தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
முதல்முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜய்: எங்கு? எப்போது? ByKavi Jan 18, 2025 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2023 முதல் இவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பரந்தூர் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவுதெரிவித்து வ…
-
-
- 4 replies
- 370 views
- 1 follower
-
-
சென்னை: இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்பு இருக்கிறது. காதல் மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இதை அரங்கேற்றி கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது. முதலில் படித்து வேலை பார்க்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சென்னை அடையாறில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பாமகவை தவிர எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனவேதான் புதிய அரசியலை பேசுகிறோ…
-
- 0 replies
- 761 views
-
-
முதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னரிடம் அனுமதி கேட்க தயாரா வோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவை அடுத்து, பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். எளிமையான முதல்வராக, மக்கள் விரும்பும் வகையில், செயல்பட்டு வந்தார். அவரே, முதல்வராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இருந்தது. பன்னீருக்கு நற்பெயர் கிடைப்பதை விரும்பாத சசிகலா, முதல்வராக துடித்தார். முதல்வரை மிரட்டி, ராஜினாமா க…
-
- 0 replies
- 399 views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான நிலையில், ஏழு மாதங்களுக்குப் பின் மக்களை சந்திக்கும் ஜெயலலிதா வரும் 22-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். 23-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மீது 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ஜெயலலிதா இழந்தார். தொடர்ந்து நிதியமைச் சர…
-
- 0 replies
- 310 views
-
-
முதல்வராக நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வந்தால் உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும்: துரைமுருகன் தகவல் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் முதல்வர் பதவியில் நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வரும் சூழ்நிலை வந்தால், அப்போது அவருக்கு உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் முதன் மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும் பதவியேற்றனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை க…
-
- 0 replies
- 282 views
-
-
முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி? ''முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க இறைவன்தான் அருள் புரிய வேண்டும்'' என திருவாய் மலர்ந்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.! இதனை வாழ்த்துச் செய்தியாக எடுத்துக்கொள்வதா? அல்லது வசைமொழியாக எடுத்துக்கொள்வதா? ஏற்கெனவே, 'தமிழகத்தை காவி மயமாக்க முயற்சிக்கிறது மத்திய அரசு', என்ற குற்றச்சாட்டு சசிகலா தரப்பினரால் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், 'பி.ஜே.பியை தமிழகத்தில் கால் ஊன்ற ஒருநாளும் விடமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் கனவான திராவிட ஆட்சி இல்லாத தமிழகம் என்ற வசனம் எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. அரசியல் சட்டத்தில் இ…
-
- 0 replies
- 385 views
-
-
முதல்வரின் அறிவிப்பினை வரவேற்றார் ராமதாஸ்! ஏழைகளுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளமையினை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும். தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜ…
-
- 0 replies
- 474 views
-
-
முதல்வருக்காக லண்டனிலிருந்து வந்த புது மருத்துவர்! - அப்போலோ அப்டேட்ஸ் தமிழக முதல்வர் ஜெயலலிதா 13 நாட்களைக் கடந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டைத் தொடர்ந்து, நேற்று மற்றொரு லண்டன் மருத்துவர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ‘முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் …
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
முதல்வருக்கு ஆதரவாக இளைஞர்கள் திரள வாய்ப்பு: மெரினா கடற்கரையில் போலீஸார் குவிப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினாவில் திரளப்போவதாக தகவல் கிடைத்ததையொட்டி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர் | படம்: ம.பிரபு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி கடந்த மாதம் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடந்து…
-
- 0 replies
- 277 views
-
-
