Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈ - பைக்: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களும் சிக்கல்களும் க. சுபகுணம் பிபிசி தமிழ் 23 அக்டோபர் 2022, 02:50 GMT பட மூலாதாரம்,OLA ELECTRIC/TWITTER இந்தியாவின் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தைக்குள் ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு நுழைந்தது. தற்போது, அக்டோபர் 22ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருசக்கர வாகன சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா ஸ்கூட்டரை, 2021ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதியன்று பெங்களூருவில் டெஸ்ட் டிரைவ் செய்த காணொளி வெளியானது. அதைத் தொடர்ந…

  2. 19 NOV, 2023 | 10:48 AM இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டிக்கும் வகையிலும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் காசர்கோடு ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமாத் ஏற்பாட்டில் காசர்கோட்டில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்டு பேசிய காசர்கோடு காங்கிரஸ் எம்பியும், நட…

  3. உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப் பொருட்களை குறைவான விலையில் இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த நற்பெயருக்கு களங்கள் ஏற்படும் வகையில், விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்திய மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதில், பாதிப்புக்கு உள்ளான தேசங்கள் முதல் உலக சுகாதார அமைப்பு வரை இந்திய மருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது. …

  4. பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத், உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களில் சமீப காலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழிசை பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார். சமுதாயத்தில் பெண்களை குத்துவிளக்கு…

    • 0 replies
    • 308 views
  5. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் 12½ கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து: அதிர்ச்சி தகவல் இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக ஜேர்மன் நாட்டின் ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கா‌‌ஷ்மீரில் உள்ள புல்வாமாவில், விடுமுறை முடிந்து கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த துணை இராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர். ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மனித வெடிகுண்டைக்கொண்டு நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிற ஜெய்‌‌ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்த …

  6. 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்டோர் உட்பட 12 பேர் விடுதலை. 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை மேல் நீதிமன்றம் இன்று (21) விடுதலை செய்தது. மும்பையின் ரயில் வலையமைப்பை உலுக்கிய இந்த குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்ததுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2015 ஆம் ஆண்டு இது குறித்த வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட மேற்கூறிய 12 நபர்களில் 05 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்து 19 ஆண்டுகளின் பின்னர் இந்த விடுதலை வந்துள்ளது. நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம…

  7. ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்க திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது:சுப்ரீம் கோர்ட் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உரிமைகளை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. பதிவு: ஜூலை 13, 2020 11:06 AM மாற்றம்: ஜூலை 13, 2020 11:17 AM திருவனந்தபுரம் புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடி…

  8. பா.ஜ.க படுதோல்வி... பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் புகட்டிய பாடம் என்ன? அழகுசுப்பையா ச பஞ்சாப் தேர்தல் ``பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் வேளாண் சட்டங்களும் அதை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் மத்திய பா.ஜ.க அரசு அடம்பிடிப்பதுதான்.” பாஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், பஞ்சாபில் பா.ஜ.க-வினருக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் நடக்கும் தேர்தல் என்பதால் தேசிய அளவில் அதிக கவனம் பெற்றது. ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் பா.ஜ.க ஆகியவை…

  9. உத்தரப்பிரதேசத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட... ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு! உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர சர்மா தெரிவிக்கையில், ‘ உடல் நிலை சரியில்லாத ஆசிரியர்களும், அரச ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என மே மாதம் முதலாம் திகதி மாநில தலைமைச் செயலர் உறுதியளித்தார். ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மீது பணியிடை நீக்கம், ஊதிய பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன…

  10. இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல்- பிரதமர் மோடி இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அரசியல் கட்சிகளின் தலைமை கைமாற்றப்படுகின்றமையினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறக்கின்றது எனவும் அவர் விமர்சித்துள்ளார். இதேவேளை இக்கூட்டத்தை காங்கிரஸ், …

