அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3339 topics in this forum
-
பெங்களூரு விமானப்படைத்தளத்தில் பயங்கர தீவிபத்து – 300 கார்கள் எரிந்து அழிவு February 24, 2019 பெங்களூருவில், சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் 300 கார்கள் எரிந்துள்ளதுடன் கார்களில் இருந்த ஆவணங்களும் சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகின்ற நிலையில 4-வது நாளான நேற்று நடந்த விமான கண்காட்சியில் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன. விமான கண்காட்சியை காண சென்ற பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு விமானப்படை தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மதியம் 5…
-
- 0 replies
- 280 views
-
-
விமானம் மூலம் களமிறக்கப்பட்ட 10,000 இந்தியா வீரர்கள்.. காஷ்மீரில் பதற்றம்.. ஆளுநர் விளக்கம் என்ன? ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ படையினர் 10000 பேர் குவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காஷ்மீரில் மிகவும் பதட்டமான சூழ்நிலையை நிலவி வருகிறது. தற்போது இந்திய ராணுவப்படை அங்கு தொடர்ந்து அதிக அளவில் எல்லை அருகே குவிக்கப்பட்டு வருகிறது.மொத்தம் 10000 வீரர்கள் தற்போது காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையால் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். பாராமிலிட்டரி, சிஆர்பிஎப் உள்ளிட்…
-
- 0 replies
- 337 views
-
-
இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!- பாகிஸ்தான் இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு துறையான ஐ.எஸ்.ஐ சம்மந்தப்பட்டிருப்பதாக இந்திய இராணுவ தளபதி அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் ராவல்பிண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை. மேலும் இந்தியாவுடன் போர் புரிவதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்…
-
- 1 reply
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை RITUPALLAB SAIKIA Image caption சாராயம் அருந்தியபின் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில் குறைந்தது 99 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 200க்கும் மேலானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்களில் பெண்களும் அடக்கம். பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. …
-
- 1 reply
- 765 views
-
-
காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது February 23, 2019 ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான யாசின் மாலிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14ம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறையினரும் துணை ராணுவமும் இணைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்படும் பிரிவினைவாத சக்திகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன அத்துடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கான பாதுகாப்பையும் அரசு விலக்கிக்கொண்…
-
- 1 reply
- 447 views
-
-
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு, அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டுமா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. "ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ராணுவ ஜெனரல் விகே சிங் ஆகியோர் கூறியுள்ளனர். இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவு என்றால் என்ன? ஏன் இதில் இவ்வளவு சர்ச்சை? மற்றொர…
-
- 0 replies
- 320 views
-
-
இந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களுக்காக அமைதிக்கான ‘மகாத்மா காந்தி’ விருது தென்கொரிய அரசு சார்பில் வழங்கப்படுகின்றது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) தென்கொரியா சென்றடைந்த பிரதமர் சியோலில் உள்ள புகழ்பெற்ற யொன்சி (Yonsei) பல்கலைக்கழக்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் மற்றும் ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து பேசிய பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் 150ஆவது …
-
- 0 replies
- 525 views
-
-
ராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்? ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது’ என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி பயனியர், டெக்கான் கிரானிக்கில், தி ஆசியன் ஏஜ் மற்றும் ட்ரிபியூன் போன்ற முன்னணி ஊடகங்களில் அரசியல் மற்றும் புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றியவர். இதுவரை ராஜீவ் காந்தி கொலை குறித்து வந்த நூல்கள் யாவும் ஒன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு குறித்தோ, அல்லது SIT கார்த்திகேயன், ரகோத்தமன் போன்றவர்கள் தங்களின் புலனாய்வு குறித்தோ எழுதப்பட்டவை .ஆனால், இந்த நூல்தான் முதன்முறையாக புலனாய்வு, குற்ற…
-
- 6 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 640 views
-
-
மீண்டும் தாக்குதல் நடத்துவோம்:ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு Published by R. Kalaichelvan on 2019-02-21 11:44:36 புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. எனினும் கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் புல்வாமா பகுதியில் குறித்த அமைப்பினால் இந்திய துணை இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/50396
-
- 0 replies
- 360 views
-
-
பங்களாதேஸில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து – 69 பேர் பலி – பலர் காயம் February 21, 2019 பங்களாதேஸின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு இரசாயன சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 69 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறுகிய வீதிகளினூடாக தப்பிக்க முடியாமல் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்புத் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ள நிலையில் , இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 363 views
-
-
சென்னையில் 10 இடங்களில் BPO அலுவலகம் நடத்தி மோசடி, 300 டெலிகாலர்கள் மூலம் வங்கிப் பணம் வாரிச்சுருட்டல்
-
- 0 replies
- 525 views
-
-
படத்தின் காப்புரிமை Mikhail Klimentyev புல்வாமாவில் நடந்த தாக்குதளுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் ஆகியோர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்றும் அவர்கள் இது தொடர்பாக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பதில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, ''இது போன்…
