Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை இராணுவ படையினரை திரும்பப் பெற்றது மத்திய அரசு! ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் 10 ஆயிரம் துணை இராணுவப் படையினரை உடனடியாக திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்யும் வகையில் இடம்பெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை மீளப் பெறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. …

  2. இந்தியாவில் கடந்த ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு 'சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு' (variant of global concern) என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. இந்தத் திரிபில் உள்ள B.1.617 மரபணுப் பிறழ்வு பிற திரிபுகளை விட மிகவும் சுலபமாகப் பரவக் கூடியது என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் இது குறித்த மேலதிக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் திரிபின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தி…

  3. நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக பாரிய குற்றச்சாட்டு! நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதற்கட்ட சமர்ப்பிப்புகளின் போது, அமுலாக்கத்துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த அறிக்கையை வெளியிட்டார். 2014 ஜூன் 26 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனிப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான ந…

  4. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஆரம்பம்! உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று ஆரம்பமாகி மார்ச் 7 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்திலுள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்…

  5. நரேந்திர மோதி பிறந்தநாள்: 'சீட்டா' சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து இந்தியா வந்தன நிதின் ஸ்ரீவாஸ்தவ் பிபிசி செய்தியாளர் 17 செப்டெம்பர் 2022, 05:13 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHEETAH CONSERVATION FUND படக்குறிப்பு, சாட்லைட் காலருடன் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தில் தன் தாயாரைச் சந்தித்தோ, எல்லையில் ராணுவ வீரர்களுடனோ, சில சமயம் குழந்தைகளுடனோ தன் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டுவரும் விவகாரத்தில் கவன…

  6. ரபேல் - இந்த “திருட்டும் நல்லது” திருடியதால் அம்பலமானதோ திருட்டுத்தனம்? ரபேல் விமான பேர ஊழல் தொடர்பான விபரங்களை ஹிந்து நாளிதழில் தவணை முறையில் வெளியிட வெளியிட மோடி வகையறாக்கள் அலறுகிறார்கள். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் திருட்டு போய் விட்டது. அதை வைத்துக் கொண்டு வெளியாகும் விபரங்களை உச்ச நீதிமன்றம் பொருட்படுத்தக் கூடாது என்று அழாத குறையாக மன்றாடியுள்ளார் அரசு தலைமை வழக்கறிஞர். பத்திரிக்கையில் வெளியாகும் தகவல்கள் பொய் என்று பொய்யாகக் கூட அரசால் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. இப்போது வந்துள்ள தகவல்களே ரபேலில் ஊழல் நடந்துள்ளது…

  7. இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதா என்பது சந்தேகம்… March 27, 2019 இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி தெரிவித்துள்ளார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் . எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் 7 சதவீத வள…

  8. பெகாசஸ் வேவு பார்ப்பு: இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் 27 அக்டோபர் 2021, 05:34 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெகாசஸ் வேவு பார்ப்பு வழக்கில் சுயாதீனமான குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்று காரணம் கூறி இந்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக, சுயாதீனமாக விசாரிக்க மூவர் குழுவை அமைத்துள்ளது. …

  9. ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை கையகப்படுத்த காலதாமதமாகும் என அறிவிப்பு! நிதி நெருக்கடியில் சிக்கிய ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்த மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் உயரதிகாரிகள் தெரிவிக்கையில், ஏர் இந்தியா நிறுவனத்தை அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்ட டாடா சன்ஸ் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மத்திய அரசு கடந்த ஒக்டோபரில் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ம்றறம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், அதனுடன் சேர்த்து சரக்கு போக்குவரத்தை கையாளும் ஏஐஎஸ்ஏடிஎஸ் நிறுவனத்தின் 50 வீத பங்குகளையும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது 20 ஆண்டுகளில் முத…