  11. சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: இதுவரை நேரில் பார்க்காத கோபம் - என்ன நடந்தது? சரோஜ் சிங் பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV/ MAGNUM PHOTOS பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதற்கு முன் பல முறை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் தலைவர்களை குறிப்பாக, ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஆக்ரோஷமாக விமர்சித்திருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் எல்லாம் நாடாளுமன்றத்தில் இருக்கும் தலைவர்களும், சில செய்தியாளர்களும் பார்த்த சோனியா காந்தியின் பாணியும், அவர் வழக்கமாக கடைப்பிடிக்கும் அமையான இயல்பும் இம்முறை முரணாக இருந்ததாக…

  12. சுமைலா ஜாஃப்ரி பிபிசி, இஸ்லாமாபாத் இந்தியாவில் இஸ்லாமிய பெயர் தாங்கிய நகரங்களின் பெயர்களை மாற்றும் வேலை நடந்து வருகிறது. தீவிர வலதுசாரி இந்து கருத்தியலாளர்கள் இஸ்லாமிய பெயருள்ள நகரங்களை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். சில மாநிலங்களின் அரசுகளும் அவர்களுக்கு செவி சாய்த்து பெயர்களை மாற்றி வருகிறார்கள். …

  13. மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்! மின்னம்பலம் சூரிய கிரகணத்தின் போது, 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். மூட நம்பிக்கையால் இவ்வாறு செய்ததற்கு சமூக ஆர்வலர் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரிய வகை நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது. இன்று காலை 8 மணி தொடங்கி 11.20 வரை தோன்றியது. இதனை பொது மக்கள் சூரிய கண்ணாடி அணிந்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஒரு சில இடங்களில் மேகமூட்டம் இருந்ததால் அதைக் காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இச்சமயத்தில் சில நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன.…

  14. இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல் ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டது - முன்னாள் விஞ்ஞானி பரபரப்பு தகவல் இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவி உள்ளது ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு கொடிய விஷம் கொடுக்கபட்டது என முன்னாள் இந்திய விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா கூறி உள்ளார். பதிவு: ஜனவரி 06, 2021 15:52 PM மாற்றம்: ஜனவரி 06, 2021 16:12 PM பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடிய ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மே 23, 2017 அன்று பெங்க…

  15. கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) இம்ரான் கான் பிரதமராக தொடர்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இம்ரான் கான். இதில் தாங்கள் பங்கு பெறப் போவதில்லை என நேற்றே (பிப்ரவரி 05, வெள்ளிக்கிழமை) எதிர்கட்சியினர் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகக் கூறினார்கள். பாகிஸ்தானின் செனட் அவையில், ஒரு முக்கியமான இடத்துக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்ற பின், இம்ரான் கானே முன் வந்து நாடாளுமன்றத்தின் …

  16. நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது! இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னலுக்கு இணையான கமாண்டர் பதவியில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கைலோ ரக நீர்மூழ்கி கப்பலை இந்தியா கொள்வனவு செய்திருந்தது. இது குறித்த இரகசிய விவகாரங்கள் கசிந்துள்ளதாக முறைப்பாடு எழுந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி டெல்லி, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட 19 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://atha…

  17. அதானி-ஹிண்டன்பெர்க் அறிக்கை: அமித் ஷா பேட்டி - "மறைக்க ஒன்றுமில்லை, பயப்பட எதுவுமில்லை" 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலில் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்துப் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துகள், அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சை, 2024 தேர்தல் போன்ற பல விஷயங்களில் அமித் ஷா தனது கருத்தைத் தெரிவித்தார். மத்திய அரசாங்க அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அமித் ஷா, "எதிர்க்கட்சிகள் ஏன்…

  18. பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் இந்தியாவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்துக் கூறியுள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவரது கருத்துகள் ‘தேவையற்றவை’ எனவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் எதார்த்தத்தை அவை பிரதிபலிக்கவில்லை எனவும் இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் தேர்தல் அனுபவத்திலிருந்து பல நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும், அதைப் பின்பற்ற விரும்புவதாகவும் இந்திய அரசு அதுகுறித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மன்றத்தின் 55வது கூட்டத்தொடரின்போது இந்தியாவின் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அமர்வில்…

