தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10267 topics in this forum
-
சிங்கார சென்னை 2.0 திட்டம்: ரூ.98 கோடி ஒதுக்கீடு! SelvamFeb 11, 2023 12:27PM சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பெருநர சென்னை மாநகராட்சியில் 42 திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்திடும் வகையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தினை அறிவித்து இதனை செயல்படுத்திடும் வகையில் கடந்த 2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்கள். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள…
-
- 0 replies
- 354 views
-
-
திருநங்கைகள் நால்வருக்கு போலீஸ் வேலை: 'நீதிமன்றம் உத்தரவிட்டது; தமிழ்நாடு அரசு தாமதிக்கிறது' என புகார் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KAVI படக்குறிப்பு, கவி (இடது), தேன்மொழி (வலது) தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு திருநங்கைகளை, இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வுக்கு அழைத்து அவர்களை சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும், தேர்வுக்கு அழைக்கா…
-
- 0 replies
- 715 views
- 1 follower
-
-
சாதிச் சான்றிதழ் சர்ச்சை: இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சரியா? சாதி ஒழிப்பை சாத்தியமாக்குவது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இயக்குநர் வெற்றிமாறன் பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் என்ற இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அவர் கூறியது போல், 'சாதியற்றவர்' சான்றிதழைப் பெறுவது இன்றைய சூழலில் அவ்வளவு கடினமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாபெரும் தமிழ்க் கனவு ந…
-
- 18 replies
- 1k views
- 1 follower
-
-
பழனி கோயில் கருவறையில் அமைச்சர் சேகர்பாபு நுழைந்தாரா? பிராயச்சித்த கும்பாபிஷேகம் கோரும் பாஜக வானதி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,P.K.SEKAR BABU/TWITTER படக்குறிப்பு, பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் பி.கே.சேகர்பாபு பழனி கோயில் குடமுழுக்குக்கு முந்தைய நாள், ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்கு சென்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் கருவறைக்குள் நுழைந்தார் என்றும் இதனால், மீண்டும் பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். "அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆகம மீறலால் அதிர்…
-
- 1 reply
- 791 views
- 1 follower
-
-
பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் - சீமான் By RAJEEBAN 08 FEB, 2023 | 12:00 PM பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டம், தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனிமலை திருக்கோயில் அடிவாரத்தில் ஓடும் சண்முகா நதிக்கரையில் நிறுவப்பட்டிருந்த 24 அடி உயரமுள்ள உலோகத்திலான வேலினை தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக அகற்றிய…
-
- 0 replies
- 627 views
- 1 follower
-
-
புதுக்கோட்டை கிராம குடிநீர் தொட்டியில் நாய் சடலம் - ஒருவர் கைது; மன நலம் பாதிக்கப்பட்டவரா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்ணீர் புகட்டுவதற்காக நாயை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு மேலே தூக்கிச் சென்றதாகவும், அப்போது நாய் தவறி உள்ளே விழுந்துவிட்டதாகவும் அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அந்த மேல்நிலை குடிந…
-
- 0 replies
- 748 views
- 1 follower
-
-
தமிழ்நாடு விவசாயிகளின் நெற்பயிர்கள் பருவம் தப்பிப் பெய்த மழையால் சேதம் - அரசின் நிவாரணம் போதுமானதா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2023, 02:51 GMT இந்த மாதத் துவக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தப்பிப்பெய்த மழையின் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இழப்பீடு அறிவித்திருந்தாலும் அது போதாது என்கிறார்கள் விவசாயிகள். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பதைபதைப்பில் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பெண்கள் சுய உதவிக்குழு கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் சுற்றுவட்டார பகுதியில் முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக் கணக்கில் வருமானம் ஈட்டுவதாக கூறுகிறார்கள் பெண்கள் சுய உதவிக் குழுவினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பெரியதாழை செல்லும் வழியில் உள்ளது முதலூர் கிராமம். இது வறட்சி மிகுந்த பகுதி என்பதால், இப்பகுதி விவசாயிகள் வறட்சியைத் தாங்கி நிற்கும் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்…
-
- 0 replies
- 919 views
- 1 follower
-
-
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...! தினத்தந்தி சென்னை, தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. இவருடைய திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://www.dailythanth…
-
- 20 replies
- 1.9k views
- 2 followers
-
-
இயக்குநர், நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார்; கல்லூரி தோழன் மறைவால் முதலமைச்சர் கலக்கம் படக்குறிப்பு, டி.பி.கஜேந்திரன் 5 பிப்ரவரி 2023, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 68. அவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். திரையுலகில் பிசியான நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராக வலம் வந்த அவர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். சில மா…
-
- 1 reply
- 587 views
- 1 follower
-
-
போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் உயிரிழந்தது எப்படி? - வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை புறநகர் சோழவரம் பகுதியில் இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன்(13) ஒருவன் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மறுவாழ்வு மையத்தை நடத்திய நான்கு நபர்கள் சிறுவனை அடித்துக் காயப்படுத்தியது உடற்கூராய்வில் தெரிய வந்ததால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 729 views
- 1 follower
-
-
சென்னையில் உள்ள மருந்து நிறுவனத்தின் கண் மருந்தில் கலப்படமா? - நள்ளிரவில் நடந்த சோதனை பட மூலாதாரம்,GETTY IMAGES 4 பிப்ரவரி 2023, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, “எஸ்ரிகேர் ஆர்டிஃபீஷியல் டியர்ஸ் என்ற மருந்தில் கலப்படம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதால்” யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று நுகர்வோருக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நள்ளிரவு 2 மணி வரை சோதனை நடந்துள்ளது. இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆல…
