Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive சென்னையில் நடந்த தளவாய்சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் வருவதையறிந்த டி.டி.வி.தினகரன், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இது, கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தள…

  2. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்..? தமிழக அரசியலில், கடந்த 7-ம் தேதி ஆரம்பித்த சூறாவளிப் புயல் நேற்றைய வாக்கெடுப்பு வைபவத்தோடு கரை கடந்துவிட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களில்தான் எத்தனை எத்தனை திருப்பங்கள், ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்... எது எப்படியோ... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டுவிட்டார்.! தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அசாதாரண சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சில குறிப்புகள் இங்கே...அரசியல் விஷயங்களில், தாங்கள் எந்தப் பக்கம் என்று இதுவரையிலும் உறுதியான அடையாளம் காட்டிக்கொள்ளாத…

  3. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி பறிப்பு சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி தினரன் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் வெளியிடுகிறேன் என்று துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என்று கூறிய தினகரன் ஏற்கனவே வைத்திலிங்கம், முக்கிய அ…

  4. முதல்வர் எப்போது வீடு திரும்புவார்? அப்போலோ பிரதாப் ரெட்டி பதில் முதல்வர் ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்த கேள்விக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகத் தலைவர் பிரதாப்ரெட்டி பதில் அளித்துள்ளார். உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 44-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வரின், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக முதல்வருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் நேற்று எடுக்கப்பட்டது. தற்போது, அவர் நன்றாக சுவாசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர்…

  5. முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க., சட்ட சபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சசிகலா முதல்வராகிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1704844

  6. அரசியல் கிசு கிசு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய மறுப்பு? ஆதரவு எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா, சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அப்படி அவர் சட்டமன்ற கட்சி தலைவராக வேண்டும் என்றால், முன்னதாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநனரிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்க வேண்டும். ஆனால், இன்று காலை வரை ஓ.பன்னீர்செல்வம் …

  7. முதல்வர் கமல்... அமோக ஆதரவு... ஆனால், களம் காணவேண்டும்! #VikatanSurveyResult தமிழக அரசியல்குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 'கேரள முதல்வருடனான சந்திப்பு, விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திப்பது என முழு நேர அரசியல்வாதியாக மாறிக்கொண்டிருக்கிறார் கமல்' என்ற தகவல்களும் வலம் வருகின்றன. 'தனிக்கட்சி தொடங்குவேன்' எனவும் அவர் பேசியிருக்கிறார். கமல்ஹாசனின் அரசியல் வருகைகுறித்து மக்கள் மத்தியில் உலவும் சில கேள்விகளைத் தொகுத்து வழங்கி இருந்தோம். இதற்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் சர்வேயில் கலந்துகொண்டு வாக்குகளை அளித்திருந்தனர். அதன் முடிவு இங்கே... 1) கமல்ஹாசனின் கோபத்தில் பொதுநலன் இருப்பதாகக் கருதுகிறீர்களா? …

  8. முதல்வர் கோப்புகளில் கையெழுத்திடப்போகும் ஓ.பி.எஸ்? தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், முதல்வரின் துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் தலைமை செயலகத்தில் வழக்கமான அரசுப் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில், இனி முதலமைச்சரின் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட உள்ளதாக தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். http://www.vikatan.com/news/politics/69564-o-panneerselvam-to-sign-on-files-for-chief-minister.art

  9. முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்! முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் 17 நாட்கள் ஆகிறது. இதுவரை அவரை மருத்துவர்கள் தவிர யாரும் சந்திக்க வில்லை. ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட பல தலைவர்கள் மருத்துவமனை வந்தும், மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்களே தவிர, ஜெயலல…

  10. இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கையில் நடந்த போர்குற்றத்தை விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என தீர்மானம் நிறைவேற்ற்றினார். பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.இந்த தீர்மானம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், காலத்தின் தேவை குறித்து இந்த தீர்மானம் இன்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்க…

  11. முதல்வர் ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது: பிரதமர் வி.உருத்திரகுமாரன் ‘தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ‘தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்து அளித்துள்ள தீர்ப்பின் பிரகாரம் அவர் முதல்வர் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இந்த நெருக்கடியான நிலையைச் சட்டரீதியாக எதிர் கொண்டு …

  12. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வியாழக்கிழமை இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இந்த தகவலைத்தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ ம…

  13. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காருக்கு முன்பு சட்டையைக் கழற்றி தனது கோரிக்கையை வலியுறுத்தி போராட முயன்ற நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். நேற்று முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபை கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். தலைமைச் செயலக வளாகத்தில் அப்போது முதல்வரிடம் மனு கொடுக்க பலர் காத்திருந்தனர். அவர்களை கயிறு கட்டி பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். முதல்வர் காரில் ஏறி புறப்பட்டபோது திரண்டிருந்த அ.தி.மு.க.,வினர் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். அப்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிச்சையாண்டி என்பவர் திடீரென தன் சட்டையை கழற்றத் தொடங்கினார். அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை சுற்றி வளைத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணை நடத்தியபோது, தீயினால் பாதிக்க…

