Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை! மகாராஷ்ராவின் , ஔரங்கபாத் நகரில் உள்ளமுகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுமாறு இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்த விவகாரம் பாரிய பூதாகாரமாக வெடித்துள்ளது நிலையில் நேற்றைய தினம் நாக்பூரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிர முதல்வரும் பா.ஜ.க தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், “ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தமை” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் இந்திய ரூபாய் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பொன்றும் அறிவித்திருந்தமை பெரும் பரபரப்பை …

  2. ரூ.200 கோடி மோசடி: குஜராத்தில் 'வாடகை' வங்கி கணக்குகள் வழியே புதுமையான முறையில் பணம் கைமாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ராக்ஸி ககடேகர் சாரா பிபிசி செய்தியாளர் 9 நவம்பர் 2025 வீடு, கடை, கார், பங்களா போன்றவற்றை வாடகைக்கு விடுவது சாதாரண விஷயம் தான். ஆனால் இப்போது, குஜராத்தில் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விடும் புதிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை குஜராத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்தக் கணக்குகள் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவை. பெரும்பாலான கணக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்த…

  3. இந்தியாவில் பறவைக்காய்ச்சல் அபாயம் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளில் ஏராளமான காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரிகளில் பறவைக்காய்ச்சல் (H5N8) தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நோய்தாக்கம் உள்ள பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் மற்றும் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தட…

  4. உத்தரகாண்ட் : பனிமலை உருகி வெள்ளப்பெருக்கு -100க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல் 24 Views உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிமலை உடைந்து உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் நகரில் உள்ள நானாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகின. இதனால் தவுலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே சென்றதனால்,கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட …

  5. தடுப்பூசிகள் ஏற்றுமதி : அமெரிக்கா வரவேற்பு அளித்தாக... கமலா ஹாரிஸ் தெரிவிப்பு! கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒத்த கருத்துடைய நட்பு நாடுகள் என்றும், தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் ஒரேவிதமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 இலட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருவதாகவும் இருநாடுகளுக்கும் நட…

  6. மனித உரிமைகள் பேரவையின், உறுப்பினராக... இந்தியா மீண்டும் தெரிவு ! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்த நிலையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தெரிவாகியுள்ளது. இதேவேளை மூன்று ஆண்டுகளின் ப…

  7. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் அக்கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது. இதில் குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ம…

  8. நீதித்துறை Vs மோதி அரசு: தொடரும் கசப்புணர்வு, சர்ச்சைக்கு தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே நிலவும் மோதல் அதிகரித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருவதைப்பார்க்கும்போது பிளவு மேலும் அதிகரித்து வருவது போலத்தெரிகிறது. நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்ற விவகாரத்தில் கொலீஜியம் என்பது அரசியலமைப்பிற்கு புறம்பான ஒரு ஏற்பாடு என்று அரசு கூறுகிறது. அதே நேரத்தில் நீதிபதிகள் நியமன விஷயத்தில் அரசின் தலையீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை உண…

  9. இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 11:21 AM இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியைமத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும்உயர்கல்விக்கான திட்டமிடப்பட்டசெலவினம் சுமார் 8.3 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த …

  10. இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு – சீனாவும் பங்கு கோருகிறது OCT 22, 2018by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை எந்தவொரு தனிநாடும் உறுதி செய்ய முடியாது என்றும், அதில் தாமும் பெரிய பங்கை வகிக்க விரும்புவதாகவும், சீனக் கடற்படை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஆரம்பமாகிய – சிறிலங்கா கடற்படையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘காலி கலந்துரையாடல்-2018’ இல், உரையாற்றிய சீன கடற்படை கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதி றியர் அட்மிரல் ஹன் ஷியாவோஹூ இதனைத் தெரிவித்தார். ”இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை மிகவும் சிக்கலானதும் கடினமானதும் ஆகும். இந்த நிலைமையை எந்தவொரு தனி நாடும் கையாளவோ, நிரந்தரமான பாதுகாப்பை உறுதி செய்யவோ முட…

  11. படக்குறிப்பு, ஜஞ்ஜிரா கோட்டை கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஆகஸ்ட் 2023 22 ஏக்கர் பரப்பளவில், 22 பாதுகாப்பு நிலைகளோடு பரந்து விரிந்திருக்கும் ஜஞ்ஜிரா கோட்டையை கட்ட 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது. சத்ரபதி சிவாஜி, சாம்பாஜி மன்னர், போர்த்துகீசியர்கள், ஃபிரஞ்ச், பிரிட்டீஷ் என பலரும் இந்த கோட்டையை கைப்பற்ற முயன்றனர். ஆனால், யாராலும் ஜஞ்ஜிரா கோட்டையை வசப்படுத்த முடியவில்லை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக யாராலும் வெல்ல முடியாததாக இக்கோட்டை திகழ்ந்தது. சத்ரபதி சிவாஜி இந்த கோட்டையை வெல்வதற்காகவே அதன் அருகில் ஒரு கோட்டையை கட்டினார். ஆனாலும் அவரால் ஜஞ்ஜிராவை கைப்பற…

  12. டெல்லியில் 483.8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல்! காஷ்மீரிலிருந்து ஆப்பிள் பெட்டிகளில் மறைத்து டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 483.8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெரோயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுகின்றது. இதைனைமுன்னிட்டு ஜம்மு அருகிலுள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொரியை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள், ஆப்பிள் பழப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 க…

