Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முக்கிய செய்திகள் : இந்தியா : நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி மறந்துவிட்டார்: மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு. தமிழகம் : சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே மோதல்: மாணவரின் கழுத்து கத்தியால் கிழிக்கப்பட்டதால் அதிர்ச்சி. தமிழகம் : செங்கத்தில் காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலர்கள் நேரில் விசாரணை. …

    • 0 replies
    • 527 views
  2. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 22ம்தேதி மதியம் பள்ளி தொடங்கிய நிலையில் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆசிரியர் அருகில் சென்று விசாரித்தபோது, அம்மாணவர்கள் போதையில் இருந்தது தெரிய வந்தது. இந்த தகவல் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளார். அதில் அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாள் என்பதும் இதையடுத்து அந்த குறிப்பிட்ட மாணவன், பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கட்டிடத்தில் தன்னுடன் படிக்கும் 11 மாணவர்களை அ…

  3. தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார் ஞானக்கூத்தன் | கோப்புப் படம். தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை, திருமந்திரம் நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ’கசடதபற’ இதழைத் துவக்கினார். ’ழ’, ’கவனம்’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 'அன்று வேறு கிழமை', 'சூரியனுக்குப் பின் பக்கம்', 'கடற்கரையில் ஒரு ஆலமரம்' போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்…

  4. தமிழகம் இந்தியா உலகம் அரசியல் விளையாட்டு சினிமா வணிகம் தொழில்நுட்பம் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அப்துல்கலாமின் சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு …

    • 0 replies
    • 698 views
  5. "அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்! சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று படு சூடான விவாதம் நடந்தது. விவாதத்தை நடத்தியவர்கள் வக்கீல்கள் அல்ல.. மாறாக நீதிபதிகள். சுவாதி படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அது தொடர்பான படு சூடாக, கோபமாக தங்களது கருத்துக்களை இன்று வைத்தனர். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நிராகரித்தது. அப்போது நீதிபதிகள் இருவரும் சரமாரியாக அரசுத் தரப்புக்கு கேள்விகளை விடுத்தனர். அதில் ஒரு கேள்விதான்…

  6. தமிழர்கள் மூன்று பேருக்கு கத்தார் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் பெண் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோருக்கு 2015ம் ஆண்டு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. க…

  7. 'மத்திய அரசின் அனுமதி தேவையில்லை..!'- பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழக அரசு திடீர் மனு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்ததோடு, உச்ச நீத…

  8. ஆலந்தூர், சென்னை விமான நிலையத்தில் 65–வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. இதில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். உள்நாட்டு – பன்னாட்டு முனையங்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முனையங்களில் உள்ள மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவை அடிக்கடி உடைந்து விழுகின்றன. இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 22 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை பயண அறிவிப…

    • 6 replies
    • 604 views
  9. சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.46 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்தும் முயற்சித்தும் விமானத்தில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. நடுவானில் திடீரென 29 பேருடன் விமானம் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விம…

  10. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சுவாதிக்கு ஆதரவாகவும், ராம்குமாருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுவாதி பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் இந்த வழக்கில் பலர் தங்கள் வசதிக்கேற்றவாறு விஷத்தகவலை பரப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொல்.திருமாவளவனுக்கும், எச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உருவபொம்மை எரிப்பு எல்லாம் நடந்தேறியது. வாட்ஸ்அப் புகழ் யுவராஜ் வெளியிட்ட ஆடியோவில் சுப…

  11. இறந்து போன மாணவியின் பிளஸ் 2 மார்க்ஷீட்டை பயன்படுத்தி, தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாகச் சேர்ந்து டாக்டரானவரின் அங்கீகாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விஏஓ. இவரது மகள் அர்ச்சனா (26). எம்பிபிஎஸ் முடித்த இவர் சென்னை குரோம்பேட்டையில், தமிழரசி என்ற பெயரில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது கணவர், ‘எனது மனைவி பிளஸ் 2 கூட தேர்ச்சி பெறாதவர், இறந்துபோன தமிழரசி என்ற மாணவியின் பிளஸ் 2 மதிப்ெபண் சான்றிதழை பயன்படுத்தி, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து டாக்டராகிவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார். கவுன்சில் நடத்திய விசாரணையில், குற்றச்ச…

  12. 'மருத்துவ சிகிச்சையா.... அப்படின்னா?' -பேரறிவாளனை வதைக்கும் சிறைத்துறை தமிழக சிறைத்துறை அதிகாரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். 'முன்பைவிட உடல்நிலை மோசமடைந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கு அதிகாரிகள் சிலர் தடையாக இருக்கின்றனர்' என வேதனைப்படுகிறார் அவர். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலைக்காக, அண்மையில் பிரமாண்ட பேரணி ஒன்று சென்னையில் நடந்தது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று வேலூர் சிறையில் தன்னை சந்தித்த வழக்கறிஞர்களிடம் பேசிய பேரறிவாளன், " மன…

  13. சமூக ஆர்வலர் பியூஸ் சித்திரவதையின் பின் விடுதலை!!!

