Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 03:09 PM 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் புலம்பெயர்ந்தவர்களிடம் இடம் பெற்ற மோசடிகள் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மோசடிகளால் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மொத்தமாக 46,563 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதோடு, மக்கள் 651.8 மில்லியன் சிங்கபூர் டொலரை இழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து மோசடி குற்றச் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மோசடி வழக்குகள் 2023 இல் பதிவாகியு…

  2. படத்தின் காப்புரிமை ANI சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பீமா மண்டவி மீது குறிவைத்து நடந்த தாக்குதலில் ஐந்து சிஆர்பிஎஃப் படையினர் பலியாகி உள்ளனர். தண்டேவாடா-சுக்மா சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகுல்னார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் 36 மணி நேரத்தில் நடக்க இருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பி…

  3. கீழடி ஆய்வு முடிவுகளால் இந்திய வரலாற்றை தமிழ்நாட்டிலிருந்துதான் இனி பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ''தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது, தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. தமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம…

    • 0 replies
    • 294 views
  4. ‘‘சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அடையாளம் காண, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்’’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரைத் தொடர்ந்து, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்தில் குடியேறினர். இதனால், கடந்த 1971 மார்ச் 25ம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்தாண்டு வெளியான இதன் வரைவு அறிக்கையில் 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டதால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்ப…

    • 0 replies
    • 264 views
  5. ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்! ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் பானுடா கிராமத்திற்கு அருகே இன்று (09) பிற்பகல் ஜாகுவார் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இந்திய விமானப்படை (IAF) விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஐந்து மாதங்களில் இது போன்று பதிவான மூன்றாவது விபத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, விமானியின் உடலுடன், விமானத்தின் இடிபாடுகள் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டன. உடல் கடுமையாக சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த விமானி மற்றும் மற்றொரு நபரின் அடையாளங்கள் இன்னும் இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. போர் விமானம் பயிற்சி…

  6. கொரோனா தாக்கம் : 15 அம்ச கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு! இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படும். மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம். தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும். பெரிய நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்தலாம். திரும…

  7. இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் அங்கு ஏரி ஒன்றை கண்டு பிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில் ஒரு சிறிய பனிக்கட்டி ஏரியில் சுத்தமான தண்ணீரில் மர்மமான சில விஷயங்களை அவர் பார்த்தார். அந்த ஏரி முழுவதும் மனித எலும்புக்கூடுகள் நிரம்பியிருந்தது. தற்போது ரூப்குந்த் ஏரி அல்லது "எலும்புகூடு ஏரி" என்று அது கூறப்படுகிறது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜப்பானிய ராணுவ வீரர்களின் எலும்பு கூடுகளாக அவை இருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சினர். ஆனால் அந்த எலும்புக்கூடுகள் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருந்தன. அதனால் அதற்கு வாய்ப்பில்லை. …

  8. உலகின் உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு By Vishnu 19 Aug, 2022 | 08:58 PM உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில் பாலம் கடந்த 13 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் குறித்த ரயில் பால கட்டுமான பணி கடந்த 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி. கடந்த 2017 ஆம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி நிறைவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. இரும்பு மற்றும் கொங்கிரீட் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதன்…

  9. அவசர சிகிச்சை பிரிவில் மம்தா பானர்ஜி! இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படமொன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனையடுத்து மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2024/1373522

  10. ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்! 7.87 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஃபேல் ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு பல விதிவிலக்குகளையும், சலுகைகளையும் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விதிவிலக்குகள் அனைத்தும் முன்னெப்போதும் யாருக்கும் வழங்கப்படாதவை. ராணுவக் கொள்முதல் செயல்முறைகளில் முக்கிய விதிமுறைகளிலிருந்து விலக்கு உட்பட முக்கிய சலுகைகள் டசால்ட் ஏவியேஷன், எம்பிடிஏ ஆகிய இரண்டு பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் அனைத்தும் இறுதிகட்ட ஆய்வுக்கும், ஒப்புதல் பெறுவதற்கும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப…

