Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற போது நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வம் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 200 பேர் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கண்டித்தும், தமிழர்கள் ஏழு பேரின் விடுதலைக்கு தடை போடும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி செயல்படுகி…

  2. புகழ் பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கியவாதியுமான ஜெயகாந்தன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக உடல் நலம் குறைவால் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/101098-2014-02-24-01-45-56.html

  3. 23ஆண்டுகளாக சிறையில் வாடும்,நம் தமிழ் உறவுகள் - 7தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவும்,தமிழக முதல்வரை கொச்சைப்படுத்தியும்,தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து இழிவுபடுத்தும் மத்திய அரசின் அலுவலகங்களை 24.02.14 முதல் முற்றுகையிட்டு மாணவர்கள்,இளைஞர்கள் போராட்டம் நடத்த உள்ளோம்.7 தமிழரின் விடுதலைக்காக தமிழகம் முழுக்க வீரியமிக்க போராட்டம் வெடிக்கும். எங்களோடு கைகோருங்கள்: 8678962611,9884890103. # விடுதலை வேண்டும்,அது முதல் வேலை-வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை Joe Britto (facebook)

  4. ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: "தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு' ராஜீவ் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு தரும் என தமிழ் திரையுலகத்தின் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தமிழ் திரையுலக அமைப்புகளின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்று பாரதிராஜா பேசியது: தமிழ்ச் சமூகத்துக்கு மானபங்கம் ஏற்படும் போதெல்லாம் அதிலிருந்து விடு…

  5. முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் இருந்து காப்பாற்றிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மருத்துவமனையில்! [saturday, 2014-02-22 19:23:51] ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டில்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தவறி விழுந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்ப…

  6. இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...? 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப்…

  7. ஜூனியர் விகடன் 26 Feb, 2014 சளைக்காத சட்டப்போராட்டம்! ========================= ''நெருப்பில் எரியும் உடல் விரைவில் வெந்து தணிந்துவிடுகிறது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் கைதியின் உடலும் மனமும் தூக்கிலிடப்படும் நாள் வரை ஒவ்வொரு நொடியும் எரிகிறது; தவிக்கிறது; துடிக்கிறது. இந்தக் குரூரத்துக்கு நாகரிக சமூகத்தில் நிச்சயம் இடம் இருக்க முடியாது' என்று சுட்டிக்காட்டி மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனை ஏற்று முருகன், சாந்தன், பேரறிவாளனை மட்டுமல்ல; ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இதனை சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்…

  8. ராஜீவ் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததற்கு நடிகை குத்து ரம்யா டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார். ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது…

  9. ராமேஸ்வரம் ராஃபி ராமேஸ்வரம் தீவு கடற்பகுதியில் அதிவேக கத்தி மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மீனை தமிழக மீனவர்கள் கத்தி மீன் அல்லது வாள் மீன் என்று அழைக்கின்றார்கள். இதனுடைய விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடிஸ் ஆகும். கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்ற அர்த்தமாகும். இந்த கத்தி அல்லது வாள் மீன் மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் இனம் ஆகும். மணிக்கு சராசரியாக 80ல் இருந்து 90 கிலோ மீட்டர் வரையிலும் இந்த மீன்கள் நீந்தும். கத்தி மீன் வேகத்திற்கு பெயர் போனதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களின் போர்க்கப்பல்களுக்கு ஸ்வார்ட் ஃபிஷ் …

  10. ஐ.நா சபையே உலக நாடுகளே ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணயத்தில் இரண்டு இலட்சம்.... http://www.sankathi24.com/news/38695/64//d,fullart.aspx

  11. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற கட்சி தமிழகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார். வருகிற மார்ச் மாதம் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றக் கோரி உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு பின் பேசிய அவர், இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் பரவி வாழும் ஈழத்தமிழர்களிடம் தமிழ் ஈழம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப ஐ.நா, பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த மாதம் ஜெனிவாவில் கூட இருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் கூ…

  12. சென்னை: ஏழு பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புதிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி, வைகோ தங்களின் கூட்டணி தலைவர்களின் எதிர்ப்பை வேடிக்கை பார்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு அவர்களது தண்டனையை விரும்பினால் மத்திய - மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு 7 பேரின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட்டது. தமிழக அரசின் இந்த முடிவை தமிழகத்…

