Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விலங்குகள் போல அடைக்கப்பட்டுள்ளோம்- காஸ்மீரின் முன்னாள் முதல்வரின் மகள் காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர் என மாநிலத்தி;ன் முன்னாள் முதல்வர் மெஹ்மூபா முவ்டியின் மகள் இல்ட்டிஜா ஜாவேட் இந்திய உள்துறை அமைச்சர் அமிட் சாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேதனை வெளியிட்டுள்ளார். இந்திய உள்துறை அமைச்சரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் கைதுசெய்யப்பட்ட பின்னர் நான் வீட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் என முன்னாள் முதல்வரின் மகள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏனைய பகுதிகள் சுதந்திரதினத்தை கொண்டாடும் இந…

  2. காஷ்மீர் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் இந்தியாவிற்கு சாதகமான சூழல்! காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவிற்கு சாதகமான சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்யும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. குறித்த ஆலோசனை கூட்டத்தில் 15 பேர் கொண்ட குழு இடப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ. நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் மீதமுள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச…

  3. இந்தியாவின் சுதந்திர தினத்தை பாக்கிஸ்தான் கரிநாளாக கடைப்பிடித்துள்ளது. காஸ்மீர் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகளிற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவே பாக்கிஸ்தான் இந்திய சுதந்திரத்தை கரிநாளாக கடைப்பிடித்துள்ளது. பாக்கிஸ்தான் அரச கட்டிடங்களில் அந்த நாட்டின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்ற அதேவேளை பிரதமர் இம்ரான்கான் தனது சமூக ஊடக படங்களை கறுப்பு பின்னணியில் பதிவு செய்துள்ளார். பாக்கிஸ்தானின் பத்திரிகைகளிலும் இதனை காணமுடிகின்றது. இதேவேளை பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் காஸ்மீரின் முசாபராபாத் நகரில் தீவிரவாதிகளின் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது ஹிஸ்புல்முஜாகிதீன் அமைப்பினர் இந்த பேரணியை ஏற்பாடு செய்தி…

    • 0 replies
    • 383 views
  4. காஷ்மீரின் உரி மற்றும் ராஜோரி பகுதியில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய இராணுவ வீரர்கள் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையிலேயே மேற்படி பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/62745

    • 0 replies
    • 283 views
  5. இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி என்பது இந்தியர்களின் வாழ்விலும், நினைவிலும் நிலைக்கும் புதிய இந்தியாவின் உதய நாள் ஆகும். இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள், ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனலாம். இருநூறு ஆண்டுகளாக, சொந்த நாட்டிலேயே அந்நிய தேசத்தவரான வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்ட…

    • 3 replies
    • 1.1k views
  6. காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் ஏற்படுத்த நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி தருவோம். 18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும். ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்…

  7. கேரளத்தைப் புரட்டிப்போட்ட கனமழை… தமிழில் ட்வீட் செய்து உதவிகோரும் பினராயி விஜயன்! தமிழகத்தில் இருக்கும் மக்களின் கவனத்தப் பெற தமிழில் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார் என்பது தெரிகிறது. கேரளாவில் பெய்த கனமழையால், அந்த மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கனமழை காரணமாக 95 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பொருளுதவி தேவைப்படும் நிலையில் கேரள மாநிலம் இருக்கிறது. இதையொட்டி, உதவி கோரும் நோக்கில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன். …

    • 0 replies
    • 840 views
  8. சோபன் சாட்டர்ஜி 2 முறை கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார். மம்தாவின் நம்பிக்கைக்குரியவரான அவர், சிறு வயது முதலே திரிணாமூல் காங்கிரசில் பணியாற்றி வந்தார். மம்தாவின் வலது கரமாக இருந்து வந்த கொல்கத்தா முன்னாள் மேயர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆட்சி இல்லாத மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பணியில் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர். இதன் விளைவாக 2014 மக்களவை தேர்தலின்போது 2 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்த பாஜக, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 18 தொகுதிகளில் வென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக…

    • 0 replies
    • 474 views
  9. டெல்லி: காஷ்மீர் மக்களிடம், துப்பாக்கி இல்லாமல் உரையாடவே ராணுவம் விரும்புகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், அதேபோல் லடாக் பகுதியை பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு நிலவி வருகிற…

    • 0 replies
    • 337 views
  10. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் காஷ்மீர் சிறப்புச் சட்டப்பிரிவு 370 பற்றி நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ``சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A-வை ஆயுதமாகப் பயன்படுத்தி காஷ்மீரில் உள்ள மக்களின் மனதில் எதிர்ப்பை விதைக்கப் பாகிஸ்தான் முயற்சி செய்யும். சட்டப்பிரிவு நீக்கத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆனால் பிரிவினைவாதம், பயங்கரவாதம், ஊழல் போன்றவை முற்றிலும் தடுக்கப்படும்” எனப் பேசியிருந்தார். …

    • 0 replies
    • 538 views
  11. இந்தியாவில் காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்காது என வைகோ நேற்றைய தினம் பேட்டியளித்தது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. இன்றைய தினம் சமூக வலைதளங்களில் அவரது கருத்து விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை ரஜினி வரவேற்றிக்கிறார். தலை வணங்குவதாகவும் கூறியிருக்கிறார் மோதியும் அமித்ஷாவும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் போல எனக் கூறியிருக்கிறார் இது குறித்து உங்கள் கருத்து என்ன செய்தியாளர்கள் வைகோவிடம் நேற்றைய தினம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த வைகோ, '' காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரை நான் 30 சதவீதம் காங்கிரசை தாக்கியிருக்கிறேன். 70 சதவீதம் பாஜகவை தாக்கியிருக்கிறேன். காஷ்மீர் இந்தியாவில் இருக்காது. இந்தியாவின் சுதந்திரத்தை நூறாவது ஆண்டு கொண்டாடும்போது காஷ்…

