Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி! ‘‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்!’ - தேர்தல் மேடைகளில் மட்டுமல்ல.. பொது நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா சொல்லும் தாரக மந்திரம் இது. அந்த வார்த்தையை சொன்ன அம்மா இனி இல்லை என தெரிந்தபோது கதறினார்கள் ஓட்டுப் போட்ட மக்களோ மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள். ஓட்டு வாங்கி மக்கள் பிரதிநிதிகளோ இந்த அளவுக்கு கண்ணீர் சிந்தவில்லை. அப்போலோ தொடங்கி எம்.ஜி.ஆர் சமாதி வரையில் ஜெயலலிதாவை சுற்றி வளையம் அமைத்தது மன்னார்குடி. இது மக்கள் ஆட்சியா? மன்னார்குடி ஆட்சியா? என ஜெயலலிதாவின் சமாதி ஈரம் காய்வதற்குள் கதறல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஜெயலலிதாவை எட்ட…

  2. 'எப்போது உயில் எழுதினார் ஜெயலலிதா?!' - சசிகலாவை திணறடிக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள் ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய பொது தகவல் அலுவலர், ராஜ்பவனுக்கு நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார். அதன் விவரம்: * முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல…

  3. ஜெ.வுக்கு மோடி அஞ்சலி.. சசிகலா தலையைத் தொட்டு ஆறுதல்.. மோடியைக் கட்டிப்பிடித்து கதறிய ஓபிஎஸ் சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்த…

  4. சசிகலாவுக்கு எதிரான அந்தக் குரல் உச்சநீதிமன்ற வழக்கறிஞருடையதா? சசிகலா மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற முயல்வதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டும் ஆடியோ என சமூக வலைதளங்களில் ஒரு உரையாடல் பரவி வருகின்றது. அந்த ஆடியோவில், ஜெயலலிதாவின் பல கோடி சொத்துக்களை அபகரிப்பதற்காக சசிகலா முயல்வதாக அவர் குறிப்பிடுகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். 'சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியே போ' என்கிறார். தேவைப்பட்டால் ஜெயலலிதா அ.தி.மு.க. என்று துவங்கி ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவைக் கொண்டு கட்சி நடத்துவோம் என்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பாக நீதிமன…

  5. மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - அத்தியாயம் 1 ‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை... அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல. பெங்களூரு நோக்கி முதல் பயணம்: பெரிய வசதியெல்லாம் இல்லைத…

  6. தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்! தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தம…

  7. ஜெ சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இன்று மாலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானார். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு பல்வேறு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜெ.,வின் உடலுக்கு அருகே சசிகலா, இளவரசி ஆகியோரின் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். அதிமுக அமைச்சர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா, ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே தென்படவில்லை. அதுமட்டுமின்றி போயஸ் கார்டனில் நடந்த சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து…

  8. சசிகலா VS ஓபிஎஸ்.... அதிமுக இரண்டாக உடைவது உறுதி- சு.சுவாமி பரபரப்பு பேட்டி அதிமுக உடையும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். டெல்லி: அதிமுக இரண்டாகவது உடைவது உறுதி என்று பாரதிய ஜனதாவின் ராஜ்யசபாவின் எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஆரூடம் கூறியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானர். அவரது உடல் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியோ அதிமுக உடையும் என ஆரூடம் கூறியுள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது: அதிமுக நிச்சயமாக உடைவது…

  9. 'முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வதே நல்லது!' - தமிழக அமைச்சர்களின் மனநிலை புதிய முதல்வராக ஆளுநர் மாளிகையில் 5-ம் தேதி நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். 'தற்போதுள்ள சூழலில் தலைமைப் பதவிக்கு வர விரும்பினார் எடப்பாடி. சசிகலாவின் சமாதானத்தால் அமைதியாகிவிட்டார். தலைமைக்கழக கூட்டத்திலும் எடப்பாடிக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்த ஜெயலலிதா, 2011-16ம் ஆண்டு ஆட்சியில் கோலோச்சியவர்களை ஓரம்கட்டியே வைத்திருந்தார். 2016 தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொடுத்ததில், கொங்கு மண்டலத்தின் பங்கு அதிகம். இதனால…

  10. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தீராத சோகத்தை தந்த டிசம்பர் மாதங்கள்.! டிசம்பர் மாதம் என்றாலே தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் தீராத சோகத்தை தரக்கூடிய மாதம் என்ற கருத்து ஜெயலலிதாவின் மறைவால் தற்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இதற்கு கண்கண்ட உதாரணமாக பல துயரச் சம்பவங்களை சொல்லலாம். மக்களிடையே நிலவிவந்த மூடநம்பிக்கையை வேரோடு வீழ்த்த தமிழ்நாட்டில் தோன்றிய ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கடந்த 24-12-1972 அன்று காலமானார். இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பொறுப்புவகித்த ’சக்கரவர்த்தி’ ராஜகோபாலாச்சாரியார் கடந்த 25-12-1972 அன்று காலமானார். தமிழ்நாட்டு மக்களால் ‘மக்கள் திலகம்’ என்று போற்றப்பட்ட அ.தி.மு.க. நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் ம…

