தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை : லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல் புதுடில்லி: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சை கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும்' என, லோக்சபாவில், அ.தி. மு.க., - எம்.பி., வலியுறுத்தினார். பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, அ.தி. மு.க., - எம்.பி., சுந்தரம் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனை யில், 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.முதலில், நீர்ச் சத்து குறைவு, காய்ச்சல் என்றனர். ஆனால், திடீ ரென, அவருக்கு பல்வ…
-
- 0 replies
- 311 views
-
-
மனத் தூய்மையுடன் எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம்- பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டறிவிப்பு! அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க.வின் கொள்கை வழிநின்று பணியாற்றுவோம் என அறிவித்துள்ளனர். அத்துடன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தமக்கு வாக்களித்த வாக்காளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடைபெற்ற அ.தி.மு.க. அரச…
-
- 0 replies
- 374 views
-
-
தன்னைப் பற்றி ஜெயலலிதா சொன்னவை... தற்போது அவருக்கு நடப்பவை..! தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அரிதாக வழங்கிய சில நேர்காணல்களில் தன்னைப் பற்றிப் பகிர்ந்திருந்த வார்த்தைகளோடு, இன்றைய அரசியல் சூழல் காட்சிகளைப் பொருத்திய இந்தப் புகைப்படத் தொகுப்பு... வருத்தம், அதிர்ச்சி, ஆதங்கம், ரௌத்திரம் கடத்தக்கூடியது. ஓர் ஆளுமையின் இறப்புக்குப் பின்னான இந்தக் காட்சிகள், வாழ்வின் நிலையாமையை உணர்த்துபவையும்கூட! 1. ''ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவது!" - ஜெ. ஜெயலலிதா (1999, சிமி கேர்வலின் 'ரான்டவு (rendezvous)' தொலைக்காட்சி நிகழ்ச்சி) உங்கள் பிணத்துக…
-
- 0 replies
- 312 views
-
-
விருதுநகரில் செப்டம்பர் 15–ந்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாநாடு நடைபெறும் இடமான விருதுநகர்–சாத்தூர் சாலையில் மாநாடு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நடை பெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று செப்டம்பர் 15–ந்தேதி காமராஜர் பிறந்த பூமியில் ம.தி.மு.க. மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நடைபெறும் மாநாட்டுக்கு உயர்நிலைக் குழு ஜெபராஜ் தலைமை தாங்குகிறார். சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சண்முகசுந்தரம் வரவேற்று பேசுகிறார். இந்த மாநாடு மாற்று அர…
-
- 0 replies
- 349 views
-
-
மதுரையில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள தமிழ் தாய் சிலை நிறுவ இடம் தேடுதலில் குழப்பம் நீடிக்கிறது. வைகை நதிக்கரை ஓரம் துவரிமான் கண்மாயில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.100 கோடியில் 160 அடி உயரமுள்ள தமிழ்த்தாய் சிலையும், அதை சுற்றிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் மாதிரி தோற்றம், தமிழ்த்தாய் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த மே மாதம் அறிவித்தார். தமிழ்த்தாய் சிலையும் தண்ணீருக்கு நடுவில் அழகிய இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடந்த 3 மாதங்களாக கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். முதலில் வண்டியூர் கண்மாய் ஏற்றதாக இருக்கும் என கருதப்பட்டத…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அம் மனுவில், ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுத…
-
- 0 replies
- 405 views
-
-
'ஆளே மெலிஞ்சுட்டார்... ஆனாலும், தீர்க்கமா இருக்கார்!' - சிறையில் தினகரன் சந்திப்புப் பின்னணி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை அவரது ஆதரவாளர்கள் சந்தித்துவருகின்றனர். அப்போது, மெலிந்து காணப்பட்ட டி.டி.வி. தினகரனிடம், 'அண்ணனை இப்படியா நாங்க பார்க்கணும்' என்று ஆதரவாளர்கள் வருத்தப்பட்டனர். இரட்டை இலை சின்னத்தை குறுக்குவழியில் மீட்டெடுக்க, டெல்லி ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்ததாக போலீஸார் டி.டி.வி.தினகரனை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர், சிறைக்குச் சென்று டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திவர…
-
- 0 replies
- 414 views
-
-
சிவகங்கை மாவட்டத்தில் உணவுப் பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க ரூ.49 லட்சத்து 32 ஆயிரம் நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உணவுப் பொருட்களை பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உணவுப் பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பயிற்சி நிறுவனத்திற்கென கட்டிடம் கட்டுவதற்கும்…
-
- 0 replies
- 487 views
-
-