    • 0 replies
    • 288 views
  12. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்திய நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீரில் போராட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று வீதிகளில் திரண்ட நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் காவல்துறை ஒரு புல்லட்டைக்கூட சுடுவதற்காக பயன்படுத்தவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான மற்றும் உள்நோக்கங்களைக் கொண்ட செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் வேண்டுகோள் விடுப்பதா…

    • 4 replies
    • 949 views
  13. காஷ்மீர் விவகாரத்தில் சீனா அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அமைப்பதற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச அரங்கில் இந்த விவகாரத்தை எழுப்பியது. இதேபோன்று சீனாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக லடாக் பிரதேசம் சீன எல்லையை ஒட்டி வருகிறது. இதனை யூனியன் பிரதேசமாக மாற்றுவதில் சீனாவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது. இதுபற்றி சீனா கருத்து தெரி…

    • 0 replies
    • 318 views
  14. கேரள நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் உடல்கள் மீட்பு August 11, 2019 கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டுள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 8ம் திகதி மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கியிருந்த நிலையில் மோசமான காலநிலை காரணமாக குமீட்பு பணிகளில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த 9 பேர் …

  15. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு? காங்கிரஸ் காரிய குழு கூட்டத்தில் அக்கட்சிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகின்றது. டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் குறித்த குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தமையினால் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனாலும் இராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் பலர் கூறியும் ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென கூறப்படுகின்றது. மேலும் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வாகலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்…

  16. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. குடியரசு தலைவர் ஒப்புதல். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கி குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.சட்டப்பிரிவு 370ன்கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இதனால் ரத்தாகிறது. குடியரசுத் தலைவரும் உடனடியாக சட்டப்பிரிவு 370ஐ நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த அதிரடி மற்றும் அவசர நடவடிக்கைகளை பார்த்தால் மீண்டும் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழ்ந…

  17. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘பாகிஸ்தான், சீனா பிடியில் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீரையும் உயிரை கொடுத்தாவது மீட்போம்’ என சூளூரைத்தார். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியும், ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக இம்மாநிலத்தை பிரிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான தீர்மானமும், காஷ்மீர் மறுவரையறை சட்ட மசோதாவ…

  18. தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு மாகாணங்களில் இந்த நிலைமை இருக்கிறது. இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் பிரிவு செய்தியாளர் நவீன் சிங் காட்கா பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஹரியானா மாநிலத்தில் தரோடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் காரணத்துடன் கூடிய கோபம் காணப்பட்டது. ஹரியானா மாநிலத்தில…

    • 0 replies
    • 206 views
  19. காஷ்மீர் விவகாரம் ; பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என போர்க் கப்பல்கள் ஆயத்தபடுத்திய இந்தியா ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்பதற்காக இந்திய கடற்படையினர் போர்க் கப்பல்களை கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் எச்சரிக்கையுடன் நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளனர். அப் பகுதியின் நிலைமை அமைதியாக இருந்தபோதிலும், எந்தவொரு அசம்பாவித நடவடிக்கைகளும் இடம்பெறாமல் தடுப்பதற்கே இவ்வாறு பாதுகாப்பு படையினர் கடைமையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை காஷ்மீர் வி…

  20. காஷ்மீரில் இணையதள முடக்கத்தை மீறி தகவல் பரிமாற்றம் நடப்பது எப்படி? 8 ஆகஸ்ட் 2019 இ இணைய சேவை தடை செய்யப்படும் நேரத்திலும் தகவல் தொடர்பு செய்வதற்கு, சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டுமென காஷ்மீர் ஜிகாதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இணைய சேவை முற்றிலும் தடை செய்யப்படும்போது, அதிலிருந்து தப்பித்து தொடர்புகொள்வதற்கான முயற்சி இதுவாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவைக்கு தடை…

  21. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதன் வரத்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானின் மருத்துவ பட்டப்படிப்பு தரமானதாக இல்லையென கூறி அதன் அங்கிகாரத்தை சவுதி அரேபிய சுகாதாரத்துறை அமைச்சகம் இரத்து செய்துள்ளது. இது தொடர்பில் சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லையென தெரிவித்துள்ளது. மேலும் M.S மற்றும் M.D படித்துவிட்டு சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தததை இரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது. சவுதி அரேபிய அரசின் இந்த அதிரடி முடிவின் கார…

    • 0 replies
    • 650 views
  22. இஸ்லாமாபாத்: காஷ்மீரில் இந்துக்களை குடியேற்றி, முஸ்லிம்களை சிறுபான்மையாக்க இந்தியா முயற்சிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்தை பாகிஸ்தான் பிரதமர் தடுத்து நிறுத்துவார் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப…

    • 0 replies
    • 240 views
  23. ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசிய பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு தலீபான் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை இந்திய மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. மேலும், சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷென்பாஸ் ஷெரீப் கடந்த சில…

    • 0 replies
    • 276 views
  24. இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட தடை! காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்துள்ள அதிரடி தீர்மானங்களின் காரணமாக இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தானிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையின் காரணமாக இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாகவும், தூதரக உறவை குறைத்துக் கொள்வதாகவும் பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 ஆண்டுகளாக இந்திய திரைப்படங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீக்கியது. இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தின் காரணமாக இந்திய திரைப்படங்கள் மீது பாகிஸ்தா…

  25. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்து, அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் இந்த உரையை நிகழ்த்தினார் அவர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், லடாக் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் பேசத் தொடங்கினார். கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ் முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ் "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகளின் பல உரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.