  14. முதல்வர் ஜெயலலிதாதான்... பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு! - முதல்வர் ஆலோசனைப்படி அறிவிப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.சற்றுமுன்பு ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இனி அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். மேலும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா முதலமைச்சராகவே ந…

  15. முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 அதிகரித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவோடு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு …

  16. முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி முதல்வர் ஜெயலலிதா தனது சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2006-ல் . ரூ.24.7 கோடியாகவும், 2011-ல் ரூ.51.40 கோடியாகவும் இருந்தது. இது தற்போது இரு மடங்காக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அத்துடன் தனது அசையும் - அசையா சொத்து விவரங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார். அதன் விவரம் வருமாறு: 2013–2014–ம் ஆண்டு வங்கிக் கணக்குப்படி மொத்த வருமானம்: ரூ.33,22,730 | கையிருப்பு - ரூ.39,000 | வங்கி கணக்கில் சேமிப்பு தொகை - 9 கோடியே 80 லட்சத்து 9,639 ரூபாய் | மைலாப்பூர் கரூர் வ…

  17. முதல்வர் ஜெயலலிதாவின் நிலை என்ன ? : தமிழச்சியின் கருத்தால் சர்ச்சை - ஒரு பார்வை (காணொளி இணைப்பு) தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றமேற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்கள் கடந்துவிட்டன. ‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத…

  18. சென்னை வந்துள்ள ஹொலிவூட் நடிகர் ஆனல்ட், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம் - எமி ஜக்ஸன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். ஆனல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஒரு நடிகர் மட்டுமல்ல. கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இரு முறை (2003 - 2011) பதவி வகித்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரமுகர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று அவர் சந்தித்தார். பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த…

  19. முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து கலங்கிய சசிகலா! - பணியில் இருந்தே நீக்கப்பட்ட அப்போலோ நர்சுகள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. 'மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக மூன்று பேரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ' நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக முதல்வர் சிகிச்சை எடுத்து வருகிறார்…

  20. முதல்வர் பட்டியலில் மூன்று பெயர்! கூவத்தூரில் அடுத்த அத்தியாயம்..!.! #OpsVsSasikala #DACase #JudgementDay சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நாளை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வராகும் எண்ணத்தில் இருக்கும் சசிகலாவுக்கும், அவரை நம்பிக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்தத் தீர்ப்பின் முடிவைப் பொறுத்தே எதிர்காலம் அமைய இருக்கிறது...! தமிழக அரசியல் பரபரப்பைக் கூட்டும் விதமாக எதிர்க்கட்சியான தி.மு.க-வும் அவசர, அவசரமாக கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. கடந்த 5-ம் தேதி, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா பெயரை, முன்மொழிந்தார் ஓ.பன்னீர்செல்வம். கூடவே, சசிகலா ம…

  21. `முதல்வர் பதவி மீது OPS க்கு ஆசையில்லை` ''உங்கள் யாரிடமாவது என்னை முதலமைச்சராக்க வேண்டும் என கேட்டுள்ளேனா? என ஓ பன்னீர் செல்வம் வெளிப்படையாகவே செயற்குழு கூட்டத்தில் கேட்டார்.அவருக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை’’- அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகரன் பிரத்யேக பேட்டி

    • 0 replies
    • 625 views
  22. முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் துறவி அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக ஆன போதே, அக்கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர்தான் அறிவிக் கப்பட வேண்டும் என மதிமுக வினர் எதிர்பார்த்தனர். இதை மாவட்டங்கள்தோறும் நடந்த தேர் தல் ஆலோசனை கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ‘கடந்த தேர்தல்களைப் போல பதவி ஆசையில்லை என்று கூறி, யாருக் கும் விட்டுக் கொடுக்கக்கூடாது, எல்லா திறமையும் பெற்றிருக்கும் நீங்கள் (வைகோ) மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக வேண்டும்’ என்றனர். அதற்கு வைகோ, ‘உங்கள் கட்டளையை மீற முடியாது. ஏற…

    • 0 replies
    • 552 views
  23. முதல்வர் பதவி! சசிகலாவுக்கு தம்பிதுரை முக்கிய கோரிக்கை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பேசிய சசிகலா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்றார். பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு மு…

  24. முதல்வர் பதவிக்கு மோதும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என 2 தரப்புகளும் உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப் பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட் டார். இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், 7-ம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத் தினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து அதிமுக வ…

  25. முதல்வர் பன்னீர் ராஜினாமா? முதல்வர் பன்னீர்செல்வம், தன் ராஜினாமா கடிதத்தை, சசிகலாவிடம் வழங்கியதாக வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ள சசிகலா, முதல்வராக பதவியேற்க வேண்டும்' என, தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'முதல்வர் பதவியேற்க, சசிகலா முன் வர வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில், மாலை, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், போயஸ் கார்டன் சென்றனர். அங்கு, நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது. அப்போது, பன்னீர்செல்வம், முதல்வர் பதவி ராஜினாமா செய்யும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.