Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரசு விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் பூங்கொத்து, சால்வை, விலை உயர்ந்த பொருட்களை நினைவுப் பரிசாக அளிப்பதை விட தரமான புத்தகங்களை கொடுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தக திருவிழா நேற்று மாலை துவங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், என் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் நான் படித்தேன். சட்டப்படிப்பு படிக்கையில் என் ஆங்கில அறிவை வளர்க்க ஆங்கில தினசரி பத்திரிக்கைகளை படித்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது ஒரு நாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எனக்கு போன் செய்து, உங்…

  2. கூடங்குளம் அணுவுலைக் கெதிரான போராட்டத்தில் போராட்டகாரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற மாநில அரசை வலியுறுத்தியும், மக்களை பாதிக்கும் கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக மூடக்கோரியும் எஸ்.டி.பி .ஐ கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று(03.08.2013) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட பொது செயலாளர் எ.கே.கரீம் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர்கள் ரத்தினம், அமீர் ஹம்சா, வட சென்னை மாவட்ட தலைவர் முகமது ரஷீத், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பாப்பு…

  3. கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்க முடியும் என்ற அமர்த்தியா சென்னின் கருத்து குறித்து திமுக தலைவர் கருணாநிதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘நோபல்'' பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, வெளிவந்துள்ள நூலினை அண்மையில் நக்கீரன் காமராஜ் தனது பிறந்த நாளினையொட்டி என்னிடம் அளித்தார். இவர்கள் எழுதிய ‘‘நிலையில்லா புகழ்-இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும்'' என்ற தலைப்பு கொண்ட அந்நூலில், பக்கம் 72-ல், ‘‘தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் ப…

  4. தமிழால் இணைவோம் படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்! ""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ 'தற்கொலை' பண்ணிக்கிறாங்க பசங்க. பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும் "பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க. எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த ஈடுபாடுதான், ஐ.நா.,சபை இளைஞர்கள் மாநாட்டுல, எனக்குப் பேசுற வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு...'' எ…

  5. காரைக்கால்: காரைக்கால் மீனவர்களை இன்று இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை சேர்ந்த 45 மீனவர்கள் இன்று காலை 11 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். திருமலைராயன்பட்டினம் அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியதாக தெரிகிறது. மேலும், துப்பாக்கி காட்டியும் மிரட்டி உள்ளனர். அதோடு, மீனவர்களின் வலையை இந்திய கடலோர காவல் படையினர் அறுத்து எறிந்துள்ளனர். இதனால், அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பியுள்ளனர். இதுநாள் வரை இலங்கை கடற்படையினர்தான் தாக்குதல் நடத்தி வந்தனர் இந்த நிலையில் இந்திய கடற்படையினர் நம்நாட்டு மீனவர்கள் மீனவர்கள் மீதே த…

    • 5 replies
    • 605 views
  6. தமிழ்நெட் இணையத்தளத்திற்கு அறப்போர் ஆவணப்படத்தின் இயக்குனர் வெற்றிவேல் அவர்களின் செவ்வி. https://www.youtube.com/watch?v=-ax03GUHgek

  7. பாஜக மாநிலச் செயலாளராக இருந்து வந்த ஆடிட்டர் ரமேஷ் ஜூலை 19ம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆடிட்டர் ரமேஷ் கொலையைத் தொடர்ந்து இன்று நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி சேலம் வந்துள்ளார். ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். அத்வானி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் நகரம் முழுவதும் காக்கிகளின் முற்றுகையில் சிக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே உள்ளன. ஆடிட்டர் ரமேஷ் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இதுவரை சிக்கவில்லை என்பதால் அசம்பாவிதம் ஏதும் நேரிட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸார் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்று மதியம் சேலம் வந்த அத்வானி, …

    • 1 reply
    • 655 views
  8. முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானது தான் என உச்சநீதிமன்றத்தில் இன்று கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. http://www.dinaithal.com/tamilnadu/17957-mullai-periyar-dam-belongs-to-tamil-nadu-kerala-government-s-approval-of-the-supreme-court.html

    • 4 replies
    • 711 views
  9. தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் …

