Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணி தமிழகத்தில் தீவிரம் இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் தொன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 தொன் பால் மா ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில…

    • 4 replies
    • 552 views
  2. மஹிந்தவுக்கு... இந்தியா, தஞ்சம் அளிக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ் இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் ஆட்சியாளா்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை, பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல், திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த மஹிந்த இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது. ஆனாலும் கடல் வழியாக அவா் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள்…

  3. பேரறிவாளன் விடுதலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு - இதுவரை நடந்தது என்ன ? ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய உச்சநீதிமன்றம் இந்திய உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்…

  4. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அண்ணாமலையா? புறக்கணிக்கும் பிரமுகர்கள்! மின்னம்பலம்2022-05-10 2009 மே 17 18 தேதிகள் உலக மனித உரிமை வரலாற்றில் ரத்தத்தால் நனைக்கப்பட்ட பக்கங்கள். விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ உதவிகளோடு விடுதலைப் புலிகளை அழித்து, தமிழ் மக்களையும் பெருமளவில் கொன்று குவித்த நாள். இதை ஒட்டி ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் தமிழ் உணர்வாளர்களால் நடத்தப்படும். அந்தவகையில் இந்த வருடம் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் மே 14 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நினைவேந்தல…

  5. இலங்கையில் நாயக்க என்ற குடும்ப பெயர்களை கொண்டுள்ளவர்கள், தெலுங்கு நாயுடு வம்சாவளியினர் எனவும் ராஜபக்சவினரும் தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் எனவும் தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார். தமிழ் வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். பண்டாரநாயக்க என்ற பெயரில் இருக்கும் பண்டார என்பது தமிழில் இருக்கும் பண்டாரம் என்ற பெயர்களை கொண்ட மக்களை குறிக்கும். பண்டாரம் என்பவர் அம்மன் கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்தார். அவரது பெண்ணை இலங்கைக்கு மணம் முடித்து கொடுத்தனர். இலங்கை சென்றது, இந்த பெண்ணின் கணவன் இறந்து போகிறார். இதன் பின்னர், அந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர், அங்கு ஆட்சி …

  6. இலங்கை மக்களுக்கு... உதவிட, நன்கொடை வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதல்வர். மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி தற்போது கிடைத்துள்ளது. எனவே மனிதாபிமான அடிப்படையில்இ இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavann…

  7. போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணம்: மேலும் 4 பேர் கைது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலிலேயே சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை சிபிசிஐடி கைதுசெய்துள்ளது. ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், தலைமைக் காவலர் குமார், ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் என நான்கு பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளன…

  8. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு ஆட்சி சாதனையா, சாதாரணமா? விரிவான அலசல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மே 2022 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக 159 இடங்களையும் தி.மு.க. மட்டும் 133 இடங்களையும் கைப்பற்றின. மே 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர…

  9. பேரறிவாளனின்... விடுதலை குறித்த வழக்கு, ஒத்திவைப்பு! பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இதன்போது நீதிபதிகள் குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது எனத் தெரித்துள்ளனர். அதேநேரம் குடியரசு தலைவர் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது எனவும், ஆனால் இந்த வழக்கில் அரசியல் சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். https:…

  10. "எப்ப அகதியா பதிவு செய்வீங்க?" - அடைக்கலம் கோரி வந்த இலங்கை தமிழர்கள் கண்ணீர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து படகு மூலம் தமிழ்நாட்டுக்கு இதுவரை 75 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். ஆனால், தாய்நாட்டை விட்டு வெளியேறி வந்த அவர்கள், அகதிகளாக பதிவு செய்யப்படாமல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இதுபோல உரிய ஆவணமின்றி வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் வந்தால் அவர்கள் மீது கடவுச்சீட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழல் கார…

  11. இலங்கை மக்களுக்கு உதவும் தீர்மானம் அரசியல் லாபமாக மாறிவிடக்கூடாது- மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கேட்டு தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானம் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். இந்த தருணத்தில் சொல்லுதல் யார்க்கும் எளிய… என்ற திருக்குறளை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தியபோது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக…

