தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியால், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 கைதிகளை தூக்கிலிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வழக்கறிஞர் சாமிக் மற்றும் சௌவுத்ரி ஆகியோர், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேர் தரப்பில், மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காக நீதிபதிகள் சதாசிவம் மற்றும் இக்பால் ஆகியோர் நேற்று இரவு விசாரித்தனர். கருணை மனுக்களை பரிசீலிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தியது ஏன் என அப்போது கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக 4 வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். அதுவரை கருணை மனு நிராகரிக்கப்பட…
-
- 0 replies
- 434 views
-
-
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கலை இலக்கிய பகுத்தறிவு சார்பில் அமைப்பாளர் பூக்கடை ராமச்சந்திரன் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? பதில்: தலைவர்கள் தான் பேசி முடிவு செய்ய வேண்டும். கேள்வி: மதுரை மாவட்டத்தில் 6 தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்க…
-
- 0 replies
- 411 views
-
-
25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் 'இனப் படுகொலையை நடத்தி தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும் 'டெசோ' அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 26.…
-
- 1 reply
- 393 views
-
-
காற்றாலைகள் மூலம் 1,400 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டதால் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி சனிக்கிழமை எப்போதும் இல்லாத அளவுக்கு 10,600 மெகா வாட் அளவைத் தொட்டது. இதன் காரணமாக மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்படும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரவில் மின் வெட்டே செய்யப்படுவதில்லை என்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் இரண்டாம் வாரத்தில் புது யூனிட்டுகளில் கோளாறுகள் ஏற்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மொத்த மின் உற்பத்தி 8,500 மெகா வாட் அளவுக்கு குறைந்தது. இதனால் சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் மீண்டும் 9 மணி நேரத்துக்கும்மேல் மின் வெட்டு செய்யப்பட்டது. தேர்வு நேரத்தில் இதுபோன்று கூடுதல் மின் வெட்டு செய்யப்பட்டதால்…
-
- 0 replies
- 434 views
-
-
தோழர்களே ! தமிழர் பண்பாட்டு நடுவம் ஐந்து விதமான வடிவமைப்பை கொண்ட கை உடைகளை வெளியிட உள்ளது . தமிழ் மொழி, தமிழர் நாடு, தமிழர் பண்பாடு இவைகளை முன்னிறுத்தி இந்த உடைகளை வடிவமைத்து உள்ளோம். இவை எப்படி உள்ளது ? எந்த அளவிற்கு தமிழ் மக்கள் இதை விரும்பி அணிவார்கள் என்பதை பொறுத்து தான் நாங்கள் இதை அச்சிட்டு வெளியிட முடியும். கடைகளில் விற்பனை செய்யவும் மற்றும் தனி நபர் பயன்பாட்டிற்கும் இதை தர உள்ளோம். உங்கள் விருப்பம் எப்படி என்று தெரிவிக்கவும். அதிகமான மக்கள் இவற்றை வாங்கினால் இதன் விலையை குறைத்துக் கொடுக்கலாம் . தமிழும் , தமிழர் அடையாளமும் தமிழகமெங்கும் இந்த கை உடைகள் மூலமாக நாம் பரப்பமுடியும் என்ற நம்பிக்கையில் இதை நாம் முன்னெடுக்கிறோம் . உங்கள் மேலான கருத்துக்களை பதியுங்கள் தோழர்…
-
- 5 replies
- 1k views
-
-
நீங்கள் தமிழ் ஆர்வலரா ? கணினித் தமிழின் பயன்பாடு குறித்து அறிய விருப்பமா ? தமிழில் மென் பொருட்கள் உருவாக்க உங்களுக்கு ஆர்வம் உள்ளதா ? அதிவேகமாக வளர்ந்து வரும் தமிழ் கணினித் துறையில் உங்களுக்கு பயிற்சி பெற விருப்பமா ? எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகம் தமிழ் கணிப்பொறி பயன்பாடு மற்றும் மென்பொருள் குறித்து கோடை கால பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறது. இது ஒரு மாத கால சான்றிதழ் படிப்பு. தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம். வயது வரம்பு இல்லை. தமிழ் கணித்துறை வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். தமிழ் தேசிய அரசியலின் மிக முக்கியமான கூறுகளில் ஓன்று கணிப்பொறியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பது. தமிழின் வளர்ச்சிக்கு இது மிக இன்றியமையாதது. பணம் கட்டி படிக்க இயலாத மாணவர்களுக்…
-
- 0 replies
- 2.5k views
-
-
இன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு, இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்கு டெசோ போன்ற அமைப்புகளை நடத்திவரும் திமுகவில் இருந்து கொண்டு, இம்மாதிரியான கருத்தை கூறியது குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுவதாக திமுகவின் பெயர் கூற விரும்பாத முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட த…
-
- 20 replies
- 1.9k views
-
-
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், “இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது”” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், ‘டெசோ’ …
-
- 0 replies
- 362 views
-
-
