தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
சென்னைக்குத் தேவை புதிய வடிகால் வடிவமைப்பு மிக்ஜாம் என்று இந்தப் புயலுக்குப் பெயர் சூட்டியது மியான்மர். அந்தப் பர்மீயச் சொல்லுக்குப் பல பொருள்களைச் சொல்கிறார்கள். அவற்றுள் இரண்டு முதன்மையானவை. அவை; வலிமை, தாங்குதிறன். இவ்விரண்டு பொருளும் இந்தப் புயலுக்குப் பொருத்தமானதாக அமைந்துவிட்டது. சென்னையைத் தாக்கிய புயல் மிக வலுவாக இருந்தது. அதைத் தாங்கும் திறன் நகருக்கு வெகு குறைவாக இருந்தது. டிசம்பர் 3 காலை முதல் டிசம்பர் 4 இரவு வரை நகரில் கொட்டிய தொடர் மழையின் அளவு சுமார் 500 மிமீ. இப்படியொரு மழை கடந்த 50 ஆண்டுகளில் பெய்ததில்லை என்றனர் சில ஆய்வாளர்கள். அப்படியானால் இது ஐம்பதாண்டு மழையா? இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த நூறாண்டு மழையாகக்கூட இருக்கலாம். சரி, அதென்…
-
- 1 reply
- 354 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 28 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் விஜய் என்ற நபரை இரு வாரங்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நவம்பர் 30 ம் தேதி, விஜயின் மனைவி நர்மதாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3.2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகராணியை கைது செய்தனர். அவரிடம் இருந…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன்.க பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் பருவ மழை பெய்வது வழக்கம். அந்த மழை நமக்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையைத் தொடர்ந்து கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஓரிரு நாட்களில் பெய்த அதிகனமழை சென்னையைப் புரட்டிப்போட்டு விட்டது. இயற்கை நமக்கு வகுத்துக் கொடுத்த முறைகளை நாம் சரியாகப் பின்பற்றாததுதான் இது போன்ற பேரிடர்களுக்கு காரணம் என்கின்றனர் இயற்கையியலாளர்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. அவற்றுள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 124 ஏரிகளும், 34 கோவில் குளங்களும் உள்ளன. இதில் ஏரிகளின் மொத்த கொள்ளளவு சென்னை மாநகர பர…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னைக்கு தனி வானிலை மாடலை உருவாக்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பில் துல்லியம் குறைவா? உண்மையில் புதிய மாடலுக்கான தேவை உள்ளதா? இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் வானிலை முன்கணிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய வானிலை ஆய்வு மையம்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், குவ…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னது போல, ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும். அத்தகைய இலட்சிய இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழிநின்று தன்னிகரற்றபோர் புரிந்து…
-
- 154 replies
- 12.5k views
- 2 followers
-
-
திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு! christopherDec 08, 2023 12:08PM மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையை அடுத்து தற்போது வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக இன்று (டிசம்பர் 😎 அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2007-ல் நெல்லையில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், திமுக இளைஞரணியின் 2-வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று நடைபெறும் முதல் மாநாடு என்பதாலும், முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பதாலும் இதனை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநாடு …
-
- 0 replies
- 450 views
-
-
சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 5 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் பல்வேறு பகுதிகளை தீவிரமாக பாதித்துள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் நான்கு அடிக்கும் குறையாமல் இருந்தது. இந்த புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்க்காத அளவுக்கான அதிகனமழையை கொடுத்துள்ளது. இந்த புயல் மற்ற புயல்களிலிருந்து சில காரணிகளால் வேறுபட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் எப்படி வித்தியாசமானது? புயல்கள் கரைக்கு எவ்வளவு அருகில் இருக்கிறதோ அவ்வளவு அத…
-
- 0 replies
- 593 views
-
-
மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி! Dec 03, 2023 20:23PM புயல், கனமழை காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில் இன்று (டிசம்பர் 3) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர…
-
- 28 replies
- 2.1k views
- 1 follower
-
-
05 DEC, 2023 | 02:46 PM மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வின்போது அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமை…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை.! இபிஎஸ் கடும் விமர்சனம்.! வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பலவேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியை எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித…
-
- 0 replies
- 329 views
-
-
1 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடிபட்ட அமலாக்கத்ததுறை அதுிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி, கடந்த நான்கு மாதங்களாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அதற்கு முன் நாக்பூரில் பணியற்றி வந்ததும் தமிழ்நாடு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், அங்கீத் திவாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு, அவ…
-
- 2 replies
- 562 views
- 1 follower
-
-
தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை 'மேதகு தேசிய தலைவர் பிரபாகரன்' என்றும் 'அவரிடம் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு மன்னிப்பு கோருவேன்' என்றும் பேசியது, விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. தி.மு.க எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியன், தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், `நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மேதகு தேசிய தலைவர் பிரபாகரன்” என்று பதிலளித்தார். ’அவரிடம் நீங்கள் என்ன கேட்பீர்கள்?’ என்ற கேள்விக்கு, ``முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு மன்னிப்புக் கோருவேன்" என, தமி…
-
- 3 replies
- 841 views
-
-
57 நிமிடங்களுக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் நீர் திறப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டும் எச்சரிக்கை குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் 8000 கன அடி நீர் விநாடிக்கு திறந்து விடப்படுவதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது. செம்பரம் ஏரியில் இரண்டு நாட்கள் முன்பு வரை விநாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக 1000 கன அடி, 2500 கன அடி என உயர்த்தப்பட்டு தற்போது 6000 கன அடி திறந்து விடப்படுகிறது. …