  13. ஹருன் ரஷீத் பிபிசி படத்தின் காப்புரிமை FAROOQ NAEEM சர்ச்சைக்குரிய காஷ்மீருக்குள் இந்திய விமானங்கள் நுழைந்தது மட்டுமின்றி, பாகிஸ்தானின் பாக்டுன்க்வா மாகாணத்தி…

  14. கட்டுரை தகவல் எழுதியவர், குர்மிந்தர் கிரேவால் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவுக்கு அருகில் உள்ள ராம்கர் சர்தாரன் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்ஷோ தேவி. பக்ஷோ தேவியின் சகோதரர் அஜய்குமார் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஜனவரி 2024இல், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி வெடித்ததில் இறந்து போனார் அஜய்குமார். இந்திய ராணுவத்தின் இணையதளத்தின்படி, அக்னிவீர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்…

  15. காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் தலையிடுவதை அனுமதிக்க முடியாது – இந்தியா திட்டவட்டம் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. ட்ரம்ப்பின் சமரச முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், “காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்சினை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடமுடியாது. பயங்கரவாத ஆதரவை முதலில் பாகிஸ்தான் கை விடட்டும். அதன் பின்னர் எந்த பேச்சுவார்த்தைக்கும் இந…

  16. தனியார் துறையினருக்கு ஏவுகணை தளம் அமைக்க அனுமதி – சிவன் விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ரொக்கட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகைள் வழங்கப்படும். ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டு ஏவுகணை…

  17. ராகுல் காந்தியின்... ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ருவிட்டர் நிறுவனம், அவரது கணக்கினை தற்காலிகமாக முடக்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாவது, முடக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியின் ருவிட்டர் பக்கத்தினை மீட்டெடுத்து, சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, ராகுல் காந்தியை , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இதர சமூக ஊடகங்கள் வாயிலாக பின்தொடருங்கள் என அறிவித்துள்ளது டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரின் ஒளிப்படத்தை ராகுல் ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்தே அவருடைய ருவிட்டர் கணக்கை அந்ந…

  18. https://www.facebook.com/100079744693894/videos/710579476817197 பிரதமர் மோடியை... கண்டு கொள்ளாத , அமெரிக்க ஜனாதிபதி.

  19. மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிக்கின்றது November 15, 2018 1 Min Read மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் பெயரை அதன் பாரம்பரியத்துக்கு ஏற்ப ‘பங்களா’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 26-ம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு இன்னும் …

  20. இந்திய அரசின் 2000, 500, 200 ரூபாய் தாள்களை பயன்படுத்த வேண்டாம் என நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசு, உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளை விலக்கிக் கொண்டது. அதன் பிறகு இந்தியா வெளியிட்ட புதிய தாள்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுள்ளது. 2016 நவம்பர் 8ம் தேதியன்று இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரூபாய் தாள்கள் புழக்கத்தை தடை செய்யும் நேபாள அரசின் அறிவிப்பு பலருக்கும் வியப்பளிப்பதாக இருக்கிறது. …

  21. பட மூலாதாரம்,P.T.V. 13 ஜனவரி 2024 கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை தனது காவலில் எடுத்துக்கொண்டது. அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜீய மற்றும் எல்லைப் பதற்றம் புதிய எச்சத்தை எட்டியது. பிப்ரவரி 27 அன்று என்ன நடந்தது என்பது மீண்டும் தற்போது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த இரவு பற்றிய சில புதிய விஷயங்கள் வெளிவந்துள்ளன. இதற்குக் காரணம், அப்போது பாகிஸ்தானில் பதவியேற்றிருந்த இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியாவின் ‘ஆங்கர் மேனேஜ்மென்ட்’ என்ற புத்தகம். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர…

  22. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியில், பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்… October 2, 2019 ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். அதன்போது, காஷ்மீரில் தற்போது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டும் முயற்ச…

  23. ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்! பங்களாதேஷில் எதிர்ப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீட்டையும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வீட்டையும் நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தனர். கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அவரை வெளியேற்றியதில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஹசீனா இந்தியாவில் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் நாட்டிற்கு உரையாற்றுவார் என்ற செய்தியால் இந்த அமைதியின்மை ஏற்பட்டது. 20 ஆண்டுகளாக பங்களாதேஷின் பொறுப்பில் இருந்த 77 வயதான ஹசீனா, ஒரு சர்வாதிகாரியாகக் முத்திரை குத்தப்பட்டார். இந்த நிலையில் புதன்கிழமை (06) மாலை எதிர்ப்பாளர்கள் டாக்காவில் அமைந்துள்ள ஹசீனாவின் மறைந்த…

  24. இந்தியாவில் கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரமாக அதிகரிப்பு! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 62 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்தும் கொரோனா வைரஸ் பாதிப்புக் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சு சில தளர்வுகளுடன் மே 17 வரை நீடித்ததுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை நேற்று மட்டும் 526 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 535 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது க…

  25. வெட்டுக்கிளி படையெடுப்பு சொல்லும் செய்தி என்ன? கரோனா ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நாட்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருகிறது. வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள்தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்ற வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? இப்போது வடமாநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள், நம் பகுதிகளில் சாதாரணமாகக் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள்தான். இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை மிகவும் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.