  19. படத்தின் காப்புரிமை AFP பொதுமக்கள் இடையே அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வுகளால், முதலாளித்துவம் பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக எச்சரிக்கிறார், இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். பிபிசி ரேடியோ 4- நிகழ்ச்சியில் பேசிய ராஜன், பொருளாதார சமத்துவமின்மை ஏற்படும்போது, ஏராளமானோர் முதலாளித்துவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுவர் என தெரிவித்தார். பொருளாதாரத்தை கருத்தில் கொண்டால், அரசுகள், சமூக சமத்துவமின்மையை புறக்கணிக்கலாகாது என்றார். இந்தியாவின் மத்திய வங்கியை வழிநடத்தியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார …

  20. இமாச்சல் பேருந்து விபத்தில் 44 பேர் உயிரிழப்பு! இமாச்சல பிரதேசத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து பயணித்த பேருந்தொன்றே நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தானது தோல்மோர் என்ற பகுதியில் பயணித்த போது வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துடன், விபத்தில் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் …

  21. ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை வழங்கியது இந்தியா ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு இரண்டு அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டுகளில் நான்கு ஹெலிகொப்டர்களை இந்தியா வழங்கியிருந்தது. அத்துடன், அவற்றுக்கு மாற்றாக நான்கு அதிநவீன எம்ஐ-24 ரக அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை பரிசாக வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. இந்தநிலையில் இதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 2 ஹெலிகொப்டகளை இந்தியா ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது. இந்தியா அளித்த உறுதியின் படி ஆப்கானிஸ்தானுக்கு வழங்க வேண்டிய எஞ்சியுள்ள இரண்டு அதிநவீன ஹெலிகொப்டர்களை இந்திய தூதர் வினைய்குமார் ஆப்கானிஸ்தான் இராணுவத்திடம் வழங்கியுள்ளார். http://athavannews…

  22. பிரியங்கா வீட்டில் மர்ம கார் புகுந்ததால் பரபரப்பு! பாதுகாப்பு குறைபாடு என காங். கண்டனம்! காரில் இருந்தவர்கள் சர்வ சாதாரணமாக பிரியங்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் வீடு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ளது. இங்கு இன்று மர்ம கார் ஒன்று திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு குறைபாடு என்று காங்கிரசார் கண்டித்து வருகின்றனர். பிரியங்கா காந்தியின் உயிருக்கு அச்சம் இருப்பதால் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாத்த SPG சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. …

    • 0 replies
    • 437 views
  23. எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் குறித்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு! எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், எஸ் 400 மற்றும் பிற ஒப்பந்தங்களை பொறுத்தவரை ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு மற்றும் பிற கடப்பாடுகளை பூர்த்தி செய்ய இந்தியாவும், ரஷ்யாவும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 அலகுகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்…

  24. பயங்கரவாதத்தால்... உலக அமைதி, சீர்கெடுகிறது – ராஜ்நாத் சிங் பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் எல்லைகளை மதித்து நடக்க வேண்டும். தங்களுடைய பிரச்சினைகளை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். உலகின் அமைதி பயங்கரவாதத்தால் சீர்கெடுகிறது. அதைவிட பெரிய சவாலாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புகளும், நாடுகளும் உள்ளன. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், நிதியுதவி செய்பவர்கள், பாதுகாப்பு அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வே…

  25. யுக்ரேன் போர்: இந்தியா ஏன் ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வாங்குகிறது? ஷ்ருதி மேனன் பிபிசி உண்மைப் பரிசோதனைக் குழு 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யா மீதான யுக்ரேன் படையெடுப்பால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதனால் ரஷ்யா புதிய வணிக வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்தியா மலிவு விலையில் எண்ணையை வாங்குகிறது. இது குறித்து அமெரிக்கா இந்த எண்ணெய் இறக்குமதி சட்டத்திற்கு எதிரானது அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.