அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனு தொடுத்திருந்தார். அந்த மனுவிற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் "நாடு நெருக்கடி நிலையில் உள்ளது. நாட்டில் அமைதியை கொண்டுவரும் முயற்சிகள் வேண்டும். இம்மாதிரியான மனுக்கள் அதற்கு உதவாது," என தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 633 views
-
-
பட மூலாதாரம், X/@ACBofficials 18 அக்டோபர் 2025, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பக்டிகா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகக் கூறி அதனைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனுடன், நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகவும் முடிவு செய்துள்ளது. மூன்று வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த வீரர்கள் கொல்லப்பட்டனர்." என்று…
-
- 0 replies
- 71 views
- 1 follower
-
-
மும்பை தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா: புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று மராட்டிய மாநிலம் மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 07:59 AM மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவியது பெரும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. எனினும் மராட்டிய அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி செயலாற்றியது. இதன்பலன…
-
- 0 replies
- 242 views
-
-
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்? ஜெனி ஃப்ரீடா A health worker takes a nasal swab sample ( AP Photo/Aijaz Rahi ) வேகமாகத் தொற்றுவது, தடுப்பூசி அதிக திறனோடு செயல்படாதது, ஆன்டிபாடி காக்டெயில் மருந்து வேலை செய்யாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவினால் இதன் மூலம் மூன்றாம் அலை பரவும் என்று கணிக்கின்றனர். இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் சற்று தணியத் தொடங்கினாலும் மூன்றாம் அலை விரைவில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா ப்ளஸ் என்ற புதிய உருமாறிய வைரஸ் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தலாம் என்…
-
- 0 replies
- 160 views
-
-
பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை! பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து ஏழாம் கட்டமாக 3 விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய விமானப்படையில் தற்போது 24 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1229959
-
- 0 replies
- 158 views
-
-
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்குத் தேவையா? கட்டுரை தகவல் எழுதியவர்,ராகவேந்திர ராவ் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/TEJASVI YADAV பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்பு பணியைத் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்தப்பணியின் முதல் கட்டத்தை மே 31-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில், பீகாரில் வசிக்கும் மக்களின் சாதி, துணை சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலை …
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தி இந்து(ஆங்கிலம்): யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென் கிழக்கு ரயில்வேயில், யானைகள் பாலத்தை கடப்பதற்காக ரயில்களை நிறுத்துவது என்பது வாடிக்கையான…
-
- 0 replies
- 394 views
-
-
இம்ரானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம் ஆண்டு தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தார். இதனைத் தொடர்ந்து, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில…
-
- 0 replies
- 134 views
-
-
வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு! இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பா.ஜ.க 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார். அத்துடன், தலைமைத் தேர்தல் ஆணைக்குழு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிபரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளதாகவும், இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகள் எனவும் வோட் பார் டெமாக்ரச…
-
- 0 replies
- 130 views
-
-
ஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள் நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆயிரத்து 23 அதிவிரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 இலட்சத்து 66 ஆயிரத்து 882 பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றில் 389 மாவட்ட நீதிமன்றங்களில் தலா நூறுக்கும் அதிகமான சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப…
-
- 0 replies
- 483 views
-
-
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா! இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது என்று ஹெக்ஸெத் தனது இந்திய சகா ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பிற்குப் பின்னர் எக்ஸில் பதிவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் வொஷிங்டன் டெல்லியன் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 70 views
-
-
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: இவ்வளவு அதிகாரம் கொண்டதா? திரையுலகினர் கூறுவதென்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா அரசுக்கு அளப்பரிய சென்சார் அதிகாரத்தை வழங்கும் என்று இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சென்சார் சான்று வழங்கப்பட்டு வெளியான படத்தை கூட மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வழி ஏற்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாக்களுக்கு மும்பையில் இருக்கும் சென்சார் குழு சான்றளிக்காமல், அதை பொதுவெளியில் திரையிட முடியாது. சென்சார் குழுவுக்கு வட்டார அலுவலகங்களும் இருக்க…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
