அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 25 டிசம்பர் 2023 தொலைத்தொடர்பு சேவைகளுக்கு என 138 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த இந்திய தந்திச் சட்டம்-1885, இந்திய கம்பியில்லா தந்திச் சட்டம்-1933 மற்றும் தந்தி கம்பிகள் (சட்டவிரோத உடமை) சட்டம்-1950 என மூன்று சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, பல்வேறு புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதா-2023-ஐ மக்களவையில் டிச. 20-ஆம் தேதியும் மாநிலங்களவையில் 21-ஆம் தேதியும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் தொலைத்தொடர்பு சேவை முழுவதையும் மத்திய அரசே தற்காலிகமாக கையக…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
இந்தியாவை வதைக்கும் கொரோனா: இருவர் உயிரிழப்பு – 125 பேர் பாதிப்பு உலகை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்றுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் இருவர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் …
-
- 0 replies
- 203 views
-
-
31 JAN, 2024 | 12:20 PM சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் நேற்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கோப்ரா எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவராவார். மேலும் இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா - பிஜாபூர் மாவட்ட எல்லையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2021-ல் நடந்த தாக்குதலில் 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நேற்றைய தாக்குதலும் அதே இடத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தது. …
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
இந்தியா முழுவதும் இன்று முதல் பூஸ்டர் டோஸ்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு! நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்கான முன்பதிவு நேற்று முன்தினமே ஆரம்பிக்கப்பட நிலையில், கோ-வின் இணையத்தளம் மூலமாக தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது டோஸின் போது போடப்பட்ட அதே தடுப்பூசிதான் மூன்றாவது டோஸாகவும் போடப்படும் எனவும், இதில் கலப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 203 views
-
-
பட மூலாதாரம்,TWITTER/PRIMEVIDEO கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெய்தீப் வசந்த் பதவி,பிபிசி குஜராத்திக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் ஷக்ரே கலீலி… பெங்களூரில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த பெண். இவரின் தாத்தா சர் மிர்சா இஸ்மாயில், 1926- 41 வரை மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர். அவர் தனது பேத்திக்கு, இந்திய அயலக பணியில் (ஐஎஃப்எஸ்) உயரதிகாரியாக பணியாற்றி வந்த அக்பர் கலீலியை மணம் செய்து வைத்தார். அக்பர் -ஷக்ரே தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்த நிலையில், தனக்கு ஓர் மகன் பிறக்க வேண்டும் என்ற ஆவல் ஷக்ரே மனத்தில் மேலோங்கி இருந்தது. சுவாமியின் வருகை அந்த நேரத்…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்; மாகாண சபை முறைமையையே எதிர்க்கிறேன் : அமைச்சர் சரத் வீரசேகர நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்.,வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் புதிதாகஅமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை நேற்று திறந்து வைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதேஅவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்காக நான் வந்துள்ளேன். மல்லாவி மற்றும் மருதங்கேணிப் பகுதிகளில் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இரண்டு ப…
-
- 0 replies
- 202 views
-
-
பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவுக்கு 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. ராணுவ பயன்பாட்டிற்காக இ…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
கொரோனாவால் வேலையிழந்தவர் இன்று லட்சத்தில் வருமானம் ஈட்டுகிறார்: யார் இந்த இசாக் முண்டா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISAK MUNDA படக்குறிப்பு, ஐசக் முண்டா ஒரிசாவைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளி இசாக் முண்டா. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் இருந்தவர், பின் யூட்யூப்சேனல் ஆரம்பித்து வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்து யூட்யூப் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது முதல் வீடியோவைப் பதிவிட்ட இசாக் முண்டாவுக்கு அந்த சமயத்தில் எந்த ஆதரவும் இல்லை. ஓரிசாவைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில், ஒரு தினக்கூலியாக பணிபுரிந்து வந்த இசாக், கொரோனா ஊரடங்கு க…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
ஆக்கஸ் கூட்டமைப்பில்... இந்தியா, இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது- அமெரிக்கா திட்டவட்டம்! ஆக்கஸ் கூட்டமைப்பில் இந்தியா இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் – தொடர்புத் துறை அமைச்சர் ஜென் சாகி, ‘இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. வெறும் அடையாளத்திற்காக மட்டும் ஆக்கஸ் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அந்த புதிய கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட வேறு எந்த நாடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது’…