  10. விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி(23). இவர் அந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகனும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். கனிமொழி மற்றும் வேல்முருகன் காதல் பள்ளிப் பருவத்திலேயே ஆரம்பித்துள்ளது. பின்பு இருவரின் வீட்டிற்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரும் மேற்படிப்புக்காக வெவ்வேறு ஊர்களுக்கு சென்றுள்ளனர். இருப்பினும் இவர்களது காதல் மொபைல்போன் வழியாக தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கனிமொழி 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இவர்களின் காதல் …

  11. பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக வருகையைக் கண்டித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை மதிமுக நடத்தும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்துக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக செயல்படுவதாலும், காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னைகளில் ஓரவஞ்சமாக நடந்து கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி காட்டும் மதிமுகவின் போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, தேசிய நீர்வளக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமருக்கு எதிராக திருமயத்தில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு…

  12. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்த 5 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். மேலும் நாகை மீனவர்களின் படகில் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதில் மீன்பிடி வலைகள் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து காயம் அடைந்த 5 மீனவர்களும் தற்போது நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நாகை மற்றும் காரைக்கால் பகுதியிலிருந்து கடலுக்கு சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது மீனவர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படைய…

  13. மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அவர்கள்Â விடுத்துள்ள அறிக்கை : ஈழத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாலும் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற தமிழ்த் தேசியப் பிரச்னைகளில் ஓரவஞ்சகமாக நடந்துக் கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். ஆகஸ்டு 2-ஆம் திகதி திருச்சியில் வைகோ தலைமையில் நடைபெறவிருக்கும் கருப்புக் கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துக் கொள்ளும்படி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார். http://www.dinaithal.com/tamilnadu/17999-manmohan-singh-m…

    • 0 replies
    • 513 views
  14. மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ஈழத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாலும் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற தமிழ்த் தேசியப் பிரச்னைகளில் ஓரவஞ்சகமாக நடந்துக் கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். ஆகஸ்டு 2-ஆம் திகதி திருச்சியில் வைகோ தலைமையில் நடைபெறவிருக்கும் கருப்புக் கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துக் கொள்ளும்படி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். http://www.sankathi24.com/news/31954/64//d,fullart.aspx

  15. தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவினர் இன்று பந்த் போராட்டம் நடத்தினர். இதனால் பஸ், லாரி, ஆட்டோ போன்ற எந்த வாகனமும் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் காரிய கமிட்டியும் நேற்று மாலை கூடி, தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. தனி தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டதை த…

  16. திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் அதிமுக முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளை வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்று மணக்கிறார். திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் சட்டசபை சபாநாயகரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. நேற்று நிச்சயம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மெமோரியல் அரங்கில் தமிழர் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் நடக்கிறது. இந்த திருமணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமண நிகழ்ச்சியில் …

  17. கூடங்குளம் அணு உலையை இழுத்து முடக்கோரியும், அணு ஒப்பந்தத்தை இந்திய அரசு இரத்து செய்ய கோரியும் இந்தியாவில் தனியார்மயத்தை எதிர்த்தும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடும் போராட்டகாரர்களின் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் இன்று ( 24/07/2013 ) காலை மத்திய அரசு அலுவலகம் இருக்கும் நுங்கபாக்கம் சாஸ்திரி பவனை மே 17 இயக்க தோழர்கள் முற்றுகை இட்டோம். இதில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த தோழர் தபசிகுமரன் மற்றும் மே 17 இயக்க தோழர்கள் உட்பட நுற்றுக்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 90க்கும் அதிகமான தோழர்கள் கைது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். நன்றி முகனூல் May17 Movement

  18. இலங்கை அரசமைப்புச் சட்டத்தின், 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் ஆக., 8ம் தேதி, டெசோ சார்பில் மாவட்ட வாரியாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் பட்டியலில், தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரி இடம் பெறவில்லை. கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நடிகை குஷ்புக்கு, முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது; தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில், சிங்கள குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில், டெசோ சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுக…

