தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணையை கட்டி நீரை, 160 ஏரிகளுக்கு திருப்புவதாக தி.மு.க குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.வி.ராமலிங்கம், காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தி.மு.க மீது குற்றச்சாட்டினர். அமைச்சரின் குற்றச்சாட்டை திரும்ப பெற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், அவையின் கண்ணியத்தை கெடுக்கும் வகையி்ல் நடந்து கொண்டதாக கூ…
-
- 1 reply
- 436 views
-
-
சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "மனதிலும், உடலிலும் உறுதியுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்குவதிலும், சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலைநிறுத்துவதிலும் இன்றியமையாத் தன்மையை வகிப்பது விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இளைய சமுதாயத்திற்குத் தேவையான நற்பண்புகளை புகட்டி அவர்களை பொறுப்புள்ள மனிதர்களாக மலரச் செய்யும் விளையாட்டுத் துறைக்கு எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு உலக…
-
- 1 reply
- 567 views
-
-
இனியும் தமிழகத்தில் அகதி முகாம்கள் தேவையில்லை! - தினமணி [Monday, 2013-04-08 08:23:13] தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியா சென்ற சில மாதங்களிலேயே தங்களுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் வாழ்வு தேடித் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், இங்கே படித்துப் பட்டம் பெற்றாலும் கூட, இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலையும் கிடைப்பதில்லை, தனியார் அலுவலகங்களிலும் வேலை கிடைப்பதில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் வாழ்க்கைச…
-
- 1 reply
- 798 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் நடாத்தும் எழுச்சிகரமான போராட்டங்களை குழப்பும் நடவடிக்கையை சிறீலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளதாக தற்போது கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், தமிழக போராட்டங்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்த அகில இந்திய பௌத்த பிக்குமார் சபை தீர்மானித்துள்ளது. மஹாராஷ்ரா மாநிலம் நாக்பூர் நகரில் எதிர்வரும் 13 ஆம் திகதி இந்த பேரணியும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் பௌத்தர்கள் அதிகம் வாழும் பிரதான நகரில் உள்ள புனித புத்த விகாரையில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை இந்த பேரணி நடத்தப்பட உள்ளது. அதேவேளை தமிழகத்தில் சிறீலங்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டித்து, அதற்கு எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் வறுத்தெடுத்து விரட்டியடித்திருக்கிறார். கேரள கடற்பரப்பில் மீனவர்களை படுகொலை செய்த இத்தாலி மாலுமிகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை அல்டமாஸ் கபீர் பிறப்பித்துக் கொண்டிருந்த போது வழக்கறிஞர்கள் அமரும் இருக்கையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி எழுந்து நான் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கிறேன் என்றார். அவ்வளவுதான்... உஷ்ணமானார் அல்டமாஸ் கபீர்..." யார் நீங்கள்" என்று சுவாமியைப் பார்த்துக் கேட்டார் அவர். அதற்கு "நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்" என்றார். அதைப் பற்றி…
-
- 1 reply
- 518 views
-
-
அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியல்!!! தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார். முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இத…
-
- 3 replies
- 1k views
-
-
ஜெட் விமான கொள்முதலில் ராஜீவ் காந்தி இடைத்தரகராக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது என்றும், ராஜீவ் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை அலட்சிஒயப்படுத்த முடியாது என்று பாஜக தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனத்தின் தரகராகவே இருந்து வந்துள்ளார். இநதியாவிற்கு ஸ்வீடனுடன் உள்ள தொடர்பு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெளிநாட்டுக் கொள்முதல் பலவற்றில் காந்தி குடும்பத்துக்கு தொடர்பு உண்டு என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13868:rajiv-gandhi&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 681 views
-
-
ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தக்கூடாது என்றும், மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி தலைமையில் குழு ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்து இருந்தார். பச்சோரி குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், பொருளாதார ரீதியிலும் கடல் வாழ் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும் சேது சமுத்திர திட்டம் பயனுள்…
-
- 0 replies
- 478 views
-
-
