கவர்னர்... அடுத்த குறி அமைச்சர்களா..?'' தமிழகக் கவர்னராக பன்வாரிலால் புரோகித் கடந்த ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து, 'கள ஆய்வு' என்று ஒவ்வோர் ஊராகச் சென்று வருகிறார். கோவையில் தொடங்கிய அவரது ஆய்வுப் பயணம், இப்போது ஒவ்வொரு நகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ஆளும்கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன. ஒவ்வோர் ஊருக்கும் பன்வாரிலால் புரோகித் வரும்போது அவருக்கு தி.மு.க சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படுகிறது. சமீபத்தில் திருச்சி வந்த கவர்னருக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டனம் தெரிவ…

  4. உலர் ஷாம்பூவில் புற்றுநோய் கூறுகள்: உலர் ஷாம்பூவுக்கும், சாதாரண ஷாம்பூவுக்கும் என்ன வேறுபாடு? கௌதமி கான் பிபிசி தெலுங்கு செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UNILEVERUSA.COM படக்குறிப்பு, ஷாம்புகள் உலர் ஷாம்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதால் அமெரிக்க சந்தையில் இருந்து அவற்றைத் திரும்பப் பெறுவதாக முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான யுனிலீவர் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த உலர் ஷாம்பூகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படியும், அவற்றை தங்கள் கடைகளின் அலமாரிகளில் இருந்து வெளியே எடுக்கும்படியும் சில்லறை விற்பனையா…

  5. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எழுப்பிய புதிய கேள்வி! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுள் ஒருவரான செலமேஸ்வர் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார். டெல்லியில் நடந்த ஹார்வர்டு க்ளப் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் நடத்திய “ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் கரண் தாப்பர் உடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கலந்துகொண்டார். அப்போது நீதிபதி செலமேஸ்வர் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு …

  6. ”இறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம்!”- ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ் ``பாசிச சக்திகள் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை. மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் இவர்களுடைய இறுதிநாள்கள் எப்படி இருக்கும் என்பதை மனித இனம் நிச்சயம் பார்க்கும்.” நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப்பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். – பெரியார் (விடுதலை:23-8-1940) …

  7. கனடாவுக்கு அனுப்புவதாக கூறி நபரொருவர் தம்மிடம் 10 இலட்சம் இந்திய ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, இலங்கை அகதி ஒருவர் குடும்பத்துடன் சென்று பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியாவை சேர்ந்த செல்வராஜா என்பவரே தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் தர்சிகா மற்றும் தனது 2 மகன்களும் வந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்று, பவானிசாகர் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் சிலருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை(02) காலையில் சென்ற செல்வராஜா, முறைப்பாடொன்றை வழங்கியுள்ளார். 2009ஆம் ஆண்டில் ராஜ்கபூர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சென்…

  8. கட்டுப்பாட்டு சுவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது? அதிகாரிகள் குழப்பம்! திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது மோதியது எப்படி என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. இந்த விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மீது மோதியுள்ளது. உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். இதனால் நிலைதடுமாறி கொஞ்சம் சுற்று சுவரில் இடித்துள்ளது. அதன்பின் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மும்பையி…

  9. ‘காவிரி டெல்டா’வைப் புரட்டிப் போட்ட ‘கஜா’ எம். காசிநாதன் / 2018 நவம்பர் 26 திங்கட்கிழமை, மு.ப. 12:29 ‘கஜா’ப் புயல், தமிழகத்தைப் புரட்டிப் போட்டு விட்டு, பறந்து விட்டது. 63 பேருக்கு மேல், உயிர்ப் பலி வாங்கிய இந்தப் புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு,‘சுனாமி’யைப் பார்த்தது; ‘தானே’ புயலைப் பார்த்தது; ‘ஒகி’ புயலைப் பார்த்தது; ஆனால், இந்தக் ‘கஜா’ புயல் பாதிப்பு, மற்றப் புயல்களை விட வீரியமானது. இரண்டரை இலட்சம் மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள், “கஜாப் புயல், உயிரை விட்டுவிட்டு, உடைமைகளை எடுத்துச் சென்று விட்டது” எனக் கூறுகிறார்கள். …

  10. முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தால் ஜெயலலிதா உட்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனுவை நேரில் அளித்தார். லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 7 பினாமி நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், திமுக மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66.55 கோடி சொத்து சேர்த்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நால்வருக்கும…

