தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
'7 பேர் விடுதலை தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஜெயலலிதா எடுத்த முடிவு!' நாகர்கோவில்: நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை என்பது, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஜெயலலிதா எடுத்த முடிவு என்று தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''2016 சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பலர் முதல்வர் கனவில் உள்ளனர். வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணலின்போது அவர் என்ன சாதி? எவ்வளவு பணம் உள்ளது? என்று பார்க்கிறார்களே தவிர அவரது நேர்மை, தூய்மை, கடந்த கால அரசியல் வாழ்க்கையை பார்ப்பதில்லை. வாக்காளர் பட்டியலில் தற்போது புதியதாக 30 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளனர். அவ…
-
- 0 replies
- 449 views
-
-
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த புகைப்படம் மூலம் போலீசார் துப்பு துலக்கி, நேற்று இரவு கொலையாளியை கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையை முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் காலை சுமார் 6.40 மணியளவில் சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சுவாதி மின்சார ரெயிலுக்கு காத்திருந்த போது அடையாளம் தெரியாத நபரால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எழும்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் பதிவ…
-
- 0 replies
- 699 views
-
-
வினுப்ரியாவைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் / சிபிச்செல்வன் இரவு சுமார் பத்து மணிக்கு நண்பர் ரவிக்குமாருடன் நானும் அவருடைய கட்சியின் சில முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் சேர்ந்து இளம்பிள்ளைக்குப் போயிருந்தோம்.அந்தத் தெருவில் பெரும்பாலான வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டிருந்த மெத்தை வீடுகள்.அப்படியொரு வீட்டில் அவர் இருக்கலாம் என நினைத்து போனவர்களுக்கு ஒரு பழைய காலத்து ஓட்டு வீட்டின் முன்னால் ஒரு சாமியானா போட்டு வினுப்ரியாவின் போட்டோவை வைத்து ஒரு மாலையைப் போட்டு வீட்டிற்கு வெளியில் துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு வினுப்ரியாவின் பெற்றோர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். இளம்பிள்ளையில் இடங்கணசாலை என்ற பகுதியில் இருக்கிறது வினுப்ரியாவின் வீடு. அது ஒன்றும் பெரிய நகரமோ அல…
-
- 0 replies
- 725 views
-
-
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது என்றும் நடப்பாண்டில் கடன் சுமையின் உயர்வை தவிர்க்க முடியாது என்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்க உருவாக்கப்பட்டிருந்த குழுவின் தலைவரான ரங்கராஜன் தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரங்கராஜன், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்ட…
-
- 0 replies
- 757 views
-
-
'எப்போது உயில் எழுதினார் ஜெயலலிதா?!' - சசிகலாவை திணறடிக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள் ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய பொது தகவல் அலுவலர், ராஜ்பவனுக்கு நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார். அதன் விவரம்: * முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல…
-
- 0 replies
- 633 views
-
-
முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் அன்பரசன்-ஐஸ்வர்யா திருமணம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மத்திய, மாநில முன்னாள் அமைச்சரும், என்னுடைய ஆருயிர் தம்பியுமான திருநாவுக்கரசருடைய மகன் அன்பரசனுக்கும், அம்பாசமுத்திரம் டாக்டர் கே.பி. அருணாசலத்தின் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் நடைபெற்றுள்ள மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டுமென்ற அழைப்பை, ஆணையாக ஏற்று உரிய நேரத்திலே திருமணத்திலே கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காக காலை உணவைக் கூடத் தியாகம் செய்துவிட்டு இந்த மணவிழாவிற்கு நான் வந்துள்ளேன். இந்த மணவிழாவிலே பல கருத்துகளை நம்முடைய அனைத்துக் கட…
-
- 0 replies
- 529 views
-
-
அதிரடி தீர்ப்பால் ஆடிப்போன அமைச்சர்கள்!: அடுத்து உருளப்போவது யார் தலை? கோவை:வருமானத்துக்கு அதிகமாக, முறை கேடான வழிகளில் சொத்து குவித்திருக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும், ஊழலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் ஆடிப்போய்உள்ளனர். சட்டத்தின் பிடியில் சிக்கி, அம்மாவும், சின்னம்மாவுமே அல்லோலப்பட்டு விட்ட நிலையில், தங்களின் கதி என்னவாகுமோ என்ற அச்சம், இப்போதே அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில், 1991 - 96ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய…
-
- 0 replies
- 864 views
-
-
ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பிரபல நடிகையாக இருந்தபோது ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாகவும் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியின்போது அவரை நேருக்கு நேராக பார்த்தபோதும் அவர் அழகாகவே காட்சி அளித்ததாகவும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றுவது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் செயலாகாது என முன்னர் சட்டரீதியாக விளக்கம் அளித்த சுப்ரீம…
-
- 0 replies
- 2.6k views
-
-
முக்கிய நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம். அதிமுகவின் இரு அணி நிர்வாகிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கட்சி, சின்னத்தை மீட்ப தற்காக அதிமுகவின் இரு அணி களையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இரு அணியி லும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்காவிட்டால் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை கிடையாது’ என ஓ.ப…
-
- 0 replies
- 254 views
-
-
தினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம்...! 'அடிமைத்தனத்தை' ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு திகார் சிறையில் இருந்து, சென்னை திரும்பிய தினகரன், 'நான் தான், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர்; சசிகலாவை தவிர, வேறு யாராலும் என்னை நீக்க முடியாது' என அறிவித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது தலைமையை விரும்பாத அமைச்சர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் தினகரனை அடியோடு ஓரங்கட்டவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதற்காக, முழுவீச்சில் களமிறங்க ஆர்வமாக உள்ளனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் விதித்த நிபந்தனை காரணமாக, தினகரனை, கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக, ஏப்., 18ல், அமைச்சர்கள் அற…
-
- 0 replies
- 476 views
-
-
தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ARUN SANKAR/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததால் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிட்டால், மாசுபாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று எவ்வளவு மாசு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவ…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல் ம.கா.செந்தில்குமார், படங்கள்: எஸ்.பத்ரி நாராயணன், அருண் டைட்டன் கமல்... தமிழகத்தின் ஹாட் ஸ்டார். பரபரப்புச் செய்திகளின் பிக் பாஸ். அதிகாலையில் தட்டிவிடுகிற ட்வீட்டோ, ‘இன்னொரு ஃபைவ் ஸ்டார் ஜெயிலும் இருக்கு’ என நிகழ்ச்சிக்கு நடுவே அடிக்கிற கமென்ட்டோ அதிரடிக்கிறது. அப்ளாஸ் அள்ளுகிறது. புன்னகை மன்னனின் பெருஞ்சிரிப்பில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அனல் பறக்கின்றன. ‘‘நான் ஒண்ணும் புதுசாப் பேசலை.எப்பவுமே சொல்றதைத்தான் இப்பவும் சொல்றேன். 1985-ல் ஈழப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த நான், அன்றே அரசியலுக்கு வந்துட்டேன். ‘என்னய்யா இவன் பெரியவங்க இருக்கும்போது சின்னப்பய குரல் கொடுக்…
-
- 0 replies
- 4.1k views
-
-
மிஸ்டர் கழுகு: இணைப்பு முடிந்தது! கவிழ்ப்பு ஆரம்பம்! கழுகார் முகத்தைப் பார்த்ததும், ‘‘ஒருவழியாக ஒன்று சேர்ந்து விட்டார்களே?” என்றோம். ‘‘ஆம்... இணைப்பு முடிந்தது! அடுத்து கவிழ்ப்பு வேலைகள் ஆரம்பம்” என்றார் கழுகார். ‘‘அதற்குள்ளாகவே கவிழ்ப்பா?” ‘‘ஒன்று சேர்ந்தது எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தானே? தினகரன் இன்னமும் உறுமிக்கொண்டுதானே இருக்கிறார்! ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் அவருடைய ஆதரவாளர்கள் இறங்கிவிட்டார்களே...” என்று பீடிகை போட்டவரிடம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம். ‘‘ஆறு மாதங்களுக்கும் மேலான தர்மயுத்தம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது எப்படி?’’ ‘‘தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களிடமும் மக்களிடமும் நியாயம் கேட்டதைவிட, டெ…
-
- 0 replies
- 2.2k views
-
-
பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இதையடுத்து ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில், 23 ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி எண்.7402 வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு, அவரது உதவியாளர் வெளியில் இருந்து வாங்கி வந்த இட்லி-வடையை சாப்பிட்டார். மதியம் உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த ஜெயலலதா சற்ற…
-
- 0 replies
- 572 views
-
-
பொள்ளாச்சி அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்? - எச்சரிக்கும் மருத்துவர்கள் படக்குறிப்பு, பொள்ளாச்சி அருகே வேட்டையாடப்பட்ட காகங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூரில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்த சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வந்தன. இறந்த காகங்களின் சடலங்களை மர்ம நபர்கள் எடுத்துச் செல்வதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே பெரியாகவுண்டனூரில் நாகராஜ் என்பவரது தோட்டத்தில் ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் நிரப்பிக் கொண்டிருந்தார். விவசாயி நாகராஜைக் கண்டதும் அந்த நபர் தப்ப முயற…
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை கண்டித்தும் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் நேற்று சனிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர் வரும் 29ஆம் திகதி இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதியை இந்திய மீனவர்கள் சந்தித்து பேச மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர். அனைத்து விசைப்படகு மீனவ அமைப்புகள் நேற்று இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதை கண்டித்தும், எதிர் வரும் 29…
-
- 0 replies
- 502 views
-
-
அண்ணாமலையின் பதவி பறிப்பு…? தமிழக பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அண்ணாமலைக்கு பதில், புதிய மாநிலத் தலைவரை நியமிக்கவும் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 348 views
-
-
உண்ணாவிரம் இருந்துவரும் முருகன்- நளினியை மதுரை சிறைக்கு மாற்ற மனு தாக்கல் வேலூர் சிறையில் 9வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி- முருகன் ஆகிய இருவரையும் மதுரை சிறைக்கு மாற்றுவதற்கு ரிட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு உறவினர்கள் கொண்டுவரும் உணவுப்பொருட்களை அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கடந்த 21ஆம் திகதி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “முருகனுக்கு 2 போத்தல் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. காலை, மாலையில் தினமும் வைத்தியர்கள் பரிசோ…
-
- 0 replies
- 482 views
-
-
சமூக வலைதளத்தில் முகம் தெரியாமல் ஒளிந்து கொண்டு... விமர்சனம் செய்ய நினைப்பது கையாலாகாதனம்... அது ஒரு பொட்ட_தனம்... சொல்கிறார்.. பாஜகவின்_மதுவந்தி...!