முதல்வருக்கு எதிராக அவதூறு: சீமான் மனு தள்ளுபடி! மின்னம்பலம் அவதூறு வழக்கை ரத்துசெய்யக் கோரிய சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கும் அதிகாரம் எதுவும் இல்லை” என்று கருத்து தெரிவித்தார். முதலமைச்சர் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்த பேட்டி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.இதையடுத்து சீமான் மீது முதலமைச்சர் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் அரசு வக்கீல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி…
-
- 1 reply
- 838 views
-
-
முதல்வருக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: சட்டப்பேரவை முடக்கப்படுகிறதா? முதல்வர் பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி, ஆதரவு எம்எல்ஏக்களின் ஆட்சி கலைப்பு கோஷம் என தமிழக அரசில் சிக்கல்கள் உருவாகியுள்ளதால், சட்டப்பேரவையை முடக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுகவில் கடந்த பிப்ரவரி மாதம் பிளவு ஏற்பட்டது. பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். அணிகள் இணைப்பு முடிந்ததும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழு கூட…
-
- 0 replies
- 437 views
-
-
முதல்வருக்கு எதிராக தம்பிதுரை 'பொங்கியதற்குக்' காரணம் இதுவா? சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ஏறக்குறைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான குரல் என்பதை யாரும் மறுக்க முடியாது. கட்சியின் தலைமையும், ஆட்சியின் தலைமையும் ஒருவராக இருந்தால்தான் ஒருமித்து செயல்பட முடியும் என்றும் அவர் சசிகலாவுக்குக் கூறியுள்ளார். இது கட்சி அடிப்படையில் அவர் கூறியுள்ள கருத்தாக எடுத்துக் கொண்டாலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்…
-
- 3 replies
- 642 views
-
-
முதல்வருக்கு எதிராக நீதிபதி போராட்டம்? புதுடில்லி:'தமிழகத்தில் அமைந்துள்ள, சிறையில் இருந்து நடத்தப்படும் பினாமி ஆட்சி நீக்கப்படும் வரை என் போராட்டம் தொடரும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'தமிழன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப் படுகிறேன்' என, நேற்று முன்தினம், 'பேஸ்புக்' சமூகவளைதளத்தில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தன் கருத்தை வெளியிட்டி ருந்தார், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. இந்த நிலையில், நேற்று பதிவிட்டுள்ள மற்றொரு செய்தியில், அவர் கூறியுள்ளதாவது: தமிழர் குறித்து நான்கூறியுள்ள கருத்துக்கு வந்துள்ள பதில்கள், …
-
- 0 replies
- 507 views
-
-
முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் இன்று மீண்டும் சென்னை வருகை முதல்வர் ஜெயலலிதா | கோப்பு படம் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணத் தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக் டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் டாக்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்ட…
-
- 8 replies
- 1.1k views
-
-
முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி சசிகலா குடும்பத்தினர் உத்தரவு காரணமாக, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கவிருந்த, அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை முதல்வராக பணியாற்றியவர் என்பதால், அவர் முதல்வரானதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் …
-
- 0 replies
- 571 views
-
-
முதல்வருக்கே தடை போட்ட துணை சபாநாயகர்: டில்லியில் 'தில்லாலங்கடி' ''என்னைச் சந்திக்க நேரம் தராத, பிரதமர், நரேந்திர மோடியை, நீங்களும் சந்திக்க வேண்டாம்,'' என, துணை சபாநாயகர் தம்பிதுரை தடை போட்டு, இம்முறையும் முதல்வர் பன்னீர்செல்வத்தை பாடாய் படுத்தியதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வறட்சி நிவாரண நிதி கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப் பட்டிருந்தது. இந்நிலையில், வியாழனன்று சந்திக்க வரும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டது.முதல்வர் டில்லி கிளம்புகிறார் என்ற தகவல் தெரிந்ததும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா தரப்பும் சுறுசுறுப்பாகி, ஜல்லிக்கட்டு விஷயத்திற்கு, இந்த சந்திப்பை பயன்படுத்த திட்டமிடப்பட்டது.…
-
- 0 replies
- 460 views
-
-
முதல்வரை சந்திக்க அப்போலோ சென்றார் தமிழக ஆளுநர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார். மேலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 4-ம் தேதி வரை ஆளுநர் தமிழகத்தில் தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவரும்வேளையில், ‘அவரது உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடப்படும்’ என்று கூறிவந்தனர். தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜ…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
