Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை தூதரை உடனடியாக கைது செய்ய வேண்டும்: வைகோ பிரிவு: தமிழ் நாடு இந்தியாவுக்கு உள்ளே இனபேதத்தைக் தூண்டும் சிங்களத் தூதர் பிரசாத் கரியவாஸத்தை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம், தொடர்ந்து அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது, இந்தியாவுக்கு உள்ளே, தமிழர்களுக்கு எதிராக, இனபோதத்தைத் தூண்டும் வகையில், ஒரு கடிதத்தை எழுதி, மின் அஞ்சல் வழியாக, இந்திய ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார். சிங்களர்கள், வட இந்தியர்களின் வழித் …

    • 0 replies
    • 975 views
  2. 'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கும் வரை போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம் ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பதவியி லிருந்து சசிகலாவை நீக்கும் வரை என் போராட்டம் ஓயாது,'' என, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., ஆவேசமுற்றார். தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: *அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுள்ளாரே? அவர் பொது செயலாளராக பொறுப்பு ஏற்றது, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வு களுக்கு எதிரானது. அவர் தற்காலிகமாக பொது செயலாளர் பொறுப்பு ஏற்றது சட்டப்படியான செயல்பாடு இல்லை. *எப்படி கூறுகிறீர்கள்? பொது செயலாளராக வர…

  3. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே? பதில்:- 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார். அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவி…

    • 0 replies
    • 405 views
  4. ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அப்போலோ சொன்னது உண்மையா? வெடிக்கும் சர்ச்சை! #Jayalalithaa #Apollo தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளைப் போன்று இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடந்தேயில்லை. இந்தியாவே மிரண்டு போகும் அளவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சிகளும், மர்மங்களும், அரசியல் சண்டைகளும் நடந்தேறி வருகின்றன. இவற்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை என்பதுதான் மிகப்பெரிய மர்மமாக இன்றுவரை தொடர்கிறது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டு இருக்கலாமே" என்ற மக்களின் கேள்விக்கு, "அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஐ.சி.யு பிரிவில் சி.சி.டி.வி. கேமாரா இல்லை" என அப்போலோ ந…

  5. சசிகலாவுக்கு சிறப்பு வசதி இல்லை கர்நாடக சிறை துறை தகவல் பெங்களூரு:'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை' என, சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சிறையில…

  6. மீண்டும்... அரசியலுக்கு, வருகிறாரா சசிகலா! கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவரின் ஆதிக்கம் இருக்கும் என்றே பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்களுக்கு அரசியலில் இருந்து விலகபோவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியே மலர வேண்டும் எனவும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அவரது அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. இருப்பினும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி தோல்வியை தழுவவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரபோகிறார் என்ற கருத்…

  7. வாய்ப்பில்லை? ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு... அ.தி.மு.க.,வின் 3 அணிகள் மோதலால் குளறுபடி அ.தி.மு.க., அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் ஆர்வமாக இல்லை. எனவே, ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்தல், 2016 அக்டோபரில்,…

  8. முதல்வருக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: சட்டப்பேரவை முடக்கப்படுகிறதா? முதல்வர் பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி, ஆதரவு எம்எல்ஏக்களின் ஆட்சி கலைப்பு கோஷம் என தமிழக அரசில் சிக்கல்கள் உருவாகியுள்ளதால், சட்டப்பேரவையை முடக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுகவில் கடந்த பிப்ரவரி மாதம் பிளவு ஏற்பட்டது. பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். அணிகள் இணைப்பு முடிந்ததும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழு கூட…

  9. 11, ஜனவரி 2014 திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கட்சியில் வட்டார மற்றும் வட்ட கமிட்டியை அமைக்க வேண்டும். கட்சிப் பற்றுள்ள இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 23 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 70,000 வாக்காளர்கள் புதியவர்கள். அவர்கள் 18 முதல் 22 வயதுக்குள்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் இதை இளைஞர்கள் தெரிந்திருக்…

  10. விசயகாந்த் எனும் திரைப்புலி.. ஜமாலன் திமுக கருணாநிதி பேரியக்கம் குடும்ப சூழலில் சிக்கிவிட்டது என்கிற ஆதங்கத்தில் பல கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. சமஸ் என்பவர் தி ஹிந்து-வில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அவற்றிற்குள் ஒருவித திமுக அழிவை எதிர்பார்க்கும் ஆதங்க மனநிலைதான் உள்ளது. அதாவது திமுக சரிந்துவிட்டதான தோற்றத்தை உருவாக்க விரும்பும் மனநிலைதான். அழகிரி கட்சியில் இருந்தபோது கடுமையாக விமர்சித்தவர்கள், அவர் நீக்கப்பட்ட பின்னும் விமர்சிப்பதும் முழுவதுமாக புலம்பவதும், திமுக உறுதி பெறுவதையே காட்டுகிறது. திமுக-வில் அழகிரியின் வருகை என்பது அதன் தொடர் தோல்விக்கே வழிவகுத்து உள்ளது. இந்நடவடிக்கை அடிப்படை திமுக தொண்டனை பாதிப்பதாக தெரியவில்லை. திமுக ஆதரவாளர்களையும் இது பாதிப்பதாகத்…