  13. புதுடெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. தாமரை செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். மக்களவையில் இன்று திமுக எம்.பி.யான ஆர்.தாமரை செல்வன், இது தொடர்பாக விடுத்த கோரிக்கையில்,"கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை. கருணாநிதி தம் 14 வயதில் பொதுமக்களுக்கு தொண்டு செய்ய அரசியலுக்கு வந்தவர். திராவிட இயக்கத்தின் சாம்பியனான இவர், கீழ்மட்டத்தில் இருந்து அனைத்து தரப்பிலான மக்களுக்காக சேவை செய்தவர். 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இடையில் ஒருமுறை கூட தோல்வி கண்டதில்லை. தீவிர அரசியலுடன் தமிழ் இலக்கியத்திற்காகவும் முக்கியத்துவம் அளித்தவர்…

  14. சென்னை: 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் அப்துல் ரஹிம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதுபோல்,கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்களையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி, விருந்தினர் மாளிகை முன்பு நான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன்'' என தெரிவித்தார். http://news.vikatan.com/article.php?modu…

  15. திருச்சியில் இலங்கைத் தமிழ் மாணவர் வெட்டிக்கொலை! – காதலியின் தங்கையை காதலித்தவரை தட்டிக்கேட்டதால் விபரீதம். [Monday, 2014-02-17 18:08:50] திருச்சியில், காதல் தகராறில் இலங்கைத் தமிழரான கல்லூரி மாணவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும், ஸ்ரீதரன். இலங்கை தமிழரான இவரது மகன் விதுகரன் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். விதுகரன் காதலித்த மாணவியின் தங்கையை அதே கல்லூரியில் படிக்கும் திருச்சி தில்லைநகரை சேர்ந்த அரவிந்த் (20) காதலித்தார். விதுகரனுக்கு இது பிடிக்காததால் அரவிந்தை கண்டித்தார். இந்நிலை…

  16. சிறையிலிருந்து ஒரு குரல் டி.அருள் எழிலன் “நான் களைத்துப் போகவில்லை. உற்சாகம் அடைந்திருக்கிறேன். எந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு தூக்குத் தண்டனை விதித்தார்களோ, அந்த வாக்குமூலமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. 'சதிகாரன்’, 'கொலைகாரன்’ என்று என் மீது சுமத்தப்பட்ட களங்கம் கழுவப்பட்டுவிட்டது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் இறுதிப் பகுதியில் நிற்கிறேன். இந்த ஒளி, இந்தியாவின் அனைத்து மரண தண்டனை கைதிகளின் கழுத்தின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றை அறுத்தெறியட்டும்'' என்ற பேரறிவாளனுக்கு இப்போது வயது 42. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குக் தண்டனை பெற்று, தனது மேல் முறையீட்டு மனு மீதான வழக்கின் தன் வழக்கில் இறுதித் தீர்ப்புக்காகக…

  17. நெல்லை மாவட்டத்தில் அமைகப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். இந்த மக்களை தங்களது கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் சுமார் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் பணிக்கும் சுமார் 7 ஆயிரத்து 500 தொண்டர்களை களமிறக்க தீர்மானித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் நாடு மாநில கிளை நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதில் ஒரு கட்டமாக, உதயகுமார் தலைமையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் போராடி வரும் மக்களை தங்களது கட்சியில் உறுப்பினர்…

  18. திருப்புமுனை நாயகன் வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆரம்பத்திலிருந்தே நேரு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடியவர். தொண்டர்களின் உணர்வுகளை துல…

  19. பாலுமகேந்திரா... தமிழ் சினிமாவின் வீடு! இயக்குநர் ராம் எங்கள் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும். சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. 'வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கியபோது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் 'வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான். அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீட…

  20. முருகன் - நளினி... சிறைப் பறவைகளின் காதல் கதை! டி.அருள் எழிலன், ஓவியங்கள்: ஸ்யாம் முருகன்-நளினி காதலுக்கு வயது 23 வருடங்கள். இதில் சிறையில் பிரிக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த காலம்... கிட்டத்தட்ட அதே 23 வருடங்கள்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்-நளினி ஜோடி, தங்கள் காதலுக்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்! 1991 பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு. மே மாதம் ராஜீவ் காந்தி கொலை. ஜூன் மாதம் இருவரும் கைதாகிறார்கள். அன்று முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது இவர்களின் காதல்! ''முதல் சந்திப்பு முதல் உங்கள் காதல் கதையை விரிவாகச் சொல்லுங்கள்!'' என்று வழக்கறிஞர் மூலம…