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். அவர்கள் கலெக்டர் க. மகரபூஷணத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது… சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் சமூகவியல், கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர், 8ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து வருகிறார். உயரம் குறைந்த மாணவிகளை பின் இருக்கையிலும், உயரம் அதிகம் கொண்ட மாணவிகளை முன் இருக்கையில் அமர வைப்பதும், மாணவியின் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்கிறார். மிக கொச்சையாக நடந்துகொள்கிறார். சனிக்கிழமை நாள்களில் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்ததோடு, ஆலை செயல்படவும் அனுமதி அளித்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எந்த ஒரு பொருளும் வாங்கமுடியாத சூழ்நிலையே ஏற்படுகிறது. ஷேர் ஆட்டோ, மினி லாரி போன்ற எந்தவொரு வாகனங்களும் ஓடவில்லை. "ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் பொருளாதாரம் முன்னேறியபோதிலும், கடந்த 23ஆம் தேதி வெளியான வாயகசிவு காரணமாக க…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொண்றமை தொடர்பில் காணொளி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கூடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூடலூர் பழைய நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழக்கத்தில் தீவிரவாதிகள் எதிரியிடம் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட் குப்பிகளை உட்கொள்வது அல்லது ஒருவரையொருவர் சுட்டுக்கொல்;வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். எனினும், சிறுவனை கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அழகிரி குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையும் தமிழ்ம மக்களின் க…
-
- 2 replies
- 1.2k views
-
-
டில்லி மேலிடத்தின் பாரபட்ச நடவடிக்கை, இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் த.மா.கா.,:அப்பிரச்னைகளை மையப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை, இரண்டாக உடைக்க, மத்திய அமைச்சர் வாசனும், அவருடைய ஆதரவாளர்களும் தயாராகியுள்ளனர் என்றும், லோக்சபா தேர்தலுக்கு, மூன்று மாதம் முன், மீண்டும், த.மா.கா., உதயமாகும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆறு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் துவக்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படுதோல்வி: தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிலைப்படு…
-
- 4 replies
- 1k views
-
-
சென்னை: "காங்கிரசில் சேரப்போவதாக எனக்கு வேண்டாதவர்கள் வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்" என்று கூறிய நடிகை குஷ்பு, தி.மு.க.வில்தான் இருக்கிறேன், தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன் என்றார். தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினைத்தான் நான் முன்மொழிவேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பேட்டி ஒன்றில் கூறினார். இதனை நடிகை குஷ்பு விமர்சித்திருந்தார். இதையடுத்து, திருச்சியில் நடிகை குஷ்பு மீது மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியதோடு., சென்னையில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. இதனிடையே, இந்த தாக்குதலை கண்டித்த தி.மு.க. தலைமைக் கழகம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை நடவ…
-
- 0 replies
- 529 views
-
-
மதுரை: தி.மு.க. பொதுக்குழு கூட்டம் புறக்கணிப்பு, ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. நோட்டீஸ் என கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய மு.க.அழகிரியை இன்று கனிமொழி திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை படபடக்க வைத்துள்ளது. சமீபத்தில் மதுரையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் கலந்து கொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் பதினைந்து பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் விட்டது தி.மு.க தலைமை. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அழகிரி ஆதரவாளர்கள், நாங்கள் நடத்திய அஞ்சா நெஞ்சன் பிறந்த நாள் விழாவில், கலந்து கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர் கேள்வி கே…
-
- 0 replies
- 587 views
-
-
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் மீனவ குடும்பத்தினர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட இவர்கள் இலங்கை போலீஸார் மூலம் மல்லாஹம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் 26 பேரையும் வரும் 11ஆம் தேதி வரை சிறைவைக்க மல்லாஹம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து 634 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி பெற்றிருந்தன. ஆனாலும் இலங்கை கடற்படையினர் மீதுள்ள அச்சத்தால் 300…
-
- 0 replies
- 377 views
-
-
டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம், சட்டம், நீதிக்கான அமைச்சர் கே.பி.முனுசாமி இந்த மாநாட்டில் பங் கேற்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையை இந்த மாநாட்டில் வாசித்தார். அந்த அறிக்கையில், பிராந்திய மொழி வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் நீதித்துறை நடவடிக்கைகளில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.. என்று அவர் கூறியுள்ளார்.htt…
-
- 0 replies
- 431 views
-
-
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியால், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 கைதிகளை தூக்கிலிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வழக்கறிஞர் சாமிக் மற்றும் சௌவுத்ரி ஆகியோர், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேர் தரப்பில், மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காக நீதிபதிகள் சதாசிவம் மற்றும் இக்பால் ஆகியோர் நேற்று இரவு விசாரித்தனர். கருணை மனுக்களை பரிசீலிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தியது ஏன் என அப்போது கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக 4 வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். அதுவரை கருணை மனு நிராகரிக்கப்பட…
