Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி போட்டி By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 02:19 PM இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடோவின் மனைவி, குஜராத் சட்டமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை தனது வேட்பாளர்களில் ஒருவராக களமிறக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தீர்மானித்துள்ளது. பாஜகவில் ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டு இணைந்தார். அவரை எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில், ஜம்னாநகர் வடக்கு தொகுதியில் போட்டியிடச் செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தர்மேந்திராசின் எம். ஜடேஜாவை நீக…

  2. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு: காங்கிரஸிற்குள் முரண்பாடு ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 9 நவம்பர் 2022 படக்குறிப்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அதனை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். இந்த முரண்பாடு ஏன்? பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என தீர்ப்பளி…

  3. நேபாளத்தில் நிலநடுக்கம், 6 பேர் பலி: டெல்லியில் உணரப்பட்டது பட மூலாதாரம்,GETTY IMAGES 50 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் ஏற்பட்ட 6.3 அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் உணரப்பட்டது. டெல்லி தேசிய தலைநகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை இரண்டு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நில நடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள ப…

  4. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு பயணம் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ரஷ்யாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இதில் முக்கியமாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் இருவரும் விவாதிக்கவுள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்ப…

  5. ஒடிசாவில் வெற்றிகரமாக நிறைவடைந்த பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையின் முதல் சோதனை By NANTHINI 04 NOV, 2022 | 04:47 PM நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் விமானங்களை நடுநிலையாக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை (ballistic) எனும் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையின் முதல் சோதனை அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணையான பாதுகாப்பு இடைமறிக்கும் ஏடி1 ஏவுகணையின் முதல் விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தியது. வெவ்வேறு புவியியல் ந…

  6. 'பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு செல்லும்': உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர். ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவ…

  7. COP27: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன? ஜானவி மூலே பிபிசி மராத்தி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS வெப்பக்காற்று, புயல், சீரற்ற பருவமழை, வெள்ளம், வறட்சி என தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியாவில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதில் பல நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்துள்ளதா? காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இந்தாண்டின் பருவநிலை மா…

  8. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் இந்திய விஜயம் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 01:59 PM இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவும் சவுதி அரேபியாவும் வரலாற்று ரீதியான உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளன. எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் நீண்ட காலமாக வலுப்பெற்றுள்ளது. காலனித்துவ காலத்திற்கு முன்பே, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாலியில் நடக்க இருக்கும் ஜீ 20 உச்சிமாநாட்டிற்கு செல்லும் போது, நவம்பர் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு ஒரு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜவஹர்லால…

  9. தென்னாப்பிரிக்காவின் அரிய கனிம வளங்களை இந்தியா பயன்படுத்த வேண்டும்: எக்ஸிம் வங்கி அறிக்கை By DIGITAL DESK 5 07 NOV, 2022 | 12:35 PM முக்கியமான அரிய கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும் தென்னாப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா மூலோபாய கூட்டணியை உருவாக்க வேண்டும் என ஏற்றுமதி - இறக்குமதி இந்திய வங்கி (எக்சிம் வங்கி) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா வளர்ச்சி கூட்டாண்மை குறித்து 'தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாவின் ஈடுபாடுகளை மீண்டும் புதுப்பித்தல்' என்ற தலைப்பில் ஜோகன்னஸ்பர்க்கில் எக்சிம் வங்கி அறிக்கை வெளியிட்டது. இதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் மற்றும் ஆப்பிர…

  10. தெலங்கானா பாமாயில்: இந்தியாவை நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய உத்தி சுரேகா அப்பூரி பிபிசி தெலுங்கு 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் தென்மாநிலமான தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தின் 80 கி.மீ நீள சாலையின் இருபுறமும் எண்ணெய் பனை மரங்கள் காணப்படுகின்றன. இந்த சீசனில் நாகார்ஜூனா உள்ளிட்ட பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் எண்ணைய் பனை நடவு செய்துள்ளனர். 50 வயதாகும் இந்த விவசாயி, தனது நான்கு ஏக்கர் வேளாண் பண்ணையில் கடந்த ஆண்டு நெல் சாகுபடி செய்ததில் பெரும் இழப்பை சந்தித்து பாதிக்கப்பட்டார். எண்ணெய் பனை வளர்ப்பு மீண்டும் லாபத்தை நோக்கி செல்ல உதவும் என்று அவர் நம்புகிறார். தன்…

