தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை: ஆளுநர் ரவி கருத்தைத் தொடர்ந்து சூடாகி வரும் விவாதங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 20 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது டிவிட்டர் தளத்தில் பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்திய அளவில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்ந…
-
- 7 replies
- 625 views
- 1 follower
-
-
'ரஜினி தத்தெடுத்த தந்தை' - யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்? பட மூலாதாரம்,ANBUPAALAM/WEBSITE ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குடியிருப்பு பகுதிகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம் - என்ன சர்ச்சை?26 ஜனவரி 2023 'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் - இதோ ஆதாரம்26 ஜனவரி 2023 ஆஸ்கருக்கு சென்ற `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` : பொம்மன், பெள்ளி இப்போது என்ன செய்கிறார்கள்?25 ஜனவரி 2023 யார் இந்த பாலம் கல்யணசுந்தரம்? திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, களக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட தமிழகத்தின் ஒரு கடைக்கோடி குக்கிராமத்தில் பிறந்த ஒருவரை அமெரிக்…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தம்பி ராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி முருகன், தம்பி சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லாது, அவதிப்பட்டு வரும் செய்தி பெரும் வேதனையளிக்கிறது. சிறைக்கொட்டடியிலிருந்து விடுதலைபெற்ற அவர்கள், அதனைவிடக் கொடுமையான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு, வதைக்கப்படுவது எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் புழல் நடுவண் சிறையிலிருந்து திருச்சியிலுள்ள சிறப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 60 நாள்களுக்கு மேலாகியும் அங்கிரு…
-
- 2 replies
- 820 views
-
-
புதுவை அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய தமிழிசை உத்தரவு: தனிநபர் உரிமையில் தலையிடும் செயலா? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 27 ஜனவரி 2023, 02:46 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் மாதத்தில் முதல் வேலை நாள் அன்று அனைத்து அரசு ஊழியர்களும் கதர், கைத்தறி பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் சார்பில் அரசு சார்பு செயலாளர் எம்.வி.ஹிரண் இது தொடர்பான உத்தரவை வெளியிட்டார். ஒருபுற…
-
- 0 replies
- 618 views
- 1 follower
-
-
"பத்மஸ்ரீ விருதுன்னா என்ன?" விஷ பாம்புகளை பிடிக்கும் இந்த தமிழர்கள் இப்படி கேட்டது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இருவரும் பத்ம ஸ்ரீ விருது பெறுவதற்கு தேர்வாகியுள்ளதாக முதலில் தெரியவந்த போது அதை அவர்கள் நம்பவில்லை. இருவரும் கரூர் மாவட்டத்தில் காகிதபுரம் கிராமத்தில் பாம்பு பிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ''இது மாதிரி எல்லாம் எங்களுக்கு யாரும் போன் போட்டதில்லை. தீடீர்னு டிஜிபி ஆபீசில் இருந்து எங்களுக…
-
- 1 reply
- 721 views
- 1 follower
-
-
சென்னையில் குடியரசு தினம்: முதலமைச்சர் முன்னிலையில் கொடியேற்றிய ஆளுநர் பட மூலாதாரம்,DIPR 26 ஜனவரி 2023, 03:24 GMT புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023, 04:13 GMT சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர். குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டன. முப்படை வீரர்கள…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்களை ஏலம்விட உத்தரவு ! சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடைமைகளான வைரம், தங்கம், விலையுயர்ந்த புடவைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை, பொது ஏலம்விட நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவையடுத்து, சசிகலா உட்பட 3 பேரும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, வெளியே வந்தனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்.டி.ஐ ஆர்வலர் ந…
-
- 0 replies
- 480 views
-
-
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! christopherJan 25, 2023 22:59PM கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கடந்த மே 1 முதல் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை முடிவடைந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மொத்தம் 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பத்ம…
-
- 0 replies
- 685 views
-
-
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சினிமா பயணம் குறித்து பார்ப்போம். வாணி ஜெயராம்: 1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார…
-
- 2 replies
- 720 views
-
-
'இது ஓர் அவசரநிலை' - காங்கிரஸுக்கு கமல் ஆதரவளிப்பதன் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் இந்த முடிவைத் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பாக அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. அதில் "ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்…
-
- 3 replies
- 863 views
- 1 follower
-
-
பறவைகளை துல்லியமாக ஓவியம் தீட்டும் சிவக்குமார்: தமிழ் களக் கையேட்டில் இடம் பெற்ற படங்கள் பட மூலாதாரம்,SIRAGAN 2 மணி நேரங்களுக்கு முன்னர் உண்மையோடு தங்கள் கற்பனை மற்றும் படைப்புணர்வைக் கலந்து வரையும் ஓவியங்கள் ஆற்றல் மிக்க கலைப்படைப்புகளாக வளரத் தொடங்கிய நிலையில், உள்ளதை உள்ளபடி வரையும் துல்லிய ஓவியங்களுக்கான மதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால், அளவுகடந்த துல்லியத்தோடு அழகியல் உணர்ச்சி கொப்பளிக்கும் ஓவியங்களை வரைந்து உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ஓவியர் இளையராஜா. பல்வேறு இசங்களை உள்வாங்கிக் கொண்டு வெளிப்பட்ட நவீன முறை ஓவியங்களைப் போலவே துல்லிய ஓவியங்களும் ஆற்றல்மிக்க கலைவடிவம்தான் என்பதை அவரது ஓவியங…
-
- 3 replies
- 965 views
- 1 follower
-
-
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண் Play video, "ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண்", கால அளவு 2,15 02:15 காணொளிக் குறிப்பு, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குருவக்குடி கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் அதன் வளர்ப்பு முறையை ஆவணப்படுத்தி வருகிறார். இதற்காக காளைகள் இருக்கும் இடத்திற்கே தனியாகப் பயணம் செய்து காணொளிகளை உருவாக்கி வரும் லாவண்யா, அதை ‘மண்வாசம் லாவண்யா’ என்ற யு டியூப் சேனலில் வெளியிடுகிறார். தயாரிப்பு, படத்தொகுப்பு …
-
- 18 replies
- 2k views
- 1 follower
-
-
அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம் படக்குறிப்பு, அந்தமானில் பெயரிடப்படாத 21 தீவுகளில் ஒன்றுக்கு தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேதாஜியின் 126ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி, அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார். இதில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயரும் உள்ளது. இந்த தீவுகள் எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக…
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான் ! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி By DIGITAL DESK 5 23 JAN, 2023 | 02:43 PM அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில். சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, குறைவான கால அவகாசத்தில் ஓடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து, அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது. இன்றைய சூழலில் உலகளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, அவை உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்கேட்டிங் எனப்படும் காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்ட…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
கோவை குற்றாலத்தில் போலி டிக்கெட் மூலம் ரூ.1 கோடி முறைகேடு? வனவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மீட்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை குற்றாலத்தில் போலி டிக்கெட் அச்சிட்டு ரூ.1 கோடி வரை முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த அதிகாரிகள், வனவர் ஒருவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். கோவை மாவட்டத்தில் போலாம்பட்டி வனச்சரகத்தில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தீபாவளி, பொங…
-
- 0 replies
- 800 views
- 1 follower
-
-
ஈரோடு இடைத் தேர்தல் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஏன் முக்கியம்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இது பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி ந…
-
- 1 reply
- 718 views
- 1 follower
-
-
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் By Rajeeban 12 Jan, 2023 | 11:59 AM சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.12) கொண்டு வந்தார். இதில் முதல்வர் பேசுகையில், "அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன்.1967ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோர தீர்மானித்தது எடப்பாடி தரப்பு! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையகத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்த வாரம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது இதுகுறித்து பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2023/1320859
-
- 0 replies
- 271 views
-
-
போதைப் பொருள் விழிப்புணர்வு ; 10 குறள் ஒப்பித்தால் 2 லீற்றர் பெற்றோல் : இந்தியாவில் சம்பவம் By T. SARANYA 19 JAN, 2023 | 10:44 AM இந்தியாவில் தமிழகத்தில், போதைப் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 10 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 2 லீற்றர் பெற்றோல் இலவசமாக வழங்கிய எரிபொருள் நிலைய உரிமையாளரின் செயல் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் நாகம்பள்ளி பகுதியில் வள்ளுவர் ஏஜென்சி என்ற பெயரில் எரிபொருள் நிலையததை நடத்தி வருகிறார். …
-
- 1 reply
- 723 views
- 1 follower
-
-
பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் கடந்த டிசம்பர் 2022இல் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம் பலவிதமான தீண்டாமை பிரச்னைகளை வெளிப்படுத்தியது. குறிப்பாக, தலித் மக்கள் இறையூரில் உள்ள ஐயனார் கோவிலில் நுழைவதற்குத் தடை இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் கோயிலுக்குள் தலித் மக்கள் முதல்முறையாக நுழைந்தனர். இறையூரில் நடத்தப்பட்ட கோயில் நுழைவு சம்பவம், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் நுழைவதற்குத் தற்போதும் தடைகள் உள்ளனவா, இதற்கு முன்னர் நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் வெற்றி பெற்ற…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
புத்தகக் கண்காட்சியில் பாகுபாடு - பதில் சொல்ல மறுத்த பபாசி கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணு பிரகாஷ் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் நடைபெறும் 46வது புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க இடம் கொடுக்காத புத்தக கண்காட்சி நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கடை அமைத்து பதிப்பாளர் ஒருவர் புத்தகத்தை விற்பனை செய்துள்ளார். புத்தக கண்காட்சியும், சர்ச்சைகளும் சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரை…
-
- 0 replies
- 868 views
- 1 follower
-
-
ஸ்ரீபெரும்புதூரில் பாலியல் வழக்கில் கைதானவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் அருகே நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற 20 வயது பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு…
-
- 1 reply
- 464 views
- 1 follower
-
-
தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.- சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த அன்பில் மகேஸ் By RAJEEBAN 16 JAN, 2023 | 05:15 PM சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஜன.16) துவக்கி வைத்தார். இம்மாதம் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்,…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் ஐவர் கைது பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஜனவரி 2023, 08:21 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரை, அவரது ஆண் நண்பர் கண்ணெதிரில், முகக்கவசம் அணிந்த 5 நபர்கள் மிரட்டி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களை விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர், நண்பர்களின் உதவியால் மீட்கப்பட்டனர் என்றும் தற்போது அவர்கள் கா…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள்: எப்படி நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN CYBER CRIME DEPT நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு கணினி பொறியாளர்கள் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கி உள்பட இந்தியாவில் பல வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் இரண்டு கோடி வரை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பணத்தை கொள்ளையடிப்பதற்காக கீ லாகர் என்ற மென்பொருளை இவர்கள் பயன்படுத்தியதாகவும் போலீசார் குற்ற…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-