-
- 5 replies
- 1k views
-
-
இந்தியா,பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் விடுக்கும் அறிவுரை காஷ்மீர் புல்வாமா மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்தியா,பாகிஸ்தான் இருத்தரப்பினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் ஆராயவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் மிகவும் கோரமான சம்பவம் என்றும், விரைவில் முறைப்படியான அறிக்கை வெளியிடுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில், இந்திய துணை இராணுவப் படையினர் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்…
-
- 0 replies
- 462 views
-
-
அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது February 20, 2019 ரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்து அபராதம் விதித்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஸ்டத்தில் திணறி வரும் நிலையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 1600 கோடி ரூபாயை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் திகதிக்குள் அந்தத் தொகையை வழங்கியிருக்க வேண்டும் என்ற போதிலும் அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்கவில்லை. இதையடுத்து அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதி…
-
- 0 replies
- 279 views
-
-
முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி February 20, 2019 முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை க் கூட்டம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற போது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதிநிறுவனங்கள், ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவை அனைத்து பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதி…
-
- 0 replies
- 270 views
-
-
இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டிப்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைமையை ஐ.நா கண்டித்துள்ளது. ஐ.நாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த ஐ.நா ஊடாக் பேச்சாளர் ஸ்டெப்பான் டுஜாரிக் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானே முழு காரணம் என இந்தியா தெரிவித்து வரும் நிலையில் அதனை பாகிஸ்தான் மறுத்து வருகின்றது. இந்த நிலையில், ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை தணிக்க ஐ.நாவின் தலையீடு அவசியம் என இரு நாடுகளும் கோரியிருந்தமை குறிப்பிடதக்கது. இதுகுறித்து ஐ.நா செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டரெஸ், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையி…
-
- 2 replies
- 374 views
-
-
இந்தியா – பாகிஸ்தான்: சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் சீனா வலியுறுத்தல் இந்தியாவும் – பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷூவாங் (Geng Shuang) தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷூவாங் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், “இந்தியாவும் – பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கியமான நாடுகள். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளிடையே நிலையான இருதரப்பு நல்லுறவு நிலவுவது அவசியம். தெற்கு ஆசியா கடைப்பிடித்து வரும் ஒ…
-
- 0 replies
- 705 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் (துணை காவல் படை) வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. …
-
- 4 replies
- 1.2k views
-
-
ராஜஸ்தானிலிருந்து, பாகிஸ்தானியர்கள்... வெளியேற 48 மணி நேர காலக்கெடு ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என குறித்த மாவட்ட ஆட்சியர் குமார் பால் கௌதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். புல்வாமாவில் கடந்த வாரம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்தே இந்த அதிரடியான உத்தரவை அவர் பிறப்பித்தார். அந்தவகையில், பிகானர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2 மாதங்கள் வரை செல்…
-
- 0 replies
- 386 views
-
-
இந்திய ராணுவ வீரரின் ஒரே அடியில் வெலவெலத்துப்போன மசூத் அசார்.. அதிகாரி வெளியிட்ட பரபர தகவல் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இந்திய ராணுவ வீரரிடம் கன்னத்தில் அறை வாங்கி வெலவெலத்துப்போன ஒரு சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஏற்றுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் பெயர் மசூத் அசார். 1968ம் ஆண்டு பாகிஸ்தானின் பஹவல்புர் என்ற ஏரியாவில் பிறந்தவன். ஹர்குத்-அல்-அன்சார் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டு படிப்படியாக அந்த தீவிரவாத அமைப்பில் பெரிய பதவிக்கு வந்தான். இந்த தீவிரவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு தடைவிதித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய பாடல்களை இந்திய படங்களில் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹிந்தி திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வந்த நிலையில் இனிமேல் …
-
- 0 replies
- 721 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை - மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டம்?" 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "'வாயு சக்தி' என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்த…
-
- 0 replies
- 557 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு ஒப்பந்தங்களில் சௌதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது. சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தனது நாட்டில் நிலவும் நிலையற்ற பொருளாதாரத்தை சரிகட்டுவதற்கு சர்வதேச உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த முதலீடுகளின் மூலம் சௌதி அரேபியா கைக்க…
-
- 0 replies
- 333 views
-
-
படத்தின் காப்புரிமை NARINDER NANU Image caption (கோப்புப்படம்) இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்க்லானா பகுதியில் இன்று (திங்கள்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த தீவிரவாதிகள் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், வியாழனன்று புல்வாமாவில் நடந்த தாக்குதலை திட்டமிட்டவர் என்று கருதப்படும் அப்துல் ரஷீத் காஸி இன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்று ராணுவ தகவல்கள் கருதுகின்றன. …
-
- 0 replies
- 432 views
-