Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா! ஈரானுடனான தொடர்புகளுக்காக அமெரிக்காவால் முன்னர் தடை செய்யப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க அதன் கடல்சார் மண்டலத்தில் கண்காணிப்பை இந்தியா முடுக்கிவிட்டதாக ஒரு வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. எண்ணெய் சரக்குகளின் தோற்றத்தை மறைக்கும் வகையில், கப்பல் பரிமாற்றங்களுக்கு தனது நீர்நிலைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே இந்தியாவின் நோக்கமாகும் என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது. அனுமதிக்கப்பட்ட மூன்று கப்பல்களான ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார் மற்றும் அல் ஜாஃப்சியா ஆகி…

  2. கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு! கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மனைவி ஷெரின் அன்ஜான் ஆகியோருக்கு அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. , கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, பெற்றோர் ஒப்புதலுட…

  3. பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து 14 Feb, 2026 | 12:20 PM பங்களாதேஷில் நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின்னணி கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் போராட்டங்களின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சுமார் 18 மாதங்கள் கழித்து புதிய அரசை தேர்ந்தெடுக்க பொதுத்தேர்தல் நடைபெற்றது. இது பங…

  4. 'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' - 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு! 14 Feb, 2026 | 08:59 AM இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' இல் (India–AI Impact Summit 2026) கலந்து கொள்ள 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாடு புதுடெல்லியில் பெப்ரவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்வரும் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்: பூட்டான் – பிரதமர் ஷெரிங் டோப்கே பொலிவியா – துணைத் தலைவர் எட்மண்ட் லாரா மொன்டானோ பிரேசில் – ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குரோஷியா – பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென…

  5. இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு 13 Feb, 2026 | 12:24 PM பாகிஸ்தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீத பார்வையை இழந்துள்ளதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியொருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இம்ரான் கானின் நிலை தொடர்பாக அறிவதற்காக உச்சநீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார், கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இம்ரான் கானை சிறையில் சந்தித்து இரண்டு மணிநேரம் பேசியதாகவும் இம்ரான் கானின் தடுப்புக்காவல் கள நிலைமையை ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையினை மறுநாள் புதன்கிழமை (11) நீதிமன்றத்தில் சம…

  6. பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 09:39 AM பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (13) அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அந்தக் கட்சி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வெடித்த மக்கள் போராட்டங்களின் பின்னர், நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல் இதுவாகும். சுமார் 175 மில்லியன் மக்கள்தொகையைக…

  7. பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப் 11 Feb, 2026 | 03:23 PM அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டு, பின்னர், கழிவறை டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த கால பயங்கரவாதத்தை தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது தவறு. அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய இராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக், முஷாரப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்றும் அவர் கூற…

  8. இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு 12 Feb, 2026 | 01:55 PM கடந்த ஆண்டு நிலவிய இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் தான் சமாதான தூதுவர் போல செயற்பட்டு போரை தடுத்து நிறுத்தியதாகவும் ஊடகப் பேட்டியொன்றின்போது குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் போரை தடுப்பதில் தான் தீர்க்கமாக பங்களித்ததாக ட்ரம்ப் உறுதிபட பேட்டியில் தெரிவித்திருந்தார். இது ஒரு அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்றும் கூறிய ட்ரம்ப், இதுவரை நான் 8 போர்களை நிறுத்தியதாகவும் அவற…

  9. சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 12:50 PM சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு 36 மணித்தியாலங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் நீதிமன்றம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி உத்தரவிட்ட 03 மணித்தியாலங்களுக்குள் அந்தப் பதிவை நீக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் டீப்ஃபேக் (Deepfake) எனப்படும் போலி வீடியோக்கள் மற்றும் செயற்கை…

  10. மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில் கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புது பா.ஜ.க அரசு பதவியேற்றது. இந்நிலையில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்துக்குள் புகுந்த கும்பலொன்று தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரொருவரை தாக்கி, வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதுடன் குறித்த கிராமத்தில் இன்று (10) அதிகாலை துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிரு…

  11. தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண் பட மூலாதாரம்,Puneet Barnala படக்குறிப்பு,55 வயதான அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், குழந்தைகளைக் காப்பாற்ற தேனீக்களோடு போராடினார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த திவாரி பிபிசி செய்தியாளர் 7 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்." மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள். மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரி…

  12. பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்றைய (வெள்ளிக்கிழமை ) தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு இதுவரை…

  13. பாஜகவுக்கு கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தொழிலதிபர்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ராகவேந்திர ராவ் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி பிபிசி செய்தியாளர்கள் 3 பிப்ரவரி 2026 உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை நீக்கி உத்தரவிட்டது. இதன்பின், 2024-25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ. 6,000 கோடி நன்கொடையை பெற்றுள்ளது. இதில் 3,689 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றது. இது, மொத்த நன்கொடையில் தோராயமாக 62%. இந்திய நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற எந்தவொரு நிறுவனமும் தேர்தல் அறக்கட்டளையை அமைக்க முடியும். இந்திய குடிமகன் எவரும் அல்லது இந்தியாவில் பதிவுபெற்ற எந்தவொரு நிறுவனமும் இந்து கூட்டுக் குடும்பம் (Hindu Undiv…