-
- 0 replies
- 471 views
-
-
‘‘முதல்வரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!” - சசிகலா புஷ்பா பேட்டி ஒரு சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக இருக்க... இன்னொரு சசிகலா, ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக வாள் சுழற்றத் தொடங்கிவிட்டார். ‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா புஷ்பா அமைதியாகிவிடுவார்’ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் மாறாமல் இருக்கிறார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா, இப்போது நாடார் சமூக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில், அவரது நினை விடத்துக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர், ‘ஜெயலலிதா சொன்னால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய…
-
- 0 replies
- 1.2k views
-
-
10வது நாளில் : ஒரு கோடி மாணவர்கள் போராட்டம்! 20 மார்ச் 2013 தமிழகத்தில் மாணவர் எழுச்சி ஏற்பட்டு இன்று பத்தாவது நாளாகவும் தொடர்க்கிறது. இந்நிலையில் மாணவர்கள் ஒரு கோடி மாணவர்கள் திரளும் போராட்டத்தை நடத்துகின்றனர். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் இப்போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி மாணவர்போராட்டத்திற்கு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் திரண்டு வருகின்றனர். இந்நிலiயில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்றனர். அதேவேளை நாளைய தினம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும்இ சென்னையில் கல்லூரி சாலையிலும் மாணவர்கள் அமைதியான வழியில் பேரணி நடத்தவும் மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். மாணவர் போராட்டத்தால் ஸ்தம்பித்த திருப்பூர் அத…
-
- 0 replies
- 529 views
-
-
சட்டமன்ற தேர்தலில்... விடுதலை சிறுத்தைகள், தனிச் சின்னத்தில் போட்டி சட்டமன்ற தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என அரசாணை பிறப்பித்ததற்கு, முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் திருமாவள…
-
- 0 replies
- 420 views
-
-
சசிகலாவுக்கு, டி.ராஜேந்தர் சரமாரி கேள்வி! தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகல…
-
- 0 replies
- 359 views
-
-
பழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம் முதல்வர் பழனிசாமி தரப்பினர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக, பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருவது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் அணி சார்பில், மனு அளிக்கப்பட்டு உள்ளது; இம்மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. குறுகிய காலத்திற்குள், முடிவெடுக்க முடியாததால், இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் ம…
-
- 0 replies
- 242 views
-
-
அலை செய்திகளின் புதிய முயற்சியாக மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு விவாதக்களம் ! மாணவர்கள் பங்கேற்ற இந்த விவாதக்களத்தில் தொலைக்காட்சியில் பேச முடியாத பல விடயங்கள் இதில் அலசப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் அரசியல் அறிவை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு மாணவர்கள் மிக நேர்த்தியாக தங்கள் பதிலை முன்வைத்து உள்ளனர். ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் ஆய்வாளருக்கு நிகராக மாணவர்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். தமிழக அரசியல், இந்திய அரசியல், சர்வதேச அரசியல் என அனைத்து மட்டங்களிலும் மாணவர்கள் தங்கள் பார்வையை அகலப்படுத்தி உள்ளனர் என்பதற்கு இந்த காணொளியே சான்று . இதில் மாணவர்கள் பேசிய தலைப்புகள் வருமாறு ௧. காங்கிரஸ் வீழ்ச்சி மற்றும் அரசியல…
-
- 0 replies
- 809 views
-