  11. மிஸ்டர் கழுகு: குடைச்சல் கொடுக்கும் குட்கா விவகாரம்? ‘‘மீண்டும் ஒருமுறை குட்கா விவகாரம் தமிழக அரசுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி அதிரடியாக மாற்றப்பட்டுள் ளாரே... அதைச் சொல்கிறீரா?’’ என்றோம். ‘‘ஆமாம்! ‘இந்த டிரான்ஸ்ஃபரில் உள்நோக்கம் உள்ளது’ என்று தி.மு.க குற்றம் சாட்டுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. குட்கா விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் தமிழக ஆட்சியாளர்களுக்கு மீண்டும் குடைச்சலைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க உள்ளது.’’ ‘‘விளக்கமாகச் சொல்லும்...’’ ‘‘பான் குட்கா விவகாரத்தில் அடிபடும் முக்கியத் தலைகள் யாரென்று உமக்…

  12. நித்தியானந்தா பக்தைகளின் உளவியல்... மருத்துவ ஆராய்ச்சி சொல்லும் காரணம்! நித்தியானந்தம். வணக்கம். "மாணவர் சரத்பிரபு மர்ம மரணம்." "போக்குவரத்து ஊழியர் போராட்டம்." "பேருந்துக் கட்டணம் 40% உயர்வு. அதாவது, கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் சென்று வர ஒரு நாளைக்கு 66 ரூபாய் ஆனது." "பா. வளர்மதிக்கு பெரியார் விருது." "போராளி வளர்மதிக்கு விகடன் விருது" "ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மீண்டவர்களுக்கான நிவாரணம் இன்னும் சென்றடையவில்லை." "பியூஷ் மானுஷ் மீது ஈஷா வழக்குப் பதிவு. ஜக்கியே நேரடியாக மனுதாரர்களில் ஒருவராக இருக்கிறார்." இந்தச் செய்திகள் எ…

  13. கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் வருடாந்தம் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையாகும். கச்சத்தீவு செல்வதற்கு தமிழக பக்தர்கள் பொலிஸ் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் க…

  14. ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிப்பு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 6 தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்ததால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுப்பில் இருந்ததால், நீதிபதி ஹெச்.பில்லப்பா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வழக்கு விவரங்களை நீதிபதியிடம் தெரி…

  15. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை - மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு! கேரளா மனு தள்ளுபடி! டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையில் 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு விளக்கம் கோரிய கேரளாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரளா அவசர சட்டம் நிறைவேற்றியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமி…

  16. போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் : January 11, 2019 புகையால் பாதிப்பு ஏற்படுவதால் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் போகி பண்டிகை 14ம் திகதி கொண்டாடப்படவுள்ளநிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அதிக அளவு ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அளவு காற்றின் வேகம் காரணமாக சென்னை மாநகராட்சி…

  17. ராஜீவ் காந்தி டில்லியில் தனது குண்டு துளைக்காத அங்கியை பிரபாகரனுக்குக் கொடுத்தார் - பண்ருட்டியின் நேர்காணலில் தகவல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீச் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம், அவரது இயக்கத்திற்கான 5 கோடி ரூபாவில் முதல் தவணையாக 50 இலட்சம் ரூபாவைக் கையளித்ததுடன், தனது குண்டு துளைக்காத அங்கியையும் வழங்கினார். அவ்வாறு வழங்கிவிட்டு, இலங்கை - இந்திய உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சரும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பண்ருட்டி எஸ்.இராமசந்திரன் 'நியூஸ…

  18. காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2 ஆவது நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேரூரில் தினமும் 400 மில்லியன் லீட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லீட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வட சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை …

    • 0 replies
    • 675 views
  19. அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் – கமல்ஹாசன் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் தான் என கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒடுக்கப…

  20. கீழடி பொருள்களை அருங்காட்சியகமாக அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வந்துள்ளேன். உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் விரைவில் கீழடியில் அமையும். அதற்கான இடம் பார்த்துக்கொண்டுள்ளோம். இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்புக்கு முன்னோட்டமாக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு சார்பாக ``சீன - இந்திய சந்திப்பு" என்கிற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில், தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், இருநாட்டுத் தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் க…

    • 0 replies
    • 716 views
  21. பீப் பாடலில் புதிய வழக்கு பதிய கூடாதாம்... நீதிபதி கண்டிப்பு... பின் வாங்கிய சிம்பு பீப் பாடல் தொடர்பாக புதிய வழக்குகள் பதியக்கூடாது என டிஜிபி-க்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நடிகர் சிம்பு வாபஸ் பெற்றுள்ளார். வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்ததால் அவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றார். நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்ததாக தகவல் வெளியாகின. இதையடுத்து, சிம்புக்கு எதிராக பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் போராட்டங்கள் நடத்தினர். கோவை, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், சிம்பு, அனிருத் மீது …

  22. பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன. மாநிலத்தில் ஒரு ஆட்சி அமைவதற்குப் பல சாத்தியங்கள் உள்ளன. ஒரு அரசியல் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறலாம், ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். தமிழ்நாட்டில் இவை அனைத்துமே …

  23. திருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து,…

  24. மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக சென்னை; மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ. நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல், ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 24 ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்களாக யார் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி…

  25. கொரோனாவை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவினர் மாநிலத்தில் தொற்றுப் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து, அவற்றை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.