  14. இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு! இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு சுதந்திரம் உள்ளது என்று ரஷ்யா புதன்கிழமை (04) கூறியுள்ளது. மேலும், எரிசக்தி இறக்குமதியை பல்வகைப்படுத்துவதற்கான புது டெல்லியின் முயற்சிகள் புதிதல்ல என்றும் சுட்டிக்காட்டியது. பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்தும், ஒருவேளை வெனிசுலாவிலிருந்தும் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மசகு எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்தது. ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அறிவித்த கிரெம்ளின் செய்தித…

  15. ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெனரல் எம்.எம். நரவனே டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இந்திய ராணுவத்தின் 28வது முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார். 31 நிமிடங்களுக்கு முன்னர் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் உரையால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் (எம்எம்) நரவனே எழுதிய வெளியாகாத புத்தகம் (ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி) குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகளை ராகுல் காந்தி வாசிக்க முயன்றார். ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவையில்…

  16. பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்? பட மூலாதாரம்,Arvind Yadav/Hindustan Times via Getty Images படக்குறிப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்." ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த 2026 மத்திய பட்ஜெட்டில், ஒருபுறம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பசுமை ஆற்றலுக்கு அரசு சலுகைகளை வழங்கியுள்ளது; மறுபுறம், பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் மற்றும் சில செயல்பாடுகளின் விலையை உயர்த்தியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு நீக்கியுள்ளது, இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த மரு…

  17. காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு பட மூலாதாரம்,Getty Images/HITESH DAFDA படக்குறிப்பு,கடந்த 1915ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் உள்ள கோச்ரப் ஆசிரமத்திற்கு ஒரு தலித் குடும்பம் வந்தபோது, ஆசிரமவாசிகள் பலர் அவர்களை எதிர்த்தனர். உள்ளே உள்ள படத்தில் காந்தியும் அவர் தத்தெடுத்த தலித் மகளான லட்சுமியும் காணப்படுகின்றனர் கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் காந்திக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மகளைத் தத்தெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மகள் யார்? அவர் கோச்ரப் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவுடன், கஸ்தூரிபா உட்பட ஆசிரமவாசிகள் அவர…

  18. 'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பிரதமர் மோதி 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் பிரதமர் மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என்று வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோதியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் சனிக்கிழமை (ஜனவரி 31) குற்றம் சாட்டியது. காங்கிரஸ் தலைவர் பவன் கேரா சமூக ஊடகத் தளமான …

  19. இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு! அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இந்திய ரூபாவின் பெறுமதியானது இன்று (29) வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அதன்படி அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி இன்று காலை 92 ஆக காணப்பட்டது. பலவீனமான வெளிநாட்டு மூலதன ஓட்டம் மற்றும் டொலர் தேவையில் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த நிலை ஏற்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான முதல் கொள்கை முடிவின் முடிவில் விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, டொலர் குறியீடு அதன் 4-1/2 ஆண்டு குறைந்த அளவிலிருந்து உயர்ந்த பின்னர் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு இதுவரை, ரூபாய் மதிப்பு 2% சரிந்துள்ளது. அமெரிக்…

    • 2 replies
    • 200 views
  20. விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு! தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் (Ajit Pawar) இன்று (28) காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பவாரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தரையிறங்கும் முயற்சியின் போது பாராமதி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக நான்கு முக்கியமான பொதுக் கூட்டங்களில் பவார் கலந்து கொள்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக தகவல்…

  21. இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி - இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 05:05 PM இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் வைத்தியசாலைப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பழம் தின்னும் வௌவால்கள் (Fruit Bats) மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவி…

  22. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்! இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Deal) இறுதி செய்துள்ளன. இது இந்தியாவின் பரந்த சந்தையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் திறந்துவிடுவதுடன், உலகப் பொருளாதாரத்தில் சுமார் கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்குகிறது. பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஓன்றிய தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா ஆகியோர் டெ…

  23. இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா! இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது. புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை தாங்குவார். இந்த முக்கியமான நிகழ்வில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்டிரபதி பவனில் இருந்து தேச…

  24. பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு. பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா வீதியில் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யப்படும் கடைகள் உட்பட கட்டிடத்தின் 03 தளங்களிலும் தீ பரவியது. இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான பொலிஸ் திணைக்கள டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா தெரிவிக்கையில், ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர 03 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தது. ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக…

  25. ‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது! 21 Jan, 2026 | 11:34 AM இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வளர்த்து நட்பை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இயங்குநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘EX – DOSTI – XVII …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.