அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியில், பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்… October 2, 2019 ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். அதன்போது, காஷ்மீரில் தற்போது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டும் முயற்ச…
-
- 0 replies
- 358 views
-
-
இந்தியாவில் தொடரும் அடை மழையால் 110 பேர் உயிரிழப்பு! இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்து வரும் அடை மழையினால் உண்டான வெள்ளப் பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களில் சிக்கி மொத்தமாக 110 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி பீகாரில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 23 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 35 பேரும் உயிரிழந்துள்ளளதுடன் மொத்தமாக நாடு முழுவதும் 4 நாட்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் தலைநகர் பாட்னா, பாகல்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தது, சுவர் இடிந்து விழுந்தது உட்பட மழை தொடர்பான …
-
- 0 replies
- 303 views
-
-
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" புறநானூறு பாடலை பாடி அசத்திய மோடி !! ஐ.நா. அவையில் அதிரடி உரை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 130 கோடி இந்தியர்களின் சார்பாக பேசுவதாகக் கூறிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தம்மை தேர்ந்தெடுத்ததால், ஐ.நா.சபையில் பேச வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். அப்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களுக்கான மிகப்பெரிய மருத்துவ திட்டங்களை, தமது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், 2025ம் ஆண்டுக்குள், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ளத…
-
- 2 replies
- 457 views
-
-
காஷ்மீர் விவகாரம் : இம்ரான்கானின் கருத்தால் போர்கப்பலை நிறுத்தியுள்ளது இந்தியா! காஷ்மீர் விவகாரம் போருக்குத்தான் இட்டுச்செல்லும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள நிலையில், அரபிக்கடல் பகுதியில் இந்தியா தனது போர்கப்பலை தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பல்வேறு முறைகளில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் தோல்வியை தழுவவே பயங்கரவாதிகளை கொண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தி…
-
- 0 replies
- 373 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 2 replies
- 391 views
-
-
பஞ்சாப்புக்குள் பறந்து வந்து விழும், ஏ.கே.47 துப்பாக்கிகள்.. பாகிஸ்தான் அட்டூழியம் ட்ரோன்களின் உதவியுடன் பாகிஸ்தான் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் இந்திய எல்லைக்குள் வீசிச் செல்கிறது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட மெகா பயிற்சி, இந்தியஎல்லையில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இருந்தது. பல ரோந்துப் பணிகளை ஏற்பாடு செய்யப்பட்டு எல்லை கண்காணிக்கப்பட்டது.இந்த சோதனையின்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்கள் மூலம் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏராளமான ஏ.கே .47 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் தூக்கிப் போடப்பட்டதாக, பஞ்சாப் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாத தொடக்கத்தில் இதுபோன்ற 8 சம்பவங்கள…
-
- 1 reply
- 545 views
-
-
பாகிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு – டெல்லியிலும் அதிர்வு கிழக்கு பாகிஸ்தானில் உணரப்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதேவேளை, குறித்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் உள்ள மிர்பூருக்கு அருகே 10 கி.மீ. ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும், மிர்பூர் பிராந்தியம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் முதன்மை வானிலை அலுவலர் முகம்மது ஹனீஃப் தெரிவித்…
-
- 0 replies
- 166 views
-
-
பிணை வழங்கினால் வெளிநாடு செல்லமாட்டேன் – பா.சிதம்பரம் பிணை வழங்கினால் வெளிநாடு செல்லமாட்டேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் விளக்க மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பா.சிதம்பரத்திற்கு பிணை வழங்க கூடாது என சி.பி.ஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பா.சிதம்பரம் விளக்க மனுவொன்றை அளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது குறித்த விளக்கமனுவை பா.சிதம்பரம் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், நான் பொறுப்புமிக்க குடிமகன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். வெளிநாடு சென்று தப்பி விடுவேன் என சி.ப…
-
- 0 replies
- 254 views
-
-
ஆப்கானிஸ்தானில் கூட்டுப் படையினரின் தாக்குதலில் திருமண இல்லத்திலிருந்த 40 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்தில் அரச படைகள் உள்ளிட்ட கூட்டுப்படையினர் பயங்கரவாதிகளை குறிவைத்து மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் திருமண இல்லத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் நேற்று (திங்கட்கிழமை) செய்தி வௌியிட்டிருந்தன ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மையில் மேலோங்கியுள்ள நிலையில், தற்கொலைத் தாக்குதல்களும், குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. அதேவ…
-
- 0 replies
- 261 views
-
-
திகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு. டெல்லி திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தனர். ஐஎன்எக்ஸ் நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குடும்பத்தார் அவ்வப்போது சந்தித்து பேசிவருகிறார்கள்.இன்று, கார்த்தி சிதம்பரம் திகார் சிறைக்கு சென்றபோது அவருடன் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சிதம்பரத்தை சந்தித்து பேசி நலம் விசாரித்து வருகிறார்கள். கடந்த 5ம் தே…
-
- 2 replies
- 431 views
-
-
காஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 338 views
-
-
பாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தித்தில் உள்ள நகரொன்றுக்கு சென்ற பஸ்ஸில் 50 பயணிகள் பயணித்துள்ளனர். பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுபாட்டை இழந்த பஸ், சாலையின் அருகில் உள்ள மலையில் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தில் பொதுமக்கள் உற்பட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு கடந்த மாதம் இவ்வாறான பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://…