முதல்வரை தகுதியிழப்பு செய்யலாமா? : வழக்கில் செப்., 13 வரை அவகாசம் மதுரை: சிறையில் சசிகலாவை சந்தித்த விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி மற்றும் நான்கு அமைச்சர்களை தகுதியிழப்பு செய்ய கோரிய வழக்கில், 13ம் தேதி வரை அவகாசம் அளித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார்ஆணழகன் தாக்கல் செய்த பொதுநல மனு:அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, சீனிவாசன், காமராஜ், பிப்., 28ல், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர். அவர்கள், 'அரசின் செயல்பாடுகள் பற்றி சசிகலாவிடம் பேசினோம்' என்றனர். இதற்கு, முதல்வர் பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்களி…
-
- 0 replies
- 285 views
-
-
முதல்வரை துரோகியாக்கிய துணை சபாநாயகர் ''பன்னீர்செல்வம் ஒரு துரோகி; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரைப் பற்றி, இனி பேசி பயனில்லை,'' என, கூறியிருப்பதன் மூலம், அனைத்து, எம்.பி.,க்களும் முகாம் மாறினாலும், தம்பிதுரை மட்டும் மாறமாட்டார் என, தெரிய வந்துள்ளது. சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என, தீவிரமாகவும், வெளிப்படையாகவும் கூறி வந்தவர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பிரச்னை ஏற்பட்ட பின், தனக்கு முக்கிய பதவி கிடைக்குமென, தம்பிதுரை நம்பினார். ஆனால், கட்சி நிர்வாகிகளை சசிகலா மாற்றியமைத்த போதும், தம்பிதுரையை கண்டு கொள்ளவில்லை. பொருளாளர், அவைத் தலைவர் என, முக்கிய பதவிகளில…
-
- 0 replies
- 656 views
-
-
முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம்: எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தங்க தமிழ்ச்செல்வன் | கோப்புப் படம்: எம்.சாம்ராஜ் முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ''தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள்…
-
- 0 replies
- 330 views
-
-
முதல்வர் ஆகிறாரா செங்கோட்டையன்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ' நேற்று முழுவதும் மிகுந்த குழப்பத்துடன் இருந்தார் சசிகலா. எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசும்போதும், அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா அளித்த தீர்ப்பை இன்று உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தீர்ப்பு நாளில் எதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை தீர்ப்பு வெளியான நேரத்தில், கூவத்தூரில் கட்சி நிர்வ…
-
- 0 replies
- 307 views
-
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின் Jan 24, 2025 நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சிலர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) மறைமுகமாக விமர்சித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3000 பேர் இன்று (ஜனவரி 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,”பல்வேறு பொறுப்புகளில் ஒரு இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நீங்கள், அந்த இயக்கத்தின் தலைமை முறையாக இல்லை, நமக்கு மட்டுமல்ல தாய்நாட்டிற்கும் அது துரோகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்து சிறப்பான முடிவெடுத்து தி…
-
-
- 22 replies
- 1.1k views
- 1 follower
-
-
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம் சூட்டினார்.களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும் ரஜினி குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலை…
-
- 0 replies
- 1k views
-
-
முதல்வர் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்கள் அரசு இயந்திரம் இயங்கும் ? 15 நாட்களைக் கடந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 22ம் தேதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என தொடக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து சிறப்பு நுரையீரல் மற்றும் செப்ஸிஸ் மருத்துவ நிபுணர் வந்து சென்ற பிறகுதான் தொற்றுக்கான சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சைகளை பார்த்துச்சென்றுள்ளனர். இந்தநிலையில், முதல்வருக்கு இதுநாள் வரை …
-
- 0 replies
- 447 views
-
-
முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிரடியாக பேசி இருக்கிறார் சசிகலா புஷ்பா. ' முதல்வரின் உடல்நிலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என சர்ச்சை கிளப்பியிருக்கிறார். டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, " முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, நான் பேசிய பிறகே அப்போலோ மருத்துவனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது. குறிப்பாக, 'ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் போடுவேன்' என பேட்டி கொடுத்த பிறகுதான் அறிக்கை வெளிவருகிறது. என்னைப் போல, சசிகலா நடராஜனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். கட்சியின் சீனி…
-
- 0 replies
- 363 views
-