    • 0 replies
    • 170 views
  11. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை by : Benitlas நாடு முழுவதும் எதிர்வரும் 22ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி எதிர்வரும் 22ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா காரணமாக விநாயகர் சிலைகள் அமைக்க, வழிபட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்குமாறு இந்து அமைப்புகள் சில கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் தமிழக அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளி…

    • 0 replies
    • 607 views
  12. ஜெயாவை பார்க்க வந்த மர்ம நபர் யார்.? : காரணம் வெளியாகியது.! தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு வாரங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில்; உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவரை இன்னமும் நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை. ஒரு மாநில முதல்வர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பரும் கூட. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட அப்பல்லோ வந்து முதல்வரின் நலம் விசாரித்தார். ஆனால் பிரதமர் மோடி இன்னமும் வராதது ஆச்சரியமாக பார்க்கப்படுக…

  13. இன்று ஈரோடு மாவட்டத்தில் அணைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் தனித் தமிழீழம் அமைக்க கோரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தனர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலை விடுதலை செய்தனர் . http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13518:erodu-rain&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 452 views
  14. காவிரி கரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் படங்களுக்கு மாலை போட்டு திதி கொடுக்கும் போராட்டத்தை தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினர். காவிரி கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் மூவரின் படங்களுக்கு பூ மாலைப் போட்டு, வாழை இலையில் தேங்காய், வாழைப் பழம், பொட்டுக்கடலையுடன் படையல் வைத்தார்கள். தொடர்ந்து, அர்ச்சகர் வேடத்தில் இரண்டு மாணவர்கள் ஓமக் குண்டத்தை உருவாக்கி வேதம் ஓதினார்கள். சோனியா, சுப்பிரமணிசாமி, ராஜபக்சே உறவினர்கள் போல மாணவர்களே வேடம் தரித்து மந்திரம் ஓதி, ஈமச்சடங்கு செய்து, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கதறி அழுதார்கள். பின்பு அவர்கள் நெருப்பு குண்டத்தில் இருந்த அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்த…

    • 0 replies
    • 516 views
  15. காங்கிரஸ் கட்சியையே நாடு கடத்த வேண்டும் இம்மண்ணை விட்டு விரட்ட வேண்டும் மாணவர்கள் சாலை மறியல். பிரிவு: தமிழ் நாடு ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது....அதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டி தமிழகம் முழுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது தமிழக அரசு...பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று (ஏப்ரல் 3) தமிழக கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது . மூடியது கல்லூரியின் கதவுகள் தான் எங்கள் இதயங்கள் அல்ல! எங்கள் இதயங்களில் எரிந்து கொண்டு இருக்கும் தீ! தமிழீழம் மலர வேண்டும் என்ற கொள்கை தீ!அது இலக்கை அடையும் வரை ஓயாது! அணையாது!' என்றவாறே சேலம் வின்செண்டில் இரு…

    • 0 replies
    • 743 views
  16. சசிகலாவை ஏன் சந்தித்தார் ஓ.பி.எஸ்?! -7 நாள் மௌனத்தின் பின்னணி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு வந்த பிறகு, கார்டன் பக்கமே தலைகாட்டாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசினார். ' பொதுக்குழுவில் ஏதேனும் எதிர்ப்புகள் கிளம்புமா என்பது குறித்துத்தான் தீவிர ஆலோசனைகள் நடந்தன' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். டெல்லியில் கடந்த 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கச்சத்தீவு விவகாரம் உள்பட 29 முக்கியக் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் மனு அளித்தார். 'விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' ப…

  17. மறைந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் புனைப்பெயர்களை சசிகலா சூட்டி கொண்ட தால், அ.தி.மு.க.,வினர் கடுப்படைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியில், பதவி களில் உள்ள முக்கிய நிர்வாகிகள், அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கும், இதில் உடன்பாடு இல்லை. இருப்பினும், தங்களது பதவிகளை தக்க வைப் பதற்காகவும், பலமான எதிர்ப்புகள் உருவாகா மல் இருப்பதற்காகவும், பலர் அமைதி காத்து வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக மாறியதில் இருந்து ஜெயலலிதா பாணியில், உடை அலங் காரம், முடி அலங்காரம், பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றை, ஜெ., போலவே சசிகலா மாற்றி யமைத்து வலம் வருகிறார்.இதன…