    • 5 replies
    • 1.9k views
  19. லோக்சபா தேர்தல் தொடர்பாக தி ஹிந்து நாளிதழும் சி.என்.என். தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் அதிமுக கூடுதல் இடங்களையும் திமுகவுக்கு பெரும் பின்னடைவும் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதேபோல் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதம் கிடைக்குமாம். லோக்சபா தேர்தலுக்கு நாளையே தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும்? ஆளும் மாநில் அரசின் செயல்பாடு எப்படி? என்பது உள்ளிட்ட பல அம்சங்களை முன்வைத்து இந்த கருத்துக் கணிப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 65% பேர் ஆளும் அதிமுக அரசின் செயல்பாட்டில் திருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ம…

    • 2 replies
    • 484 views
  20. ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக திருச்சியில் ஆகஸ்ட் 2-ந் தேதி கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்ட, தமிழ்க் குலத்தை ஈவு இரக்கம் இன்றி, உலகம் தடை செய்த குண்டுகளை விமானப் படை கொண்டு வீசியும், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத் தாக்குதல் நடத்தியும், கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இனவாத இராஜபக்சே அரசுக்கு, முப்படைத் தளவாடங்களைத் தந்தும், தமிழர் இன அழிப…

    • 1 reply
    • 342 views
  21. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க கோரி சென்னையில் திராவிடர் கழரக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆகஸ்ட் 1ல் போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து சைதைப்பேட்டை செயலாளர் மு. மகேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது திமுக தலைவர் கருணாநிதி ஆதரவோடு வரும் ஆகஸ்டு 1ம் தேதி அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிட உரிமைப்போர் மற்றும் அறப்போராட்டம் நடை பெற உள்ளது. இந்த அறப் போராட்டத்தில் தலைமைக்கழக செயற் குழு உறுப்பினர், பொதுக் குழு உறுப்பினர், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டச்செயலாளர்கள், மாவட்டக்கழகப்பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், சார்புமன்ற நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள், பகுதிப்பிரதி …

    • 2 replies
    • 433 views
  22. 30 இலட்ச ரூபாய் இருந்தால் போதும் தமிழீழச் சிக்கல் குறித்து படமெடுப்போம் - இயக்குனர் வெற்றிவேல் 2013 மார்ச் மாதத்தில் நடந்த தமிழக மாணவர்களின் ஈழ அதரவுப் போராட்டத்தைப் பற்றி, பத்திரிகையாளர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கிய 'அறப்போர்' என்ற ஆவணப்படம், ஜூலை 28 ஞாயிறு அன்று மாலை சென்னை அண்ணாசாலை புக் பாய்ண்ட் அரங்கில் வெளியிடப்பட்டது. உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர்கள் அமீர், ம.செந்தமிழன் ஆகியோர் பேசினர். தலைமையுரையாற்றிய, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்: அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும் சூடானுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் தனித்தூதர…

  23. அகதிகளாக தமிழகத்தில் தவிப்பவர்களை ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கலாமே: கருணாநிதி யோசனை. சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக அகதிகளாக தவிக்கும் இலங்கைத் தமிழர்கள், சுதந்திரமாக வாழ ஆஸ்திரேலியா செல்ல விரும்பினால் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆஸ்திரேலியாவுக்குத் தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 17 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 23 ஆண்டுகள் இந்தியாவில் அகதிகளாக வாழ்வதாகவும், உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் சுதந்திரமாகவும் வசதியுடனும் வாழ்வதாகவும், இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புவதில்லை என்றும் கைதாகியுள்ள அகதிகள் தெரிவித…

    • 27 replies
    • 1.6k views
  24. பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமாரும் சென்றுள்ளார். நியூயார்க்கில் பேட்டியளித்த அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் மனித உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும். எல்லா குடிமக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். எந்த பிரிவினரும் வஞ்சிக்கப்படக் கூடாது. நமது உணர்வுகளை ராஜாங்க ரீதியாக இலங்கை அரசிடம் வெளிப்படுத்த நாம் தயக்கம் காட்டக் கூடாது. பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைந்தால் இவற்றை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும். எடுப்போம். இலங்கையின் சமூக அரசியல்-பொருளாதார அமைப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரும் புதிய வழிமுறையை இலங்கை அரசு ஏற்படுத்தி தர வேண்டு…

    • 1 reply
    • 394 views
  25. 'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்' என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான 'அறப்போர்' ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார். 2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் விதமாக, 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப்படமான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், 'அறப்போர்' படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.