சென்னை: ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்று, காரைக்கால் அருகே நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 120 பேரை கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அகதிகள் முகாம்களில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 120 இலங்கை தமிழர்கள், படகு ஒன்றில் அனுமதி இன்றி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற படகு இன்று காலை வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே சென்றபோது, படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கடலோர காவல்படையினருக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனிடையே இது தொடர்பாக தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாற…
-
- 0 replies
- 658 views
-
-
தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், வ…
-
- 1 reply
- 445 views
-
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 19 மீனவர்களை மீட்டுக் கொண்டுவர சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில், டெல்லியில் உள்ள இலங்கை தூதரிடம் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் நீதிமன்ற காவல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இது குறித்தும் இலங்கை அரசுடன் இந்த…
-
- 1 reply
- 614 views
-
-
சேலத்தில் காவல்நிலையத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் . சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் காவல்நிலைய போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு பிரச்சனையில் 4 பேரை கைது செய்தனர். 4 பேரையும் காவல்துறையினர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் மருத்துவ பரிசோதனை செய்யக்கோரி மனு செய்தனர். நீதிமன்றத்திற்கு போனவர்களை போலீசார் மிரட்டியதாக, வீராணம் பொதுமக்கள் காவல்நிலையத்தை வழக்கறிஞர் ஹரிபாபு தலைமையில் முற்றுகையிட்டனர். பொதுமக்கள் காவல்நிலையத்தை பூட்டு போட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களை கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13803:saleam-new…
-
- 0 replies
- 566 views
-
-
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாயினர், 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 12 தீயணைப்புக்குழுவினரும், 24-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தானேயின் ஷில் பாட்டா பகுதியில் உள்ள அந்தக்கட்டடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். சம்பவம் நடந்த போது 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தக்கட்டடத்தில் இருந்துள்ளனர். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு சட்ட விரோதமாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் மீட்கும் பணி தொடர்ந்து ந…
-
- 0 replies
- 424 views
-
-
மாணவர்களின் பேரெழுச்சி: முன்னும் பின்னும் - யமுனா ராஜேந்திரன் அமெரிக்கத் தீர்மானத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? புகலிடத்தமிழர்கள் மேற்குநாடுகளில் வாழ்கிற அவர்தம் இயல்பினால் மேற்கத்திய அமெரிக்க அரசுகளின் வழியிலான அழுத்த அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்ள முடியும். அமெரிக்காவின் மேற்கின் எந்தவிதமான முன்னெடுப்புகள் ஆனாலும் அதனை நிராகரிக்கிற நிலைமையில் புகலிட அரசியல் என்பது இல்லை. இந்தத் தீர்மானங்கள் குறித்த தமது தயக்கங்களுடன் அவர்கள் இத்தீர்மானங்களை வரவேற்கவே செய்வர். அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தீர்மானம் குறித்து எதிர்வு கூறி இதனால் பயனேதும் இல்லை என நிராகரித்திருக்கிறார் ஈழத்தின் உள்ளிருந்து செயல்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜ…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில் மாணவர்களின் போராட்டத்தை புதிய தலைமுறை தூண்டியதா? சிபிஐ விசாரணை என்று அச்சுறுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... 27-03-2013 அன்று நேர்படப்பேசு நிகழ்ச்சியில் நடந்தது என்ன...? காணொளி: http://puthiyathalaimurai.tv/evks-elangovan-threats-to-puthiyathalaimurai-tv
-
- 7 replies
- 1.2k views
-
-
ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மீனவர்களை தாக்குவதோடு, அவர்களது வலைகள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர். 16 நாட்களாக நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2 நாட்களாகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று 580 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் பெற்றன. ஆனால் 400 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. ஒரு படகுக்கு 5 பேர் வீதம் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பி…
-
- 0 replies
