தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
நாம் விரும்பாவிட்டாலும் தனிமனித வாழ்க்கையில் சில விசயங்கள் எப்படியோ நடந்துவிடுகின்றன. அரசியல், பொது விவகாரங்களிலும்கூட பல நேரங்களில் இது போல நேர்வது உண்டு. இந்திய தமிழ் மீனவர்களை கடல்நடுவில் வைத்து தாக்குவது, சுட்டுக்கொல்வது என இலங்கை அரச கடற்படையினர் நடத்தும் வன்செயல்கள் அண்மைக்காலமாக மீண்டும் அளவுகடந்து வருகிறது. குறிப்பாக, ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, தமிழகத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும் கைதுகளும் அரங்கேறிவருகின்றன. கடந்த மார்ச் 3ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர்.…
-
- 0 replies
- 402 views
-
-
டில்லி, நிஜாமுதீன் பகுதியில், பழமையான நினைவு சின்னங்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உயரமான கட்டடங்கள் கட்டவோ, ஏற்கனவே உள்ள வீடுகளில், மாடிகளை எழுப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில்தான், ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணிய சாமி, அவரது மனைவி ரெக்சேனாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து, 28 மீட்டர் தொலைவில், ஒரு வரலாற்று நினைவு சின்னம் உள்ளது. தொல்லியில் துறையின் தடையை மீறி, சாமியும் அவரது மனைவியும், தங்கள் வீட்டில் இரண்டாவது மாடியை எழுப்பவதற்கான பணிகளை துவக்கினர்.சட்ட விரோதமாக கட்டப்படும், இரண்டாவது மாடியை இடிக்கும்படி, தொல்லியல் துறை, கடந்த, 2ம் தேதி, சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து, சுப்ரமணிய…
-
- 0 replies
- 584 views
-
-
மைனர் பெண்ணை, "லாக்-அப்'பில் அடைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கருத்துத் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் பகுதியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, கடந்த, 7ம் தேதி, தன் வீட்டிற்கு அருகேயுள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, ஒரு நபர் அந்தச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். பாதிக்கப்பட்ட சிறுமியும், அவளின் பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முற்பட்டபோது, சிறுமி பல மணி நேரம், போலீசாரால், "லாக்-அப்'பில் அடைத்து வைக்கப்பட்டாள்.இதுபற்றிய விபரம், மீடியாக்களில் வெளியானதும், அந்த நேரத்தில், பணியில் இருந்த, பெண் போலீசார் இருவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அத்துடன், போலீஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர…
-
- 0 replies
- 362 views
-
-
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், நடத்தியவர்கள் கையை உடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார். புதுடெல்லியில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் அம்மாநில நிதி மந்திரி அமித் மித்ரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14035:mamtha-banarsi&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 486 views
-
-
தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் மருமகள் குரலில் பேசி கார் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர், மாவட்ட தி.மு.க. பொருளாளர் மிசா.பாண்டியன் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார். மு.க.அழகிரிக்கு இருக்கிற பிரச்னைகள் போதாது என்று, துரை தயாநிதியின் மனைவி அனுஷா பெயரைச் சொல்லி இன்னொரு பிரச்னை வந்துள்ளது. அழகிரியின் மருமகள் அனுஷா போல குரல் மாற்றிப் பேசி, தி.மு.க. முக்கியப்புள்ளிகள், தொழில் அதிபர்கள் சிலரிடம் அவசர உதவி என்ற பெயரில் பெரியளவில் மோசடி செய்ய முயன்றுள்ளது ஒரு கும்பல். இந்த விவகாரம் அங்கே சுற்றி இங்கே சுற்றி அனுஷாவின் காதுகளை எட்ட, அவர் பதறிப்போனார். அழகிரியின் ஆலோசனையின் பேரில், இதுதொடர்பாக அவசர அறிக்கை ஒன்று வெளியிட்ட அன…
-
- 0 replies
- 649 views
-
-
சென்னை: நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: தமிழகத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து, முதலமைச்சராகவே மறைந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு வைக்க வேண்டும் என்றும், இது குறித்த அறிவிப்பினை விமான நிலைய துவக்க விழாவிற்கு முன்பே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி; மாண்புமிகு மத்திய விமானப் போக்க…
-
- 0 replies
- 553 views
-
-
ராமேஸ்வரம்: மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாள் மீன்பிடிப்பதற்கான தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின், நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டுதோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடக்கும். இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குறைய தொடங்கியது. இதன் விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் குறைந்து போனது. ‘இதேநிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா…
-
- 0 replies
- 525 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனு நிராகரிக்கப்பட்டு உள்ள நிலையில் அது தொடர்பான மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தங்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் மனு இன்று மத்திய தகவல் அறியும் ஆணையம் விசாரிக்க உள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்கம் கேட்டு ஆணையத்துக்கு பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பேரறிவாளன் கருணை மனுவை 2012 ல் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். பேரறிவாளன் வேலூர் சிறையில் உள்ளார…
