Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கப்புலி (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை கொலை செய்து அந்த புலியின் உடல் பாகங்களை வெற்றிச் சின்னங்களாக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள துசிதிமுக் கிராமத்தில் ஓர் ஆண் ராயல் பெங்கால் புலியை (வங்கப்புலி) அப்பகுதியை சேர்ந்த 1,000 பேர் சேர்ந்து கொலை செய்து அதன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அந்த புலி கடந்த சில வாரங்களில் ஒருவரை தாக்கிக் …

  2. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2025, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். அவர் ராஜினாமா செய்திருப்பதை அவரது செயலகம் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அந்த அறிக்கை கூறுகிறது. தலைநகர் காத்மாண்டுவிலும், நேபாளம் முழுவதும் அதிகாலை முதல் போராட்டங்கள் நடந்தன. ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் வீடுகள் உட்பட பல மூத்த அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. நேபாளத்தில் …

  3. ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு April 10, 2025 11:50 am எதிர்வரும் மே மாதம் 9-ம் திகதி நடைபெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இரண்டாவது உலக போரில் ஜெர்மனியும் அப்போதைய சோவியத் யூனியனும் கடுமையாக மோதிக் கொண்டன. பின்னர் 1945-ம் ஆண்டு சோவியத் யூனியன் தாக்குதலை சமாளிக்க முடியாத ஜெர்மனியின் நாஜி படைகள் சரணடைந்தன. அதன்படி 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் திகதி பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார் என்று …

  4. இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு இருப்பது ஒமிக்ரான் திரிபு என்பது ஜெனோம் சீக்வன்சீங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது. கொரோனா வைரசில் ஏற்படும் மரபணுத் திரிபுகளை ஆராய்வதற்காக இந்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்திய இன்சாகாக் கன்சார்ட்டியம் (INSACOG consortium) மூலம் செயல்படுத்தப்படும் ஆய்வகம் இந்த ஜெனோம் சீக்வன்சீங் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெனோம் சீக்வன்சிங் என்பது ஓர் உயிரியின் மரபணுக் குறிப்புகள் முழு…

  5. கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு 9 பிப்ரவரி 2022, 06:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மலைப் பிளவில் சிக்கிய பாபு மலை இடுக்கு ஒன்றில் 40 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கிக்கொண்டிருந்த கேரள இளைஞர் இந்திய ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் கடந்த திங்கட்கிழமையன்று மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார்.இதனையடுத்து,…

  6. கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguard Diagnostics) என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனமும் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு இலட்சம் கிற்றுக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன்கார்ட் நிறுவனம், 3 வாரங்கள…

  7. உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர... இந்தியா, ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் – டொமினிக் ராப் உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர இந்தியா, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டொமினிக் ராப், ரஷ்யாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள இரு நாடுகளும், உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரான சீனாவும் உறுப்பினரான இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும் …

  8. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இராணுவ தளவாடங்களுக்கு தடை! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 108 இராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (திங்கட்கிழமை) ஒப்புதல் அளித்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறிய ரக போர் கப்பல்கள், பீரங்கி என்ஜின், ரேடார்கள் உள்ளிட்ட 108 இராணுவ தளவாடங்களுக்கான இரண்டாவது இறக்குமதி தடை பட்டியலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபாட்டுடன் பங…

  9. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா- பங்களாதேஷ் நட்புறவு புதிய உச்சத்தை தொடும் – பிரதமர் மோடி By VISHNU 10 SEP, 2022 | 03:39 PM பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காளியாகவும், இந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பங்களாதேஷ் உள்ளது. குஷியாரா நதிநீர்ப் பங்கீடு தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் இந்தியாவும் - பங்களாதே{ம் கையெழுத்திட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அனைவரும் இணைந்து பங்களாதேஷின் 50-வது சுதந்திரதினத்தையும், தூதரக உறவுகளின் பொன்விழாவையும், வங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை…

  10. மேகாலயாவில்... உயிரிழந்த, 877 பச்சிளம் குழந்தைகள் குறித்து மாநில அரசு விளக்கம்! கொரோனா உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் மேகாலயாவில் 877 பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்த 61 பெண்கள் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியது. இது குறித்து அம்மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. குறித்த அறிக்கையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. பாதிப்பு இல்லாதோருக்கான பிரிவில் சேர்க்க பரிசோதனை அவசியம். ஆனால் கர்ப்பிணியர் பலரும் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர். தடுப்பூசியையும் ஏற்கவில்லை. பிரசவ திகதிக்கு இரண்டு வா…

  11. 11 AUG, 2023 | 02:58 PM ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி, ‘ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை. இணைப்பின் போது அதன் இறையாண்மை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா்இணைப்பு அப்போதே முற்றிலும் முழுமையாகிவிட்டது. பிரிவு 370-ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட விவக…