-
- 0 replies
- 557 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் - அண்ணாமலை உள்ளிட்டோர் எஸ்.ஜெய்சங்கரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல் By VISHNU 03 FEB, 2023 | 04:39 PM (நா.தனுஜா) இலங்கையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான தலையீட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கிளை தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்ட சிலர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், மாகாணசபைத்தேர்தல்கள…
-
- 1 reply
- 313 views
- 1 follower
-
-
தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,@THONDANKANI தலைக்கூத்தல் என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. 13ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக தலைக்கூத்தல் என்ற சொல்லை நான் எதிர்கொண்டபோது, எனக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. விருதுநகர் மாவட்டத்தில், நோய்வாய்ப்பட்ட முதியவர்களை அவர்களின் பிள்ளைகளே எண்ணெய் குளியல் மூலமாக கொலை செய்யும் வழக்கத்திற்குப் பெயர்தான் தலைக்கூத்தல். இந்த கொலை பழக்கத்தை 2010ல் முதன்முதலில் செய்தியா…
-
- 3 replies
- 874 views
- 1 follower
-
-
அண்ணா நினைவு தினம்: மரியாதை செலுத்திய ஸ்டாலின் Feb 03, 2023 10:16AM மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 3) திமுக சார்பில் அமைதி பேரணி சென்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே அமைதி பேரணியை துவங்கி வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரைக்கு திமுக நிர்வாகிகள் சென்றனர். பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தின…
-
- 1 reply
- 795 views
- 1 follower
-
-
"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 22 ஜனவரி 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, நிறைமதி (இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுறது.) சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின. இவற்றை பார்க…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சாதி இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க. நிர்வாகி கைது 30 ஜனவரி 2023, 14:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சேலம் மாவட்டத்தில் திருமலைகிரி கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை தி.மு.க. நிர்வாகி ஒருவர் ஆபாசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோவிலில் த…
-
- 1 reply
- 858 views
- 1 follower
-
-
கூட்டணிக்கு புதிய பெயர், மோதி படம் இல்லாத பேனர் - புதிய முன்னணியை அமைக்கிறதா அ.தி.மு.க? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 1 பிப்ரவரி 2023, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த ஜன…
-
- 0 replies
- 754 views
- 1 follower
-
-
வட மாநிலத்தவர்கள் சேலம் தொழிலாளியை கட்டி வைத்து 2 நாட்களுக்கு அடித்ததாக குற்றச்சாட்டு - 7 பேர் கைது கட்டுரை தகவல் எழுதியவர்,பி.சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் ப…
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 31 ஜனவரி 2023, 02:40 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் "உலகையே வியப்பில் ஆழ்த்திய உத்திரமேரூர் கல்வெட்டு" என்று தனது 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டிருக்கிறார். உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன? அந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன? ஞாயிற்…
-
- 0 replies
- 897 views
- 1 follower
-
-
7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்: இவ்வளவு பால் சுரக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRIVIDYA கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்து சாதனை படைத்துள்ளதாக 'ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டஸ்' அங்கீகரித்துள்ளது. ஸ்ரீவித்யா தனக்கு சுரந்த அதிகமான தாய்ப்பாலைச் சேகரித்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் தானமாக வழங்கியுள்ளார் என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிபிசி தமிழி…
-
- 0 replies
- 572 views
- 1 follower
-
-
கல்லெறிந்த அமைச்சர்; 'கற்கால திமுக' என அதிமுக விமர்சனம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாற்காலியைக் கொண்டுவர நேரமானதால், நாற்காலி கொண்டுவருபவரை நோக்கி பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் கல்லெறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மொழிப் போர் தியாகிகளை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. கூட்டங்களை நடத்திவருகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார். 'இது ஓர் அவசரநிலை' - காங்கிரஸுக்…
-
- 1 reply
- 602 views
- 1 follower
-
-
மனிதாபிமான அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள் ; இந்திய, இலங்கை அரசுகளிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை By T. SARANYA 28 JAN, 2023 | 04:40 PM (ஆர்.ராம்) தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இந்திய, இலங்கை அரசுகள் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர் சங்க இராமநாதபுர மாவட்ட தலைவர் யேசுராசா தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கும் இடையில் எல்லைதாண்டி வந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள 17 படகுகள் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக எதிர்வரும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதேவேளை இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தேர்தலுக்கான …
-
- 0 replies
- 463 views
-
-
மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையான கணவர்கள் வாங்கிய கடனை கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்த வருமானத்தில் அடைத்ததோடு, பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர். கொரோனா காலத்தில்கூட குன்னத்தூர் கிராமத்துப் பெண்கள் பால் உற்பத்தி மூலமாகக் கிடைத்த வருமானத்தால் கடன் வலையில் இருந்து தப்பித்துள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை மீட…
-
- 2 replies
- 790 views
- 1 follower
-