-
- 0 replies
- 438 views
-
-
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கலை இலக்கிய பகுத்தறிவு சார்பில் அமைப்பாளர் பூக்கடை ராமச்சந்திரன் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? பதில்: தலைவர்கள் தான் பேசி முடிவு செய்ய வேண்டும். கேள்வி: மதுரை மாவட்டத்தில் 6 தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்க…
-
- 0 replies
- 417 views
-
-
25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் 'இனப் படுகொலையை நடத்தி தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும் 'டெசோ' அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 26.…
-
- 1 reply
- 397 views
-
-
காற்றாலைகள் மூலம் 1,400 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டதால் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி சனிக்கிழமை எப்போதும் இல்லாத அளவுக்கு 10,600 மெகா வாட் அளவைத் தொட்டது. இதன் காரணமாக மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்படும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரவில் மின் வெட்டே செய்யப்படுவதில்லை என்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் இரண்டாம் வாரத்தில் புது யூனிட்டுகளில் கோளாறுகள் ஏற்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மொத்த மின் உற்பத்தி 8,500 மெகா வாட் அளவுக்கு குறைந்தது. இதனால் சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் மீண்டும் 9 மணி நேரத்துக்கும்மேல் மின் வெட்டு செய்யப்பட்டது. தேர்வு நேரத்தில் இதுபோன்று கூடுதல் மின் வெட்டு செய்யப்பட்டதால்…
-
- 0 replies
- 439 views
-
-
தோழர்களே ! தமிழர் பண்பாட்டு நடுவம் ஐந்து விதமான வடிவமைப்பை கொண்ட கை உடைகளை வெளியிட உள்ளது . தமிழ் மொழி, தமிழர் நாடு, தமிழர் பண்பாடு இவைகளை முன்னிறுத்தி இந்த உடைகளை வடிவமைத்து உள்ளோம். இவை எப்படி உள்ளது ? எந்த அளவிற்கு தமிழ் மக்கள் இதை விரும்பி அணிவார்கள் என்பதை பொறுத்து தான் நாங்கள் இதை அச்சிட்டு வெளியிட முடியும். கடைகளில் விற்பனை செய்யவும் மற்றும் தனி நபர் பயன்பாட்டிற்கும் இதை தர உள்ளோம். உங்கள் விருப்பம் எப்படி என்று தெரிவிக்கவும். அதிகமான மக்கள் இவற்றை வாங்கினால் இதன் விலையை குறைத்துக் கொடுக்கலாம் . தமிழும் , தமிழர் அடையாளமும் தமிழகமெங்கும் இந்த கை உடைகள் மூலமாக நாம் பரப்பமுடியும் என்ற நம்பிக்கையில் இதை நாம் முன்னெடுக்கிறோம் . உங்கள் மேலான கருத்துக்களை பதியுங்கள் தோழர்…
-
- 5 replies
- 1k views
-
-
நீங்கள் தமிழ் ஆர்வலரா ? கணினித் தமிழின் பயன்பாடு குறித்து அறிய விருப்பமா ? தமிழில் மென் பொருட்கள் உருவாக்க உங்களுக்கு ஆர்வம் உள்ளதா ? அதிவேகமாக வளர்ந்து வரும் தமிழ் கணினித் துறையில் உங்களுக்கு பயிற்சி பெற விருப்பமா ? எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகம் தமிழ் கணிப்பொறி பயன்பாடு மற்றும் மென்பொருள் குறித்து கோடை கால பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறது. இது ஒரு மாத கால சான்றிதழ் படிப்பு. தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம். வயது வரம்பு இல்லை. தமிழ் கணித்துறை வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். தமிழ் தேசிய அரசியலின் மிக முக்கியமான கூறுகளில் ஓன்று கணிப்பொறியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பது. தமிழின் வளர்ச்சிக்கு இது மிக இன்றியமையாதது. பணம் கட்டி படிக்க இயலாத மாணவர்களுக்…
-
- 0 replies
- 2.5k views
-
-
இன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு, இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்கு டெசோ போன்ற அமைப்புகளை நடத்திவரும் திமுகவில் இருந்து கொண்டு, இம்மாதிரியான கருத்தை கூறியது குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுவதாக திமுகவின் பெயர் கூற விரும்பாத முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட த…
-
- 20 replies
- 1.9k views
-
-
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், “இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது”” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், ‘டெசோ’ …
-
- 0 replies
- 366 views
-
-
சென்னை: ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்று, காரைக்கால் அருகே நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 120 பேரை கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அகதிகள் முகாம்களில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 120 இலங்கை தமிழர்கள், படகு ஒன்றில் அனுமதி இன்றி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற படகு இன்று காலை வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே சென்றபோது, படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கடலோர காவல்படையினருக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனிடையே இது தொடர்பாக தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாற…
-
- 0 replies
- 662 views
-