  12. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது: பிரதமர் மோடி இந்தியாவில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த உதவியதாகபிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பும் 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “ஊரடங்கு தளர்த்த தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை …

  13. கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்தமையினால் 6 பேர் உயிரிழப்பு- பலர் கவலைக்கிடம்! கர்நாடகா- ஹூவினஹடகலி தாலுகாவிலுள்ள மகரப்பி கிராமத்தில், அசுத்தமான தண்ணீரை குடித்தமையினால், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும்போது, பழைய குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே குடிநீரைக் குடித்த பலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2021/1243149

  14. 03 JUN, 2025 | 01:30 PM காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில்இராணுவ முகாம் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை. சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலங்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி லாசென் லாசுங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களும் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு சிக…

  15. 29 SEP, 2024 | 09:57 AM பெங்களூரு: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக இந்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றுள்ளனர். தேர்தல் …

  16. பெகாஸஸ் உளவு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது! பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போது 2019 ஆம் ஆண்டு வெளியான உளவு விவகாரம் குறித்து கருத்து வெளியிடப்பட்டதுடன், இது குறித்து டெலிகிராப் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். அதேநேரம் பெகாஸஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது தீவிரமானதாக இருக்கும் எனவும் நீதிபதி கூறினார். இதனையடுத்து குறித்த வழக்…

  17. ஹிஜாப் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியீடு! ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக 11 நாட்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகவுள்ளது. அதேநேரம் பெங்களூரில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் காவல் துறை தடை விதித்துள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து …

  18. இந்தியப் பெருங்கடலில் மற்றொரு சீனக் கப்பல் ஆய்வு – உஷார் நிலையில் இந்தியா !! பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வியோன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவுக்குச் சொந்தமான இந்த நில அதிர்வு ஆய்வுக் கப்பல் டிசம்பர் 29ஆம் திக இரவு மலாக்கா வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் பங்களாதேஷ் உடன் தொடர்புடைய பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் சீனக் கப்பல் இந்திய கடற்படையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறுகிறது. …

  19. 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானம்! 5ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், சுயாதீனமாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ இந்த திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு…

  20. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையே! “நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக” மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதுவரை காலமும் நீட் நுழைவுத் தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளுமே நடக்கவில்லை என சாதித்து வந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தற்போது முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என …

  21. பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர் இந்தியாவில் குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகொப்டர் விழுந்தது நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மதியம் 12:10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகொ…

    • 0 replies
    • 150 views
  22. பங்களாதேஷ் சூறாவளியில் 30 க்கு மேற்பட்டோர் பலி By NANTHINI 26 OCT, 2022 | 03:20 PM பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி இதுவரை 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (ஒக் 24) பங்களாதேஷை தாக்கிய சிட்ராங் சூறாவளியால் 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகமானோர் உயிரிழந்தமைக்கு சூறாவளியால் மரங்கள் வீழ்ந்தமையே காரணம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மின்கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்ததால் சுமார் 80 இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்துள்ளனர். அத்துடன் 6,000 ஹெக்டேயர் (15,000 ஏக்கர்) பரப…

  23. ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளியேற ஆர்வம் உள்ளவர்கள் வணிக விமானங்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளது. https:…

  24. 23 SEP, 2023 | 09:42 AM (ஆர்.சேதுராமன்) சீனாவில் இன்று ஆரம்­ப­மாகும் 19 ஆவது ஆசிய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­ற­வி­ருந்த இந்­திய வீராங்­க­னைகள் மூவ­ருக்கு, அனு­மதி அட்­டையை வழங்க சீனா மறுத்­துள்­ளது. இதற்கு கடும் ஆட்­சேபம் தெரி­வித்­துள்ள இந்­திய அரசு, தனது விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரின் சீன விஜ­யத்தை இரத்துச் செய்­துள்­ளது. அரு­ணாச்­சலப் பிர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த, 'வூசு' தற்­காப்புக் கலை வீராங்­க­னைகள் மூவ­ருக்கே அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் தமது அனு­மதி அட்­டையை தர­வி­றக்கம் செய்­து­கொள்ள முடி­ய­வில்லை. இந்த அனு­மதி அட்­டையே ஆசிய விளை­யாட்டு விழா­வுக்­காக சீனா­வுக்குச் செல்­வ­தற்­கான விசா­வாக…

  25. 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் : அரசு அனுமதி. திபெத் பீட பூமியின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நடவடிக்கையானது சீனா அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகள் தனத கட்டுப்பாடடின் கீழ் இருப்பதாக கூறி பெயர் வைத்தமைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. திபெத் பகுதியைப் பற்றி நன்கு வரலாற்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் இந்த மறுபெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், இதற்கு டெல்லி அனுமதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் தொடர்பாக இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கேற்ப இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கான வரைபடங்களில் மா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.