-
- 0 replies
- 318 views
-
-
ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததற்கு நேருதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மும்பையில் பிரசார கூட்டம் ஒன்றில் அமித் ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது- காஷ்மீரில் சில இடங்களை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு நேருதான் காரணம். 1947-ல் அவர் நேரம் காலம் தெரியாமல் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு வழி செய்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால், அதற்கு முன்பாக படேல் கையில் எடுத்த அனைத்த…
-
- 0 replies
- 293 views
-
-
6 மாதங்களில் 1300 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: பாகிஸ்தானில் கொடூரம் பாகிஸ்தானில் கடந்த ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 6 மாத காலத்தில் மட்டும் 1300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு மீது காஷ்மீரைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் குறித்து அதிக கவனம் செலுத்திவருவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் அதேவேளையில் இன்னொரு பக்கம் மக்களிடம் வறுமை, வேலையின்மை உள்ளிட்ட ஆட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாகிஸ்தானில் குந்தைகளு…
-
- 0 replies
- 286 views
-
-
பாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது… September 20, 2019 பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது. முறைப்பாடு அளித்த மாணவியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல…
-
- 0 replies
- 255 views
-
-
கீழடி ஆய்வு முடிவுகளால் இந்திய வரலாற்றை தமிழ்நாட்டிலிருந்துதான் இனி பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ''தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது, தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. தமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம…
-
- 0 replies
- 294 views
-
-
(ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில் பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள் படை வீரர்கள் சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தே…
-
- 0 replies
- 276 views
-
-
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது. Image caption பினாங்கு ராமசாமி இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புபவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார். துணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்…
-
- 0 replies
- 292 views
-
-
இந்தியா உருவாக்கி வரும் விமானந்தாங்கி கப்பலான விக்ராந்தில் பொருத்தப்பட்டிருந்த மிக முக்கியமான டிஜிட்டல் சாதனம் மாயமான சம்பவம் இந்திய பாதுகாப்பு துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விமானந்தாங்கி கப்பலில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் சாதனமே காணாமல் போயுள்ளது. 2009 முதல் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நான்கு கணணிகள் மற்றும் முக்கிய பொருட்கள் காணாமல்போயுள்ளனஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கப்பல்களின் வடிவமைப்பு விமானங்கள் எந்த பகுதிகளில் இறங்கவேண்டும் எங்கு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் போன்ற விபரங்கள் அடங்கிய ஹார்ட்டிஸ…
-
- 1 reply
- 500 views
-
-
அயோத்தி வழக்கின் வாதங்களை நிறைவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் காலக்கெடு அயோத்தி வழக்கின் வாதங்களை எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதி- ராமர் ஜென்ம பூமி தொடர்புடைய 2.77 ஏக்கர் அயோத்தி நிலம் குறித்த வழக்கு இன்று 26ஆவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவுக்கு கொண்டுவர வேண்டுமென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். அந்தவகையில், எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக விசாரணையை முடித்து தலைமை நீதிப…
-
- 0 replies
- 177 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும்போது தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம்தேதி முதல் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பர் 27-ம்தேதி வரையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது விமானம் பாகிஸ்தான் வழியே அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. இந்த நிலையில், இந்தியா உடனான உறவில் பாகிஸ்தான் விரிசலை ஏற்படுத்தி இருப்பதால், மோடி அமெரிக்க செல்வதற்கு தங்கள் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 320 views
-
-
பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா நேற்று முன்தினம் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்…
-
- 3 replies
- 650 views
-
-
புதுடெல்லி: இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைத்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என கூறியுள்ளார். 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது என தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பற்று இருந்தன என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: உள்துறை அமைச்சர் அமித்ஷா-வின் கருத்தை மிக மிக வன்மையாக கண்…
-
- 1 reply
- 489 views
-
-
மோடியா, சோனியாவா? மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியத் தேர்தல் களம் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:44 பொருளாதார தேக்க நிலைமை பற்றி, அகில இந்திய அளவில், போராட்ட அழைப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. மாநிலங்களின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து விவாதித்துள்ள சோனியா காந்தி, இது தொடர்பாகக் காங்கிரஸ் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று, கட்டளை பிறப்பித்திருக்கிறார். நாள்கள் நகர நகர, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டும், கடுமையான பிரசாரத்தில் ஈடுபடும் பரபரப்பான காட்சிகள், ‘வெள்ளித்திரை’யில் காணலாம் என்பது போல், தற்போது தேசிய அளவில், அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சோனியா காந்தி தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற…
-
- 1 reply
- 590 views
-
-
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர் இவ்வாறாகக் கூறினார். வெளியுறவுத் துறையின் 100 நாள் சாதனைகளை அவர் விளக்கினார். அப்போது பேசிய அவர், "நமது அண்டை நாடு இயல்பான நி…
-
- 4 replies
- 752 views
- 1 follower
-