Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்: இவ்வளவு பால் சுரக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRIVIDYA கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்து சாதனை படைத்துள்ளதாக 'ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டஸ்' அங்கீகரித்துள்ளது. ஸ்ரீவித்யா தனக்கு சுரந்த அதிகமான தாய்ப்பாலைச் சேகரித்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் தானமாக வழங்கியுள்ளார் என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிபிசி தமிழி…

  2. மனிதாபிமான அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள் ; இந்திய, இலங்கை அரசுகளிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை By T. SARANYA 28 JAN, 2023 | 04:40 PM (ஆர்.ராம்) தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இந்திய, இலங்கை அரசுகள் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர் சங்க இராமநாதபுர மாவட்ட தலைவர் யேசுராசா தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கும் இடையில் எல்லைதாண்டி வந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள 17 படகுகள் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்ப…

  3. இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக எதிர்வரும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதேவேளை இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தேர்தலுக்கான …

    • 0 replies
    • 461 views
  4. தமிழ்நாடு அரசு அமைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் Play video, "மாற்றுத்திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகம்: சிறப்பம்சங்கள் என்ன?", கால அளவு 4,02 04:02 காணொளிக் குறிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகம்: சிறப்பம்சங்கள் என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 'அனைத்தும் சாத்தியம்' என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த காணொளியில் காணுங்கள். தயாரிப்பு: ஹேமா ராகேஷ் …

  5. வட இந்தியர்கள் உங்களை விரட்டிவிரட்டி அடிப்பார்கள் அப்போது என்னை தேடுவீர்கள்- சீமான் பேச்சு வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள் எனவும், தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். மறைந்த புலவர் தமிழ்கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. வேலுநாச்சியாரின் பேரன் நான் வந்தால் அவளுக்…

  6. 'ரஜினி தத்தெடுத்த தந்தை' - யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்? பட மூலாதாரம்,ANBUPAALAM/WEBSITE ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குடியிருப்பு பகுதிகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம் - என்ன சர்ச்சை?26 ஜனவரி 2023 'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் - இதோ ஆதாரம்26 ஜனவரி 2023 ஆஸ்கருக்கு சென்ற `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` : பொம்மன், பெள்ளி இப்போது என்ன செய்கிறார்கள்?25 ஜனவரி 2023 யார் இந்த பாலம் கல்யணசுந்தரம்? திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, களக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட தமிழகத்தின் ஒரு கடைக்கோடி குக்கிராமத்தில் பிறந்த ஒருவரை அமெரிக்…

  7. மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையான கணவர்கள் வாங்கிய கடனை கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்த வருமானத்தில் அடைத்ததோடு, பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர். கொரோனா காலத்தில்கூட குன்னத்தூர் கிராமத்துப் பெண்கள் பால் உற்பத்தி மூலமாகக் கிடைத்த வருமானத்தால் கடன் வலையில் இருந்து தப்பித்துள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை மீட…

  8. புதுவை அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய தமிழிசை உத்தரவு: தனிநபர் உரிமையில் தலையிடும் செயலா? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 27 ஜனவரி 2023, 02:46 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் மாதத்தில் முதல் வேலை நாள் அன்று அனைத்து அரசு ஊழியர்களும் கதர், கைத்தறி பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் சார்பில் அரசு சார்பு செயலாளர் எம்.வி.ஹிரண் இது தொடர்பான உத்தரவை வெளியிட்டார். ஒருபுற…

  9. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தம்பி ராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி முருகன், தம்பி சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லாது, அவதிப்பட்டு வரும் செய்தி பெரும் வேதனையளிக்கிறது. சிறைக்கொட்டடியிலிருந்து விடுதலைபெற்ற அவர்கள், அதனைவிடக் கொடுமையான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு, வதைக்கப்படுவது எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் புழல் நடுவண் சிறையிலிருந்து திருச்சியிலுள்ள சிறப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 60 நாள்களுக்கு மேலாகியும் அங்கிரு…

    • 2 replies
    • 822 views
  10. 'விடியல் இன்னும் வரல' - கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனையின் வேதனை கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது…

  11. "பத்மஸ்ரீ விருதுன்னா என்ன?" விஷ பாம்புகளை பிடிக்கும் இந்த தமிழர்கள் இப்படி கேட்டது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இருவரும் பத்ம ஸ்ரீ விருது பெறுவதற்கு தேர்வாகியுள்ளதாக முதலில் தெரியவந்த போது அதை அவர்கள் நம்பவில்லை. இருவரும் கரூர் மாவட்டத்தில் காகிதபுரம் கிராமத்தில் பாம்பு பிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ''இது மாதிரி எல்லாம் எங்களுக்கு யாரும் போன் போட்டதில்லை. தீடீர்னு டிஜிபி ஆபீசில் இருந்து எங்களுக…

