Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார் என பெற்றோலியத் துறை மற்றும் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். கட்சிப் பணிகளை பார்க்கச் செல்கிறேன் என தனது சுற்றுச்சூழல்துறை அமைச்சுப் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்திருந்தார் ஜெயந்தி நடராஜன். ஆனால் சுற்றுச்சூழல்துறையை அவர் சரியாக கவனிக்கவில்லை. பல திட்டங்கள் கிடப்பில் போடபப்ட்டுள்ளன. இது குறித்து ராகுல் காந்தியே விமர்சித்தத்தால் தான் ஜெயந்தி நடராஜன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என சில ஊடகங்கள் குற்றம் சாட்டின. ஆனால் இதனை மறுத்துள்ள ஜெயந்தி நடராஜன், எந்தவித திட்டங்களும் கிடப்பில் போடப்படவில்லை என்றார். தற்போது வீரப்ப மொய்லிலும் அதே கருத்தைக் கூறியுள்ளார…

  2. வரும் 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு தமிழர் பிரதிநிதியாக மக்களால் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை இரு பெரும் திராவிடக் கட்சிகள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் பிடிக்கின்றன. இதற்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று சிலர் எண்ணி தேசியக் கட்சியான பாஜக வுடன் மதிமுக பாமக போன்ற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளன. பாஜக காங்கிரஸ் ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் கொள்கை அளவிலும், ஊழல் அளவிலும், தமிழின விரோதப் போக்கின் அளவிலும் ஒரே நிலையில் இயங்கும் கட்சிகளாகும். இக்கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழர்களிடம் வாக்கு சேர்ப்பது தமிழினத்திற…

  3. சென்னை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இசைஞானி இளையராஜா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளையராஜா இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில், டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென அளவுக்கு அதிகமாக வியர்த்து கொட்டி, லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 'நலமுடன் உள்ளார்' இதனிடையே இளையராஜா மேனஜர் இதுகுறித்து கூறுகையில்," இளையராஜாவுக்கு இன்று காலை இலேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உட…

    • 4 replies
    • 1.3k views
  4. Morgan Freeman mistaken for Mandela on billboard Actor's face next to Gandhi, Martin Luther King and Mother Teresa. By Ben Arnold Yahoo UK Movies News - Freeman... or is it Nelson Mandela? (Copyright: Twitter) Morgan Freeman's turn in the movie 'Invictus' was clearly a little too convincing. A billboard spotted in Coimbatore, southern India, mistakenly has the Hollywood star's face emblazoned on it in a tribute to the late Nelson Mandela. [Idris Elba: Mandela's death 'surreal'] Clothing merchant Chandrashekhar paid for the billboard, one of many across India paying tribute to the South African leader, but says that the …

  5. எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கனவு காண்பதாக நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டினார். திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தக் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வாக்குகளே உண்மையான வாக்குகள். அந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி திமுகதான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டும் திமுகவைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனவேதான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். ஆனால், நாங்கள் காங்…

  6. டிச.27-எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு.. திருவாரூர் ஓட்டல் செல்வீ'ஸ் காசி அரங்கில்- "உயிர்வலி" - ஆவணப்படம் வெளியீடு. பேராசிரியர் செயராமன்-மருத்துவர் பாரதிசெல்வன்-அம்மா அற்புதம் குயில்தாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். வாருங்கள் உறவுகளே. (facebook)

  7. நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 'உயிர் வலி' ஆவணப்படம் நாளை (22.12.2013) மாலை 5மணிக்கு கோவையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. கோவையில் உள்ள அனைத்து இளைஞர்களும் மாணவர்களும் 'உயிர் வலி' ஆவணப்பட அறிமுக விழாவிற்கு வருமாறு கேட்டுக்கொள்ள படுகின்றனர்.. இடம்: குஜராத்தி சமாஜம், கோவை நேரம்: மாலை 5மணி தேதி: ஞாயிறு (22.12.2013) (facebook)