-
- 0 replies
- 630 views
-
-
மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஈழத்தில் வதைபடும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை தனித் தமிழீழ ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கோரிக்கைகளாக உருப்பெற்றுள்ளன. இதன் தாக்கத்தையும் வீரியத்தையும் அலசும் முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்த்துவிடுவோம். இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முகாந்திரத்தில் தமிழர்களைக் கொன்று எஞ்சியவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய ராஜபட்சே அரசு, 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்தது. அதன் பிறகு போர் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போன்ற மா…
-
- 2 replies
- 872 views
-
-
தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது, திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்திய திருத்தங்களை செய்யாத இந்திய அரசுக்கு கண்டனம் ஆகியவற்றை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் …
-
- 0 replies
- 700 views
-
-
இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக உறுதி செய்ததை எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். தமிழக மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளில் உவகை நிறைந்த உள்ளத்தோடு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷு புத்தாண்டு: மலையாளப் புத்தாண்டான விஷு கொண்…
-
- 0 replies
- 369 views
-
-
தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டுமானால், வலுவான மாநில கட்சிகள் அவசியம். தேசிய அளவிலும் மாநிலக்கட்சிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்தால்மட்டுமே மாநில நலன்களை பாதுகாக்க முடியும். மாநிலக்கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய வரலாற்று தேவை மலர்ந்து வருகிறது. தேசிய அளவில் 3-ஆவது அணி ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப், உத்திரபிரதேசம் உ…
-
- 3 replies
- 999 views
-
-
தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும் அழகி போட்டியல்ல,'' என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.மத்திய, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஜெய்ராம் ரமேஷ், குஜராத் மாநிலம், ஆனந்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலில், காங்., சார்பில், ராகுலும், பா.ஜ., சார்பில், நரேந்திர மோடியும், பிரதமர் வேட்பாளர்களாக, முன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என, கேட்கப்படுகிறது. தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும், அழகி போட்டி அல்ல.அமெரிக்காவில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், இரு நபர்களுக்கு இடையேயானது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல், இதைப் போன்றதல்ல. அரசியல் க…
-
- 1 reply
- 376 views
-
-
''மதுரை தி.மு.க-வுக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்ம நாவல் படிப்பதைப் போல விறுவிறுப்பாக இருக்கிறது. கடந்த 6-ம் தேதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கோ.சந்திரசேகரன், பொதுக் குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி சந்தானம், ஆடுதுரை, எஸ்.சுரேந்தர், வரிச்சியூரைச் சேர்ந்த எஸ்.முருகன் ஆகியோர் மீதான நடவடிக்கை, கடந்த 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 'இவர்கள் அனைவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவர் கலைஞர் அவர்களிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டு இன்று முதல் தொடர்ந்து கழகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று, அன்பழகன் அ…
-
- 0 replies
- 882 views
-
-
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி. உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக அழகிரி ஆதரவாளர்கள் நோட்டீஸ் வாங்கிப் பரிதவித்து நின்ற வேளையில்... ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை ஒரே நாளில் வாபஸான விவகாரம் தி.மு.க-வில் பலத்த அதிருப்தியை விதைத்திருக்கிறது. மதுரையில் மையம்கொண்டு நடக்கும் அரசியல் மாநிலத்தையே சலசலப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது'' என்றும் சொன்ன கழுகார், முதலில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கைப் பற்றி ஆரம்பித்தார். ''கடந்த புதன்கிழமை அன்று அட்டாக் பாண்டி ஆட்கள் சந்தோஷத்தில் திளைத்தனர். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைக்கிறது என்றால் சும்மாவா? பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய 18 பேரில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழம் ஒரு இனத்தின் வரலாறு தொடர் - மக்கள் தொலைக்காட்சியின் ஒரு சிறந்த முயற்சி. தமிழினத்தலைவர் என்று சொல்லிக்கொண்டாலும் கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகளில் கடுகளவு கூட ஈழம் பற்றிய செய்திகள் வந்துவிடாமல் மறைத்த கட்டங்களிலு கூட 2009 காலத்தில் மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் பற்றிய செய்திகள் வெளியாகின. தற்போது தினமும் ஈழம் ஒரு இனத்தின் வரலாறு என்ற காட்சித்தொடர் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30க்கு வெளியாக உள்ளது. மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள். (முகநூல்)
