அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
புதிய வகை கொரோனா அதிகரிப்பு: சபரிமலையில் சாமி தரிசனம் குறித்து அச்சமடைய தேவையில்லை! புதிய வகை கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு என தெரிவித்த அவர், கடந்த காலங்களைப் போல் முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை…
-
- 0 replies
- 101 views
-
-
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபரை தீவிரவாதியாக கருதி அவரிடம் நேரடியாக விசாரிக்கவும், அவரது சொத்துகளையும் உடமைகளையும் மாநில போலீசாரின் முன் அனுமதியின்றி பறிமுதல் செய்யவும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் வழங்கக் கூடிய சட்ட விரோத நடவடிக்கைகள் (உபா) தடுப்பு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. மக்களவையில், தீவிரவாத தடுப்பு சட்டமான, ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா’ (உபா) நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின்படி, தேசிய புலனாய்வு அமைப்பானது (என்ஐஏ), நாட்டின் எந்த பகுதியிலும், சம்பந்தப்பட்ட மாநில போலீசாரின் முன் அனுமதி…
-
- 0 replies
- 301 views
-
-
இந்தியா போருக்கான விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் இராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் குற்றம்சாட்டினார். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளமை குறித்து பாகிஸ்தான் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீரின் தற்போதைய நிலை இந்தப் பிராந்தியத்துக்கு மிகவும் ஆபத்தாக மாறியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் போருக்கான விதைகளை தூவும் வகையில் அமைந்துள்ளன. எங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்…
-
- 0 replies
- 465 views
-
-
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள வேளையில், பட்டியலில் இல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களைத் தங்கவைக்க, மெகா தடுப்பு மையம் கட்டப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட தேசிய குடியுரிமைப் பதிவேட்டில், அஸ்ஸாமில் 60 ஆண்டுகளாக வசித்துவந்த 19 லட்சம் பேரின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பில், சுமுகமான தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருந்த அஸ்ஸாம் மாநில மக்கள் பலருக்கும் இது, தலையில் இடி விழுந்ததைப் போல ஆகியுள்ளது. தேயிலைத் தொழிலாளர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், பூர்வகுடிகள் என எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்து தரப்பினர் பெயர்களையும் பட்டியலிலிருந்து தூக்கியிருக்கிறது, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம். இந்த விவ…
-
- 0 replies
- 925 views
-
-
பாகிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு – டெல்லியிலும் அதிர்வு கிழக்கு பாகிஸ்தானில் உணரப்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதேவேளை, குறித்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் உள்ள மிர்பூருக்கு அருகே 10 கி.மீ. ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும், மிர்பூர் பிராந்தியம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் முதன்மை வானிலை அலுவலர் முகம்மது ஹனீஃப் தெரிவித்…
-
- 0 replies
- 166 views
-
-
கழிவு நீரில் கொரோனா வைரஸ் பரவுகிறது -இந்திய விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதை இந்திய விஞ்ஞானிகள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். பதிவு: ஜூன் 23, 2020 04:15 AM புதுடெல்லி, கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.அந்த ஐ.ஐ.டி.யின் புவி அறிவியல் துறை தலைவர் மணீஷ் குமார் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. குஜராத் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு நடந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை ச…
-
- 0 replies
- 373 views
-
-
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் - ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 71-வது பிறந்ததினம் இன்று. இந்தாண்டு முதல் இந்நாள் விவசாயிகள் தினமாகக் கடைபிடிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில், மக்களுக்கு சிகிச்சையளிக்க, 79 மருந்துகள், 29 நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒரு மினி தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் 1088 ஆம்புலன்ஸ்களை ஆந்திர மக்களுக்காக அளித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ஒட்டு மொத்த ஆந்திரா முழுவதுமுள்ள 13 மாவட்டங்களில் இந்த ஆம்புலன்ஸ் வசதிகள் செயல்படுத்தப்படும் என்றும் கிராமங்களில் அழைத்த இ…
-
- 0 replies
- 398 views
-
-
