Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை... தொடர்ந்து, கண்காணிக்கப்படுகிறது – மத்திய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பத்தினரை மீட்பதற்காக சி-17 என்ற விமானம் காபூலில் தரையிறங்கியுள்ளது. 500 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்காக அவ்வவ்போது அறிவுரைகளை வழங்கி வருவதாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங…

  2. பெகாஸஸ் உளவு விவகாரம் : அடிப்படை ஆதாரம் அற்றது என மத்திய அரசு தெரிவிப்பு! பெகாஸஸ் செயலி மூலம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பக்க பதில் மனுவிலேயே மத்திய அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் தவறான கருத்துகளைக் களைய நிபுணர் குழுவை நியமித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் மத்திய அரசு குறித்த மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கினை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினர் பெகாஸஸ் செயலி குறித்த விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.…

  3. சவால்களை... எதிர்கொள்ள, ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன – பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆயுதப் படைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும், எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார்நிலையில் உள்ளன. முப்படைகளுக்கு இடையிலான கூட்டுத்தன்மையை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் ஒட்டுமொத்த…

  4. இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்..! இந்தியாவில் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலையில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். பின்னர் விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்துள்ள அவரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதி அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அதன்பின்னர் பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை…

  5. "பாகிஸ்தான்" பயங்கரவாதிகள்.... இந்தியாவில், ஊடுருவ திட்டம் : கண்ணி வெடிகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிவிப்பு! ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில், இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் சில தினங்களுக்கு முன் அதிநவீன கண்ணி வெடிகளை பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி இருப்பதை …

  6. ஜி.எஸ்.எல்.வி எப் -10 விண்கலத்தின் பயணம் தோல்வி! பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி எப் -10 விண்கலத்தின் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈஓஎஸ்-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப் 10 என்ற ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்பட்டது. இருப்பினும் எதிர்பாராத விதமாக கியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக ரொக்கெட்டின் பயணத் திட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக இஸ்ரோ தலைமை விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார். http…

  7. இந்தியாவில்... கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால், ஆசிய நாடுகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது – WHO இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில், ”தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த வாரம் சுமார் 7 இலட்சத்து 99 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது முந்தைய வாரத்தை விட 5 சதவீதம் குறைவாகும். அந்தப் பிராந்தியத்தில் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில், கடந்த வாரம் இலங்கையில், 26 வீதமும் தாய்ல…

  8. இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர் மனைவியின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி பெண் போல பர்தா போட்டு பயணிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பயணத்தின் போது, அந்த நபர் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது வெளியே வந்தபோது பர்தா போட்டு வந்துள்ளார். பெண் உடையில் சென்ற நபர் எப்படி ஆண் உடையில் வெளிவருகிறார் என்று கவனித்த பணிப்பெண் ஒருவர் இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் விமானத்தை விட்டு கீழிறங்கும் போது அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த நபரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதை அடுத்து அ…

  9. விக்ராந்த் கப்பலின், சோதனை ஓட்டம் நிறைவு! உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், கப்பலின் செயல் திறன் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 40 ஆயிரம் டன் எடையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது விமானம் தாங்கி கப்பல் விரைவில் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதன் சோதனை ஓட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233208

    • 4 replies
    • 823 views
  10. கொரோனா எதிரொலி : குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு! பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குறித்த அறிக்கையில், “பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழுந்தைகள் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியாக பெண் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்துள்ளது. ஆகையால் விரைவாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசிபோடும் திட்டங்களை விரைவாக கொண்டுவர வேண்டும…

  11. கொரோனா அச்சுறுத்தல்- இந்திய விமானங்களுக்கான தடையை மேலும் நீடித்தது கனடா கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகின்றமையினால் இந்திய விமானங்களுக்கான தடையை கனடா மேலும் நீடித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதேபோன்று இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இதேவேளை அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பின்னர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும…

  12. ராகுல் காந்தியின்... ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ருவிட்டர் நிறுவனம், அவரது கணக்கினை தற்காலிகமாக முடக்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாவது, முடக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியின் ருவிட்டர் பக்கத்தினை மீட்டெடுத்து, சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, ராகுல் காந்தியை , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இதர சமூக ஊடகங்கள் வாயிலாக பின்தொடருங்கள் என அறிவித்துள்ளது டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரின் ஒளிப்படத்தை ராகுல் ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்தே அவருடைய ருவிட்டர் கணக்கை அந்ந…

  13. பெகாஸஸ் உளவு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது! பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போது 2019 ஆம் ஆண்டு வெளியான உளவு விவகாரம் குறித்து கருத்து வெளியிடப்பட்டதுடன், இது குறித்து டெலிகிராப் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். அதேநேரம் பெகாஸஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது தீவிரமானதாக இருக்கும் எனவும் நீதிபதி கூறினார். இதனையடுத்து குறித்த வழக்…

  14. ஜம்மு – காஷ்மீரின் புதிய மாற்றங்கள் அரசிலமைப்பின் 370 ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் அரசியல், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உட்பட ஏனைய ஜனநாயக உரிமைகள் என்பவற்றில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 108,621 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் அனைத்து துறைசார் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பள்ளிக் கல்வி சீரமைப்பு, தொழிற்கல்வி ஊக்குவித்தல், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள பள்ளிகளில் 607 தொழிற்பயிற்சி கூடங்களை அமைத்தல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். அரசியல் முன்முயற்சிகள் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் ஸ்தீரதன்மையை ஏற்படுத்துவதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத…