  12. தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுமா? தீப்பந்தம் போல பிற மாநிலங்களை வாட்டும் வெப்பத்துக்கு இதுவா காரணம்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் அடுத்த சில நாட்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடுமென இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டில் வெப்ப அலை இவ்வளவு அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்? இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலும் மத்தியப் பகுதிகளிலும் இந்த வாரம் வெப்ப நிலை 2 முதல் நான்கு டிகிரிவரை அதிகரிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. அதற்குப் பிறகு பெரிய அளவில்…

  13. தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்.! தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை மக்களுக்கு உதவிப்பொருள் அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்ந…

    • 9 replies
    • 627 views
  14. "இலங்கை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்", - உதவி பொருட்களை படகுகளில் அனுப்ப முன்வரும் ராமேஸ்வரம் மீனவர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய (மே 1) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசை அனுமதிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனையடுத்து, தங்களின் படகுகளில் உதவி பொருட்களை அனுப்ப தயாராக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தலைவரான ஜேசு ராஜா தெரிவித்துள்ளதாக 'டெய்லி மிரர்' செய்தி இணையதளம் தெ…

  15. போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணம்: பதறவைக்கும் வாக்குமூலங்கள் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 ஏப்ரல் 2022 படக்குறிப்பு, விக்னேஷ் சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், மத்தியக் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த பதற வைக்கும் வாக்குமூலங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சென்னை புரசைவ…

  16. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், அழைப்பின் பேரில்... தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இந்தியாவில் இருந்து மலையக மக்கள் சார்ந்த உதவிகளை முதல் முதலாக இலங்கை பெற வழிவகுத்திருந்தது. மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொழிலாளர் கங்கிரசுடன் நட்புறவை வலுப்பட…

  17. இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்திய மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் இந்திய மத்திய அரசு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவி செய்யும் அதேநேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்து வருகின்றது. இந்நிலையில், இதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து இந்திய மத்திய அரசுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு இதுவரை இந்திய மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு இந்திய மத்திய அரசின் …

  18. சிக்கித் தவிக்கும்... இலங்கைத் தமிழர்களுக்கு, உதவுமாறு... ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் கோரிக்கை! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலை…

  19. போதைப் பொருள் கடத்தில் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது - இலங்கையில் இருந்து அகதிகள் போல் வந்தவர்கள் BBCCopyright: BBC இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் அகதிகள் போல் தமிழ்நாட்டுக்கு வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் வாழ முடியாமல் தமிழ்நாட்டில் அகதியாக வந்ததாக இன்று காலை தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதிக்கு இருவர் வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கையில் போதைப் பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் யாழ்ப்பாணத்தில் இரு…

  20. தமிழகத்திற்கு... 26 கோடி கிலோ, நிலக்கரி ஒதுக்கீடு! தமிழகத்திற்கு 26 கோடி கிலோ நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களாக நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கூடுதலான நிலக்கரி ஒதுக்கீடு செய்யுமாறு மின் வாரியம் வலியுறுத்தியிருந்தது. இதற்கமைய தற்போது மத்திய அரசு 26 கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலக்கரியை தமிழக மின் வாரியம் சொந்த செலவில் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1278892

  21. General News தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் திடீர் விபத்து தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின்அழுத்தக் கம்பியில் உரசி விழுந்ததால் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்…

    • 2 replies
    • 396 views
  22. பேரறிவாளன் விடுதலை விவகாரம்: ஆளுநரின் செயல் கூட்டாட்சி அமைப்பை அழித்துவிடும் - உச்ச நீதிமன்றம் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுப்பது என்ற குழப்பத்திற்குள் செல்லாமல், பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுதலை செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதி…

  23. கருணாநிதியின் பிறந்தநாள்... அரசு விழாவாக, கொண்டாடப்படும் – ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) 110ஆவது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்போதே அவர் மேற்படி அறிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் எனவும் கூறினார். அவருடைய பிறந்த தினமான ஜுன் மாதம் 3 ஆம் திகதி இனி அரசு விழாவாக கொண்டாப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1278696

  24. மு.க.ஸ்டாலின் - திராவிடச் சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.) கருப்பையும் சிவப்பையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை குறித்து 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. …

  25. இந்தியா - இலங்கை இடையே மின்பாதை அமைக்கக் கூடாது! இந்தியா - இலங்கைக்கு இடையே கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா - இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது …

    • 1 reply
    • 588 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.