அஸாமில் தொடரும் மழை – இதுவரையில் 110 பேர் உயிரிழப்பு அஸாமில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் இந்த அனர்த்தம் காரணமாக 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அஸாமில் அண்மையில் பெய்த மழையால் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதன் காரணமாக ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திப்…
-
- 0 replies
- 163 views
-
-
தடுப்பூசிகள் குறித்த அனைத்துவிதமான தகவல்களையும் ஐ.நா-வின் சா்வதேச தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் ஈவின் (eVIN) Electronic Vaccine Intelligence Network என்ற மின்னணு அமைப்பின் வாயிலாக மத்திய அரசு பராமரித்துவருகிறது. கொரோனா தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் முறை உள்ளிட்ட தடுப்பூசி குறித்த எந்தத் தகவலையும் மாநில மற்றும் யூனியன் அரசுகள் மத்திய அரசின் ஒப்புதலின்றி பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று மத்திய அரசு கடுமையான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் கடுமையாகப் போராடிவருகிறது, இந்தியா. இதைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளும், முகக்கவசங்களும்தான் ஒரே தீர்வு என்பதை அறிந்து அதைக் கூடிய விரைவில் ஒட்டுமொத்த …
-
- 0 replies
- 362 views
-
-
அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையால் பீதியில் மக்கள் - களச் செய்தி ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DEBALIN ROY/BBC படக்குறிப்பு, பரிஜான் பேகம் "என் மகன் தினக்கூலியாக வேலை செய்து ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பாதிக்கிறான். என் கணவர் கை வண்டி ஓட்டுகிறார். சில சமயம் வருமானம் கிடைக்கும் சில சமயம் கிடைக்காது. இப்போது மகனே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது, வழக்கை நடத்த எங்கிருந்து பணத்திற்க…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
காஷ்மீரின் வரலாற்றுக் குறிப்புகள் - தேசப் பிரிவினை முதல் இப்போது வரை 28 பிப்ரவரி 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாஷ்மீரில் உயரமான மலைகளும் ஆழமான பள்ளதாக்குகளும் காணப்படுகின்றன. காலவரிசையின்படி முக்கிய நிகழ்வுகள் 1947 - பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, இந்துக்கள் பெரும்பான்மையாக வ…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். நரேந்திரமோடி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் நாளை வெளியாகாது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூற…
-
- 0 replies
- 243 views
-
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், 4-வது முறையாக எடியூரப்பா முதல்வர் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருப்பதாக கர்நாடக முதல்வராக ஆகப்போகும் எடியூரப்பா கூறியுள்ளார். விரைவில் அவர் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எடியூரப்பா 3 முறை முதல்வராக இருந்திருக்கிறார். தற்போது அவர் 4-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வந்த எடியூரப்பா அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். கர்நாடக முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் தலைமையின் டெல்லியின் முடிவுக்காக காத்திருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். டெல்லிக்கு சென்று எடியூரப்பா உள்துறை அ…
-
- 0 replies
- 330 views
-
-
ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார். இந்திய துணை ராணுவப் படை சுட்டது ஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார். கெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சை…
-
- 0 replies
- 436 views
-
-
அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன…
-
- 0 replies
- 244 views
-
-
தினமணி : பிரிவினை சக்திகளை வேரறுக்க வேண்டும் - மோதி வலியுறுத்தல் குறுகிய கால ஆதாயத்துக்காக சாதிப் பிரச்சனைகளை தூண்டிவிடும் பிரிவினைச் சக்திகளை வேரறுக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு நரேந்திர மோதி அறிவுறுத்தினார். குஜராத்தில் காவல்துறை ஐஜி, டிஜிபி ஆகியோருடன் ஆண்டுதோறும் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோதி கலந்துகொண்டு பேசுகையில் சமூகத்தில் சாதிப் பிரச்சனைகளையும் பிரிவினையையும் தூண்டிவிடுபவர்களை வேரறுக்க வேண்டும். ஒற்றுமையை வலியுறுத்துபவர்களை ஊக்குவிக்கவேண்டிய அதே நேரத்தில் பிரிவினை சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 366 views
-
-
பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை – ராகுல்காந்தி June 27, 2019 தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை எனவும் அந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ராகுல் காந்தி பதவிவிலகும் முடிவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் பேரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்த தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை தொடர வேண்டும் என வலியுறுத்தினர். இதரன் போது உரையாற்றிய ராகுல் காந்தி, தான் தற்போது தலைவர் பொறுப்பில் இல்லை எனவும் தன்னுடைய பதவிவிலகும்…