-
- 6 replies
- 540 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RAVIKUMAR படக்குறிப்பு, கடந்த 13 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணியின்போது தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றியதில் நாமக்கல் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 38 நிமிடங்களுக்கு முன்னர் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. கடந்த 13 நாட்களுக்கும் மேலாக அங்கு சிக்கியுள்ள தொழிலாளர்களுக்க…
-
- 9 replies
- 847 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,E V VELU கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுகவின் மூத்த தலைவர்களில் பலம் பொருந்திய நபரான எ.வ.வேலு(72) தற்போது வருமான வரித்துறை சோதனையை சந்தித்து வருகிறார். அமைச்சர் வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது. திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே மூத்த அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியத…
-
- 2 replies
- 836 views
- 1 follower
-
-
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்! தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து தனியார் வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை இராமாபுரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1361380
-
- 0 replies
- 421 views
-
-
மணல் விவகாரத்தில் தமிழக அமைச்சர் துரைமுருகன், ரூ.60,000 கோடி சம்பாதித்தது தொடர்பான ஆடியோ வெளியிட்டால் அவரது பதவி இருக்காது என திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் கூறியுள்ளார். துரைமுருகன் மீது குற்றச்சாட்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் பேசியதன் காரணமாக திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரனை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதிலிருந்தே, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் மீது தொடர் குற்றச்சாட்டுகளை குடியாத்தம் குமரன் கூறியுள்ளார். ரூ.60,000 கோடி தற்போது, துரைம…
-
- 1 reply
- 468 views
-
-
படக்குறிப்பு, சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி. கட்டுரை தகவல் எழுதியவர், லிங்கேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 25 நவம்பர் 2023, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்துள்ளது திருவந்தவார் கிராம். இங்கு செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதியைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ப…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TN FOREST DEPT கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முதல் முறையாக தட்டான்பூச்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 80 வகையான தட்டான்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 அரிய வகை தட்டான்பூச்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,TN FOREST DEPT சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், நம் வீடுகளுக்கு அருகிலேயே காணப்பட்ட தட்டான்களின் எண்ணிக்கை தற்போது காலநிலை நெருக்கடி காரணமாக வெகுவாகக் குறைந்து வருகிறது. சூழலியல் முக்கியத…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC கட்டுரை தகவல் எழுதியவர், சுப கோமதி பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் சுமார் 30 லட்சம் மதிப்பிலான தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றிடும் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி கிராமத்தில் நடந்த சைபர் மோசடி தென்காசி மாவட்டம் சத்திரப்பட்டி பகுதியில் எபனேசர் என்பவருக்குச் சொந்தமான மரக்கடை உள்ளது. அங்குள்ள அறை ஒன்றில் மரக்கடைக்கு சம்பந்தம் இல்லாத தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதாகவும் …
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, கடந்த மே - ஜூன் மாதத்தில் 1,200 ஏக்கர் அளவுக்கான நிலத்தை எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 23 நவம்பர் 2023, 03:10 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்த்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அப்பகுதியினரிடம் கூடுதலான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "எனக்கு 55 வயதாகிறது. எனது மகன் மாற்றுத் திறனாளி. என்னிடம் இருக்கு…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, மழையால் புதுச்சேரி தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்? வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'அந்தமான் - நிகோபார் தீவுகளின் மேலேயும் அருகில் உள்ள அந்தமான் கடற்பகுதியிலும் தென்கிழக்கு வங்கக் கடலிலும் காற்றுச் சுழற்…
-
- 3 replies
- 308 views
- 1 follower
-
-
சுசீலா அம்மாவுக்கு டாக்டர் பட்டம். சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு டாக்டர் ஜெ, ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 3,226 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். தன் இனிமையான குரலின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கி, தென்னிந்திய சினிமாவின் சிறந்த – தனித்துவமிக்க பின்னணி பாடகியாக இருப்பவர் தேன் இசை குரலுக்கு சொந்தக்காரரான பாடகி பி.சுசீலா. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின்; கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். பாடகி பி.சுசீலா தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 394 views
-
-
பட மூலாதாரம்,SOMASUNDARAM JAYARAMAN கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 21 நவம்பர் 2023 நீலகிரியில் விளைநிலங்களில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்க சோதனை ஓட்டம் நிகழ்த்தியுள்ளது இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆணையம். இது, கேரள காசர்கோட்டில் நடந்ததைப் போன்ற பேராபத்தை ஏற்படுத்தும் எனவும், நாடு முழுவதிலும் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பதை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர் வல்லுநர்கள். காரணம் என்ன? காசர்கோட்டில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,SOMASUNDARAM JAYARAMAN நீலகிரியில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி? …
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது எல்&டி துறைமுகம். தற்போது 330 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தத் துறைமுகத்தை 6,110 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அதானி நிறுவனம் முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம், ஏற்கெனவே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் கடலோரப் பகுதிகளை பேரழிவில் தள்ளும் என்று பழவேற்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதானி குழுமத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தை அப்பகுதி மக்கள் எதிர்ப்பதாகக் கூறுவது தவறான கருத்து, மாற…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-