திமுக 25, தேமுதிக 8 ப்ளஸ் ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு? சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 25 தொகுதிகள், தேமுதிக 8 , காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற உடன்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடை பெற்றன. பின்னர் அழகிரியின் எதிர்ப்பால் தேமுதிக பிரேக் போட்டது. இந்நிலையில் திடீரென மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்து பேச களநிலைமை மாறியது. திருமா சந்திப்பு இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், விஜயகாந்தை சந்தித்தார். அப்போது …
-
- 0 replies
- 674 views
-
-
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓராண்டாகத் தமிழகம்! கடந்த ஆண்டு இதே நாளில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. பல ஊகங்களும் எழுந்தன. மக்கள் குழப்பத்தில் மூழ்கினார்கள். 2016 செப்டம்பர் 21-ல் சென்னை மெட்ரோ ரயில் சேவையைக் காணொலி மூலம் தொடங்கி வைத்ததே ஜெயலலிதா மக்கள் மேடையில் உயிரோடு தோன்றிய கடைசி காட்சி. அவர் மருத்துவமனையில் சேர்ந்தது தொடங்கி இன்று வரை, கடந்த ஓராண்டாகத் தமிழகமே தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறது! இத்துடன், கடந்த ஓராண்டாகவே மாறிவரும் நம்ப முடியாத அரசியல் காட்சிகளைக் கண்டு மக்கள் அருவ…
-
- 0 replies
- 413 views
-
-
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. முல்லை பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே, அதன் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என கேரள அரசு தடை விதித்தது. இந்நிலையில் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதை தவிர்க்க அணை பாதுகாப்பு சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது. மேலும், முல்லை பெரியாறு அணை கேரளாவுக்கு சொந்தம் எனவும் கூறியது. இதையடுத்து, கேரள அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழகத்துக்கும் சொந்தமான இடங்களில் உள்ளது. எனவே, கேரளா மட்டும் அணைக்கு சொ…
-
- 0 replies
- 258 views
-
-
பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் - சீமான் By RAJEEBAN 08 FEB, 2023 | 12:00 PM பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டம், தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனிமலை திருக்கோயில் அடிவாரத்தில் ஓடும் சண்முகா நதிக்கரையில் நிறுவப்பட்டிருந்த 24 அடி உயரமுள்ள உலோகத்திலான வேலினை தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக அகற்றிய…
-
- 0 replies
- 634 views
- 1 follower
-
-
பாஜக, பாமக, போலீஸ்: நான் ஏன் அப்படிப் பேசினேன்? திமுக அரசு எப்படி செயல்படுகிறது? திருமாவளவன் பேட்டி பட மூலாதாரம்,FACEBOOK/THOL.THIRUMAVALAVAN கட்டுரை தகவல் எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரு வாரங்கள் முன்பு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஒரு நிகழ்வில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக, பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் தாங்கள் இருக்கப்போவதில்லை என்று புதிய அழுத்தத்தோடு பேசினார், மேலும் தமிழ்நாட்டில் போலீஸ் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்திப் பேசினார். …
-
- 0 replies
- 728 views
- 1 follower
-
-
தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம் என குஸ்பு கூறியிருப்பதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் என நடிகர் குஷ்பு கூறியிருப்பது குறித்து தமிழர் முன்னேற்ற படை அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழர் பண்பாடு, நாகரீகம் ,வாழ்வியல் நெறி , வரலாற்று தொன்மை ஆகியவற்றை சிதைக்கும் வகையில் நடிகை குஷ்பு பேசிவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ் இனத்தின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வ…
-
- 0 replies
- 451 views
-
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்கத் தேவையில்லை…. September 29, 2018 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.எனினும் அவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நால்வரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளி…
-
- 0 replies
- 384 views
-
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணை ஆரம்பம் October 14, 2018 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை சிறப்புப்பிரிவு விசாரிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், முதல் கட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தநிலையில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி பிரிவு…
-
- 0 replies
- 466 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுக்க கோடிக்கணக்கான பனை விதைகள் தமிழக கடற்கரை மாவட்டங்களில் நடவு செய்யப்பட்டுள்ளன. பனை மரங்கள் கடலரிப்பைத் தடுக்கும் என்ற அடிப்படையில் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இது எந்த அளவுக்கு பயனளிக்கும்? பனை மரங்கள் வளர ஆண்டுகள் பல ஆகும் என்பதால் அதுவரையிலும் என்ன செய்வது? பனை மரங்கள் குறித்த அறிவியல் உண்மை என்ன? விரிவாகப் பார்க்கலாம். நடவு செய்யப்பட்ட பனை விதைகள் நிலத்தடி நீரை சேமி…