  11. முக்கியமான நேரத்தில், சுடாத துப்பாக்கி. அதிர்ச்சியடைந்த போலீசார். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (82), உடல் நலக்குறைவால் கடந்த 19ம் தேதி காலமானார். ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராகும். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார்.ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதிச் சடங்கு, கடந்த 21ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அப்போது, விதிமுறைப்படி, 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது. போலீசார் வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட முயன்றபோது, எந்த துப்பாக்கியும் சுடவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உயரதிகாரிகள், துப்…

  12. இந்திய மீனவர் மரணம் – விசாரணை அறிக்கையை எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் அறிவிப்பு 15 Views இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறுகளை தாம் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர்தெரிவித்திருக்கின்றார். இந்திய மேல் சபையில் நேற்று வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்திய அமைச்சர், “இந்த விவகாரம் தொடர்பில் நாம் எமது எதிர்ப்பை மிக மிக கடுமையாக சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தெரிவித்திருக்கின்றோம். அதற்குப் பதிலாக இச்சம்பவம் குறிதத விசாரணைகளை ஆரம்பிப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிததிருந்தது” எனவும் கூறினார். …

  13. "அஸ்ட்ராஜெனெகா" கொவிட்- 19 தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கோரிக்கை சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவனத்தின் தயாரிப்பினை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைக்கு எந்தவொரு விரைவான ஒப்புதலும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்தியா தனது சொந்த உள்நாட்டு தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்துகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார். இ…

  14. இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு : மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் குழந்தை பெறும் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண் குழந்தைகளுக்கு ஈடாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து சமனிலை எட்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியும் 100 வீதமான பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  15. பெங்களூரூ வெள்ளம்: ஐ.டி. தலைநகர் நீரில் மூழ்கியபோது குடும்பங்கள் உதவிக்கு போராடியது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த வாரம் பெங்களூரூ நகரில் பெய்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத்துறையின் தலைநகரமாக விளங்கும் பெங்களூரூவில், சமீபத்தில் பெய்த பருவமழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்மட்டம் உயர்ந்ததால் வீடுகளில் சிக்குண்ட குடும்பங்கள் உதவிக்காக போராடியது குறித்து செய்தியாளர் ருத்ரனேல் சென்குப்தா விவரிக்கிறார். செப்டம்பர் 5 ஆம் தேதி மாலையில், ருச்சே மிட்டலும், அவரது கணவர் மனீஷும் மழை…

  16. பாகிஸ்தானில் தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு கொலை November 3, 2018 1 Min Read பாகிஸ்தானில் ராவல்பிண்டியின் மேற்கு பகுதியில், தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மௌலானா சமி அல்-ஹக் எனப்படும் மதகுருவே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்ற போதும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லை. மௌலானா சமி அல்-ஹக் தலைவராக இருந்த வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஹக்கானியா மசூதிப்பாடசாலையில்தான் தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா அமர் உள்பட…

  17. சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கைது – பாஜக – ஆர்எஸ்எஸ் போராட்டம் November 19, 2018 சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளதுடன் ; பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர். அவர்களை வெளியேறு…

  18. Published By: RAJEEBAN 26 MAR, 2024 | 05:42 PM பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன பிரஜைகள் பயணித்த வாகனத்தொடரணி மீதுதற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை மேற்கொண்டார் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கைபர் பக்துன்வா மாகாணத்தின் டசுவில் உள்ள தங்கள் முகாமிற்கு இஸ்லாமபாத்திலிருந்து சீன பொறியியலாளர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர் அவ்வேளை தற்கொலை குண்டுதாரி தனது வாகனத்தை அவர்களின் வாகனத்தை நோக்கி செலுத்தி வெடிக்கவைத்தார் என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஐந்து சீன பிரஜைகளும் அவர்களின் வாகனச்சாரதியான பாக்கிஸ்தான் …

  19. காஷ்மீரின் உரி மற்றும் ராஜோரி பகுதியில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய இராணுவ வீரர்கள் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையிலேயே மேற்படி பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/62745