  11. இந்துக்கள் 400 பேரை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றியதாக 8 பேர் கைது: உத்தரப்பிரதேச சர்ச்சையில் உண்மை நிலவரம் என்ன? ஷாபாஸ் அன்வர் பிபிசி ஹிந்திக்காக 22 நிமிடங்களுக்கு முன்னர் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள மங்கத்புரம் பகுதி தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இங்கு 400 இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டதாக மீரட் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பெண்கள் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 400 இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பாஜக மாநகர அமைச்சர் தீபக் ஷ…

  12. இந்தியாவில் கிடைத்த புதைபடிவங்கள்: டைனோசர் குட்டிகளை விழுங்கிய சனாஜே பாம்புகளைக் கண்டுபிடிக்க உதவிய தொல்லெச்சம் கமலா தியாகராஜன் ㅤ 2 நவம்பர் 2022 பட மூலாதாரம்,ALAMY மிகப்பெரும் டைனோசர் முட்டைகள் முதல் அறிவியலுக்கே புதிதான வரலாற்றுக்கு முந்தைய வினோதமான உயிரினங்கள் வரை, பல ஆச்சரியமான புதைபடிவங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், அவை வெறுமனே பூமிக்கு அடியில் உள்ளன. 2000ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள மத்திய அருங்காட்சியகத்திற்கு நான் சென்றபோது, பழங்கால ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி ஏ வில்சன், தான் இதுவரை கண்டிராத ஒரு புதைபடிவத்தினைக் கண்டார். அது, அவருடன் பணியாற்றிய ஒருவரால் 1984ஆம் ஆண்ட…

  13. குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர் 30 அக்டோபர் 2022, 15:47 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் முதல்…

  14. இந்தியா முழுவதும் டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம்! இந்தியா முழுவதும் சோதனை அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயங்களை முதற்கட்டமாக, மொத்த பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் நாணயத்தை பயன்படுத்தி, பங்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனவும், அரசு பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில், சில்லரை வர்த்தக அளவில், டிஜிட்டல் நாணய பயன்பாடு விரிவுபடுத…

  15. குஜராத் பாலம்: நரேந்திர மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு - அறியப்படாத தகவல்கள் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SONDEEP SHANKAR படக்குறிப்பு, 1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர் மோர்பி, மச்சு நதி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையேயான உறவு மிகவும் பழமையானது. நரேந்திர மோதி பொது வாழ்வில் முத்திரை பதிக்கத் தொடங்கிய இடம் மோர்பி. அந்த நகரில் மோதி என்ன செய்தார்? அது அவரது வளர்ச்சிக்கு எப்படி உதவியது? இவை பற்றி விவரிப்பதற்கு முன், சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு மோர்பியில் என்ன நடந்தத…

  16. 'தி வயர்' மீது பாஜக புகாரின் பேரில் போலிச் செய்தி வெளியிடுவதாக வழக்குப் பதிவு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/AMIT MALVIYA பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்கத்தில் அக்கட்சியின் இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியாவின் புகாரின் பேரில், 'தி வயர்' என்ற செய்தி இணையதளம் மீது தில்லி போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமித் மாளவியா, தன்னைப் பற்றியும் சமூக ஊடக நிறுவனமான 'மெட்டா' (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) பற்றியும் 'போலி செய்திகளை' வெளியிடுவதாகக் கூறி 'தி வயர்' மீது மோசடி குற்றம் சாட்டியுள்ளார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும் இ…

  17. பாகிஸ்தான் எல்லை அருகே நவீன ராணுவ விமான தளம் அமைக்கும் இந்தியா - நோக்கம் என்ன? ஷகீல் அக்தர் பிபிசி உருது செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP பிரதமர் நரேந்திர மோதி சென்ற வாரம் குஜராத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள 'டீசா' வில், ராணுவ விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் வான் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. புதிய ராணுவ விமான தளம், வடக்கு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் விமானப்படையின் பயன்பாட்டிற்கு முழுமையாக தயாராகிவிடும்.நாட்டின் பாதுகாப்புக்கான …