-
- 0 replies
- 252 views
-
-
டெல்லியில் கடுங்குளிர்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லியில் நிலவும் கடுமையான குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 2.4 டிகிரி செல்சியசுக்கு வெப்ப நிலை சென்றது. டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையிலான பனிக்காலத்தில் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும். இந்த ஆண்டும் வரலாறு காணாத பனிப்பொழிவு உள்ளது. கடந்த சில வாரங்களாகக் குளிர் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் பனி மூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காலையில் நீண்ட நேரமாகியும் மக்க…
-
- 0 replies
- 289 views
-
-
காஷ்மீரில் மேலும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை! ஜம்மு-காஷ்மீர் அரசு மாநிலத்தில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் 48 இடங்களை மூடியுள்ளது. கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்ததை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பள்ளத்தாக்கில் உள்ள சில சந்தேக நபர்கள் செயல்படுத்தப்பட்டதை தொடர்பு இடைமறிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பள்ளத்தாக்கில் செயலில் உள்ள பயங்கரவாதிகளின் குடியிருப்புகள…
-
- 0 replies
- 73 views
-
-
ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிந்த வெளிநாட்டினர்: ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த பொலிஸார் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அவர்களுக்கு வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர். அதாவது, அவர்களிடம் ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகின்ற நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்க…
-
- 0 replies
- 252 views
-
-
இந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்றக்கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 2-ல் விசாரணை கோப்புப்படம் புதுடெல்லி இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து இந்தியா எனும் வார்த்தையை மாற்றி இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இல்லாததால், அந்த மனு நேற்று பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. வரும் ஜூன் 2-ம் தேதி விசாரிக்…
-
- 0 replies
- 338 views
-
-
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவத்தினர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 2021இல் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பலருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கு நடந்தது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு தவறான ராணுவ நடவடிக்கையில் குடிமக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாக ராணுவத்தினர் 30 பேர் மீது நாகலாந்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு மேஜரும் அடக்கம். மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் எல்லை அருகே நவீன ராணுவ விமான தளம் அமைக்கும் இந்தியா - நோக்கம் என்ன? ஷகீல் அக்தர் பிபிசி உருது செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP பிரதமர் நரேந்திர மோதி சென்ற வாரம் குஜராத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள 'டீசா' வில், ராணுவ விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் வான் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. புதிய ராணுவ விமான தளம், வடக்கு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் விமானப்படையின் பயன்பாட்டிற்கு முழுமையாக தயாராகிவிடும்.நாட்டின் பாதுகாப்புக்கான …
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
இந்துக்கள் 400 பேரை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றியதாக 8 பேர் கைது: உத்தரப்பிரதேச சர்ச்சையில் உண்மை நிலவரம் என்ன? ஷாபாஸ் அன்வர் பிபிசி ஹிந்திக்காக 22 நிமிடங்களுக்கு முன்னர் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள மங்கத்புரம் பகுதி தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இங்கு 400 இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டதாக மீரட் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பெண்கள் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 400 இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பாஜக மாநகர அமைச்சர் தீபக் ஷ…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு! ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஆலையில் முதற்கட்டமாக இலகுரக ஹெலிகொப்டர்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள ஆயிரம் ஹெலிகொப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆலை மூலம் 6 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1323386
-
- 0 replies
- 577 views
-