-
- 0 replies
- 202 views
-
-
ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை! மகாராஷ்ராவின் , ஔரங்கபாத் நகரில் உள்ளமுகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுமாறு இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்த விவகாரம் பாரிய பூதாகாரமாக வெடித்துள்ளது நிலையில் நேற்றைய தினம் நாக்பூரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிர முதல்வரும் பா.ஜ.க தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், “ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தமை” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் இந்திய ரூபாய் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பொன்றும் அறிவித்திருந்தமை பெரும் பரபரப்பை …
-
- 0 replies
- 202 views
-
-
பாகிஸ்தான் குண்டு வெடிப்பை 'இந்தியா ஆதரிக்கும் குழு நடத்தியது' - ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images 11 நவம்பர் 2025, 13:08 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார். "நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்பட…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்? – பகுதி 1 13 May 2025, 6:52 PM 2025ஆம் ஆண்டு (ஆராய்ச்சிக்காக ஒரு கற்பனை), பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குகிறார்கள். டிசம்பர் 2001இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த முறை தாக்குதல்களில் இந்திய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி 2002இல் நடந்ததுபோல, இரு தரப்பினரும் நாடுகளுக்கு இடையிலான எல்லையிலும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் தங்கள் படைகளைத் திரட்டி நிறுத்துகிறார்கள். இரு பக்கமும் நிலவும் அதீதப் பதற்றங்கள் காரணமாக மோதல்கள் வெடிக்கின்றன. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள். இந்திய அரசாங்…
-
- 2 replies
- 202 views
-
-
இஸ்லாமுக்கு ஆபத்து என்பதால் நாளந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதா? பட மூலாதாரம்,IMAGEBROKER/ALIYAH கட்டுரை தகவல் எழுதியவர்,சுகத் முகர்ஜி பதவி,பி பி சி ட்ராவல்ஸுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு குளிர்காலக் காலையில் அடர்ந்த பனிமூட்டம் படர்ந்திருந்தது. குதிரை வண்டிகளை முந்திக்கொண்டு எங்கள் கார் மெதுவாக முன்னேறியது. பிஹாரில் இன்னும் குதிரை வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. வண்டியை இழுக்கும் குதிரையும் அதன் பின்னால் தலைப்பாகை அணிந்த வண்டிக்காரரும் மூடுபனியில் நிழல்கள் போல் தெரிகிறது. இருப்பினும், புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் ஒரு இரவைக் கழித்துவிட்டு, அதிக…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இந்தியாவில் புதிய ஐபோனை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம் அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-14 ஐ இந்தியாவில் தயாரிக்கத் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் சீனாவிலிருந்தான அதன் விநியோகச் சங்கிலியை மாற்றவுள்ளது. அப்பிள் நிறுவனமானது, தனது பெரும்பாலான தொலைபேசிகளை சீனாவில் தயாரிக்கிறது. ஆனால் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால் சில உற்பத்திகளை சீனாவுக்கு வெளியே மாற்றுவதற்கு அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் பரவலான முடக்கத்தினை ஏற்படுத்திய பூச்சிய கொரோனா கொள்கைகள், அந்நாட்டின் வணிகங்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அப்பிள் நிறுவமானது, தனது புதிய ‘ஐபோன…
-
- 0 replies
- 202 views
-
-
பிராந்தியத்தில் சீனா... அமைதியை சீர்குலைத்தால், உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் – ஜெய்சங்கர். பிராந்தியத்தில் சீனா, அமைதியை சீர்குலைத்தால், அது உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லையில் இணக்கமற்ற சூழல் நிலவும் வரையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இயல்பாக இருக்காது என்றும் அவர் கூறினார். சீனா உடனான இந்தியாவின் உறவு சீராக இல்லாதமைக்கு, எல்லை பிரச்னைதான் காரணம் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். இதவேளை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக ஒரு நாடு செயற்பட்டு வருகிறது என ஜெய்ச…
-
- 0 replies
- 201 views
-
-
இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு! அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இந்திய ரூபாவின் பெறுமதியானது இன்று (29) வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அதன்படி அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி இன்று காலை 92 ஆக காணப்பட்டது. பலவீனமான வெளிநாட்டு மூலதன ஓட்டம் மற்றும் டொலர் தேவையில் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த நிலை ஏற்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான முதல் கொள்கை முடிவின் முடிவில் விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, டொலர் குறியீடு அதன் 4-1/2 ஆண்டு குறைந்த அளவிலிருந்து உயர்ந்த பின்னர் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு இதுவரை, ரூபாய் மதிப்பு 2% சரிந்துள்ளது. அமெரிக்…
-
- 2 replies
- 201 views
-
-