    • 2 replies
    • 1.3k views
  21. இனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டு பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளார்கள். ஈழத்தில் நீதி மறுக்கப்பட்டுவரும் தமிழீழ மக்களிற்கு ஆதரவான போராட்டங்கள் தமிழக மாணவசகோதரர்களால் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தம்மை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுவருகின்ற கொதிநிலையில் கல்லூரி நிர்வாகங்கள் சுயமாகவும் காவல்துறை உளவுத்துறை அரசியல் கட்சிகளின் கடுமையான அழுத்தங்களிற்கு …

  22. பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஷரத்துகளை சேர்க்க அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இலங்கை மீது போர் தொடுத்தாவது ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற ரீதியில் தேர்தல் அறிக்கை இருக்கலாமா என்று ஈழத் தமிழ் தலைவர் ஒருவரிடம் பாஜக தலைவர்கள் ஆலோசனை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் தேதியும் கூட்டணி களும் இன்னும் இறுதியாகவில்லை என்றாலும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும் முரமாய் இருக்கின்றன. பாஜக தரப்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, உள்நாட்டுப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, மாநில அரசுகளுக்கு உரிய முக்கியத்து…

  23. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பட்டியலோடு வந்தார் கழுகார்! ''தி.மு.க. வட்டாரம் தன்னுடைய தேர்தல் முஸ்தீபுகளைத் தொடங்கிவிட்டது. 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு முடிந்ததும், வேட்பாளர் நேர்காணல் தொடங்க ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். தி.மு.க-வை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட பலரும் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், அதற்கு இதுநாள் வரை கருணாநிதியும் ஸ்டாலினும் பிடிகொடுக்கவில்லை. தே.மு.தி.க-வுடனான பேச்சுவார்த்தைகளையும் தற்காலிகமாக தி.மு.க. நிறுத்தி வைத்துள்ளது. தி.மு.க. சார்பில் பேசப் போன தொழிலதிபர் ஒருவரிடம், 'என்னுடைய இலக்கு 2016-தான். இப்போது தி.மு.க-வை ஆதரித்துவிட்டால், அப்போது தி.மு.க-வை எதிர்த்து பிரசாரம் செய்ய முடியாது’ என்று வெளிப்படையாகவே வி…

  24. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி வடவர்கள் தமிழ் நாட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். நடுவண் அரசும் தமிழக அரசும் இணைந்தே இந்த செயலை செய்துள்ளது. இந்த குடியேற்றத்தினால் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கவலைப்பட்டதுண்டா? பல அடுக்குமாடி கட்டிடங்கள் வடவர்களின் முழுமையான குடியிருப்பாக உருவெடுத்து உள்ளது . தமிழகத்தில் உள்ள நீர், உணவு , உறைவிடம் , நிலம், வளங்கள் குடியேறிய மக்களுக்கும் இப்போது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வடவர்கள் இங்கு குடியேறுவார்கள் எனத் தெரிகிறது. ஒரு கால கட்டத்தில் தமிழர்களை விடவும் வடவர்களே தமிழகத்தில் அதிமாகவும் வசிப்பார்கள். தமிழர்களின் உரிமைகளையும் தட்டிப் பறிப்பார்கள். …

  25. நேற்று சனிக்கிழமை மாலை 20 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் சென்னையில் ஒன்று கூடி பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் எவ்வாறு போட்டியிடுவது என்று விவாதித்தனர். திராவிடக் கட்சிகள், இந்திய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்த் தேசிய கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தற்போது பெரிய கட்சிகள் இணையவில்லை என்றாலும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி தங்கள் பலத்தை நாற்பது தொகுதிகளிலும் காட்டவுள்ளனர் என்பது மற்றும் உறுதி செய்யப்பட்டது. தமிழர் நாடு தமிழர் வசம் வருவதற்கு நூறாண்டு திட்டம் வகுக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக இந்த முன்னெடுப்பு நடக்க உள்ளது. தமிழர் அரசியல் 70 ஆண்டு காலம் பின்தங்கியுள்ள நிலையில் இனியாவது துணிந்து இன நலம் சார்ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.