    • 0 replies
    • 283 views
  20. தெற்காசிய நாடுகளை அசச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்! கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்ற சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மீண்டும் தெற்காசிய நாடுகளை அச்சுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அந்நகரின் சுகாதார பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, இம் மாதத்தின் முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  21. பட மூலாதாரம், GETTY IMAGES/BLOOMSBURY படக்குறிப்பு, 1977 ஆம் ஆண்டு பிரதமரான பிறகு, மொரார்ஜி தேசாய், ராமேஷ்வர் நாத் காவை உளவுத்துறை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 23 செப்டெம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1977-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அவசர நிலைக்குப் பிறகு இந்திரா காந்தி மக்களவைத் தேர்தலை நடத்திய போது, அவரது கட்சி தோற்றது மட்டுமல்லாமல் அவரும் தனது மக்களவை தொகுதியை இழந்தார். அந்தத் தேர்தலில் புலனாய்வுப் பிரிவு (IB), உளவுத்துறை (RAW), சிபிஐ (CBI) ஆகிய இந்திய புலனாய்வு அமைப்புகள் அவசர நிலையில் வகித்த பங்கை எதிர்க்கட்சிகள் பெரிய அரசியல் பிரச்னையாக மாற்றின. பின்னர் பிரதமரான மொரார்ஜி த…

  22. ஜப்பான்-இந்தியா இணைந்து இந்தியப் பெருங்கடலில் போர் ஒத்திகை! இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இணைந்து இந்தியப் பெருங்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டன. இந்திய கடற்படையைச் சேர்ந்த INS ராணா, INS குலிஷ் ஆகிய போர்க் கப்பல்களுடன் ஜப்பான் கடற்படையின் JS காஷ்மீர் மற்றும் JS ஷிமாயுகி ஆகிய போர்க் கப்பல்கள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன. சீன இராணுவம் ஜப்பானிய கடற்படையுடன் அவ்வப்போது முறுகல் நிலையை ஏற்படுத்திவருகின்ற நிலையில் சீனா உரிமைகோரியுள்ள சில தீவுகளில் தமது உரிமையை நிலைநாட்டும் நடவடிக்கையை ஜப்பான் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், டோக்கியோவிலிருந்து 1931 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டோனோஷிரோ என் தீவுகளின் பெயரை டோனோஷிரோ சென்காகு என ஜப்பானின் இஷிகாகி நகர சபை ம…

  23. டிஷா ரவி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகளை எதிர்த்த இளைய காலநிலைச் செயற்பாட்டாளர் – தமிழில் ஜெயந்திரன் 2 Views பெங்களூரின் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினார்கள். மாணவர்களுடனும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அந்த நகரத்தில் வாழும் மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். “விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது கிளர்ச்சியாகாது” “அநீதி சட்டபூர்வமாக்கப்படும் போது அதனை எதிர்ப்பது எமது கடமை” போன்ற சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளை அவர்கள் வைத்திருந்தார்கள். முகத்தில் புன்சிரிப்புடன் காணப்பட்ட 22 வயது நிரம்பிய டிஷா ரவியின் (Disha Ravi) படத்தை அவர்களில் பெரும்பாலானோர் தூக்கி வைத்திருந்தார்கள். …

  24. குஜராத்தில் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் குஜராத்திலுள்ள ‘எல் எண்டு டி’ நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். குஜராத் மாநிலம், ஹஜிரா பகுதியிலுள்ள தனியார் நிறுவனமான ‘எல் எண்டு டி’ நிறுவன வளாகத்தில் பீரங்கி உற்பத்தி பிரிவை மோடி நேற்று (சனிக்கிழமை) திறந்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கே9 வஜ்ரா இராணுவ பீரங்கியின் தொழிநுட்பத்தை தென்கொரிய நிறுவனத்திடமிருந்து பெறுவது தொடர்பிலான ஒப்பந்தமும் இந்நிகழ்வில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த நிகழ்வில் இராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், கொரிய மந்திரி வாங்க் ஜங் ஹாங், ‘எல் எண்டு டி’ தலைவர் ஏ.எம்.நாயக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை இந்நிகழ்வு தொடர்பாக…

  25. ராஜஸ்தானிலிருந்து, பாகிஸ்தானியர்கள்... வெளியேற 48 மணி நேர காலக்கெடு ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என குறித்த மாவட்ட ஆட்சியர் குமார் பால் கௌதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். புல்வாமாவில் கடந்த வாரம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்தே இந்த அதிரடியான உத்தரவை அவர் பிறப்பித்தார். அந்தவகையில், பிகானர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2 மாதங்கள் வரை செல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.