  10. கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 12 மே 2023 மே 11, 1998இல், ஐந்து அணுகுண்டு சோதனைகள் இந்தியாவை அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தன்னிறைவு அடையும் அணுசக்தி திறன் கொண்ட நாடுகளின் குழுவில் இணைய வைத்தது. மே 11 மற்றும் 13, 1998க்கு இடையில், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசாங்கம், முந்தைய ஆட்சிகளில் கட்டியெழுப்பப்பட்டு வந்த பல தசாப்த திட்டத்துக்கு உருவம் கொடுக்க முனைந்தது. ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான இந்திய ராணுவத்தின் போக்ரான் ஏவுகணை பரிசோதனை தளத்தில் ஐந்து அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியது. ஆனால், அந்த சாதனையை இந்தியா எட்டும் முன்பு பல சவால்களை எதிர்கொண்டத…

  11. பிரதமர் இல்லம், 80 கார்கள், 524 ஊழியர்கள் வேண்டாம்: ஆடம்பரங்களை மறுக்கும் இம்ரான் கான் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் அந்நாட்டில் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் தங்க மறுத்திவிட்டார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது. இதையடுத்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் …

  12. பட மூலாதாரம்,TWITTER/NARENDRA MODI கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிரோஷிமா.... 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அமெரிக்காவால் அணுகுண்டு வீச்சுக்கு இலக்கான நகரம். அந்தப் போரில் எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் ஜப்பானும் தற்போது உலக அரங்கில் கூட்டாளிகளாக வலம் வருகின்றன. அவற்றுடன், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை ஓரணியில் இணைந்த குவாட் அமைப்பின் மாநாட்டால் அதே ஹிரோஷிமா நகரில் மீண்டும் உற்று நோக்கப்படுகிறது. குவாட் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை, சீனா மீது பெயரை மட்டும் குறிப்பிடாமல் கிட்டத்தட்ட நே…

  13. 01 SEP, 2023 | 12:19 PM புதுடெல்லி: அதானி குழும நிறுவன பங்குகளில் குடும்பத்தினரே ரகசியமாக முதலீடு செய்ததாக ஓசிசிஆர்பி அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. கவுதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில ஆண்டுகளாக மளமவென உயர்ந்தன. இதன்மூலம் கவுதம் அதானி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம், தனது நிறுவனங்களின் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நிறுவன கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்துள்ளதாகவு…

  14. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, உலகளாவிய பட்டினி குறியீட்டு அறிக்கை குறித்து ஸ்மிதி இரானி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 22 அக்டோபர் 2023, 06:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகளாவிய பட்டினி குறியீட்டின் அண்மைய அறிக்கை குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டினியின் நிலைமை தீவிரமாக உள்ளது. 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107வது இடத்தில் இருந்தது. வெள்ளிக்கிழமையன்று,…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் க்ரிகரி பதவி, பிபிசி செய்திகள் 12 டிசம்பர் 2023 பிபிசி தனது இந்தியச் சேவைகளை மறுசீரமைப்பு செய்கிறது. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளுக்கு இணங்கும் வகையில் பிபிசியின் இந்த மறுசீரமைப்பு அமையும். இதன்படி, பிபிசியின் நான்கு ஊழியர்கள் இந்நிறுவனத்திலிருந்து வெளியேறி, பிபிசியின் ஆறு இந்திய மொழிச் சேவைகளைக் கொண்ட, ‘கலெக்டிவ் நியூஸ்ரூம்’ என்ற இந்திய நிறுவனத்தை உருவாக்குவார்கள். பிபிசி இந்தியாவின் ஆங்கில மொழிச் செய்தி சேகரிப்பு நடவடிக்கைகள் பிபிசியிடமே இருக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் இருக்கும் பிபிச…

  16. திப்பு சுல்தான்: கொல்லப்பட்ட இறுதி நாளில் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டதன் முழு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு, ஆங்கிலேயர்களுடனான போரில் வீழ்ச்சியடைந்த திப்பு சுல்தான், போர்க்களத்தில் மரணமடைந்த நாள் இன்று. திப்பு சுல்தானின் கடைசித் தருணத்தில் என்ன நடந்தது? பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், தான் ஆட்சியில் இருந்த 17 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆங்கிலப் படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1799இல் நடந்த நான்காவ…