    • 3 replies
    • 611 views
  14. பி.எ‌ஸ்‌ஸி ந‌ர்‌சி‌ங், பி.பார்ம்., போன்ற படிப்புகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 1000 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளை படிக்க முடியாமல், தங்களது கனவுகளை பொசுக்கிக்கொண்டு அகதிகள் முகாமில் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள், இலங்கை அகதி மாணவர்கள். பொறியியல் கனவை நனவாக்கிய கருணாநிதி! தமிழகம் முழுவதும் சுமார் 108 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் உள்ள சிறார்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இதில் ஆண்டுதோறும் சுமார் 4000 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு தயாராகிறார்கள். 1000 த்தை தாண்டி இவர்கள் மதிப்பெண் பெற்றாலும், இவர்கள் தேர்ந்தெடுப்பது கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ படிப்புகளைதான்.…

  15. இலங்கை தமிழர்களின் வாகனங்கள் முகாமுக்கு வரவழைத்து சோதனை தமிழகத்தின் தாரமங்கல பிரதேசத்தில் நடக்கும் தங்கநகை பறிப்பு சம்பவங்களில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகத்தில், அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களை, தாரமங்கலம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தனர். தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரு மாதங்களில், பத்துக்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் தங்கநகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அதில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம், பொலிஸாருக்க ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத…

  16. சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து கோவில்பட்டி மாணவர் சாதனை! கோவில்பட்டியில் சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ள மாணவர் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெறவுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சிவசூர்யா என்ற மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். விவசாயத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் விவசாயிகளுக்கு உதவும் புதுமையான படைப்பை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக நீண்ட நாட்கள் போராடி சூரிய ஒளியால் இயங்கக்கூடிய டிராக்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த டிராக்டர் சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் வகைய…

    • 0 replies
    • 509 views
  17. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். ' தமிழர் அல்லாதவர்கள் குறித்துப் பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள். பெரியார் குறித்தும் மாற்று மொழி பேசுபவர்கள் குறித்தும் அனுமதியில்லாமல் யாரும் பேச வேண்டாம்' என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1 சதவீத வாக்குகளை வாங்கியது நாம் தமிழர் கட்சி. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கடலூரில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். இதன்பிறகு, கடந்த அறுபது நாட்களாக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னையையொட்டி நாளை மறுநாள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறா…

  18. இயற்கை வேளாண் பொருள் விற்பனையில் கால்பதிக்க இருக்கிறார் சீமான். 'காய்கறிகளோடு நமது பாரம்பர்ய பொருட்களை விற்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்’ என கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக, சிறப்பு மாநாடு, உணவுக் கண்காட்சி என பரபரப்பாக இயங்குகிறார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சீமான். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் இறங்குவது ஒருபுறம் இருந்தாலும், 'நம்மாழ்வார் அய்யாவின் விருப்பப்படி, இயற்கை வேளாண் விற்பனையிலும் நாம் கால்பதிக்க வேண்டும் ' எனப் பேசி வருகிறார் சீமான். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி ஒர…

  19. ‘ ஜெயலலிதாவை பின்பற்றுவதில் என்ன தவறு?!’ -கருணாநிதியிடம் ஆதங்கப்பட்ட கனிமொழி #Vikatan Exclusive உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. ' அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தனித்துக் களமிறங்க வேண்டும். கூட்டணிகளை நம்புவதால் பலவீனப்பட்டே வந்திருக்கிறோம்' என கருணாநிதியிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உள்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொண்டு வருகிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர்களை ஒதுக்கி வைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. அதேநேரம், அக்டோபரில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, கட்சியின் சீனியர…

  20. இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அந்தப் படகில் பல ஆயிரம் லீட்டர் டீசல் இருப்பது தெரியவந்ததால், பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அந்தப் படகு நிறுத…

  21. 'வைகோவை இப்போதுதான் புரிந்து கொண்டேன்!' - வீரலட்சுமியின் ஆதங்கம் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி. ' வைகோவிடம் கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால் விலகுகிறோம். அவரைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டோம்' என்கிறார் வீரலட்சுமி. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முயற்சியால், தமிழர் முன்னேற்றப்படையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் அங்கம் வகித்தது. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கினார் வைகோ. பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, 20 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில், ' மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' எ…

    • 1 reply
    • 917 views
  22. சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, 2016-2017ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது, ''டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் 500 மதுபானக் கடைகளை மூடியதால் வருவாய் ரூ.6,636.08 கோடி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மத்திய வரிகளில் மாநில அரசின் பங்குத் தொகை 23,018.12 கோடி ரூபாயாக குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான மானியங்கள…

  23. கணினி, டிவி முன் முழுநேரத்தையும் செலவிடுவதை விடுத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த சிஷ்யா பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறினார். சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் நேற்று புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர். தலைமைச் செயலக கட்டிடத்தின் தெற்கு பகுதியில், முதல்வர் வருகை தரும் வாசல் பகுதியில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். முதல்வரை பார்த்து சிஷ்யா பள்ளி மாணவர்கள் கையசைத்தனர். இதை கவனித்த முதல்வர், தன் அலுவலகத்துக்கு சென்றதும், பள்ளி மாணவர்கள் யார் என்பதை விசாரித்ததுடன், அவ…

    • 0 replies
    • 453 views
  24. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார். "தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "என…

  25. நளினி விடயத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலூர் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.