  18. தமிழகத்தில் ஈழத் தமிழர் படும் துயரம்- பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழகத்தில் ஈழத் தமிழர் படும் துயரம்- பத்திரிக்கையாளர் சந்திப்பு வாருங்கள் தமிழர்களே! பேசுபொருளாக்குவோம் தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் பிரச்சனையை... செய்தியாளர் சந்திப்பு அழைப்பு இலங்கையில் நடந்த இனப்படுகொலையையொட்டி தமிழகத்திற்கு தப்பி வந்து ஈழத் தமிழர்கள் பலர் 20 முதல் 30 ஆண்டுகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்தில் வெளிப்பதிவில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கும் உரிமைகள் அற்றவர்களாக இங்கு வாழ்கிறார்கள். இலங்கைக்கும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அசையும்(…

  19. சென்னை: கோவையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, பட்டினிப்போர் நடத்தியவர்களை கைது செய்ததற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கினால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். தினமும் 800 டன் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக (சுமார் 70,000 மக்கள்) வசிக்கின்ற பகுதிகளை ஒட்டி இந்த குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டபோதே அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமலும், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கருத்துகளைக் கேட்காமலும…

  20. Thirumurugan Gandhi: நீண்ட நாட்களாக உழைத்து உண்மையை வெளியே கொண்டு வர பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள் தோழர்கள்..நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகள் மற்றும் மரணதண்டனைக் குறித்து அறிவதற்கான மிக மிக முக்கிய ஆவணம். வெள்ளி மாலையில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். அவசியம் பார்க்கவும், பரப்பவும். இதற்கான கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை, 23-நவ, தி. நகர் - சர்.பிட்டி தியாகராய அரங்கில் நடக்கிறது. அனைவரும் அவசியம் வரவேண்டும்.. இது தமிழ்ச் சமூகத்தின் வலி. அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம். குறுஞ்செய்திகள், நேரடி அழைப்புகள், மின்னஞ்சல் மூலமாக அனைவரிடத்தில் பரப்புவது நம் கடமை... அடுத்த மாதத்தில் மூவ…

  21. நிர்மலா சீதாராமன்: ரேஷன் கடையில் நரேந்திர மோதி படம்; கலெக்டருடன் அமைச்சர் வாக்குவாதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER @NSITHARAMANOFFC பிரதமரின் படத்துடன் கூடிய ஒரு பேனரை எங்கள் ஆட்கள் வைப்பார்கள். ஒரு மாவட்ட ஆட்சியராக அதற்கு சேதமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இல்லாவிட்டால் நானே, இங்கு பேனர் வைப்பேன் என்று பேசியுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏன் இப்படி பேசினார்? என்ன நடந்தது? இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, ஆட்சியரிடம் தொடர்…

  22. திராவிட இயக்கத்தின் திருப்புமுனையாக அமைந்த தமிழ் சினிமா: ‘பராசக்தி’யின் 70ஆம் ஆண்டு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திராவிடர் இயக்கத் திரைப்படங்களில் திருப்பு முனையாக அமைந்த பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. தமிழ் திரைப்பட வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் இந்தத் திரைப்படம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? 1952ஆம் ஆண்டு. அக்டோபர் 17ஆம் தேதி. சிவாஜி கணேசன் நாயகனாக நடிக்க மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படம் தமிழ்நாடெங்கும் திரையிடப்பட்டது. தி.மு.க. தொண்டர்கள் இதனை தங்கள் கட்சித் திரைப்படமாகப் …

  23. ஜெயலலிதாவின் ரத்த, திசு மாதிரிகள் இல்லை: அப்போலோ பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம் இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் உடலுக்கு எங்களது வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடலைத் தோண்டியெடுத்து எங்கள் சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலு…

  24. கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் வகையில் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சர்ச்சைப் போஸ்டர்கள் அகற்றப்பட்டன. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என சிலர் சென்னையின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால், அங்கு கன்னட மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் கர்நாடக காவல்துறை உயர் அதிகாரி எம்.என். ரெட்டி, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். விஷமிகள் சிலர் ஒட்டிய சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் அகற்றப்பட்டதாகவும் தனது ட்வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.