  17. இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஊரடங்குக்கு உத்தரவிடும்போது கோடிக்கணக்கான முறைசாராப் பணியாளர்களையும் நிராதரவான மக்களையும் அரசு நினைத்துப் பார்த்ததா? இவர்களில் பலர் பல்வேறு இடங்களுக்குச் சுற்றிச் சுற்றிப் புலம்பெயர்பவர்கள். இந…

  18. இந்திய குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா தனியுரிமைக்கு எதிரானதா? ஓர் அலசல் ஜோயா மடீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் பிபிசி நியூஸ், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்டோரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய காவல்துறைக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது இந்தியாவில் கொண்டு வரப்படும் ஒரு புதிய சட்டம், பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க, சட்ட அமலாக்க துறைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகிறது - இது தனியுரிமை குறித்த கவலையை எழுப்பியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அ…

  19. மாலைத்தீவில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்ள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாலைத்தீவில் இந்திய இராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலைத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது. இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10 ஆம் திகதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்த…

  20. வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – 5 பேர் உயிரிழப்பு. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி புணரமைப்பு பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், வீதியோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ம…

  21. மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு! இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் இங்குள்ள இந்துார், கடந்த ஏழு ஆண்டுகளாக துாய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு பகிரத்புரா பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. குழாயில் கசிவு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். இத…

  22. ஆஸி. பிரதமருடன் மோடி இன்று பேச்சு: தமிழக சிலைகளை ஒப்படைக்க வாய்ப்பு புதுடெல்லி கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் சோக்ட் மோரிஸன்இந்திய பயணம் மேற்கொள்ள இருந்தார். கரோனா வைரஸ் பரவலால் அவரது வருகை ரத்தானது. இதையடுத்து, மோரிஸன் - பிரதமர் மோடி இருவரும் இன்று காணொலியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, மரியாதை நிமித்தமாக இந்தியாவில் திருடப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பில் உள்ள பழங்கால சிலைகளை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் வெளிர் சிகப்பு நிற மணற்கல்லால் ஆன நாகராஜா சிலையும் உள்ளது. இது, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளை 6 முதல் 8-ம் நூற்றாண்டு வரை ஆண்ட பிரத்திஹாரா வம்சத்தை சேர்ந்ததாகக…

  23. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுராவில் ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு ஒன்று உள்ளூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. பதிவு: செப்டம்பர் 26, 2020 15:42 PM மதுரா, உத்தரபிரதேசம்: அயோத்தியின் ராமர் கோவிலுக்கான வரலாற்றுத் தீர்ப்பை இந்திய சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஒரு வருடம் கழித்து, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமியையும் "மீட்க" ஒரு புதிய வழக்கு இப்போது மதுரா சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் ... ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் இந்து சமூகத்தின் பக்தர்களுக்கு புனிதமானது". வக்கீல…

  24. குஜராத் கலவர வழக்குகளின் சாட்சிகள் நிலை என்ன? "எங்களுக்கு பயமாக இருக்கிறது" ராக்ஸி காக்டேகர் சாரா பிபிசி நிருபர், அகமதாபாத் 28 ஆகஸ்ட் 2022, 01:24 GMT நரோதா பாட்டியா வழக்கில் சலீம் ஷேக் என்பவர் முக்கிய சாட்சி. அவரது சாட்சியத்தின் உதவியுடன், அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அப்போதைய பாஜக எம்எல்ஏ மாயா கோட்னானிக்கும், மற்ற நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. அடையாள அணிவகுப்பில் நீதிமன்றத்தில் ஷேக், கோட்னானியை அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் முந்நூறுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சாட்சியங்கள் பத…

  25. முலாயம் சிங் யாதவ் காலமானார் - பல அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் செய்த அரசியல் தலைவர் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். 1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.