  18. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன? அதில் உள்ள படத்தை மாற்ற முடியுமா? ஹர்ஷல் அகுடே பிபிசி மராத்தி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் ஆகிய கடவுள் படங்களை இடம் பெற செய்ய வேண்டும் என்று கோரிய புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல அரசியல்வாதிகள் இதே போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ரூபாய் நோட்டுகளில் புகழ்பெற்ற ஆளுமைகளின் படத்தை அச்சிட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. மன்னர் சிவ…

  19. உலகிலேயே உயரமான சிவன் சிலை: ராஜஸ்தானில் இன்று திறப்பு! ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், ‘விஸ்வஸ்ரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. 369 அடி உயரமுள்ள இது, உலகிலேயே உயரமான சிவன் சிலையாக கருதப்படுகிறது. ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத்தலமான உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், ஒரு குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தத் பதம் சன்ஸ்தான் என்ற அமைப்பு இந்த சிலையை அமைத்திருக்கிறது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்துகூட பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் ஒளி வெள்ள விளக்குகள் அம…

  20. ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கு முயற்சி! ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஹிந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறியிருந்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) 12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற பிறகு ஊடகங்களுக்கு கூறுகையில், ”யுனெஸ்கோ அமைப்பில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் வெளிய…

  21. நவீன அறிவியல், பண்டைய அறிவியல்: மத்திய பாஜக அரசின் புதிய முன்னெடுப்பால் சர்ச்சை இம்ரான் குரேஷி பிபிசி இந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PIB இந்தாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை, பண்டைய அறிவியல் குறித்து தொடர் கருத்தரங்குகள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இது நவீன அறிவியலைவிட பண்டைய அறிவியல் சிறந்தது எனக் காட்டுவதற்கான முயற்சி என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்ரோ உள்ளிட்ட இந்திய அரசின் அறிவியல் துறைகள், டேராடூனில் வரும் நவம்பர் 6 முதல் 8ஆம் தேதிவரை 'ஆகாஷ் தத்வா' என்ற பெயரில் கருத்தரங்கு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கு…

  22. ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி தேவி புகைபடம் வேண்டும்… அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் ரூபாய்களில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், அதுபோல் இந்திய ரூபாயில் மாற்றம் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்தப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்த…

  23. பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றியவர் கைது! சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்து முஸ்தாக் கானை கைது செய்துள்ளனர். அவர் மீது 153 ‘ஏ’ பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் மீது தேச துரோக …

  24. இந்தியா – சீனா புவிசார் அரசியல் பொறியிலிருந்து விலகி புதிய பாதையை கண்டுபிடிக்க வேண்டும் - சீன தூதர் By NANTHINI 27 OCT, 2022 | 03:04 PM சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள ஆழமான உறவுகளையும், பொதுவான நிலையையும் எடுத்துரைத்த இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங், தனது பிரியாவிடை அறிக்கையில், புவிசார் அரசியல் பொறியிலிருந்து நாம் வெளியேறி, வித்தியாசமான புதிய பாதையை கண்டறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவும் இந்தியாவும் ஒன்றாக வளர்ச்சியடைய உலகில் போதுமான இடமுள்ளது. மேலும், இரு நாடுகளும் மக்களும் அமைதியுடன் வாழ்வதற்கான வழியை கண்டுபிடிப்…

  25. பங்களாதேஷ் சூறாவளியில் 30 க்கு மேற்பட்டோர் பலி By NANTHINI 26 OCT, 2022 | 03:20 PM பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி இதுவரை 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (ஒக் 24) பங்களாதேஷை தாக்கிய சிட்ராங் சூறாவளியால் 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகமானோர் உயிரிழந்தமைக்கு சூறாவளியால் மரங்கள் வீழ்ந்தமையே காரணம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மின்கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்ததால் சுமார் 80 இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்துள்ளனர். அத்துடன் 6,000 ஹெக்டேயர் (15,000 ஏக்கர்) பரப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.