  11. துக்ளக் பத்திரிகையின் முதல் அட்டைப்படம் பின்னணி! #RIPcho "எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!'' - ''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?'' என்ற கேள்விக்குதான் இப்படி பதில் சொன்னார் சோ. ஆமாம். உண்மையில் அவர் சினிமா நடிகராக வர வேண்டும் என்றோ, பத்திரிகையாளராக வர வேண்டும் என்றோ அவர் யோசித்தது இல்லை. நிகழ்காலத்திலே தன் முழு கவனத்தையும் செலுத்தினார். அதுதான் அவரை அடுத்தடுத்த தளத்துக்கு அழைத்துச் சென்று உச்சத்தில் நிறுத்தியது. அரசியல், சினிமா, நாடகம…

  12. பெங்களூரு அத்தியாயங்களுக்குப் பிறகே ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு தீவிரமானது! சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரை முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கடந்த 2014-ம் ஆண்டு வரை அச்சுறுத்தும் அளவுக்கு செய்திகள் வெளியானது இல்லை. வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் இரண்டாவது முறையாக தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதுபோல், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தண்டனை விதிக்க…

  13. அப்போலோவில் திடீர் பரபரப்பு உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது. குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தர…

  14. எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா! நேற்று (05.12.2016) இரவு 11.30 மணி அலவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார். இன்று முழுவதும் ராஜாஜி அரங்கத்தில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. 4.30 மணியளவில் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி ஜெயலலிதா கொண்டு வரப்பட்டார். மாலை 6.00 மணிக்கு, அவரது உடல் மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. http://www.vikatan.com/news/tamilnadu/74324-jayalalithaa-buried-at-mgr-memorial-in-marina-beach.art

  15. அப்போலோ... அறை எண்: 2008... இன்று எப்படி இருக்கிறது? அப்போலோ. க்ரீம்ஸ் ரோடு. கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகவரி. முதலில் அறை எண் 2008ல் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகளில் அடிபட்டது. பிறகு அறை மாற்றப்பட்டார். உள்ளே அவர் எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாவிட்டாலும், அப்போலோ என்ற முகவரி அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் வந்து சென்றுகொண்டிருந்த இடமாக இருந்தது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த இத்தனை நாட்களில் முன்வாயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கும், கேமராமேன்களுக்கும் அமைக்கப்பட்டிருந்த இடத்தில்தான் அவர்களுக்கு அனுமதி. மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் காத்திருக்கும் செய்தியாளர்களுக்கு தேவையான நேரத்தில் உணவோ, தேநீரோ…

  16. ஜெயா இல்லாத சசி இனி என்ன செய்வார்? 80 களில் ஜெயலலிதா அ.தி.மு.க வுக்கு தமிழகம் முழுதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான் முதன்முறையாக சசிகலாவின் அறிமுகம் கிடைக்கிறது. மைலாப்பூரில் ஒரு சாதாரண வீடியோ கவரேஜ்& லெண்டிங் லைப்ரரி வைத்திருந்த சசிகலா நடராஜனுக்கு அந்த தேர்தல் பயணம் முழுக்க ஜெயலலிதாவின் உடனிருந்து அவரது பிரச்சாரப் பேச்சுகளை கவரேஜ் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படித்தான் ஆரம்பமானது இவர்களது நட்பு. பின்னர் அது விருட்சமாக வளர்ந்து சின்னம்மா இல்லாமல் ‘அம்மா’ இல்லை எனும் நிலையை வெகு சீக்கிரத்திலேயே அடைந்தது. ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கையில் ந…

  17. ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும்..? சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று நடக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும் என்பது குறித்து, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று பரபரப்பு டிவிட்டை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா பொது வாழ்க்கைக்கு வரும் முன்பே, சினிமா மூலம் கணிசமாக வருவாய் ஈட்டியவர். அவருக்கு ரூ.113.73 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் அசையக்கூடிய சொத்துக்கள் மதிப்பு ரூ.41.63 கோடியாகும். அசையாத சொத்துக்கள் மதிப்பு ரூ.72.09 கோடியாகும். ரூ.2.04 …