  8. இலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வாக பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுப்­ப­தற்­குப் ­ப­தி­லாக, காங்­கிரஸ் அமைச்­சர்கள் முச்­சந்­தி­களில் நின்று பேசு­வது ஏமாற்று வேலை என்று உலகத் தமிழர் பேர­மைப்பு அறக்­கட்­டளை தலை­வ­ரான பழ.நெடு­மாறன் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் அவர் தெரி­வித்­த­தா­வது, இலங்­கையில் மீத­முள்ள தமி­ழர்­க­ளையும் ஒழிப்­ப­தற்­காக அந்­நாட்டு அரசு நட­வ­டிக்கை மேற்­கொண்­டு­வரும் நிலையில், பிரிட்டிஷ் பிர­தமர் தைரி­ய­மாகச் சென்று தமி­ழர்­களைச் சந்­தித்துப் பேசி­ய­துடன் அது­கு­றித்து பொது­ந­ல­வாய மாநாட்­டிலும் கண்­டனம் தெரி­வித்தார். இத்­த­னையும் நடை­பெற்ற பிறகும் இலங்­கைக்கு அருகில் உள்ள இந்­திய அரசோ, தொடர்ந்து மெளனம் சாதித்து வரு­கி­…

  9. கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுத்து கஸ்தூரி இரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு வழங்கிய ஒப்புதலை இரத்து செய்து சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் பதவி விலகி இருக்கிறார். தமிழகத்திற்கு இப்படியொரு அப்பட்டமான துரோகத்தைச் செய்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்? கேரளாவில் இருந்து கிடைக்கும் வாக்குகள் எங்களுக்குப் போதும். தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உறுப்பினர்கள் தேவையில்லை என்பதாகத்தானே இருக்க முடியும்? தமிழகத்தைச் சேர்ந்த பிற காங்கிரஸ் அமைச்சர்களும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள நினைக்கும் கட்சிகளும் வேடிக…

  10. சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அதில் சமீபத்திய புதுவரவு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக…

  11. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி, அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடிபோலச் செயல்பட்ட இந்திய அரசு, இந்தப் பிரச்னையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளியானபோதுகூட, இந்திய அரசு அடக்கியே வாசித்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா, 'உளவு எல்லாம் இல்லை. சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான்’ என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும…

  12. தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப்பெற முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளதை இந்தியா ஏற்க மறுத்துள்ளது. அமெரிக்காவில் தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை நிபந்தனை இல்லாமல் உடனடியாக கைவிட இந்தியாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். தொடர்புடைய விடயங்கள் காங்கிரஸ், மன்மோகன் சிங் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங்கை புதுடில்லியில் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவின் பிடிவாதம் குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளிப்பட…

  13. நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்கிறார். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பை தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார். இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இவ் மூவருக்கும் தூக…

  14. தமிழர்கள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்தியாவை தமிழர் ஆட்சி செய்ய வேண்டிய நேரம் உதயமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தர் பிரதேசதம், கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்திய பிரதமர்களாக பதவி வகித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி செயற்குழுக் கூட்டத்தில், தமிழர் ஒருவர் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் தமது கட்சி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை ஆட்சி செய்யக் கூடிய …

  15. நிரபராதி தமிழர்களின் வேதனையை படம் பிடிக்கும் "உயிர்வலி" ஆவணப்படம் திரையிடல் வருகின்ற 07/01/2014 அன்று பாளையங்கோட்டை ADMS அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வினை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் நடத்துகின்றது. வாய்ப்பிருக்கும் தோழர்களையும், மாணவர்களையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.. (facebook)

  16. http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4

  17. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு : மதுரை மாவட்ட நிகழ்வுகள் : 20-12-13 அன்று காலை உயர்நீதி மன்றத்தில் ' அணு உலைக்கு எதிரான வழக்குரைஞர் கூட்டமைப்பு ' ஆர்ப்பாட்டம். மாலை 6 மணிக்கு திருமங்கலம்- ராஜாஜி சிலையருகில் தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு : கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு. 21-12-13 அன்று தெருமுனைக் கூட்டங்கள் : காலை 10 மணிக்கு கோரிப்பாளையம்- ஜம்புரோபுரம் மார்க்கெட் - ஏற்பாடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம். மதியம் 3 மணிக்கு செல்லூர் சரஸ்வதி திரையரங்கம் அருகில், மாலை 5 மணிக்கு செல்லூர் தாகூர் நகர், ஏற்பாடு: தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி. இரவு 7 மணிக்கு மீனாட்சிபுரம் - ஏற்பாடு : தமிழ்நாடு மக்கள் கட்சி…