பெங்களூரூ வெள்ளம்: ஐ.டி. தலைநகர் நீரில் மூழ்கியபோது குடும்பங்கள் உதவிக்கு போராடியது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த வாரம் பெங்களூரூ நகரில் பெய்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத்துறையின் தலைநகரமாக விளங்கும் பெங்களூரூவில், சமீபத்தில் பெய்த பருவமழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்மட்டம் உயர்ந்ததால் வீடுகளில் சிக்குண்ட குடும்பங்கள் உதவிக்காக போராடியது குறித்து செய்தியாளர் ருத்ரனேல் சென்குப்தா விவரிக்கிறார். செப்டம்பர் 5 ஆம் தேதி மாலையில், ருச்சே மிட்டலும், அவரது கணவர் மனீஷும் மழை…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
அமெரிக்க உளவுத்துறை கொடுத்த வார்னிங்.. அப்படியே நடந்தது.. இந்தியாவிற்குள் கொரோனா வந்தது எப்படி? இந்தியாவில் கொரோனா வைரஸ் தீடீர் என்று வேகம் எடுத்துள்ளது. அதேபோல் உலகம் முழுக்க 80 நாடுகளில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க உளவுத்துறை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உளவுத்துறை இந்த எச்சரிக்கையையே விடுத்து இருந்தது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு உளவுத்துறை அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்தது.இந்தியா மீது அமெரிக்க உளவுத்துற…
-
- 0 replies
- 201 views
-
-
இந்தியாவில்... மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த, பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை! தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து பண்டிகைகாலங்கள் வரவுள்ளதால் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தாக்குல் நடத்தும் திட்டத்துடன் எல்லைப் பகுதியில் ஊடுருவிய பயங்…
-
- 0 replies
- 201 views
-
-
உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப் பொருட்களை குறைவான விலையில் இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த நற்பெயருக்கு களங்கள் ஏற்படும் வகையில், விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்திய மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதில், பாதிப்புக்கு உள்ளான தேசங்கள் முதல் உலக சுகாதார அமைப்பு வரை இந்திய மருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது. …
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
இந்தியாவில்... பணம் படைத்தவர்களின், எண்ணிக்கை அதிகரிப்பு! இந்தியாவில் பணம் படைத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் மாத்திரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவில் சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையில், 3 கோடி டொலர் மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை பெரும் பணக்காரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்…
-
- 0 replies
- 201 views
-
-
உக்ரைனின்... புச்சா நகரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான, விசாரணைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு! உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா படுகொலை தொடர்பான விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளது. இது குறித்து ஐ.நாவில் பேசிய இந்திய தூதர் திருமூர்த்தி, “ உக்ரைனில் பொதுமக்கள் மீதான தாக்குதல் கவலையளிப்பதாகவும், புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், புச்சா படுகொலை தொடர்பான விசாரணைக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் ப…
-
- 1 reply
- 201 views
-
-
ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறதா இந்தியா? இதனால் என்ன ஆகும்? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள, வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டிலிருந்து தலைநகர் டெல்லி வரை ஓடியிருக்கிறார், 23 வயதான இளைஞர் சுரேஷ் பிச்சார். இந்த 350 கி.மீ. தூர ஓட்டத்தின்போது அவர் தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். ராணுவத்தில் சேர்வது தான் தன்னுடைய "விருப்பம்" எனக் கூறும் அவர், ஆனால், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கடந்த இரண்ட…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
16 MAY, 2025 | 03:44 PM புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் ஒன்றான குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில்உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர்தான். முழு படம் பின்னர் வெளிப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போ…
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
லடாக் விவகாரம் : சீனாவின் குற்றச்சாட்டை புறக்கணிக்கும் இந்தியா! கிழக்கு லடாக் பதற்றத்துக்கு இந்தியாதான் மூலக் காரணம் என சீனா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாடு உண்மைக்கு புறம்பானது என இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சீனாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும், இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து ஒப்பந்தங்களையும் மதிக்காமல், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் முந்தைய நிலையை தன்னிச்சையாக சீனா மாற்ற முயன்றதும், சீன பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளுமே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியான சூழல் பாதிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்தார். எல்லைப…
-
- 0 replies
- 200 views
-