-
- 0 replies
- 582 views
-
-
கருணை மனுவை தாமதமாக நிராகரித்த காரணத்துக்காக ஒருவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது என்று புல்லர் என்பவரின் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) முக்கியமான ஒரு தீர்ப்பை அளித்துள்ளது இந்த தீர்ப்பு ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீடு செய்திருக்கும்; முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 தமிழர் நிலை என்ன என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அவர்களும் இதே காரணத்தின் அடிப்படையிலேயே தமது மேல்முறையீட்டை செய்துள்ளனர். இந்திய பயங்கரவாத எதிர்ப்பு படையின் தளபதி ; மனீந்தர் சிங் பீட்டாவை கொலை செய்யும் நோக்கில், 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மர…
-
- 0 replies
- 1k views
-
-
சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு ஒன்றை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த அவதூறு வழக்கு தொடர்பான மனுவை முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் இந்த மாதம் இரண்டாம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சி வேண்டும் என்றே முதல்வரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வ…
-
- 1 reply
- 796 views
-
-
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 160 தொகுதிகளின் வெற்றி - தோல்விகளுக்கு, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 12 நாடாளுமன்றத் தொகுதிகளும் அடங்கும். மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு தொடர்பாக, ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிஷியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும்…
-
- 0 replies
- 556 views
-
-
சென்னை: இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், ''இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை தமிழர் அமைப்புகள் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களை ஆதிக்க சாதி வெறியோடு தரக்குறைவாக பேசுவது, விமர்சிப்பது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது அரசிய…
-
- 10 replies
- 924 views
-
-
புதுக்கோட்டை: மனிதன் உயிர் வாழும் வரை 2 வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அவைகள், உண்பதும், சுவாசிப்பதும்தான். இதில் ஒன்று நின்றாலும் சுடுகாட்டுக்கு போவது நிச்சயம். ஆனால், உயிரோடு இருக்கும்போதே ஒரு கிராமமே சுடுகாட்டுக்கு குடிபெயர்ந்திருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கும் 3 வேலையும் உண்ணுவதற்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டதுதான் நியாயவிலைக் கடைகள். ஆனால், இன்றுவரை அந்த வசதிகள் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ரகுநாதப்பட்டி கிராமம். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.பாலக்குறிச்சி பஞ்சாயத்தில் இருக்கிறது ரகுநாதப்பட்டி கிராமம். இங்கு சுமார் அறுநூறு பேர் வசித்து வருகிறார்கள். 172 ரேஷன் …
-
- 0 replies
- 338 views
-
-
கடந்த 7 ஆம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் இன்று 5 வது நாளாக தொடருகிறது. கடந்த 7 ஆம் தேதி 500 விசைப்பபகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ராமேவரம் மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், சில படகுகளில் இருந்த வலைகளை அறுத்தும், 5 படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்து மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18 ஆம் தேதி வர…
-
- 0 replies
- 373 views
-
-
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்படுவதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை 2011ம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இவர்கள் சார்பில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இவர்களின் மனுக்களையும் ஏற்கெனவே புல்லர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள…
-
- 10 replies
- 2.2k views
-
-
சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது. 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை காலகட்டத்தில் இந்த முயற்சி நடந்துள்ளது. மேலும் அதில் கூறுகையில், …
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது யாருக்கு நஷ்டமோ தெரியாது. ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பெருத்த நஷ்டம். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், சிதம்பரம் தீராத சோகத்தில் இருக்கிறார்’ - சிவகங்கை காங்கிரஸ் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாப்பிக். இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ்காரர்கள், ''மத்திய அரசில் முக்கிய இடத்தில் இருந்தும் ஈழப் பிரச்னையில் ப.சிதம்பரம் உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கோபம் தொகுதி மக்களிடம் இருக்கிறது. அந்தக் கோபம்தான் கடந்த முறை அவரைத் தட்டுத்தடுமாறி ஜெயிக்கவைத்தது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், தி.மு.க. அணியில் நின்றாலாவது திக்குத் திணறிக் கரை ஏற வா…
-
- 0 replies
- 665 views
-