  15. ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றது! ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிலையான உறுப்பு நாடுகளும் மற்ற 10 உறுப்பு நாடுகளும் உள்ளன. பாதுகாப்பு சபைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பு நாடு தலைமையேற்கும். இதன்படி ஒகஸ்ட் மாதத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்தப் பதவிகாலத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சையது அக்பருத்தீன் தெ…

  16. புதுடில்லி சிறுமியின் மரணத்திற்கு பொறுப்புக்கூறல் கோரும் அடையாளங்களை வைத்தே போராட்டக்காரர்கள் அணிவகுத்தனர். "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர், அதில் "இந்தியாவின் மகளுக்கு நீதி" என்று எழுதப்பட்டிருந்தது. 9 வயது சிறுமியின் பெற்றோர் தங்கள் கிராமத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் தற்காலிக மேடையில் அமர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். சிறுமியின் தாயார் கதறி அழுதார், சில சமயங்களில் தனது மகள் "திரும்பி வா" என்று அழைத்தார். அதிகாலையில், சுமார் 80 எதிர்ப்பாளர்கள் இருந்ததாக போலீசார் மதிப்பிட்டனர். எவ்வாறாயினும், கூட்டம் விரைவில் பெருகியது, சிஎன்என் குழு தரையில் மதிப்பீட்டை 300 க்கு அருகில் வைத்தது. போராட்ட இடத்திற்கு 200 பாதுகாப்புப் படையினர் நியமிக்கப…

  17. இந்த ஆண்டில் மாத்திரம், பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் செய்துள்ளது – நித்யானந்த் ராய் ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்த வருடத்தின் ஜுன் மாதம் வரை பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார். இதன்போது தெரிவித்த அவர், நடப்பாண்டில் ஜுன் மாதம் வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே 664 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 133 ஆக இருந்ததாகவும், நித்யானந்த ராய் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1232358

  18. எல்லைப் பிரச்சினை : படைகளை திரும்பப் பெற இந்தியா – சீனா இணக்கம்! கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற இணக்கம் ஏற்பட்டுள்ளது. படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இந்திய – சீன இராணுவ அதிகாரிகள் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகயில் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் கோக்ரா இராணுவ ரோந்து பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாடுகள் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப்பெற உடன்பாடு…

  19. நாடு முழுவதும்... 24 போலி பல்கலைக்கழகங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளது – மத்திய அரசு நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8 பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வந்துள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க உறுப்பினரான தர்மேந்திரன் எழுத்துமூலம் மக்களவையில் பதிலளித்துள்ளார். யு.ஜி.யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு, டெல்லியில் ஏழு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு பல்கலைக்கழகங்கள் போலியாக செயற்பட்…

  20. கேரளாவை தொடர்ந்து... மகாராஷ்டிராவிலும், ஜிகா வைரஸ் தொற்று! கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த ஐம்பது வயது பெண் ஒருவருக்கே ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த பெண் பூரணமாக குணமடைந்துள்ளமையால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதேவேளை ஏடிஸ் வகை நுளம்புகளால் பரவும் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1231924

  21. கடத்தப்பட்ட சிலைகளை... மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க, அவுஸ்ரேலியா முடிவு! தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தை சேரந்த இரண்டு உலோக சிலைகள், உட்பட ஆறு உலோக சிலைகள், ஆறு பழமையான ஓவியங்கள், இரண்டு கற்சிலைகளை திருப்பி இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் தீர்மானித்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குறித்த சிலைகள் கடத்தப்பட்ட நிலையில், அவுஸ்ரேலியாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231442

    • 1 reply
    • 967 views
  22. சீன எல்லைப் பகுதியில் ரஃபேல் விமானங்களை நிறுத்தியது இந்தியா! சீனாவுடனான கிழக்கு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் அவ்வவ்போது பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது. அதேநேரம் படைவிலக்கல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் எதிர்வரும் சனிக்கிழமை இரு நாட்டு உயர் இராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்தியா ரஃபேல் போர் விமானங்களை கிழக்கு எல்லையில் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231268

  23. பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம் : விவாதத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு! பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பெகாசஸ் உளவு விவகாரத்தில், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்கட்சிகள் தடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன. பெகாசஸ் உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசதுரோகம், சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். இது தனிய…

  24. இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்ப்பு! இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகியுள்ளது. நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்படி 26 விமானங்களை பிரான்ஸ் வழங்கியுள்ளது. அவற்றில் 24 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 9 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ரஃபேல் விமானங்களில் போர்த்திறன் அதிகம் உள்ளதால் எதிர்காலத்தில் மேலும் 36 விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய விமானப்படை விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகிய…

  25. மகாராஷ்டிராவில் பலத்த மழைவீழ்ச்சி : 800 பேர் வெளியேற்றம்! மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. இதன்காரணமாக மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளிலும் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் இருந்து 800 பேர்வரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராய்காட் மாநிலத்தின் பகுதிகளில் ஏராளமாக மரங்கள் சாய்ந்துள்ளதுடன், வீடுகள், சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1230653

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.