  18. வெள்ளிக்கிழமை , 20-12-13 புது டில்லி சீக்கிய மற்றும் இதர அரசியல் சிறைவாசிகள் தொடர்பான பத்திரிக்கையாளார் சந்திப்பில், 2009இல் ப.சிதம்பரத்தின் மீது செருப்பு வீசிய சீக்கிய பத்திரிக்கையாளர் மரியாதைக்குரிய திரு. ஜர்னாயில் சிங் அவர்களுடன் உடன் பங்கேற்கிறோம். வாய்ப்பிருக்கும் தில்லி வாழ் தமிழ்த் தோழர்கள் பங்கேற்கும் படி வேண்டுகிறோம். இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் SDPI தேசிய செயலாளர் ரஃபி முல்லா அவர்களும் பங்கேற்கிறார். Thirumurugan Gandhi (facebook)

  19. அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவில் அமெரிக்க தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் சலுகைகளையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது. …

  20. சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்ப…

  21. சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பீதியில் உறைந்து போயுள்ளனர். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மதிமுக, பாமகவை இணைவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் திமுகவோ அதிரடியாக காங்கிரஸை கழற்றிவிட்டு பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திமுக, பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கதவுகளை திறந்து வைத்து காத்திருந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸுக்கான கதவை அடைத்துவிட்டது திமுக. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் சந்தேகம் என்ற தொனியையும் திமுக உருவாக்கியிருக்கிறது.இதேபோல் திமுக அல்லது அதிமுகவின் தோளில் சவாரி ஏறலாம் என்று காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது திமுகவின் கதவு மூடப…

  22. பாஜக தலைமையில் புதிய கூட்டணி- திமுக, அதிமுகவுக்கு இடம் கிடையாது: இல.கணேசன். சென்னை: திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணி பாஜக தலைமையில் அமைக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். இல்லம்தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற வாசகத்துடன் கூடிய கிராம யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டது. சென்னை மேடவாக்கத்தில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கடந்த 1ம் தேதி யாத்திரையை துவக்கினார். இந்நிலையில் நேற்று யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் இல. கணேசன் பேசுகையில், தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணியை பாஜக தலைமையில் உருவாக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த புதிய கூட்டணியில் மதிமுக உள்ள…

  23. மணலும் மண்ணும் வரும் தலைமுறைக்கும் வேணும் அள்ளிய மணலால் ஆறெல்லாம் மலடாக தீர்த்தவாரிக்கென வந்த கடவுள் திகைத்து நின்றார் தீர்த்தமற்ற ஆற்றைக் கண்டு. கொண்டுவந்த தண்ணீரால் குளித்துக் கரையேறி கருவறை புகுந்தார் அழிக்கும் மனித சக்தியின் அளவில்லா மகத்துவம் அறிந்து! ● கே. ஸ்டாலின் சித்திரை மாத வெயில் உக்கிரமாக இருக்கும் வேளையில், வேப்பமரத்து நிழல்போர்த்துள்ள ஓடையில் கையை தலைக்கு வைத்து மேலாடை இல்லாவெற்றுடம்பில் உறங்கிய அனுபவம் இருக்கிறதா? மணலின் சிறு துகள்உடம்பை மெதுவாக அக்குபிரசர் செய்யும். அந்தச் சுகத்தில் உறக்கம் கிறக்கம்கொள்ளும். குளு குளு அறைகள் கொடுக்காத சுகத்தை கிராமத்து ஓடைகள்கொடுத்தன. இன்றைய நவீன யுகம் அந்த ஓடைகளையெல்லாம் கெடுத்தன…

  24. இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்கிறார். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பை தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார். இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இவ் மூவருக்கும் தூக்கு தண்டணை கொடுத்தது தவறு என முன்னாள் நீதிபதிளே பல முறை சொன்ன பின்னும் 22ஆண்டுகள் தனிமை சிறைக்கு பின்னும் இவர்களை தூக்கில் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.