Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காஷ்மீர் விவகாரம்: இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பேரணி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. ஜமாத், இஸ்லாமி என்ற கட்சியின் ஏற்பாட்டில் கராச்சி நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்றவர்கள் காஷ்மீரை இந்தியாவில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். குறித்த பேரணியில் 1000க்கும் மேற்கொண்டோர் பங்பேற்றிருந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை கடந்த மாதம் 5ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது. இதற்கு …

  2. இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வாங்கி தீர்மானம்! காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் மோசமான சேதத்தை சந்தித்துள்ளமையினால் உலக வங்கியிடம் கூடுதல் கடன் தொகையை கோர பாகிஸ்தான் ஆலோசித்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா அணுகியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு நடத்தியதுடன் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்குதான் பயன்படுத்தும் எனவும் இந்தியா கண்டனம் தெரி…

  3. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்ப…

  4. ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்! ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார் குண்டுதாரி வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலியில் உள்ள பாதுகாப்புப் படை வளாகத்தில் மோதியதாகவும், துப்பாக்கிச் சண்டையில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அருகிலுள்ள வீ…

  5. பெங்களூருவின்`காட்பாதர்' மரணம்.. இறுதிச்சடங்கில் துப்பாக்கிச் சூடு சர்ச்சை -யார் இந்த முத்தப்பா ராய்?! ரியல் எஸ்டேட் பிசினஸில் இன்றைய தேதியில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான். மனைவி ரேகா இறந்தபிறகு இன்னும் சாதுவாகி மகன்கள் ராக்கி மற்றும் ரிக்கியை இயக்கத்தில் வளர்த்துவிட்டு அந்திமக் காலத்தில் வள்ளல் அவதாரம் எடுத்தார். பெங்களூருவின் `காட்பாதர்' என்று அழைக்கப்பட்ட முத்தப்பா ராய் புற்றுநோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு 68 வயது ஆகிறது. இவரது இறுதிச் சடங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது. யார் இந்த முத்தப்…

  6. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா? - நீதித்துறை தலையீடும் வழக்குகளும் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை …

  7. உக்ரைன்.... கீவ்வில், சிக்கியுள்ள மாணவர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்! உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குபகுதிக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகம் மேற்படி வலியுறுத்தியுள்ளது. மேற்கு பதிகள் பாதுகாப்பான பகுதிகளாக இருப்பதாகவும், அங்கு அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1269696

  8. ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கே சவால் விட்ட கிராமத்து பெண்கள்: பள்ளிக்கே செல்லாமல் வங்கி தொடங்கிய கதை கட்டுரை தகவல் எழுதியவர்,அம்ருதா துர்வே பதவி,பிபிசி மராத்தி 28 ஜனவரி 2023, 09:40 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், பெண்களாகவே தொடங்கி, பெண்களுக்காகவே நடத்தப்படும், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா! அப்படியொரு வங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. மான் தேஷி மகிளா கூட்டுறவு வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியைத் தொடங்கியது படிப்பறிவில்லாத…

  9. மேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் விரைவு December 29, 2018 மேகாலயாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான 20 தீயணைப்பு படை வீரர்கள் அதிக அழுத்தம் கொண்ட பம்புகளுடன் ஒடிசாவிலிருந்து இந்திய விமானப் படையின் விமானத்தில் மேகாலயாவிற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது மேகாலயாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி இரண்டு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒடிசாவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளுக்காக சென்றுள்ளனர். இவர்கள் மிக உயரழுத்தம் கொண்ட பம்புகளை கொண்டு செல்வதால்,…

  10. எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ! மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் தனக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஆபீஸுக்காக தான் வாங்கிக் கொடுத்திருந்த 300 சேர்களை தூக்கிக் கொண்டு போன செயல் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பெயர் அப்துல் சத்தார் நபி என்பதாகும். இவர் தற்போது சில்லோட் என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் ஒளரங்காபாத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சியில் சீட் கிடைக்கவில்லை. கடுப்பான அப்துல் சத்தார் தனது ஆதரவாளர்களோடு கட்சி அலுவலகத்திற்குப் போனார். அங்கு போட்டிருந்த 30…

  11. 16 AUG, 2024 | 01:59 PM புதுடெல்லி: காணாமல் போன உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவரது உடல் புதருக்குள் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவர் வசம் இருந்த பணம் மற்றும் செல்போனை குற்றவாளி எடுத்துச் சென்றுள்ளார். காணாமல் போன செவிலியர் குறித்து அவரது சகோதரி கடந்த மாதம் 31-ம் தேதி உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்து ந…

  12. ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை. ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பயன்படுத்தி தேர்வில் பங்கேற்ற 524 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 109 பேருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்டவர்களில் 514 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்…

  13. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது: பிரதமர் மோடி இந்தியாவில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த உதவியதாகபிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பும் 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “ஊரடங்கு தளர்த்த தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை …