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
தேமுதிக திடீர் போராட்டம்.. துரைமுருகன் வீடு முற்றுகை லோக்சபா தேர்தலையொட்டி கூட்டணிகள் இறுதி செய்யப்படுவதால், தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன. மற்றொரு பக்கம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில், பிரபல நடிகை கோவை சரளா இணைந்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் வாழ்வு என பிற கட்சிகள் எண்ணுகின்றன என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது கூட்டணி கட்சிகள் நடுவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/stay-with-this-l…
-
- 0 replies
- 691 views
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் பிரதமர் மோதி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 30 மே 2024 கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். அவரது வருகைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அது தேர்தல் விதிமீறல் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி, நடக்கவிருப்பதால், அதற்கான தேர்தல் பிரசாரம் மே 30ஆம் தேதி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள வி…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,X/S. JAGATHRAKSHAKAN படக்குறிப்பு, அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 16 நிமிடங்களுக்கு முன்னர் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு திங்கள்கிழமைன்று (ஆகஸ்ட் 26) 908 கோடி ரூபாய் அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது. வெளிநாடு முதலீடு தொடர்பாக, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அனைத்து தவறுகளுக்கும் சேர்த்து இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தனது வீட்டில் 2020 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொ…
-
- 0 replies
- 643 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் "எங்கள் குடும்பத்திற்கு விவசாயம் தான் பிரதான தொழில். இந்தப் படிப்பை விரும்பித் தான் தேர்வு செய்தேன். 2023 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகர் படிப்பை முடித்தேன். சான்றிதழ் வாங்கும்போது கூட நம்பிக்கை இருந்தது. இப்போது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது" என்கிறார், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதா. ரஞ்சிதா மட்டுமல்ல, கடலூர் மாவட்டம் மேல் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரம்யாவின் கருத்தும் இதையொட்டியே இருக்கிறது. ஒரே காரணம், தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
சென்னை விமான நிலையம் மூடப்பட்டது Last Modified: புதன், 2 டிசம்பர் 2015 (02:28 IST) சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார். சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார். விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் த…
-
- 0 replies
- 323 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் பெண்களின் பாதுகாப்புக்காக அரசுப்பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்திற்கு ரூ.75 கோடி தமிழக பட்ஜெட் 2020-21ல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அரசுப்பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தால் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார் பன்னீர்செல்வம். எனினும் போக்குவரத்துக்கு கழகத்தில் அமலாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் தொடர்ந்து நீடிக்காது போல இந்தத் திட்டமும் ஆகிவிடக் கூடாது என்றும், பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது மட்டுமே பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் போதும…
-
- 0 replies
- 402 views
-
-
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று (5) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு முதல் இப்போது உள்ள ஸ்டாலின் தலைம…
-
- 0 replies
- 159 views
-
-
பட மூலாதாரம்,INSTA/R.C.C.LPS.EAST.MANGAD படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 15 ஜூலை 2025, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் இருக்கைகள் 'ப' வடிவத்தில் இருக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்து இதன் மூலம் உடைபடும் என்று அரசு நம்புகிறது. ப வடிவ இருக்கைகள் ஆசிரியர் - மாணவர் இடையேயான உரையாடலை அதிகரிக்கும் என்றும், பொதுவாக பேச தயங்கும் மாணவர்களும் இந்த வடிவில் இருக்கைகள் அமைக்கப்படும் போது வகுப்பறையில் அதிகம் பங்கேற்பார்கள் என்று தம…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-