  18. 'எம்.எல்.ஏக்கள், மா.செக்களுக்கு அவசர அழைப்பு ஏன்?' -விடிய விடிய ஆலோசித்த சசிகலா தமிழக முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ' கழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் எம்.எல்.ஏக்களும் அப்போலோ வருமாறு ஓ.பன்னீர்செல்வம் அழைத்தார். சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன' என்கின்றனர் மாவட்ட நிர்வாகிகள். காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலிலதா. ' கார்டன் திரும்புவதை முதல்வரே உறுதி செய்வார்' என அப்போலோ நிர்வாகமும் தெரிவித்து வந்தது. இதுகுறித்து நேற்று மீடியாக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், 'முதல…

  19. "துரோகிகள்" புடைசூழ துயில் கொள்கிறாரே ஜெ... அதிமுகவினர் கடும் விரக்தி! சசிகலாவின் உறவினர்கள் ஜெயலலிதாவின் உடலை சுற்றி நிற்பதற்கு அதிமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துரோகிகள்; சதிகாரர்கள் என அடையாளம் காட்டப்பட்ட அத்தனை பேரும்தான் அவரது உடலை சுற்றி நிற்கிறார்கள்...இது எவ்வளவு பெரிய அநியாயம் என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக ஒரு நடவடிக்கை மேற்கொண்டார். அதாவது சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன், உறவினர்கள் டி.டி.வி தினகரன், வி.என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி.கே. திவாகர், வி.மகாதேவன், வி. தங்கமணி, டாக்டர் வெங்கடேஷ் என 13 பேரை அ…

  20. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது 68வது வயதில் இன்று இரவு காலமானார். இந்நிலையில். போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறவுள்ளதாகவும், பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், நாளை மாலை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லட…

  21. செப்டம்பர் 22ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை முதல்வரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நேற்று மாலை மாரடைப்பால் முதல்வர் ஜெயலலிதா தீவிரசிகிச்சைப் பிரிவிக்கு மாற்றப்பட்டார். அதன் பின் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் முதல்வர் உள்ளார். இருப்பினும் முதல்வரின் உடல்நி…

  22. தமிழகத்தில் உள்ள அமெரிக்கர்களுக்கு அலெர்ட்! முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் உடல்நிலை குறித்த செய்தி தமிழகம் முழுவதும் பதற்ற நிலையை உருவாக்கி உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், தமிழகத்தில் அதிகம் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/74188-the-american-state-departme…

  23. பிசியோதெரபி சிகிச்சை முடிந்தவுடன் ஜெயலலிதா வீடு திரும்புவார்' உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலன் பெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். ஃபிசியோதெரபி முடிந்தவுடன் ஜெயலலிதா வீடு திரும்புவார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், ஜெயலலிதா நன்கு பேசுமளவுக்கும், தானாகவே உணவருந்தும் அளவுக்கும் குணமடைந்திருப்பதாக அவர் கூறினார். அதிகாரிகளுக்கு ஆட்சி தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதிலும் அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதிலும் முதல்வர் தற்போது ஈடுபட்டுவருவ…

  24. ஜெயலலிதா, கருணாநிதி சுகயீனம் : அரசியல் வாரிசுகள் யார்? தமி­ழக அர­சி­யலில் அசைக்­க­மு­டி­யாத சக்­தி­க­ளாக தி.மு.க.தலைவர் மு.கரு­ணா­நி­தியும் அ.தி.மு.க பொதுச்­செ­ய­லாளர் ஜெய­ல­லி­தாவும் காணப்­ப­டு­கின்­றனர். இவர்­களை மைய­மாக வைத்தே தமி­ழக அர­சியல் நடை­பெற்று வரு­கின்­றது. இந்த நிலையில் இவர்கள் இரு­வரும் சுக­யீ­ன­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பது தமி­ழக மக்­க­ளி­டையே பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தமி­ழக முதல்­வரும் அ.தி.மு.க பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான ஜெய­ல­லிதா இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக சென்னை அப்­பல்லோ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­பெற்று வரு­கின்றார். அவர் பூரண குண­ம­டைந்து எப்­போது திரு…

  25. நம்புங்க, முதல்வரை நான் பார்த்தேன்..! மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஒப்புதல் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து, சட்டமன்ற குழுக்களை உடனடியாக அமைக்க கோரி மனு கொடுக்கச் சென்றனர். அப்போது, தி.மு.க பிரமுகர் துரைமுருகன் ஆளுநரிடம் பேசும்போது, "எழுபது நாட்களுக்கு மேல் ஆகிறது. ஜனநாயக நாட்டில் ஒரு முதல்வரை யாரும் சந்திக்க முடியவில்லை. எல்லாமே மர்மமாக இருக்கிறது..." என்று ஆரம்பித்திருக்கிறார். அப்போது குறுக்கிட்ட ஆளுநர், "நான் முதல்வரை சந்தித்தேனே?" என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத துரைமுருகன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.