  14. மனு ஸ்மிருதி: அமிதாப் பச்சன் மீது வழக்கு பதிவு! மின்னம்பலம் மனு ஸ்மிருதி விவகாரத்தில் அமிதாப் பச்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனி தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் 12ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் 30 எபிசோடில் சமூக ஆர்வலர் பெசவாடா வில்சன் மற்றும் அனூப் சோனி ஆகியோர் ஹாட் சீட்டில் அமர்ந்து கேள்விகளை எதிர்கொண்டனர். இந்த விளையாட்டின்போது 6.40 லட்சம் ரூபாய்க்கான ஒரு கேள்வியை அமிதாப் பச்சன் கேட்டார். 1927 டிசம்பர் 25ஆம் தேதி டாக்டர் பி.ஆர் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் எந்த புத்தகத்தின் நகல்களை கொளுத்தினர் என்று அந்த கேள்வி இருந்தது. விஷ்ணு…

  15. விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரபலங்கள் கருத்து : பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததா மராட்டிய அரசு விசாரணை புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ்,நடிகை மியா கலிஃபா, உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள். விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் வெளிநாட்டு பிரபலங்களை பொறுப்புடன…

  16. உக்ரைன் பிரச்சினை : இந்தியர்களை மீட்கும் 9ஆவது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது! ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 218 இந்தியர்களுடன், ஒன்பதாவது விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விதமாக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 216 இந்தியர்களுடன் 8 ஆது விமானம் ஹங்கேரியின் புடா பெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு இருந்த நிலையில், தற்போது 9ஆவது விமானமும் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1269706

  17. இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு! இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜனவரி மாதம் இரு நாடுகள் இடையே 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், சுமூக முடிவு எட்டப்படாதமையினால் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கடந்த 2020 ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீன இராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. https://athavannews.com/2022/1271114

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெகஜீவன் ராம் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 13 ஆகஸ்ட் 2023, 04:24 GMT இந்திரா காந்தி, 1977 தேர்தலில் தோல்வியடைந்த நான்கு மாதங்களுக்குள் அவரது தோல்வியிலிருந்து மீண்டும் வந்தார். ஜனதா கட்சியின் அரசுக்கு ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்தாலும், அதை அவர்கள் எல்லா வகையிலும் வீணடித்தனர். மொரார்ஜி தேசாய், ஜக்ஜீவன் ராம், சரண் சிங் மூவரும் அரசை பல திசைகளில் தாறுமாறாகப் பயணிக்க வைத்து, இந்திரா காந்திக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தட்டில் இட்டுக் கொடுத்தனர். மே 1977இல் பிகாரில் உள்ள பெல்ச்சி கிர…

  19. கருணாநிதி, ஜெ.க்கு கிடைத்த அதே வாய்ப்பு.. கைகூடி வருகிறது.. டெல்லியில் விட்டதை பிடிப்பாரா ஸ்டாலின்? தேசிய அரசியலில் திமுக மூலம் தமிழகத்தை மீண்டும் கோலோச்ச செய்ய பெரிய வாய்ப்பு ஒன்று ஸ்டாலினுக்கு கிடைத்து இருக்கிறது. டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கலந்து பெரிய சந்திப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள். இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இதன் மூலம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கைகூடி வந்துள்ளது.இந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளது. 40 எம்.பி தொகுதிகளை கொண்டு இருக்கும் தமிழகத்தின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே கூட்…

  20. காஷ்மீர் தாக்குதல் – கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு February 16, 2019 காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவரவாதி நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக…

  21. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்திய கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக கடற்படை அதிகாரிகள் 7 பேர் உள்பட 8 பேரை கைது செய்துள்ள ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய மற்றும் கடற்படை உளவு அமைப்புகளுடன் இணைந்து 'டால்பின் நோஸ்' என்ற பெயரில் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஹவாலா தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் மற்றும் 7 கடற்படை அதிகாரிகள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ரகசிய விவரங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்த…

    • 0 replies
    • 258 views
  22. டெல்லி வடகிழக்கில் மீண்டும் கலவரம்; பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு: அமித் ஷா அவசர ஆலோசனை பிடிஐ டெல்லி வடகிழக்குப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கலவரம் ஏற்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கற்களை வீசித் தாக்கி, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்தக் கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கலவரத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முதல்வர் கேஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்…

  23. இந்தியர்களை மீட்க... அண்டை நாடுகளுக்கு, செல்லும் மத்திய அமைச்சர்கள்! உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்லவுள்ளனர். உக்ரைனின் கீவ், கார்கிவ் நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்து உயர்மட்டக் குழுகூட்டம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் ஆகியோர் கலந்தகொண்டனர். இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய அமைச்சர் ஜோ…

  24. மலேசிய நாணயத்தால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினமணி: 'வீணாகக் குவிக்கப்பட்டுள்ள 40 டன் மலேசிய நாணயங்கள்!' படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ். "திருப்பதி தேவஸ்தானத்திடம் மலேசியாவைச் சேர்ந்த சில்லறை நாணயங்கள் 40 டன் அளவுக்கு மாற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. அவற்றை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் பல ஆ…

  25. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 04 AUG, 2023 | 03:40 PM மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.