  12. சென்னையில் குடியரசு தினம்: முதலமைச்சர் முன்னிலையில் கொடியேற்றிய ஆளுநர் பட மூலாதாரம்,DIPR 26 ஜனவரி 2023, 03:24 GMT புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023, 04:13 GMT சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர். குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டன. முப்படை வீரர்கள…

  13. ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்களை ஏலம்விட உத்தரவு ! சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடைமைகளான வைரம், தங்கம், விலையுயர்ந்த புடவைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை, பொது ஏலம்விட நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவையடுத்து, சசிகலா உட்பட 3 பேரும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, வெளியே வந்தனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்.டி.ஐ ஆர்வலர் ந…

  14. தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! christopherJan 25, 2023 22:59PM கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கடந்த மே 1 முதல் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை முடிவடைந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மொத்தம் 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பத்ம…

  15. பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சினிமா பயணம் குறித்து பார்ப்போம். வாணி ஜெயராம்: 1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார…

    • 2 replies
    • 721 views
  16. கல்லெறிந்த அமைச்சர்; 'கற்கால திமுக' என அதிமுக விமர்சனம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாற்காலியைக் கொண்டுவர நேரமானதால், நாற்காலி கொண்டுவருபவரை நோக்கி பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் கல்லெறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மொழிப் போர் தியாகிகளை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. கூட்டங்களை நடத்திவருகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார். 'இது ஓர் அவசரநிலை' - காங்கிரஸுக்…

  17. 'இது ஓர் அவசரநிலை' - காங்கிரஸுக்கு கமல் ஆதரவளிப்பதன் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் இந்த முடிவைத் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பாக அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. அதில் "ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்…

  18. ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதை பட மூலாதாரம்,NETFLIX/GUNEETMONGA ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கருக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த ஆவணப்படம். தாயைப் பிரிந்து குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான கதைய…

  19. பறவைகளை துல்லியமாக ஓவியம் தீட்டும் சிவக்குமார்: தமிழ் களக் கையேட்டில் இடம் பெற்ற படங்கள் பட மூலாதாரம்,SIRAGAN 2 மணி நேரங்களுக்கு முன்னர் உண்மையோடு தங்கள் கற்பனை மற்றும் படைப்புணர்வைக் கலந்து வரையும் ஓவியங்கள் ஆற்றல் மிக்க கலைப்படைப்புகளாக வளரத் தொடங்கிய நிலையில், உள்ளதை உள்ளபடி வரையும் துல்லிய ஓவியங்களுக்கான மதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால், அளவுகடந்த துல்லியத்தோடு அழகியல் உணர்ச்சி கொப்பளிக்கும் ஓவியங்களை வரைந்து உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ஓவியர் இளையராஜா. பல்வேறு இசங்களை உள்வாங்கிக் கொண்டு வெளிப்பட்ட நவீன முறை ஓவியங்களைப் போலவே துல்லிய ஓவியங்களும் ஆற்றல்மிக்க கலைவடிவம்தான் என்பதை அவரது ஓவியங…

  20. அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம் படக்குறிப்பு, அந்தமானில் பெயரிடப்படாத 21 தீவுகளில் ஒன்றுக்கு தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேதாஜியின் 126ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி, அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார். இதில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயரும் உள்ளது. இந்த தீவுகள் எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக…

  21. அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான் ! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி By DIGITAL DESK 5 23 JAN, 2023 | 02:43 PM அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில். சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, குறைவான கால அவகாசத்தில் ஓடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து, அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது. இன்றைய சூழலில் உலகளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, அவை உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்கேட்டிங் எனப்படும் காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்ட…

  22. கோவை குற்றாலத்தில் போலி டிக்கெட் மூலம் ரூ.1 கோடி முறைகேடு? வனவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மீட்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை குற்றாலத்தில் போலி டிக்கெட் அச்சிட்டு ரூ.1 கோடி வரை முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த அதிகாரிகள், வனவர் ஒருவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். கோவை மாவட்டத்தில் போலாம்பட்டி வனச்சரகத்தில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தீபாவளி, பொங…

  23. சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - அதிர்ச்சி தகவல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விவரங்கள் உங்களை மனரீதியாக சிரமப்படுத்தலாம்.) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறுவன் கொலையானதாகச் சொல்லப்படும் சம்பவத்தை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களின் பா…

  24. இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோர தீர்மானித்தது எடப்பாடி தரப்பு! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையகத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்த வாரம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது இதுகுறித்து பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2023/1320859

  25. ஈரோடு இடைத் தேர்தல் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஏன் முக்கியம்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இது பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.