குஜராத்தில் தங்கத்தை தேடி தோண்டியபோது கிடைத்தவை, மனித வரலாற்றை மாற்றும் பொக்கிஷங்களா? பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 26 பிப்ரவரி 2024, 02:39 GMT குஜராத் மாநிலம் கட்ச் நகரின் தோலாவிராவிலிருந்து 51 கிமீ தொலைவில் உள்ள லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோலாவிராவில் கிடைத்த புதைபடிவங்களைப் போன்றே இங்கும் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சிந்து சமவெளி பண்பாட்டின் முக்கிய நகரங்களாகக் கருதப்படும் ஆமதாபாத்தின் லோத்தல் மற்றும் கட்சின் தோலாவிரா ஆகியவை, தற்போது குஜராத்…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை LOKSABHATV தனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மவுவா மெளத்திரா. இந்த ஆண்டின் சிறந்த பேச்சு இதுவென சமூக ஊடகங்களில் அவரது நாடாளுமன்ற பேச்சை கொண்டாடுகிறார்கள். ஃபாசிசத்தின் ஆரம்பகால அறிகுறிகள் தெரிவதாகவும், இந்திய அரசமைப்பு சட்டம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். பா.ஜ.கவின் பெரும் வெற்றியை கொண்டாடிய அவர், ஃபாசிசத்தின் ஏழு அறிகுறிகள் தெரிவதாக கூறினார். பா.ஜ.கவின் பெரும் வெற்றி, எதிர்ப்பு குரல்களும் கேட்கப்பட வேண்டும் என்பதை அவசியமாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 548 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முழு பிராந்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வாகும் (குறியீட்டு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி நிருபர் 40 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை இரவு, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டதகவும் இந்தியா கூறியது. இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மறுத்துள்ளார். "நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது . 25 இந்திய ஆளில…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
சிறுபான்மையினருக்கு எதிரான பொய்ச் செய்திகள்: பொலிஸார் உடனடி நடவடிக்கை சிறுபான்மையினருக்கு எதிரான பொய்ச் செய்திகள் மீது உத்தரப் பிரதேசக் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் இதனை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். தப்லீக் ஜமாத்தினரின் இஸ்திமா மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டவராலும் கரோனா பரவல் அதிகமாகி உள்ளது. இந்தச் சூழலில் இந்தப் பரவலுக்கு மதச்சாயம் பூசும் வகையில் சமூக விரோதிகள் சிலர், தப்லீக் ஜமாத்தினர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்ச் செய்திகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. எனவே, பொய்ச் செ…
-
- 0 replies
- 289 views
-
-
3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள்: கேரள மாணவி உலக சாதனை திருவனந்தபுரம் ஊரடங்கு காலகட்டத்தில் 90 நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளைப் படித்து உலக சாதனை படைத்துள்ளார் கேரள கல்லூரி மாணவி ஆரத்தி ரகுநாத். கேரள மாநிலம் கொச்சி அருகே எலமக்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஆரத்தி ரகுநாத். இவர் கொச்சியில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் எம்.எஸ்சி. உயிர் வேதியியல் (இரண்டாம் ஆண்டு) படிப்புப் படித்து வருகிறார். கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் ஆரத்தி, கோர்ஸ் எரா மூலம் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளார். குறிப்பாக ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம், டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வெர்ஜீனியா பல்கலைக்கழ…
-
- 0 replies
- 192 views
-
-
இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பயோடெக்னோலஜி துறையுடன் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடவடிக்கை விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கொவிஷீல்ட் மற்றும் கொவேக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி…
-
- 0 replies
- 319 views
-
-
திருப்பதி அரச மருத்துவமனையில், ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளர்கள் உயிரிழப்பு! திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவிய நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மேலும் 20 பேர் ஆபத்தான நிலையில், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணா கலநிலைவரங்களை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். இதன்போது பேசிய அவர், சென்னையில் இருந்து வரவேண்டிய ஒக்சிஜ…
-
- 0 replies
- 442 views
-
-
இந்திய எல்லைப் பகுதியில்... பாலம், அமைக்கும் சீனா! எல்லைப் பகுதியில் சீனா தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கிற்குள் எளிதில் ஊடுருவும் வகையில் சீனா புதிய சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை காட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. வீரர்கள் மற்றும் பொருட்களை விரைவாக அனுப்புவதற்கு ஏதுவாக இந்த சாலைகள் அமைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1279827
-
- 0 replies
- 173 views
-
-
நேற்று வரை இருள்.. வேட்பாளரான பின் திரௌபதி முர்மு கிராமத்திற்கு திடீரென கிடைத்த மின்சாரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவரது கிராமத்திற்கு முதன்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த கிராமமான உபர்பேடா கிராமத்திற்கு மின்சார வசதியில்லை என்ற செய்தி பரவத் துவங்கியது. பல தசாப்தங்களாக இருளில் வாழும் கிராமவாசிகளின் அவலநிலை பற்றிய புகார்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, ஒடிசா அரசாங்கம் மின்மயமாக்கத் தொடங்கியுள்ளது. 3,500 மக்கள்தொகை கொண்ட குசுமி தொகுதியில் உள்ள …
-
- 0 replies
- 165 views
-
-
'இந்திய ரூபாய் சரியவில்லை; டாலர்தான் உயர்கிறது' - நிர்மலா சீதாராமன் சொன்னது சரியா? எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NSITHARAMANOFFC/TWITTER "இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது," என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அலுவல்முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். …
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, பெங்களூருவில் உள்ள ஆங்கில பலகைகளை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் சேதப்படுத்தினர். கட்டுரை தகவல் எழுதியவர், நிகிலா ஹென்றி பதவி, பிபிசி நியூஸ், டெல்லி 14 ஜனவரி 2024 உலகளவில் பல முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகம், ‘இந்தியாவின் சிலிகான் வேலி’ என அழைக்கப்படும் பெங்களூருவில் புத்தாண்டு நெருங்கும் வேளையில் நடைபெற்ற போராட்டத்தில், பெயர்ப் பலகைகளில் உள்ளூர் மொழியான கன்னடத்தில் எழுத வேண்டும் என வலியுறுத்தி, ஆங்கில பலகைகளை போராட்டக்காரர்கள் கிழித்து எறிந்த சம்பவங்கள், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு காட்சிப் பலகையிலும் 60%…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இடையில்லான சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த. கலையரசன், முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவன், உட்பட மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர், செயலாளர் மற்றும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368537
-
- 0 replies
- 327 views
-
-
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியீடு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் முதல் முறையாக பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநில மொழிகளிலும் தீர்ப்புகளை வெளியிடும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஹிந்…
-
- 0 replies
- 218 views
-