- 466 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம் நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இதுவரை ஈழப் பிரச்சினை குறித்து பாராமுகமாக இருந்த ஐடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகின்றனர். தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும், உலகெங்கும் பரவிக் கிடக்கும் உறவுகள் சுதந்திர ஈழத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நடிகர்களின் ரசிகர…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பரிசீலிக்காது நிராகரித்தமைக்கு பாஜக கண்டனம் இலங்கைக்கு எதிரான தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்காமல் நிராகரித்ததற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவிப்பதாக இல.கணேசன் கூறினார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த 3 தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை கூட செய்யாமல் நிராகரித்துள்ளது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அம்மாநில மக்களின் எண்ணம். அதனை இந்த மைனாரிட்டி காங்கிரஸ் அரசு, நிர…
-
- 5 replies
- 1.3k views
-
-
சென்னை: மதுரையில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்றும் சோழிங்கநல்லூரியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை அரசு ஏற்படுத்தி வருகிறது. மதுரை …
-
- 0 replies
- 502 views
-
-
காங்கிரஸ் கட்சியையே நாடு கடத்த வேண்டும் இம்மண்ணை விட்டு விரட்ட வேண்டும் மாணவர்கள் சாலை மறியல். பிரிவு: தமிழ் நாடு ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது....அதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டி தமிழகம் முழுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது தமிழக அரசு...பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று (ஏப்ரல் 3) தமிழக கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது . மூடியது கல்லூரியின் கதவுகள் தான் எங்கள் இதயங்கள் அல்ல! எங்கள் இதயங்களில் எரிந்து கொண்டு இருக்கும் தீ! தமிழீழம் மலர வேண்டும் என்ற கொள்கை தீ!அது இலக்கை அடையும் வரை ஓயாது! அணையாது!' என்றவாறே சேலம் வின்செண்டில் இரு…
-
- 0 replies
- 737 views
-
-
என்னது மதுரையில திமுக பொதுக்கூட்டம் நடந்துச்சா? விஜய் சேதுபதி பாணியில் அழகிரி. பிரிவு: தலையங்கம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் விஜய் சேதுபதி "என்னது சிவாஜி செத்துட்டாரா? என ஆச்சரியமாக கேள்வி கேட்பார். அதுபோல கடந்த மார்ச் 30 ஆம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ள வில்லை என அழகிரியிடம் கேட்டபோது அவர் "என்னது மதுரையில திமுக பொதுக்கூட்டம் நடந்துச்சா? என ஆச்சரியமாக கேட்டார். தென்மண்டல அமைப்பு செயலாளுக்கே தெரியாமல் மதுரையில் ஒரு கூட்டம் நடந்ததா? என திமுகவினர் ஆச்சரியத்தில் உள்ளனர். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.வில் அழகிரி விசுவாசிகள் 15 பேருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது தி.மு.க. தலைமை. மார்ச் 30 ஆ…
-
- 0 replies
- 597 views
-
-
ஜெய்ஹோ… ஜெயா ஹோ! தமிழீழம் முதல் கூடங்குளம் வரை பிரிவு: அரசியல் அண்ணாவின் ஞாபகம் அதிகமாக அம்மாவுக்கு வந்துள்ளது. ‘நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு’ என்ற அண்ணாவின் வாசகத்தை ‘கெயில்’ விவகாரத்தில் உதாரணம் காட்டினார். ‘தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இருக்காமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை’ என்று ‘ஈழத் தமிழர்’ தீர்மானத்தில் சொன்னார். இது வரை தன் வழி யில் போய்க்கொண்டு இருந்த ஜெயலலிதா, இப்போதுதான் அண்ணா வழிக்கு வந்துள்ளார். …
-
- 0 replies
- 820 views
-
-
நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி சென்னை: இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்துள்ளதால், இலங்கை தமிழர்களின் நிலையில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்ததற்காக கட்சியினர் கவலைப்படவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவு…
-
- 49 replies
- 3.8k views
-
-
ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்ச நீதிமன்றம் அனுமதி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை மூட கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 28இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திலிப்பி தர்மாராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதனால…
-
- 3 replies
- 587 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உள்ளிட்ட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர். ஆனால் நடிகைகள் பெரும்பாலானோர் வரவே இல்லை. இது திரைத்துறையினருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்து இருந்தனர். வெளிநாடுகளில் வரமுடியாத சூழலில் இருந்த விஜய் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார். உண்ணாவிரதத்துக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்திருந்தனர். ஆனால் உள்ளூரில் இருந்த பல நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா, காஜல் அகர்வால், அசின், அஞ்சலி, ஹன்சிகா, டாப்சி, குஷ்பு, சமந்தா, கார்த்திகா…
-
- 0 replies
- 815 views
-